Suvadikal Sonnathillai
()
About this ebook
Read more from Jyothirllata Girija
Ithayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPurushan Veettu Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Gnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Penkalin Sinthanaikku Rating: 0 out of 5 stars0 ratings‘Mana’vilakku Rating: 0 out of 5 stars0 ratingsPorattam Rating: 0 out of 5 stars0 ratingsNaamirukkum Naadu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsAlaigalum Aazhangalum Rating: 0 out of 5 stars0 ratingsPonnulagam Nokkip Pohirairgal Rating: 0 out of 5 stars0 ratingsManikodi Rating: 0 out of 5 stars0 ratingsGopuramum Bommaigalum Rating: 0 out of 5 stars0 ratingsThiruppumunai Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Sothu Rating: 0 out of 5 stars0 ratingsManasu Rating: 0 out of 5 stars0 ratingsMagalukkaga Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Naalaiyum Ilangarkal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Pozhuthu Vidiyum Rating: 0 out of 5 stars0 ratingsNallathambi Rating: 0 out of 5 stars0 ratingsKannamma Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratings
Related to Suvadikal Sonnathillai
Related ebooks
Pallava Sundari Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Nandhipurathu Naayagi Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsNaamirukkum Naadu Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Valai Rating: 5 out of 5 stars5/5Marava Mannin Meetpar Punithar Arulanandar Rating: 0 out of 5 stars0 ratingsKannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Avan Peyar Aathithan Rating: 0 out of 5 stars0 ratingsSithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Naangu Paathai Vazhi Ondru Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Sivappu Echcharikkai Rating: 3 out of 5 stars3/5Kaalavellam Rating: 0 out of 5 stars0 ratingsMr And Mrs Pei Rating: 0 out of 5 stars0 ratingsKallukkul Pugundha Uyir Rating: 0 out of 5 stars0 ratingsKandavar Vindilar! Vindavar Kandilar!! Rating: 0 out of 5 stars0 ratingsAruvikarai Koyil Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsAjaatha Shathru Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 4 Rating: 5 out of 5 stars5/5Pani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsMangalathevan Magal Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalandha Uravey… Rating: 1 out of 5 stars1/5Indru Mudhal Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratingsThittivaasal Marmam Rating: 5 out of 5 stars5/5Vijaya Deepam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Suvadikal Sonnathillai
0 ratings0 reviews
Book preview
Suvadikal Sonnathillai - Jyothirllata Girija
http://www.pustaka.co.in
சுவடிகள் சொன்னதில்லை
Suvadikal Sonnathillai
Author :
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For other books
http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சதி
2.மாயச் சந்நியாசி
3. மர்மக் கடிதம்
4.பேரிக் கடிதம்
5. குதிரையில் வந்த குள்ளன்
6. ராஜத் துரோகி
7. கடிதம் கிடைத்தது
8. காதறுந்தான் வந்தான்!
9. பாழாய்ப் போன தும்மல்!
10. இரண்டு ஒற்றர்கள்
11. குழப்பம்
12. அகப்பட்டுக்கொண்ட ஆண்டிகள்
13. வந்த இருவர் யார்?
14. சுந்தர சோழரின் சிந்தனை
15. குதிரைப் பந்தயம்
16. சிவனடியார்
17. அருள்மொழி சிறைப்பட்டான்
18. அதிசய நிகழ்ச்சி!
19. தந்தையும் தநயனும்
20. கிழவியின் வீட்டில்
20. கிழவி கூறிய செய்தி
21.காதறுந்தான் பிடிபட்டான்!
22. சந்திரனின் சதி
23.சதிக்கும் ஒரு சதி
24. பலிக்காத சூழ்ச்சி
25. நல்ல முடிவு
சுவடிகள் சொன்னதில்லை
1. சதி
கரிகாலன் வில்லில் நாண் ஏற்றிய நிலையில் அசையாமல் சிலைபோல் நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களில் ஒன்று மூடியிருந்தது; ஒன்று மட்டுமே திறந்திருந்தது. வெகு தூரத்தில் ஏதோ ஒன்றின்மேல் அவன் குறி வைத்திருந்தான்.
கரிகாலனுடைய வில்லிலிருந்து அம்பு 'விர்' ரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்புவதற்கும் அவன் கண்களை இரண்டு கைகள் பொத்துவதற்கும் சரியாயிருந்தது.
அட சட், எடுடா கையை! சமயாசமயம் தெரியாமல் விளையாடிக்கொண்டு!
