Paalaivanathil Pannir!
3.5/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsPagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsBrindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Uppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsAllikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5
Related to Paalaivanathil Pannir!
Related ebooks
Manakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Maya Nathiyile Naan...! Rating: 0 out of 5 stars0 ratingsSwasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Nila Nesam Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Ragasiya Raagamondru… Rating: 5 out of 5 stars5/5Ennulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsManakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5Nizhalil Oru Nilavu Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsNesam Narumanamai Rating: 4 out of 5 stars4/5Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsRagasiya Kathavondru Rating: 1 out of 5 stars1/5Paattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Sirungaara Naatham Rating: 0 out of 5 stars0 ratingsNetru Mudhal Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Veliyatra Veedu… Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsMan Kudhiraigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paalaivanathil Pannir!
2 ratings0 reviews
Book preview
Paalaivanathil Pannir! - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
பாலைவனத்தில் பன்னிர்!
Paalaivanathil Pannir!
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jayathilakar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
பாலைவனத்தில் பன்னிர்!
1
வேண்டிய மட்டும் அழுதாயிற்று. இப்போதும் ராஜனின் நினைப்பு வர, நெஞ்சு துக்கத்தில் உதைக்கிறதுதான். ஆனால் கண்ணிர் பொங்கி வழியவில்லை.
கண்ணீர்ச் சுரப்பிகள் வற்றிவிட்டன போலும். ஆனால் உள்ளே துக்கம் கனமாய்த் திரண்டு அடைத்திருக்கிறது.
சட்டென்று சிரிப்பு மலரவில்லை.
இயல்பாய்ப் பேச்சு வரவில்லை.
ஆர்வமாய் வெளிவாசலுக்குப் போய் வர மனமில்லை.
உறவின் ஆறுதல் வார்த்தைகள் வெறும் ஜாலப்பந்தலாய்க் கருதித் தள்ளப்பட்டது.
அழைப்பு மணி ஒலிக்க,
எழுந்து போனாள் ராகினி.
எளிய நைலக்ஸ் சேலைதான். ஆனால் அதன் கருநீலம் அவளுக்கு வெகு பொருத்தம். ஒன்றரை மாதங்களாய் வீட்டிலேயே அடைபட்டிருந்த அவளது சருமம் வெளுத்திருந்தது. உணவு விஷமானதில் உடம்பு வற்றி வடிந்திருந்தது.
அண்ணன் ராஜன் அவளைக் 'குண்டுகுஷ்' என்றுதான் அழைப்பான்.
ந்தா நான் 57 கிலோதான். குண்டோட சேர்த்தியேயில்லை!
இவள் சீறுவாள்.
ஒரு ஆறு கிலோ மெலிஞ்சா சுமாராயிருப்பே!
அவங்கவங்க தங்களைப் பார்த்துக்க முடியறதில்லையே!
வானத்தை நோக்கி அங்கலாய்ப்பாள்.
அதிலேதான் அண்ணனாய் நான் பார்த்து உனக்குக் காரணப் பெயராய் வச்சிருக்கேன்!
எனக்கு அப்பா வச்ச பேரே பிடிச்சிருக்குதுப்பா...
இதுதான் உனக்குப் பொருத்தம்!
"இப்போது ஆறு கிலோ நிச்சயம் குறைந்திருப்பாள். ஆனால் உடம்பைப் பற்றிய உணர்வேயில்லை. கண்களுக்குக் கீழே கருமை வளையமிட்டிருந்தது. வெண்ணெய் தடவினாற்போல சதா மின்னும் உதடுகள் வரண்டிருந்தன. ஆனால் எது பற்றியும் ராகினிக்கு இப்போது கவலையில்லை.
கதவின் கண்ணாடிக் குமிழ் வழியே பார்த்தவள் கதவைத் திறந்தாள்.
வாங்க மாமி!
செழித்த உடலைச் சற்றே சாய்த்துச் சாய்ந்து நடந்து உள்ளே வந்தாள் அம்புஜா மாமி. அடுக்கு மாடியில் எதிர் வீட்டில் குடித்தனம்
கொஞ்சம் வெல்லம் வேணும்டியம்மா, குழந்தே
இருக்கு மாமி - தரேன்.
