Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Buddha Jathaga Kathaigal
Buddha Jathaga Kathaigal
Buddha Jathaga Kathaigal
Ebook74 pages54 minutes

Buddha Jathaga Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580103701492
Buddha Jathaga Kathaigal

Read more from Sivan

Related to Buddha Jathaga Kathaigal

Related ebooks

Reviews for Buddha Jathaga Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Buddha Jathaga Kathaigal - Sivan

    http://www.pustaka.co.in

    புத்த ஜாதகக் கதைகள்

    Putha Jathaga Kathaigal

    Author :

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எலிகளும் நரியும்

    2. பறவைக் குழந்தைகள்

    3. குள்ளனும் தடியனும்

    4. நரியும்,சிங்கமும்

    5. இரத்தினமாலையும் குரங்கும்

    6. ஆடுகளும் நரிகளும்

    7. இரண்டு மன்னர்கள்

    8. நான்கு சகோதரர்கள்

    9. குரங்குகளும் தோட்டக்காரனும்

    10. தியாகத்திற்குத் தண்டனை

    11. மந்திரவித்தையும சீடனும்

    1. எலிகளும் நரியும்

    ஓரிடத்தில் நூற்றுக்கணக்கான எலிகள் வாழ்ந்திருந்தன. அந்த எலிகள் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தன. அந்தத் தலைவர் வேறு யாருமல்ல நமது போதிசத்துவரேதான்.

    இரை தேடி அலைந்து கொண்டிருந்தது ஒரு நரி, அந்தச் சமயத்தில் நரி, இந்த பெரிய எலிக் கூட்டத்தைப் பார்த்து விட்டது. மிகவும் சுலபமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலி வீதம் எவ்வாறு சாப்பிடுவது என்று நரி யோசித்தது. உடனே அதற்கு ஒரு திட்டம் தோன்றியது.

    உடனே நரி, எலிகளுக்குத் தெரியும் படியான இடத்திற்குச் சென்று ஒற்றைக்காலில் நிற்கத் தொடங்கியது. நரியின் முகம் சூரியனைப் பார்த்தபடி இருந்தது. பார்ப்பவர்களுக்கு ஒரு முனிவர் தவம் செய்வது போலவே தோன்றும்.

    போதிசத்துவர் நரியை நெருங்கினார்.

    நரியாரே, நீங்கள் உண்மையில் யார்?

    நான் ஒரு முனிவர்!

    எதற்காக ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்?

    நான், நான்கு கால்களையும் தரையில் ஊன்றி நிற்பதாக இருந்தால், இந்தப் பூமியினால் என்னுடைய கனத்தைத் தாங்க முடியாது. எனவே ஒற்றைக்காலில் நின்று தவம் புரிகிறேன்.

    ஒரு விஷயம் தெரிந்து கொள்ள ஆசை! போதிசத்துவ எலி கேட்டது.

    தாராளமாகக் கேளுங்கள்.

    நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?

    வெறும் காற்றை மட்டும்.

    வேறெதையும் சாப்பிடுவதில்லையா?

    இல்லை!

    இன்னும் ஒரு கேள்வி!

    கேட்கலாம்!

    நீங்கள் எதற்காக சூரியனுக்கு நேராக முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    அதுதான் நான் சூரியனை வணங்கும் முறை!

    இவ்வளவு விபரங்கள் கூறியதற்கு நன்றி!

    போதிசத்துவருக்கு நரி மீது பக்தியும், மதிப்பும் தோன்றியது.

    மறுநாளிலிருந்து எல்லா எலிகளும் நரிக்கு நேராகச் சென்று வணங்கின.

    இந்தப் பழக்கம் ஒரு தினசரிக் கடமையாகவே தொடர்ந்தது.

    போதி சத்துவருக்கு ஒன்று மட்டும் தெரியாமற் போனது.

    நரியை வணங்கிவிட்டு எலிகள் திரும்பி வரும் போது வரிசையாகவே திரும்பி வரும். அந்த வரிசையிலுள்ள கடைசி எலியின் நிலைமை என்னவாகும் தெரியுமா?

    நரி ஒரு வினாடிக்குள் அந்த எலியைக் 'கபக்' கென்று பிடித்து விழுங்கி விடும்; பிறகு எதுவும் நடக்காதது போல் பழையபடியே நின்று கொள்ளும். எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இது நடைபெற்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாவும் நடந்தது.

    கடைசி எலிக்கு முன்னாலுள்ள எலிக்குக்கூட இந்த ரகசியம் தெரிய வில்லையென்றால் நரியின் தந்திரத்தைப் பார்த்துக் கொள்ளுங்களேன்!

    சில நாட்களுக்குப் பிறகு எலிகளுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே? எதனால் இவ்வாறு குறைகிறது? இதன் காரணம் என்ன? எந்த எலிக்கும் எதுவும் புரியவில்லை.

    போதிசத்துவர் இதைப்பற்றி யோசித்தார். அவருக்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரணமில்லாமலே நரி மீது ஒருவித சந்தேகம் தோன்றியது. உண்மையிலேயே நரி முனிவன்தானா? அல்லது முனிவனைப்போல் நடிக்கும் கிராதகனா? எதற்கும் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1