என்று சிடுசிடுத் துக்கொண்டே தன் கைகளைப் பொத்திய அந்தக் கைகளை அகற்ற முயன்றான். ஆனால் முடிய வில்லை. கையை எடுக்கமாட்டாய், அருள்மொழி? என்று கரிகாலன் அதட்டினான். இந்தச் சமயத்தில் ககிரீச்"சென்று ஏதோ சத்தம் கேட்டது.
இந்தச் சத்தம் காதில் விழுந்ததும் கரிகாலனுக்கு எங்கிருந்தோ அசுர பலம் வந்தது. அந்தக் கைகளை முரட்டுத்தனமாகப் பிடித்து அப்புறப்படுத்திவிட்டுத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.
கரிகாலன் கணப்பொழுதில் திரும்பி வந்தான். அவன் கையில் ஓர் அழகான வெண்புறா! ஆனால் பாவம்,அது ரத்தம் ஒழுகத் துடித்துக்கொண்டிருந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு வந்த கரிகாலன் தனக்கு முன் குந்தவையைக் கண்டதும் சிரித்தான். ஆனால் குந்தவை சிரிக்கவில்லை. அவள் முகத்தில் சொல்லி முடியாத கடுகடுப்பு ஆனால் கரிகாலனோ அதைக் சித்ததாகத் தெரியவில்லை. குந்தவை அருள் மொழி இங்கே வந்தானே, அதற்குள் எங்கே போனான்? நீ இப்போதுதான் வந்தாயா?" என் றான், தன் கையில் துடித்துக் கொண்டிருந்த புறாவைப் பர்த்தபடியே. குந்தவை உயிருடன் துடித்துக்கொண் டிருந்த அந்தப் புறாவை இரக்கத்தோடு பார்த்தாள். பிறகு கரிகாலனைக் கோபத்தோடு நிமிர்ந்து பார்த் தாள. அப்போதுதான் குந்தவையின் கண்களை நேருக்கு நேர் சந்தித்த கரிகாலன் வியப்படைந்தான். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் குந்தவைக்கு இன்று என்ன வந்துவிட்டது?
என்ன குந்தவை? நான் கேட்ட கேள்விக்குப் பதிலைக் காணோம்! அருள்மொழி இங்கு வந்தானே, அதற்குள் எங்கே தொலைந்தான்? அது சரி, நீ ஏதோ கோபமாயிருக்கிற மாதிரி தெரிகிறதே!
அண்ணா! உன் கேள்விக்கு நான் பதில் சொல்வது ஒரு பக்கமிருக்கட்டும். முதலில் என் கேள்விக்கு நீ பதில் சொல்லு! ஆமாம், இந்தப் புறாவை அடித்துக் கொல்லும்படியாக அது என்ன தப்பு செய்தது?
'ஆகா! குந்தவையின் முகம் சிடுசிடுவென்று இருந்த தற்குக் காரணம் இப்போதல்லவா தெரிகிறது.!'
கரிகாலன் கேலியாய்ச் சிரித்தான். என்ன தப்புப் பண்ணியதா? புறாவாய்ப் பிறந்ததே ஒரு தப்பிதந்தானே!
என்ன புறாவாய்ப் பிறந்ததே தப்பிதமா? மனிதனாய்ப் பிறப்பதுகூடக் குற்றந்தான், அண்ணா! இதோ, நான் உன்னைக் கொன்று விடுகிறேன் இப்போது தக்க ஆயுதமில்லாமல் நிற்கும் உன்னால் என்னை எதிர்க்க முடியாதல்லவா?
இப்படிச் சொல்லிக்கொண்டே குந்தவை பரிகாசச் சிரிப்புடன் தன் இடுப்பிலிருந்து ஒரு சிறு குத்துவாளை எடுத்துக் கரிகாலனின் நெஞ்சுக்கு நேரே நீட்டினாள். கரிகாலன் கலகல
வென்று சிரித்தான். குந்தவை அண்ணன் மார்பில் உராய்வதுப்போல் தான் பிடித்துக்கொண்டிருந்த கத்தியை மறுபடியும் தன் இடுப்பில் செருகிக்கொண்டாள்.
அண்ணா! மனிதனாய்ப் பிறந்த உனக்கு இரக்கம் கொஞ்சமாவது இருக்கட்டும் உண்மையான வீரம் ரத்த வெறியல்ல!