எந்நாத்தி பொண்ணுக்குப் போன மாசம் கல்யாணம்னு சொன்னேனில்லியோ? அவா வந்திருக்கா, பாசிப் பயிறுப் பாயசம் செய்யறேன். அதுவும் உனக்குப் பிடிச்ச அவியலும் பிறகு அனுப்பறேன். கூட ரெண்டு வாய் சாப்பிடு, என்ன?
ராகினி புன்னகைத்தாள். உதடுகளைப் போலப் புன்னகையிலும் வறட்சி.
அப்பா வெளியே போயிருக்கார் போல?
பாங்க் வரை போயிருக்காங்க.
அவரும் கூடாயிட்டார். புத்திர சோகம் லேசுப்பட்டதா? ஆனா நமக்குச் சொச்ச வாழ்க்கையிருக்கேடீம்மா, அப்பாக்கு நீ, உனக்கு அவருன்னு தேத்திண்டு போக வேண்டியதுதான்.
நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைதான் - ஆனால் அமல்படுத்துவது அத்தனை சுலபமாயில்லை.
ஏலம், பருப்பெல்லாம் இருக்குதா, மாமி?
இருக்குடிம்மா, மூணரைக்கு மேலே காபியானதும் வர்றேன் என்ன - உங்கிட்ட ஒரு சமாச்சாரம் பேச வேண்டியிருக்குது..
வெல்லத்துடன் கிளம்பினாள் மாமி.
அம்மா இல்லாத இவ்வீட்டில் அப்பாவும் இவளும்தான். ராஜன் ராகினியை விட 4 வயது பெரியவன். ஆக, தாய் ஸ்தானத்தை அவள் இயல்பாக எடுத்துக் கொண்டாள்.
அப்பா நல்லவர் - ஆனால் ரொம்ப வல்லவர் என்றில்லை.
பள்ளி ஆசிரியராயிருந்து ஓய்வு பெற்ற அமைதியான மனுஷர். அவருக்குக் கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் ராஜன். ஆக பிள்ளை என்றால் உருகிப் போவார். ராகினி ஆறு வயதாயிருக்கையில் மனைவி இறந்துவிட, ஏற்கெனவே வெண்ணெயான அவர் மனது நெய்யாகி வழிந்தது.
ஃப்ளாட் சொந்தத்தில் என்பதால் அப்பாவின் வருமானம் குடும்பம் நடத்த போதுமாயிருந்தது. மதுராந்தகத்திலிருந்த பூர்வீக வீட்டை விற்று வாங்கியது இந்தக் குடியிருப்பு. கட்டிடக் கலை நிபுணனாக வர வேண்டுமென்பது அண்ணனின் விருப்பம்.
சிறு வயதிலிருந்தே உறவினரது வீடுகளுக்குப் போனால் புகுந்து சகஜமாய்ச் சுற்றிப் பார்ப்பான்.
'இந்த ஜன்னலை மறுபக்கம் வச்சிருந்தால் கூடுதல் வெளிச்சம் கிடைச்சிருக்கும்.'
'வெளிச்சுவரில் ஷெல்ப் வைக்கக்கூடாது மாமா - மழைக் காலத்தில் அதுல வைக்கிற புத்தகமோ, துணியோ ஈரம் கசிஞ்சு பாழாயிடும்!' என்பான் பெரிய மனிதத் தோரணையில்.
தான் ஆசைப்பட்ட படிப்பையே எடுத்துத் திருப்தியாய்ப் படித்தான். 'கன்னிமாரா' நூலகத்தில் கிடைத்த அத்தனை அயல்நாட்டுப் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் கரைத்தே குடித்தான்.
'அப்பா! நானே டிஸைன் பண்ற வீட்டிலே இன்னும் பத்து வருஷத்தில் நாம குடியேறிடுவோம்!' என்பான்.
'நல்லது ராஜா - அப்ப இந்த வீடு?'
'வித்திடலாம்பா - 750 சதுர அடியில் மோசமாய்க் கட்டின புறாக்கூடு இது.'
எத்தனை கனவுகள் அவனுக்குள்... கனவுகள் நனவாகக்கூடிய திறமை - இளமை. அத்தனைக்கும் மகுடமாய் அழகு... அன்பு அத்தனையும் இருந்ததே?
விதி ஏன் அப்படிப்பட்டவனை இத்தனை விரைவாகப் பறித்துக் கொண்டது?
