Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penkalin Sinthanaikku
Penkalin Sinthanaikku
Penkalin Sinthanaikku
Ebook208 pages1 hour

Penkalin Sinthanaikku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580101501476
Penkalin Sinthanaikku

Read more from Jyothirllata Girija

Related to Penkalin Sinthanaikku

Related ebooks

Reviews for Penkalin Sinthanaikku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penkalin Sinthanaikku - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    பெண்களின் சிந்தனைக்கு

    Penkalin Sinthanaikku

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காதலிக்கும் பெண்களின் கவனத்துக்கு...

    2. நங்கையரின் நகை ஆசை

    3. கண்ணிரில் மிதக்கும் காரிகைகள்

    4. மயிலே மயிலே இறகு போடு

    5. கலப்பு மணம் - ஒர் அலசல்

    6. பாவம் இந்தக் குழந்தைகள்

    7. 'இன்ஸ்டால்மென்ட்' இந்திரா

    8. திருமணம் அவசியந்தானா?

    9. மாமியார் மருமகள்

    10. இரண்டாம் மனைவி வேண்டாமே!

    11. பெண்களுக்கெதிரான 'கில்' விஷமங்கள்

    12. பெண்களின் வேலைப் பளு

    13. பெண்களே! வேலைக்குப் போகாதீர்கள்!

    14. கருக்கலைப்புப் பெண்களின் பிரச்சினை

    15. பெண்ணின் பொறாமை!

    16. சகிக்க முடியாத சகிப்புத்தன்மை

    17. இந்தப் பெரியவர்கள்

    18. மனைவி ஒரு நாள் கணவன் ஒருநாள் சமையல் செய்தால் என்ன?

    19. மைதிலி சொல்ல மறந்தது

    20. சமூகசேவகிகள் செய்வது சரிதானா?

    21. முதல் கருவைக் கலைக்காதீர்கள்

    22. திருமண ரத்து அவசியமா?

    23. இனியது, இனியது இறைவன் தந்த உயிர்

    24. முடிவுரை

    1

    காதலிக்கும் பெண்களின் கவனத்துக்கு...

    'காதல்' என்கிற சொல் ஒரு முப்பது-நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தடை செய்யப்பட்ட நிலையில் இருந்த சொல்லாக இருந்திருக்கக்கூடும். ஆனால், இன்று?

    எட்டு வயதுப் பெண்ணோ, பையனோ ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டுத் தன் சகாவுக்கு, 'அந்தப் பொண்ணு அவனை லவ் பண்றாடா. ஆனா அவன் கண்டுக்கவே மாட்டேங்கறான் என்று கதை சொல்லும் காலம் இது.

    ஆண்களும் பெண்களும் பெரிய எண்ணிக்கையில் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும், இன்ன பிற பணி இல்லங்களிலும் இணைந்து பணி யாற்றும் இக்காலத்தில் இள வயதினர் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு 'ஐ லவ் யூ' சொற்றொடர்ப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் இந்தச் சொற்கள் தரும் மயக்கம் தான் ஆணுக்கு ஆண் வித்தியாசப்படுகிறது. வித்தியாசப்படாது ஒரே தாக்கத்துடன் பெண்களைப் பொறுத்தமட்டில் இருக்கிறது என்பதுதான் வியப்புக்குரிய விஷயமாகும்.

    தன்னை ஒருவன் நேசிப்பதாகச் சொல்லி விடுவதே - அதைக் கேட்க நேர்வதே - பொதுவாக எந்தப் பெண்ணையும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது என்பது மிகையே இல்லை. பெண் என்பவள் இயல்பாக அன்புக்கு ஏங்கும் ஒரு பிறவி அன்பைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல் அதைப் பிறர்க்குத் தருவதற்கும் ஏங்குகின்ற ஒரு படைப்பு. இதனாலோ என்னவோ, ஒர் ஆண் அவளைத்தான் நேசிப்பதாகவும். அதனால் அவளை மணந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லுவது அவளை எங்கோ ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வுக்கு ஆட்படுத்தி விடுகிறது.