கரிகாலன் இதற்குப் பதில் சொல்லவில்லை.
சற்று நேரம் மெளனமாயிருந்த கரிகாலன், உன் அகிம்சைப் பிரசங்கம் இருக்கட்டும்! அருள்மொழி. எங்கே என்று கேட்டேனே!
என்றான்.
உன் கண்களை நான்தான் பொத்தினேன். அருள்மொழி அதோ வந்து கொண்டிருக்கிறான் பார்!
என்றாள் குந்தவை.
என்ன! என் கண்களைப் பொத்தியது நீயா? அடேயப்பா, ஒரு பெண்பிள்ளைக்கு இவ்வளவு பலமா? சபாஷ் சோழகுலப் பெண்களுக்கு நீ ஒரு பலமான பாதுகாப்புத்தான்!
என்று பாதி கேலியாகவும் பாதி உண்மையாகவும் கரிகாலன் குந்தவையை, நோக்கிச் சொன்னான். இதற்குள் அங்கே அருள் மொழியும் வந்து சேர்ந்தான் ஐயையோ, உன் கையிலே என்ன அண்ணா? புறாவா? அட பாவமே. உன் வில் திறமையை அதன்மேல் காட்டினாயாக்கும்!"
அதுதான் நானும் கேட்டேன். இந்தப் புறா என்ன பாவம் பண்ணிற்று, அருள்மொழி? வில் திறமையை வளர்த்துக்கொள்ள இவனுக்கு வேறு வழியில்லையா என்ன?
என்று குந்தவை பொரிந்து தள்ளினாள். தம்பியும் தங்கையும் சேர்ந்து தன்னைத் தாக்குவதைக் கண்ட கரிகாலன் மெளனமாகி, விட்டான். அவன் கீழே போட்ட அந்தப் புறாவைச் சுற்றிப் பறந்தது இன்னொரு புறா. குந்தவையின் கண்கள் இலேசாய்க் கலங்கின. "பாவம்! இந்தப்புறாவுக்கு அந்தப் புறா என்ன சொந்தமோ!
தன்னுடைய மொழியில் அது கரிகாலனை என்ன வெல்லாம் திட்டித் தீர்த்ததோ!"
அருள்மொழி, கரிகாலன், குந்தவை மூவரும் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். திடீரென்று நினைத்துக்கொண்டவனைப் போல் அருள்மொழி, அண்ணா! இன்றிரவு பல்லவ தூதன் காஞ்சியிலிருந்து நம் தந்தையைக் காண வரப் போகிறானாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஒலை வந்தது. அதைச் சொல்லத்தான் உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன் பல்லவ தூதன் என்ன சேதிகொண்டு வரப்போகிறானோ?
என்றான். கரிகாலன், வேறே என்ன சொல்லப் போகிறான்? சண்டைக்குத் தயாராகும்படி சவால் விடுகிறானோ என்னவோ! பல்லவர்களுக்கே திமிர் அதிகம்
என்று ஆத்திரப்பட்டான்.
சோழர்களுக்குள்ள திமிரைவிடவா?
என்று சிரித்தாள் குந்தவை.
குந்தவை! சோழநாட்டு இளவரசியாக இருந்து கொண்டே நீ இப்படிப் பேசாதே!
என்று கரிகாலன் அதட்டினான்!
அடடா, ஏன் தான் இப்படிச் சண்டை போடு கிறீர்களோ! அரசகுலத்தார் அப்படித்தான் ஒருவரை யொருவர் சண்டைக்கு அழைப்பார்கள்!
என்றான் அருள்மொழி.
அந்த வேளையில் அந்த அரண்மனைத் தோட்டத்தின் அடர்ந்தபுதர் ஒன்றுக்குப் பின்னால் ஒரு முரட்டுக் கை தெரிந்தது. அந்தக் கையிலே ஒரு கத்தி அந்தக் கை தன் கத்தியை வரில் எவரையோ . நேர்க்கி வீசியது. தங்களை நோக்கி விஷம் தோய்ந்த கூரிய கத்தி காற்றை கிழித்தப்படி வந்துகொண்டிருந்ததை அறியாமல் மூவரும் நடந்துகொண்டிருந்தார்கள்.
அடுத்த விநாடி ஒரு ரிதாபுக் குரல் ஆந்தத் தோட்டம்முழுவதும் எதிரொலித்துப் பரவியது. அந்தக் கூக்குரலைத் தொடர்ந்து நாலைந்து பேர். தடதடவென்று ஓடும் சத்தமும் கேட்டது.
