Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pagal Natchathirangal
Pagal Natchathirangal
Pagal Natchathirangal
Ebook110 pages56 minutes

Pagal Natchathirangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580109901451
Pagal Natchathirangal

Read more from Kanchana Jeyathilagar

Related to Pagal Natchathirangal

Related ebooks

Reviews for Pagal Natchathirangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pagal Natchathirangal - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    பகல் நட்சத்திரங்கள்

    Pagal Natchathirangal

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jayathilakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    மழையின் வருகையை அறிவிக்கும் கட்டியக்காரன் போல வந்திருந்தது வாசனைக் காற்று.

    மண்ணிற்குள் இத்தனை மணமிருந்ததா என்று முகருபவர்களைச் சில கணங்கள் மயக்கிப் போடும் பூமி வாசனை!

    விரித்து வைத்திருந்த செய்தித் தாளைத் தழைத்தவனது பார்வை வெளியே தாவியது.

    வயலும், தோப்புகளும் அவற்றிற்கு அப்பால் மலைத் தொடருமாய் அழகிய ஓவியம் போலத் தெரிந்தது அவனது ஊர்.

    நாகர் கோயிலைத் தாண்டிய ஒரு சிற்றூர்தான் இது என்றாலும், பிரதானச் சாலையிலிருந்து ஒதுங்கி இங்கு வர ஆரம்பித்ததுமே பார்ப்பவர்களுக்குப் பரவசம்தான்.

    தென்னையும் வாழையும் போக, காட்டுப் புன்னையும் தேக்குமாய்ச் செழித்த பூமி. ஒருபுறம் பாசன வாய்க் காலும் அதில் ஜம்மென்று மிதக்கும் வாத்துக் கூட்டமும்; மறுபுறம் சுறுசுறுப்பான ஆட்களும் மணிச் சத்தத்தோடான மாடுகளும் என்று ரசிக்க வைக்கும் அமைப்பு.

    கோமளமும் மண் வாசனையை ரசித்திருப்பாள் போலும் - இவனை நெருங்கி நின்று-

    மழையப்ப இந்த வாசம் மட்டுமில்லை, சாப்பிடற பொருளுக்குப் புது ருசியும் சேரும்... உங்களுக்கு என்ன செய்யச் சொல்ல?

    பரிவாய் விசாரித்தாள்.

    சுக்கு டீ நல்லாருக்கும்.

    கூடவே முந்திரிப் பக்கோடா?

    கேட்டவள் சற்றே நகர்ந்து இன்ட்டர்காமில் அதற்காய் உத்தரவிட்டாள்.

    எழுந்த விஜயன், தாழ்ந்து, அகண்ட ஜன்னலின் வழியே வீட்டின் தோட்டத்தைப் பார்த்தான் -

    பூமி வறண்டிருந்தது.

    இலைகள் புழுதியேறி மங்கிக் கிடந்தன.

    மழை தேவைதான்.

    இதே போலொரு தேவையில் இவன் இருந்த போதுதான் கோமளம் மழையாய்ப் பொழிந்தாள்.

    அது பண மழை!

    பெற்றோரை இழந்து விட்டிருந்த விஜயசேகரனுக்கு அவனது முப்பதாவது வயதில் மிஞ்சியிருந்தது பெருங் குடும்பத்தின் வாரிசு எனும் பெயரும் இந்த மாளிகை வீடும் கடனும்தான்.

    அவனுடனிருந்த ஒன்று விட்ட ஏழை அத்தையும், திருமணமாகி வடமாநிலத்தில் குடித்தனம் செய்யும் அக்காவும் ஒன்று சேரும் போதெல்லாம் ஆரம்பிக்கும் தன் கல்யாணப் பேச்சில் இவனுக்கு எரிச்சல் எழும்பும் - சீறுவான் –

    ஜமீன் குடும்பங்கற பவுசைத் தவிர இப்ப நமக்கென்ன மிச்சம்? இப்போதுள்ள சிறு வயசுப் பயலுக எல்லாம் மாசம் அரை, முக்கால் லட்சம்னு சம்பாதிக்கற வேளையில சுற்றிலுமிருக்கற நாலு ஒட்டு வீட்டு வாடகைதான் என் வருமானம். ஒடிஞ்சு நிக்கிற இந்த வீட்டுக்கு வெள்ளை யடிக்கக் கூடப் போதாத காசு. இதுல இன்னொருத்திய கூட்டு சேக்கறது மகா பாவம்... கல்யாணமெல்லாம் வேணாம். நாம கெளரவமாய் இருந்தாப் போதும்.

    ஜமீன் பரம்பரைன்ற கெளரவம் ஒன்னே போதுமேப்பா... எத்தனை பேருக்கு அது வாய்க்கும்? லட்சம்... ம்ஹும்... கோடியில் ஒருத்தருக்குத்தான். அதைக் கொண்டே ஒரு பொண்ணைப் பார்த்துட முடியாது?

    பார்த்துடலாம் சரி. பிறகு அவளோடு குடித்தனம் பண்ணக் காசு வேணுமே? தவிர காசிருந்தால் கல்யாணத்தை விட வேற எத்தனையோ நல்ல காரியமெல்லாம் பண்ணலாம்!

    என்று விஜயன் அன்று - அதாவது ஆறு வருடங்களுக்கு முன்பு சொல்லி விட்டாலும் - சில மாதங்களில் ஒரு பெண் அவன் வாழ்வில் வரத்தான் செய் தாள்!

    மறுபடி அக்கா ஒரு பரபரப்போடு இந்தத் தென்கோடிச் சிற்றூருக்கு ஓடி வர, அத்தையும் அவளுமாய்ப் பரவசத் துடன் பேசிப் பேசி மாய்ந்தார்கள் –

    நாம் போட்ட கணக்கு தப்பலை பாரு தம்பி - இனி நீ மறுபடி ராஜாவேதான். இந்தச் சித்திரக் கல் கோட் டைக்கு ராணியாய் ஒரு பொண்ணு வரப் போறா.

    "உங்க அக்காவுக்குப் பிறகு எட்டாம் வருஷந்தான் நீ பிறந்தது - உங்க பாட்டி அதுவரை புலம்புவாங்க பாரு –

    "வட்டியிலே இட்ட சாதம்

    வாரித்தின்னப் பேரனில்லே

    கிண்ணியிலே போட்ட சாதம்

    கிளறித் திங்க மைந்தனில்லே!ன்னு! ஜமீனுக்கு ஒரே வாரிசாய் நிக்கிற உனக்கொரு மகன் பிறக்க வேணாமா?

    மகனா... இந்த அரண்மனையைக் கூட்டி அள்றதுக் குள்ளயே வர்ரவ இடுப்பு ஒடிஞ்சிடும்! என்று விஜயன் சிரிக்க, இரு பெண்களும் சிறு சங்கடத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    அதைக் கவனித்து விட்டவன், கேட்டான் -

    பொண்ணு யாரு?

    இருவரும் மாறி மாறி விவரம் சொல்ல, கேட்டவனின் நெற்றி சுருங்கியது.

    யாரு, அரசியல்ல கொடி பறத்தற பால்பாண்டியன் மகளா?

    பாரு... அவரத் தெரியாதவங்க கிடையாது. சேலத்துல ஸ்டீல் ஃபாக்டரி கூட வச்சிருக்காரு! என்றாள் அத்தை பூரிப்புடன் –

    அங்கே முதல்ல எடுபிடியாய்ச் சேர்ந்தவர்னு கேள்விப்பட் டிருக்கேன்.

    ஆனா பத்து பதினைஞ்சு வருஷத்துல தொழிலைக் கத்துகிட்டு, தொழிற்சாலையையே வாங்கிட்டாரே - சாமர்த்தியசாலி. அவருக்கு மூத்தது பொண்ணு. இளையது பையன். தொழில் அவனுக்கு என்றாலும் மகளுக்கும் ஆசையாய்ச் செய்வாருப்பா...

    நீ சொன்ன எடுபிடியாய் இருந்தவருதானே?-ன்ற பேச்சை மறக்கடிக்க, அவருக்குப் பெரிய இடத்துல சம்பந்தம் தேவைப்படுது - நீ ஜமீன் வாரிசுன்னு ஆசைப் படறார். நம்ப வீட்டைச் சீர்படுத்தித் தருவார். பொண்ணு ஜமீன் மாளிகையில வாழறதைப் பார்க்கணும்ங்கறது அவரு ஆசை."

    இப்படி இருவரும் போட்ட தூபத்தில் விஜயன் மசிந்து விட்டான் என்றில்லை. ஒரு நாள் பால் பாண்டியனே மூன்று வித வெள்ளைக் கார்கள் சூழ வந்திறங்கி, இவனை வணங்கிப் பாந்தமாய்ப் பேச்செடுத்த போது, காது கொடுக்காதிருக்க முடியவில்லை. இவனது நலிந்த மாளிகையைக் கூர்விழிகளால் அளவெடுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1