Sinthanaiyai Thoondum Arivu Kathaikal
By Udayadeepan
()
About this ebook
Read more from Udayadeepan
Arasar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Neethi Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsArivoottum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsParamarthaguru Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsAkbar Birbal Stories Rating: 5 out of 5 stars5/5Mulla Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsVeeramum Vivekamum Niraindha Vikramaadithyan Kathaikal Rating: 5 out of 5 stars5/5Sinthanaiyai Thoondum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sinthanaiyai Thoondum Arivu Kathaikal
Related ebooks
Maanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsUnaithean Ena Naan Ninaithean... Rating: 4 out of 5 stars4/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsNooru Varushathu Bommai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithanin Kathai Rating: 4 out of 5 stars4/5Sontham Eppothum Thodar Kathaithan... Rating: 3 out of 5 stars3/5Pani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsEn Anbu Kuzhanthaigale.... Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Enna Seithayada Rating: 4 out of 5 stars4/5Kaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsAavipen Anandhi Rating: 0 out of 5 stars0 ratingsVaanathai Thottavan Rating: 0 out of 5 stars0 ratingsAthai Mattum Sollathe! Rating: 5 out of 5 stars5/5புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Panthal Rating: 5 out of 5 stars5/5Thavikkum Idaiveligal Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Velicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsSiri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sinthanaiyai Thoondum Arivu Kathaikal
0 ratings0 reviews
Book preview
Sinthanaiyai Thoondum Arivu Kathaikal - Udayadeepan
http://www.pustaka.co.in
சிந்தனையைத் தூண்டும் அறிவுக் கதைகள்
Sinthanaiyai Thoondum Arivu Kathaikal
Author:
உதயதீபன்
Udayadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/udayadeepan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
சிந்தனையைத் தூண்டும் அறிவுக் கதைகள்
1. நூறு சதவீத அன்பை காட்டுங்கள்
ஒரு குட்டிப் பெண்ணும் குட்டிப் பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த குட்டிப்பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.
அந்தப் பையன் சொன்னான். என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன்; நீ வச்சுகிட்டு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தரியா?
என்று கேட்டான். குட்டிப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
அந்தப் பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டிப் பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். குட்டிப் பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்தக் குட்டிப் பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்தப் பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா... இல்லை, நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா?.. என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்தைப் பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும் நட்புக்கும், வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்!
2. அகந்தை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, ‘நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது’ என்று நினைத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது:
ஏய்... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும்.
சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன. இதைப் பார்த்துக் கத்தியது ஈ:
"அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம்
நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்."
பிறகு, ஈ பறந்து சென்றது.
‘இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்.
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.
3. அச்சுவும் சச்சுவும்
அச்சுவும், சச்சுவும் வேலை தேடித் தேடி அலுத்துப் போனார்கள். இருவரும் உள்ளூர் நூலகத்தில் சந்தித்தபோது, சொந்தமா நகல் (ஜெபேக்ஸ்) எடுக்கும் கடை வைப்பது பற்றியும் நீ பாதி பணம் போடறதா இருந்தா உன்னையும் பங்குதாரபேக சேர்த்துக்கறேன் என்றும் கூறினான் அச்சு.
சரி என்றான் சச்சு.
சச்சு ஆர்வத்துடன் ஒரு வார இதழை எடுத்து அதில் வந்திருந்த நகல் இயந்திர (ஜெபேக்ஸ் மிஷின்) விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தைக் காட்டினான்.
அந்தக் கம்பெனியின் விலாசத்தை எழுத பேனாவை எடுத்தான் சச்சு.
அதற்குள் அச்சு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விளம்பரம் வந்த பக்கத்தை அப்படியே கிழித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.
வா, வெளியே போய் பேசலாம்
என்றான் அச்சு
சச்சுக்குவுக்கு மனசு உறுத்தியது. பலர் படிக்க வேண்டிய நூலகப் புத்தகத்தில் இருந்து அக்கறை இன்றி கிழிக்கிறானே, இவனை நம்பி பணம் போட்டு பங்குதாரபேய் சேர்ந்தால்?...
வெளியே வந்ததும், மன்னிக்கவும், நான் பங்குதாரபேய் சேரலை
என்றான் சச்சு.
கவனிக்க:அச்சுவை போல் நூலகத்தில் உள்ள நூல்களில் ஏடுகளை கிழிக்காதீர்; இன்று உங்களுக்கு பயன்பட்டது போல் வரும் காலங்களில் எல்லோருக்கும் பயன்பட தேவை அந்த புத்தகங்கள்.
4. அடி
ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அண்ணனை அடித்தாள் சுவேதா. போடீ இங்கிருந்து
என டென்ஷனானான். அங்கிருந்து ஓடி, பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை நெருங்கி ஓர் அடி வைத்தாள். நிமிர்ந்து பார்த்தவர், ஓகே!
என்றார்.
அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் அடித்தாள். ஒழுங்கா அடிம்மா!
என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். அடிச்சியா... நகரு!
என்று திரும்பிப் பார்த்தார் தாத்தா.
அப்போது, கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அம்மா. கையிலே சூடா டீ இருக்கு... கிட்டே வந்துடாதே!
என்று அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. சமாளித்து நின்ற அம்மா, எத்தனை அடி அடிப்பே? அங்கே பாரு அப்பாகிட்டே
என்று கை
நீட்டினாள். அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு
என்று அப்பா நொந்து கொண்டார், ‘நல்லா அடிக்கிறே கொசுவை!’
5. அதிபுத்திசாலி
ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதமாகும். அதோ! இரண்டு பேரும் அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள்
என்றார்.
குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்றுப் பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன்
என்றான் பெருமையோடு.
இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.
இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி
என்றார்.
முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்?
என்றான்.
முனிவர் அவனிடம், "சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.
இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊபேருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி" என்றார்.
இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்.
6. அழகும் அவலட்சணமும்
ஒரு நாள் அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்துக் கொண்டன
நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா?
என்று அழகு கேட்க, அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றன.
சிறிது நேரம் கழித்து குளித்தது போதும்னு அவலட்சணம் கரையேறியது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்து கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது.
பின்னர், குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணாமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது. எனவே, வேறுவழி இல்லாமல் அவலட்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.
அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள்; அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகின் உடைகளில் மயங்கி அவலட்சணத்தை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
7. அறிவாளியும் முட்டளாவான்!
தியானமும் தூக்கமும்
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்
என்றார்.
சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?
என்று கேட்டான்.
சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...
முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால், அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!
8. அறிவுத்திறனும், உடல் பலமும்
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும்