Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasukkul Pozhiyum Mazhai
Manasukkul Pozhiyum Mazhai
Manasukkul Pozhiyum Mazhai
Ebook135 pages1 hour

Manasukkul Pozhiyum Mazhai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580101001537
Manasukkul Pozhiyum Mazhai

Read more from Ga Prabha

Related to Manasukkul Pozhiyum Mazhai

Related ebooks

Reviews for Manasukkul Pozhiyum Mazhai

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasukkul Pozhiyum Mazhai - GA Prabha

    http://www.pustaka.co.in

    மனசுக்குள் பொழியும் மழை

    Manasukkul Poliyum Mazhai

    Author:

    ஜி.ஏ. பிரபா

    G.A. Prabha

    For other books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    மனசுக்குள் பொழியும் மழை

    -ஜி.ஏ. பிரபா

    1

    தாய்க்கு இணையான

    தெய்வம் வேறு எதுவுமில்லை

    "ஆதித்ய ஹ்ருதயம் புண்யம்

    ஸர்வ சத்ரூ விநாசனம்"

    கணகணவென்ற குரலில் விழிப்பு வந்துவிட்டது.

    விழிப்பு வந்தபோது வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது.

    சன்னமான மழை ஜிலுஜிலுவென்று கைவீசி துள்ளலாய் நடந்து போகும் பருவப் பெண்ணைப் போல் குளிர்ச்சியான மழை.

    விடியலில் மழையும், ஸ்லோகமும் சுகமான விஷயம். எழுந்திருக்காமல் பழைய நினைவுகளை அசை போட்டபடி படுத்திருப்பது சுகம். அசை போடுவது கூட இல்லை. மனதை வெறுமனே அலைய விடுவது சுகம்.

    அது எங்கெங்கோ சுற்றித் திரியும்.

    திருச்சி பிறந்து வளர்ந்த ஊர். பின் சென்னை. படித்தது கிறிஸ்டியன் காலேஜ், தற்போது பணிபுரியும் கல்லூரி... என்று சுற்றிச் சுற்றி, இப்போது இருக்கும் திருவல்லிக்கேணியில் வந்து நிற்கும்.

    தான் வணங்கும் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் வந்து நிற்கும். கண்மூடி ஸ்ரீராகவேந்த்ராய நமஹ சொல்லி எழுகையில் மடமடவென்று அன்றைய பொழுதுக்கு மனம் தயாராகி விடும்.

    வீரராகவப் பெருமாள், ராமநாமம் சொல்லி எழுந்தார்.

    பிருந்தாவனம் இருக்கும் திசை நோக்கி வணங்கினார். பலருக்கு பொழுது பரபரப்பாகத்தான் விடிகிறது. விடியும்போதே டென்ஷன், கவலை என்று முதல் நாள் விஷயங்கள் மனதில் ஏறிவிடும்.

    வெளியில் போனால்தானே உள்ளே வர.

    ‘கெட் அவுட்’ – சொல்லப் பழக வேண்டும். அந்தந்த நேரத்து நினைப்புகளை, நடப்புகளை அப்போதே அனுபவித்து விட வேண்டும். ரோமில் இருக்கும்போது ரோமான்யனாக இரு.

    வீரராகவப் பெருமாள் அப்படித்தான் இருக்கிறார். மிகப் பெரிய இடி விழுந்த போதுகூட கலங்கியதில்லை. அப்படியா சரி என்று இருந்து விட்டார். அதனால்தான் இத்தனை வயசுக்கு சுகர், பி.பி. என்று எதுவும் இல்லை.

    தங்கை கற்பகத்தின் மகன் கௌதம் அடிக்கடி கேட்பான்.

    எத்தனை வயசு மாமா?

    சொல்லமாட்டார். உனக்கெதுக்கு வயசு?

    சும்மா குத்து மதிப்பா சொல்லுங்க

    நீயே சொல்லு

    ஒரு முப்பத்தேழு, நாப்பது

    பத்து வயசு அதிகம் சொல்லிட்டே. நான் உன்னைவிட சின்னவன்டா

    ஆனால் இந்த நவம்பர் வந்தால் அம்பத்தி ஆறு.

    வீரராகவன் தன் ஓய்வு பற்றி யோசித்தார். ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது? சொந்தம்... ம்ஹும் யாரும் இல்லை. சொத்துக்கள் என்று இந்த வீடு, பேங்கில் சில லட்சங்கள் டெபாசிட். மற்றபடி அனாதை இல்லத்து பையன்கள் சிலரை படிக்க வைக்கிறார். அந்த இல்லத்து பெண்களுக்கு திருமணம் என்றால் உதவி செய்வார்.

    எல்லாம் வாழ்க்கை போகும் பாதை.

    மழை நின்றிருந்தது. பெருமாள் வெளியில் வந்தார். ஹால் முழுவதும் சாம்பிராணி மணத்தது. அவரின் அம்மா, அப்பா படத்துக்கு மாலை போட்டு, தெய்வீகம் நிரம்பியிருந்தது.

    கற்பகம் காட்சி தந்தாள்.

    இன்னைக்கு என்னம்மா விசேஷம்?

    அம்மா, அப்பாவோட கல்யாண நாள்

    ஓ! நவம்பர் பத்துல்ல. தீபாவளி வருது

    வீரராகவப் பெருமாள் குட்மார்னிங் – கௌதம் வந்துவிட்டான்.

