Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillaikalai Adakka Vazhikal
Pillaikalai Adakka Vazhikal
Pillaikalai Adakka Vazhikal
Ebook127 pages44 minutes

Pillaikalai Adakka Vazhikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“பிள்ளைகளை அடக்க வழிகள்” என்று தலைப்பிடப்பட்ட இந்தநூல் , அம்மா, அப்பா என்கிற மூத்தவர்களுக்கும், பிள்ளைகள் என்கிற இளைய வாரிசுகளுக்கும் இடையில், இருக்கும் உரசல்களை, மிகத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் ஒரு உன்னத நூல்.

ஒரு வாழ்க்கையின் வெற்றி என்பது, பெற்றவர்கள், பிள்ளைகள் ஒருவரை, மற்றவர்கள் புரிந்து கொள்வதிலும், ஒருவர், மற்றவருக்கு அனுசரித்துப் போவதிலும் உள்ள, ஒரு அத்யந்த உறவாகும்.

இந்த இனிமையான உறவுக்குள், விரிசல்கள் உருவாகாமல் இருக்க, பழைய பாசமுள்ள அந்நியோன்னியம் பெற்றவர், பிள்ளைகள் உறவில்நிலவி, அதற்குரித்த வழிகளைப்பற்றிய சிக்கல்களை, இந்நூல் தெளிவாக அலசி, பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில், ஒரு புனித உறவு நிகழ வழி காட்டி நிற்கிறது.

Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580110801533
Pillaikalai Adakka Vazhikal

Read more from Udayadeepan

Related to Pillaikalai Adakka Vazhikal

Related ebooks

Reviews for Pillaikalai Adakka Vazhikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillaikalai Adakka Vazhikal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    பிள்ளைகளை அடக்க வழிகள்

    Pillaikalai Adakka Vazhikal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    பிள்ளைகளை அடக்க வழிகள்

    1

    வாலிப மகனுக்கான பெற்றவரின் கடமைகள்

    மகன் புது இடத்தில், தனக்கு வீட்டைவிட்டு வெளியில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படும் போது, அவனை மறந்துவிட்டு, அவன் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட வேண்டுமா? என்னும் கேள்வியும், இங்கு எழுவது இயல்பானதுதான்.

    மகனின் புது பயணத்திற்குக் குறுக்கே நிற்க வேண்டாம்...

    என்பதுதான், பெற்றவர் இடத்தில் இருக்க வேண்டும். அதாவது திடுமென ஏற்பட்டுவிட்ட தற்காலிகபிரிவில், மகன் தங்களை விட, வேறு ஒன்று முக்கியமானது என்று வீட்டை விட்டு வெளியில் போகின்றான். இதைப் பெற்றவர்கள் பார்த்து, மார்பில் அடித்துக் கொள்ளாமல், இதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் கெடுதல்அற்ற புது வழிகளை, அங்கீகரிக்கவும் வேண்டும்.

    அதாவது ஒவ்வொருவரின் பருவத்திலும் இதுதான்...

    நடக்கின்றது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இதில் பொறாமை கொள்வது, மகனிடம் சிடுசிடுப்பது. அவனை அதை வைத்து, அந்நியமாக பார்ப்பது, அவன் மீது வெறுப்பு கொள்வது என்பதெல்லாம் தேவையற்றது.

    மகனின் மாற்றங்களில் முதலில் ஒரு அவநம்பிக்கை...

    அவன் மீது கொள்ளாமல் இருப்பதும்,பெருந்தன்மையில் நிலைப்பதும், பெற்றவருக்குரிய அவர்களின் பக்குவக் கடமை ஆகின்றது. இதில் பக்குவம் இல்லாமல் நீ வீட்டிலேயே இருக்கிறதில்லை. இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு வருகின்றாய்! வீட்லேயும் இரவில் சாப்பிடுவதில்லை உன் மனசுக்குள் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று சாராயம் குடித்தது போன்று, பட படப்பாக மகனிடத்தில் பேசி, அவனை வம்புக்கு இழுக்க வேண்டாம்...

    தானும் ஒரு வீம்புக்குள் எதிர்த்து நின்று வீட்டுக்குள் வரப்...

    பிடிக்கவில்லை என்று அவனும், கோபத்தில் எகிறுவான். இந்தமாதிரியான ஒரு விரும்பத்தகாத, பேச்சுக்கள் வீட்டுக் குள் நடக்காமல், அமைதியுடன், பெருந்தன்மையுடன், பெற்றவர்கள், தங்களின் மகனுக்கு முன்பு, இருந்து கொள்வதே அவர்களுக்கு, அது நன்மை பயக்கும்.

    வார்த்தைகளை வீணாக்கினால் மகனும் வார்த்தைகளில்...

    எகிறுவான். அவன் யாரையும் எதிர்க்கவில்லை. தன் வழிக்குக் குறுக்கே யாராக இருந்தாலும், வரக்கூடாது என்பது மட்டுமே அவனின் எதிர்பார்ப்பு. பிறரிடத்தில் வம்படிக்க வேண்டும் என்பது, அவனின் எண்ணம் அல்ல.

    பெற்றவர்கள் அமைதியாக இருந்து கொண்டு "இங்க...