    இந்த உலகத்தில் தன்னல நோக்கங்கள் இல்லாத அன்புகள் சில உண்டு. பெற்றோரின் அன்பு, ஆசிரியரின் அன்பு ஆகியவற்றை முக்கியமாகச் சொல்லலாம். கூடப்பிறந்தவர்களின் அன்புக்கும் இளவயதில் நோக்கங்கள் இல்லாது போனாலும், வயதாக, வயதாக உறவுகள் மாற்றம் பெறுகின்றன - சிலர் விஷயத்தில், நட்புக்காகப் பழகுபவர்களுக்கிடையேயும் நோக்கங்கள் அற்ற - வெறும் நட்புக்காக மட்டுமே பழகுகிற - அன்பு உண்டு

    ஆனால் இந்தக் காதல்?

    இதிலும் காதலுக்காகவே காதலிப்பவர்கள் உண்டெனினும், பொதுப்படையாக நோக்கினால், இந்த உறவு சுயநல நோக்கங்கள் நிறைந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆணின் காதலைப் பொறுத்த மட்டில், உண்மையாகக் காதலிக்கிற தேவதாஸ்கள் இவர்களில் உண்டென்றாலும், இவர்களது காதல் பெருமளவுக்கு உடல்ரீதியானதாகவே இருக்கிறது. அல்லது பொருளாதாரரீதி சம்பந்தப்பட்டது. அல்லது அழகு, கவர்ச்சி ஆகியவை சம்பந்தப்பட்டது இவை மூன்றும் அல்லாத - காரணம் எதுவும் சொல்லத் தெரியாத - அழகு அவ்வளவாக இல்லாத ஒரு பெண்ணின் மீது - காதல் கொள்ளுகிற ஆண்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் இத்தகையோரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணப்படக்கூடியது.

    மனத்தின் உணர்வுகளின் பாற்பட்ட காதல் உணர்வு மிக, மிக அரிதாகத்தான் ஆணின் மனத்தில் மலர்கிறது. எனவே ஒர் ஆண் தன்னிடம் வந்து, ஐ லவ் யூ. என்னைக் கலியாணம் பண்ணிப்பீங்களா? என்று கேட்கும் போது உடனே குழைந்து போய் நாணித் தலை குனிந்து தனது இணக்கத்தை 90% புலப்படுத்தி விடுகிற அசட்டுத் தனத்தைப் பெண்கள் கைவிட வேண்டும். ஏனெனில் திருமணத்தால் அதிக அளவில் பாதிப்பு அடைகிறவள் பெண்ணேயாவாள். மனைவி நல்லவளாக இல்லாததால் ஒர் ஆணுக்கு விளையும் துன்பங்களின் பரிமாணத்தைக் காட்டிலும், கணவன் நல்லவனாக இல்லாததால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் துன்பங்களின் அளவும் திண்மையும் மிக, மிக அதிகமானவை. எனவே கணவனைத் தேர்ந்தெடுப்பதில், மனைவியைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், அதிகக் கவனத்தை ஒரு பெண் காட்ட வேண்டியது அவசியமாகும்.

    பெண்களுக்கு என்று இயல்பாக ஒர் உள்ளுணர்வு உண்டு. அது என்ன சொல்லுகிறதோ அதன்படி அவள் நடப்பது பெரும்பாலும் அவளுக்கு நல்லதையே செய்யும். ஒர் ஆண் லலிதா என்கிற பெண்ணிடம் வந்து தான் அவளைக் காதலிப்பதாகச் சொல்லுகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். ஒரே பிரிவில் இருவரும் வேலை செய்பவர்கள் - அல்லது ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் - என்றும் வைத்துக் கொள்ளுவோம். அவளுக்கு அவன் பற்றிய ஒர் அபிப்பிராயம் இருக்கக்கூடும். மொத்தத்தில் அவன் நல்லவன் என்பதாக அவள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். காதில் விழும் செய்திகளே பெரும்பாலும் இந்தக் கணிப்புக்கு அடிப்படையாக இருக்கும்.