    டேய் மாமாவை பேர் சொல்லிக் கூப்பிடாதே – கற்பகம் அதட்டினாள்.

    நோ அம்மா. இவர் என்னை விடச் சின்னவர் – கௌதம் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

    என் வாயே எனக்குச் சத்ரு

    டூட் – கன்னத்தில் முத்தமிட்டான் கௌதம் நரை தெரியுது மாமா

    எமன் லெட்டர் போட்டிருக்கான்

    முகவரி தப்புன்னு திருப்பி அனுப்புங்க

    எப்படி?

    டை போடுங்க

    போடா, இயற்கையே அழகு.

    அழகுக்கு அழகு செய்யுங்க மாமா

    நீ பண்ணிக்கடா வயசுப் பையன் உடம்பைப் பாரு, பீப்பாய் மாதிரி தொப்பை வேற – வீரராகவன் வயிற்றில் தட்டினார்.

    மாமா ஹைட்டுக்கு ஏத்த வெயிட். எத்தனை பொண்ணுக பின்னாடி சுத்தறாங்க தெரியுமா?

    எதானும் ஏத்துகிட்டியா?

    ஒண்ணு ரிசர்வுல இருக்கு மாமா

    வெரிகுட். சீக்கிரம் பேசி முடிடா. எங்க பொறுப்பு முடிஞ்சது.

    ஆ! - கௌதம் முறைத்தான். பொண்ணு பார்த்து செலக்ட் பண்றதோட முடிஞ்சுது. பேசி எனக்கு ஏத்தவளா என்னன்னு முடிவு செய்ய வேண்டியது நீங்கதான்.

    வீரராகவன் ஆசையோடு அவன் கன்னத்தை தடவினார். தான் பார்த்து வளர்த்த குழந்தை. தன் தோளுக்கு உயர்த்து நிற்கிறான். பத்து வயதிலிருந்து அவர்தான் வளர்க்கிறார். கற்பகம் ஒரே தங்கை. கௌதமிற்கு பத்து வயதாகையில் அவள் புருஷன் இறந்து போனார். ஆசிரியராக இருந்து இறந்ததால் கற்பகத்திற்கு பென்ஷன் வருகிறது. அரசு தந்த பணத்தை தன் பேரில் டெபாசிட் செய்து அதில் வட்டி வருகிறது.

    வீரராகவன், தங்கையைத் தன் தாயாக நினைத்தார். கௌதம் அவரின் உயிர். அந்த சமயத்தில்தான் வீரராகவனின் மனைவி பவானி ஒரே மகள் மைத்ரேயியுடன் ஓடிப் போயிருந்தாள்.

    அவர் வாழ்வின் அவமானம் அது.

    இவருடன் வாழப் பிடிக்கவில்லை என்று தெரிந்த இளைஞனுடன் ஓடிப் போயிருந்தாள். மைத்ரேயிக்கு இருபது முடிந்திருக்கும் இப்போது. எங்கிருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ?

    ஏக்கம் சூழ்ந்தது மனதில்.

    அப்போதெல்லாம் அவர் கௌதம் முகம் பார்த்துதான் மனம் தேறுவார்.

    டேய், உடம்பைக் கவனிடா முகத்துல பாரு. பரு

    நிறைய குடி ஏறிடுச்சு மாமா

    வாடகை வசூல் பண்ணிடலாம். விடு – கற்பகம்.

    நல்ல குடும்பம் – என்ற கௌதம், மாமா உங்களுக்கும் வயசாகிறது

    ஏண்டா சும்மா இதையே சொல்ற?

    இந்த வயசுக்கு இதையே சொல்ற?

    அட, உங்களுக்கு ஒரு துணை வேணாமா?

    இந்த வயசுக்கு எனக்கு யாருடா பொண்ணு தருவாங்க

    ரொம்ப ஆசைதான். அத்தையைத் தேடிப் பாருங்கண்ணு சொல்றேன்.

    எங்க இருக்கான்னு தெரியலை. அதோட இன்னொருத்தன்கூட வாழ்றவளை நான் போய் எப்படி கூடவான்னு கூப்பிட முடியும்?

    நீங்க கல்யாணம் பண்ணிட்டிருக்கலாம்

    விடு ரிடையர் ஆனதும் பண்ணிக்கிறேன்

    வீரராகவன் குளிக்கப் போனார். சுவாமி பூஜை செய்யும் வழக்கமில்லை. நின்று நெற்றியில் திருநீறு இடுவதோடு சரி. குளித்ததும் மண் வட்டிலுடன் படி ஏறினார். அதில் தண்ணீர் ஊற்றி கைப்பிடிச் சுவரில் வைத்தார். வெயில் நேரத்துக்கு காகங்கள் வந்து நீர் அருந்தும்.

    தன்னால் முடிந்த கைங்கர்யம்.

    கீழே வந்தபோது டிபன் ரெடியாக இருந்தது.

    அண்ணா என்னை மயிலாப்பூர்ல இறக்கி விட்றியா? கற்பகம் கேட்டார்.

    என்ன விசேஷம்மா?

    "நாத்தனார்

    Enjoying the preview?
    Page 1 of 1