    பாருப்பா, இது உன் வீடு. நீ நன்றாக இருக்க பெற்றவர்கள் ஆசைப்படுகின்றோம். உன்னை நாங்கள் எதிர்க்கவில்லை. உன் இஷ்டத்திற்கு குறுக்கே வரப்பிரியம், எங்களுக்குள் இல்லை" என்று கூறிவிட்டால், அவனுக்குள் வார்த்தைகள் நின்றுவிடும். பெற்றவர்களின்மீது உள்ளவெறுப்பும் மறையும். இளம்பிள்ளை, பயம் அறியாது என்பார்கள். மகனின் நடவடிக்கைகளை பின்னிருந்து, அவனுக்கே தெரியாமல் அவனை கண்காணிப்பதில், எந்தவித துரோகமும் கிடையாது.

    மகன் கொஞ்சம் அரட்டை அடிக்கின்றான்...

    நண்பர்களுடன் ஓரிரு சினிமா பார்க்கின்றான். மற்றபடி குடிப்பதில்லை. போதை மருந்துக்கு அடிமையாகவில்லை. எந்தப் பெண்கூடவும், அவன், அவளை பின்பற்றிச் செல்வதில்லை. வகுப்பில், அவன்தான் முதல் மதிப்பெண் எடுத்துக் கொண்டு வருகின்றான் என்றால், மகனிடம் பயப்பட ஒரு அவசியமும், பெற்றவருக்கில்லை.

    இளைய ஜெனரேஷனில் 100க்கு 10பேர்தான்...

    வீட்டில் இருக்கின்றார்கள். மீதி 90பேர்கள், தங்கள் இஷ்டத்துக்கு உலகத்தை, தானே படைத்துக் கொள்ளும் ஆசையில் வெளியில் பறக்கின்றார்கள்.

    இளையவர்களை தங்கள் உலகத்தில் இருக்கவிட்டு சற்று...

    தூர இருந்து, அவர்களின் நடவடிக்கைகளை பெற்றவர்கள் கண்காணித்து, தங்களின் பிள்ளை ஒழுக்கமான ட்ராக்கை விட்டு மாறவில்லை. அதை மீறவில்லை என்று உறுதிப் படுத்திக்கொண்டு, பிள்ளையிடத்தில் பழையபடி அன்பு, அக்கறை, கவனிப்பு என்று வித்தியாசமின்றி, அவனுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    அதை விட்டு, அவன் என்கூட முன் மாதிரி வந்து...

    பேசுவதில்லை. என்னிடத்தில் எதையும் கேட்டு, அதன் படிக்கு நடப்பதில்லை. அவன் என்னை மறந்துவிட்டான். அதை எனது மனம், தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று புலம்புவதில், நிலைமைகளைபெற்றவர்களே, சிக்கல் படுத்திக் கொள்ளும் ஒரு, நிலைமைக்குப் போவது கஷ்டமான ஒரு நிலைமைதான்.

    இதை எல்லாவற்றையும்விட மாற்றங்கள் மகனின்...

    வயது காரணமாக, வந்து அவனிடத்தில் இருந்து விட்டுப் போகட்டும். பெற்றவர்கள் 50 வயதைக் கிட்டத்தட்ட கடக்கிறவர்களுக்குள், முறையற்ற மாற்றங்கள் எதுவும், அவர்களிடத்தில் வராமல் இருந்தால், மகன் சரியாகவே தனது தனித்த வாழ்க்கையிலும், முறைபிறழாமல் நடந்து கொள்வான்.

    அம்மா அப்பா நல்லவர்களாக இருக்கையில்...

    மகனின் நடத்தையில் மட்டும், கெட்டத்தனம் வந்து விடாது. 85% வரைக்கும் மகனை ஒற்று அறிந்து, அவனது நடவடிக்கைகளை அவனுக்குத் தெரியாமல் அறிந்து கொண்டுவிட்டால், பயமின்றி பெற்றவர்கள் இருந்து கொள்ள முடியும்.

    2

    தாய் என்பவளை அடையாளம் தெரிவோம்...

    பத்து மாத சுமை

    பத்துமாதம் குழந்தையை சுமக்கையில், நடக்க முடியாமல் அவஸ்தைபட்டு, குப்புறப்படுக்க துன்பப்பட்டு, குனிய நிமிர சிரமப்பட்டு, எப்பொழுதும் ஒரு பாரத்தைச் சுமந்து, அதை சந்தோஷத்துடன், தன்கூட இணைத்துக் கொண்டு விட்ட, தன் நலன் மறந்த ஒரு உருவம் தாயானவள்.

    குழந்தையைப் பெற்றுக் கொண்டு விட்டபின்பு

    அது அழுதால் கலங்கி, அது துடித்தால் தானும் துடித்து, அதன் மீது இரவும் பகலும், என்நேரமும் கண் வைத்து, 24 மணி நேர வேலைக்காரியாக உண்மையான, அக்கரை கவனிப்புடன் இருந்து கொண்டு, குழந்தையை வளர்த்து சிறுவனாக்குகின்றாள்.

    விபரம் தெரியாத குழந்தை அழுவது பசியிலா...

    இல்லை அதை,

    Enjoying the preview?
    Page 1 of 1