    எனினும், காதில் வந்து தாமாக விழுந்தவை ஒருபுறமிருக்க, லலிதாவுக்கு என்று ஒர் உள்ளுணர்வு உண்டு. எந்தப் பெண்ணுக்கும் இருக்கும் இந்த உள்ளுணர்வு சில பெண்களுக்கு அபரிமிதமான அளவில் இருப்பதுண்டு. இவ்வுள்ளுணர்வு என்ன சொல்லுகிறது என்பதே இவள் அவனுக்குச் சொல்லக் கூடிய - அல்லது சொல்ல வேண்டிய - பதிலின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

    அவனைப் பற்றிய பிறரின் கணிப்புகளும், அவள் காதில் அதுகாறும் வந்து விழுந்துள்ள செய்திகளும் நல்லவையாகவே இருந்து, ஆனால் அவன் பற்றிய நல்ல கருத்து அல்லது மதிப்பீடு அவளுக்கு இல்லாது போகுமாயின், தனது சுய மதிப்பீட்டின் அடிப்படையில்தான் அவள் சிந்தித்துச் செயல்படவேண்டும். அந்தச் சிந்தனையின் முடிவு சரியானதாகவே பெரும்பாலும் இருந்துவிடும்.

    'இவரைப் பற்றி எல்லாருமே நல்ல விதமாகச் சொல்லுகிறார்கள். ஆனால், என் மனத்தில் அப்படி ஒரு கணிப்பு ஏற்படமாட்டேன் என்கிறதே? என்று அவள் யோசிக்கவேண்டும். அந்த யோசனையின் விளைவாக அவள் கொஞ்சம் அவகாசம் கேட்கலாம். அல்லது, உடனேயே கூட சாரி சொல்லி, தேவையற்ற அக்கப் போரைத் தவிர்த்தும் விடலாம். தனது உள்ளுணர்வு தப்பாக இருக்கும் என்கிற நினைப்பு மட்டும் பெண்ணுக்கு வரலாகாது. அதன் அடிப்படையில் அவள் இன்னும் சிந்திக்க வேண்டுமானால் செய்யலாமே தவிர, அது தவறாக இருக்கும் என்று எண்ணி அதை அலட்சியப்படுத்துதல் அசட்டுத் தனமேயாகும்.

    ஒரு பெண்ணை ஒருவன் காதலித்தான். தனது காதலை அவன் வெளியிட்டதும், அந்தப் பெண் அவகாசம் கேட்டாள். ஏனெனில், அவன் தன் காதலை வெளிப்படுத்தியதும், அவள் மனத்தில் காரணம் எதுவுமே இல்லாது ஒர் அச்சம் ஏற்பட்டது. அது அவளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒரே பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தான்

    இருவருமே. மூன்று ஆண்டுகளாகப் பழக்கம். இருப்பினும், அச்சம் ஏற்பட்டது. இதனால் புத்திசாலித் தனத்துடன் யோசிக்க அவகாசம் கேட்டாள்.

    தன் தோழி ஒருத்தியிடம் சேதியைச் சொன்னதோடு, தன் மனத்தில் ஒரு பயம் அவன் பால் ஏற்படுவதாகவும் தெரிவித்தாள். ஒரு வேளை செக்ஸ் வெறுப்பு அதன் அடிப்படையாக இருக்கக் கூடுமோ என்று கேட்டாள் தோழி. இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள் அந்தப் பெண். எந்தக் காரணமும் இல்லாமலே அவன்பால் அப்படி ஒர் அச்சம் - அவநம்பிக்கை கலந்த பயம் - தனக்கு ஏற்படுவதாக அவள் சொல்ல, 'அப்படியானால் நீ யோசித்துத்தான் முடிவு செய்யவேண்டும். அவசரப்படாதே', என்கிற யோசனை அவளுக்குத் தோழியால் சொல்லப்பட்டது.

    ஒரு வாரம் கழிந்த பிறகு, 'என்ன யோசிச்சிங்களா? ஒரு வாரமா நீங்க மாட்டேன்னு சொல்லிடுவீங்களோங்கிற எண்ணத்தால நான் சரியாத் தூங்கவே இல்லே', என்று அவன் கவலையான முகத்தோடு அவளிடம் சொன்னதும் பெண்ணுக்கே இயல்பான முறையில் அவள் குழைந்து போய் விட்டாள். யெஸ்' என்று சொல்லிவிட்டாள். இரண்டே மாதங்களில் அவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

    கொஞ்ச நாட்கள் கழித்து, அந்தப் பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. கலகலவென்கிற சிரிப்பு முதலில் காணாமற் போயிற்று. அலுவலக வேலைகளில் தவறுகள் செய்யத் தொடங்கினாள். பிற