அதுவும் இத்தனை கொடுரமாய்!
விமானத்தில் வந்து இறங்கிய அவன் உடல் கறுத்திருந்தது.
'போஸ்ட்-மார்டம்' செய்து மறுபடி கோர்க்கப்பட்டிருந்த சடலம்.
'ஹா...ஐயோ...! கதறிவிட்டாள் ராகினி.
ராஜன் வாழ்வின் கடைசி ஆறு மாதங்கள் இவர்களுடனில்லை. அதுவும் அப்பாவிற்குப் பெருங்குறை.
'முழுசா மூகமுழி பார்க்க முடியலியேம்மா.. என் ராஜாவை!' இன்னும் புலம்பிக் கரைந்து கொண்டிருக்கிறார்.
ராஜனுக்கு நூதனமான நண்பர்கள். அதில் ஒருவன்தான் ப்ரமோத் கேரி,
ஏழு மாதங்களுக்கு முன் அந்தப் பெயரில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்த ராகினி விசாரித்தாள்.
விநோதமான பெயராயிருக்கேண்ணா? வித்தியாசமான கையெழுத்தும் கூட?
ம்... ப்ரமோத் - பாதி ராஜபுத் மீதி ஆங்கிலேயன்.
எப்படியிருப்பார் பாக்கறதுக்கு?
ஜம்முனு இருப்பான். கெச்சலான உயரம், வெள்ளைக்காரச் சிவப்பு அதற்கேற்ற பழுப்புக் கண்ணு, முறுக்கு மீசைன்னு...
எங்கேயிருக்கார்?
ராஜஸ்தானிலே - ஜெய்ஸல்மரில். ரொம்ப அதிசயமான ஊராம். அது ராக்தார்பாலைவனத்தின் விளிம்பிலிருக்குது - ஊர் முழுக்க ரெண்டு நூற்றாண்டுகளுக்கு, முன்னே கட்டின வீடுகள்,12ம் நூற்றாண்டுக் கோட்டை அரண்மனைன்னு...
அப்ப ஜொள்ளு விட்டுருவியே-உனக்கேத்த தோஸ்துதான்!
13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குல்த்ரா கிராமம் பற்றி சுவாரஸ்யமாய் எழுதியிருக்கான். பாலிவல் பிராமணர்கள் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னே இதைக் கட்டிக் குடியேறினாங்களாம். அறுநூறு வீடுகளுடன் இருந்த இச்சிற்றுரை 535 வருடங்களுக்குப் பிறகு அவங்க காலி செய்துவிட்டுக் கிளம்ப, பாழடைந்து அப்படியே நிற்கிறது ஊர்
உனக்குக் கால் துறுதுறுங்குமே?
சிரித்தாள்.
பின்னே, கண்டிப்பாய்ப் போகணும், ராக்குட்டி நீ அப்பாட்ட சொல்லேன்.
ஆஹா.. காரியமிருந்தா குண்டுகுஷ் - ராக்குட்டியாயிடுமா?
அலட்டலாய் முந்தானையை விசிறுவாள்.
படிப்பு பூர்த்தியானதுமே உயர்ந்த வேலை ராஜனைத் தேடி வந்தது. அதை ஒத்தி வைத்துவிட்டு ஜெய்ஸல்மர் போவது பற்றி அப்பாவிடம் பேசினான்.
மூணு மாசம்ப்பா - அங்கேயுள்ள பழங்காலக் கட்டிடங்கள், அதன் கலை நுணுக்கங்களை எல்லாம் பார்த்து வரேம்ப்பா...
செய்யப்பா - உன்னைப் படின்னு நான் கெஞ்சலை, மிரட்டலை. ஒவ்வொரு கல்லூரியா இடம் கேட்டு ஓடியலையலை. உதவிப் பணத்திலேயே சமாளிச்சே - ஆக காசைக்கூட நா வாரியிறைக்கலை - வேலைக்காக என் மண்டையக் காயவிடலை நீ அத்தனைக்குப் பொறுப்பான பிள்ளை உன் நோக்கம் போலச் செய்...
என்று விட்டார்.
ஆனால் ராகினி முகம் தூக்கிக் கொண்டாள்.
வீடு திரும்பும் அண்ணனுக்குக்