2.மாயச் சந்நியாசி
காஞ்சீபுரமே அன்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. இளவரசன் நந்திவர்மன் பக்கத்து நாட்டை வெற்றி கொண்ட வைபவத்தைக் கொண்டாடத்தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. நந்திவர்ம பல்லவன், சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததற்குப் பிறகு மூன்றாம் நாள்.
தங்கள் இளவரசனைப் பாராட்டுவதற்குத்தான் மக்கள் மிகுந்த தடபுடல் செய்து கொண்டிருந்தார்கள். நந்திவர்ம பல்லவர் நீடூழிவாழ்க! விக்கிரமாதித்தனை வென்ற வீரத் திருமகன் வாழ்க!
என்று மக்கள் எழுப்பிய வாழ்த்தொலிகள் ஆகாயத்தைப் போய்த் தொட்டன…. நூற்றுக்கணக்கானவர்கள் அரண்மனையை நோக்கி வந்துகொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்து கொஞ்ச நேரத்துக்குள் அரண்மனைக்கு முன்னால் 'ஜே ஜே' என்று ஜனக்கூட்டம் கூடிவிட்டது.
அரண்மனை மேல்மாடத்தில் மந்திரி சுந்தரவர்ம பல்லவர் கம்பீரமாக வந்து நின்றார் அவர் முகத்தில் ஒரே மகிழ்ச்சி சுந்தரவர்மரைக் கண்டதும் மக்களின் ஆரவாரம் கொஞ்சம் அடங்கியது. அன்புள்ள மக்களே!
என்று அவர் தொடங்கியதுமே கொஞ்ச நஞ்ச ஆரவாரமும் அடங்கிவிட்டது. சுந்தரவமர், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனை இளவரசன் நந்திவர்மன் வென் ற விவர த்தை உற்சாகமாக விளக்கினார் சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே இளவரசன் நந்திவர்மனும் மந்திரிக்கு அருகில் வந்து நின்று மக்களை நோக்கிக் கும்பிட்டான். நந்திவர்ம பல்லவர் வாழ்க
என்ற கோஷம் வானைப் பிளந்தது. 'நெடுநெடு'வென்று வாட்டசட்டமாக வளர்ந்திருந்த இளவரசனுக்குப் பதினெட்டு வயதுதானா இருக்கும்?" என்று எல்லோருமே ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
மந்திரிக்கு அடுத்தபடியாகப்பேசிய நந்திவர்மன் மக்களுடைய அன்பே தன் வெற்றிக்கு காரணம் என்று அடக்கமாகக் கூறினான். மக்கள் அனைவருக் கும் இனிப்பு வழங்கியவுடன் கூட்டம் கலைந்தது.
மந்திரி சுந்தரவர்மனும் இளவரசன் நந்தி வர்மரும் அன்றிரவு அரசாங்க விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, பேச்சு, போரை நோக்கித் திரும்பியது. சாளுக்கிய மன்னனைத் தோற்கடிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதைப் பற்றி நந்திவர்மன் விவரித்தான். இருவருடைய பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு மந்திரி சோமவர்ம பல்லவர், நந்திவர்மா, சாளுக்கிய மன்னனை நீ தோற்கடித்ததுகூடப் பெரிதில்லை. இன்னும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களையெல் லாம் தோற்கடித்துப் பல்லவ நாட்டை இமயம் முதல் குமரி முனைவரையில் பரவச் செய்ய வேண்டும். முதலில் சோழ மன்னனைத் தோற்கடித்துவிட்டால், மற்ற மன்னர்களை வெற்றி கொள்ளுவது பெரிய காரியமல்ல" என்றார் உற்சாகமாக.
சோமவர்மரின் யோசனையைக் கேட்டதும் நந்திவர்மனின் முகம் மலர்ந்தது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் சுந்தரவர்மரே?
என்று மந்திரியை நோக்கி ஆவலுடன் கேட்டான்.
"நந்திவர்மா! நான் என்ன சொல்ல இருக்கிறது? வீரச் செயல்கள் புரிவதற்கென்றே பிறந்தவன் நீ. எனினும் எடுத்த எடுப்பிலேயே சோழநாட்டைத் தாக்குவது உசிதமான காரியமாக எனக்குப் வில்லை! ஏனென்றால், சோழர்கள்