    ஆண்களுடன் பேசிப் பழகியது சிறுகச் சிறுகக் குறைந்து பின் அறவே நின்றது. சகோதரர்கள் போல் பழகிவந்த ஆண்களுக்கு இது அதிர்ச்சியளித்தது. அவளுடைய அதே பிரிவில் திருமணத்துக்கு முன்னால் வேலை செய்து கொண்டிருந்த அவள் கணவன் பிறிதொரு பிரிவுக்கு மாற்றல் கேட்டுக் கொண்டு போனான். அவர்களுக்குள் ஏதேனும் சண்டையோ என்று அலுவலகம் முழுவதும் காதுகடித்தது. ஆனால் அப்படி ஏதுமில்லை. ஏனெனில், சாப்பாட்டு வேளையின்போது இருவரும் சேர்ந்து வெளியே போனார்கள். அலுவலகத்துக்குச் சேர்ந்தே வந்தார்கள். வீட்டுக்குப் போகும்போதும் சேர்ந்தே மோட்டார் பைக்கில் போனார்கள். பேசிக் கொண்டார்கள். சிரித்தார்கள். இதனால், அவளது நடவடிக்கையில் விளைந்த மாற்றம் மற்றவர்க்குப் பெரும் புதிராக இருந்தது.

    திருமண விஷயத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட தோழிக்குப் பொறுக்கவில்லை. ஒரு நாள் கேட்டு விட்டாள் - ஏண்டி ஒரு மாதிரி இருக்கே? கலகலன்னு சிரிப்பே. அந்தச் சிரிப்பே போயிடிச்சே? உங்க ஹஸ்பண்ட் வேற செக்க்ஷன்.வேணும்னு கேட்டு வாங்கிண்டது எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். பொண்டாட்டி வேலை செய்யற செக்க்ஷன் வேணும்னு கேக்கற ஆம்பளைங்க இருக்காங்க. இவரு தலைகீழா இருக்காரே?' - இவ்வாறு கேட்கப்பட்டதும் அந்தப் பெண் கண்ணிர்விடத் தொடங்கினாள்.

    "நாலு பேரு ஏதாவது பேசுவாங்க. வேற செக்க்ஷனுக்குப் போகாதீங்கன்னு எவ்வளவோ

    சொன்னேன். அவரு கேக்கல்ல. உனக்கு அவமானம் ஏற்படாதபடி ஒரு காரணம் சொல்லிடறேன்னாரு. அதும்படி, மத்த செக்க்ஷன்கள்ள வொர்க் பண்ணி எல்லா வேலைகளையும் நான் கத்துக்க விரும்பறேன். அதனால வேற செக்க்ஷன் கொடுங்கன்னு கேக்கறேன். அப்ப யாரும் எதுவும் பேசமாட்டாங்கன்னுட்டாரு..." அது சரி, ஆனா அதுக்கு என்ன காரணம்? ஏன் உன் முகம் களையில்லாம போயிடிச்சு? நான் மத்த ஆம்பளைங்களோட தமாஷா சிரிச்சுப் பேசறதும், அவங்க எங்கிட்ட சகஜமாப் பேசிப் பழகறதும் அவருக்குப் பிடிக்கலையாம். ஒரே செக்க்ஷன்ல இருந்தா அதைத் தினமும் பார்த்துக் கொதிக்கும்படி இருக்குமாம். அதனாலதான் வேற செக்க்ஷன் கேட்டுட்டுப் போயிட்டாரு, என்றாள் இவள்.

    2

    நங்கையரின் நகை ஆசை

    பெண்களின் நகை ஆசை கண்டிக்கத்தக்கது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இருக்க முடியாது. இது சமயங்களில் ஆண்களைக் கடன்களிலும் கவுரவக் குறைவான செயல்களில் ஈடுபடுதலிலும் ஆழ்த்தி விடுகிறது என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

    யாருக்குமே உண்மையான அழகைச் சேர்ப்பது அவர்தம் உள்ளத்து அழகுதான். உள்ளத்தில் உண்மையான நற்பண்புகள் இருப்பின் அவை முகத்தில் - சிறப்பாய்க் கண்களில் - வெளிப்பட்டு அம்மனிதர்க்கு அழகைக் கூட்டி அக்கம் பக்கத்தவரையும் எதிர்ப்படும் அன்னியர்களையும் கூட அவர்களை மதிக்க வைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

    இந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1