Hitchcock Kathaigal
By Sivan
()
About this ebook
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Related to Hitchcock Kathaigal
Related ebooks
Thik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsYaar Rating: 5 out of 5 stars5/5Vanajavin Annan Rating: 5 out of 5 stars5/5Soorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsNandhini En Nandhini Rating: 5 out of 5 stars5/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsOoz Nagarin Mayavi Rating: 0 out of 5 stars0 ratingsKeralathil Engo... Rating: 0 out of 5 stars0 ratingsPani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Izhantha Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsVaira Bommai Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Oru Yudham Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Enge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Malai Rating: 0 out of 5 stars0 ratingsPudhiya Maykkangal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Thottam Rating: 0 out of 5 stars0 ratingsDhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Sonnaye! Rating: 5 out of 5 stars5/5Irave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsSarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsOru Minnal… Oru Thendral… Rating: 5 out of 5 stars5/5Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsMuthu Pandhal Rating: 5 out of 5 stars5/5Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Hitchcock Kathaigal
0 ratings0 reviews
Book preview
Hitchcock Kathaigal - Sivan
http://www.pustaka.co.in
ஹிட்ச்காக் கதைகள்
Hitchcock Kathaigal
Author :
சிவன்
Sivan
For more books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1.ஆல்பிரட் ஹிட்ச்காக் பற்றி...
ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த சில கதைகள்
2.பதினான்காவது அறை
3.தண்டனை வேண்டும்
4.பொம்மைக் கை
5.மரணத்தை வென்றவள்
6.ஒர் அற்புதப் பறவை
1.ஆல்பிரட் ஹிட்ச்காக் பற்றி...
1899-ஆம் வருடம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி பிறந்தவர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக். அப்பா வில்லியம் ஹிட்ச்காக். திகில் படங்களின் மன்னன் என்று போற்றப்படுபவர். இந்தத் துறையில் தனித் தன்மை படைத்த முன்னோடியிாகவும் மதிக்கப்படுகிறார்.
தனது இருபதாவது வயதில் திரை உலகில் நுழைந்தார். முதல் படமான Lodgeriயிலேயே வித்தியாசமான அணுகு முறையைக் கையாண்டிருந்ததால் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
இங்கிலாந்தில் தயாரான முதல் பேசும் படமான Black Mail தான் ஹிட்ச்காக்கைத் திகில் படங்களின் திசையில் திருப்பியது. ஹிட்ச்காக்கின் மிகச் சிறந்த திகில் படமாக 39 Steps போற்றப்படுகிறது.
1938இல் தயாரான லேடி வானிஷஸ் படத்திற்காக அந்த வருடத்தின் மிகச் சிறந்த படமென்று நியூயார்க் க்ரிக்கிட் டிக்ஸ் விருது பெற்றார். 1940இல் வெளியான ரெபோக்கோ ஆஸ்கார் விருது பெற்றது. 1948இல் இவரே தயாரித்து இயக்கிய படம் The Rope
இது தான் ஹட்ச்காக் தயாரித்த முதல் வண்ணப் படமும்கூட. 1955-இல் அமெரிக்கக் குடி உரிமை பெற்றார். தனது படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் அது மிகச் சிறியதாக இருந்தாலும் ஹிட்ச்காக் நட்ப்பது அவரது தனிப்பாணி. அதைப் போலவே திடுக்கிடும் மர்மக் கதைகளைப் படிப்பதும் தேர்ந்தெடுப்பதும் ஹிட்ச்காக்கின் பொழுது போக்காக இருந்தன. இவரது கதைகள் உலகத்தின் பல பகுதிகளிலும் இன்றுகூட விரும்பி வரவேற்றுப் படிக்கப் படுகின்றன. 1980-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ஹிட்ச்காக் மரணமடைந்தார்.
ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த சில கதைகள்
2.பதினான்காவது அறை
ஒரு விஷயத்தை நான் முன்பே சொல்லி விடுகிறேன். நான் செய்து கொண்டிருக்கிற வேலையைப் பற்றிக் கேலியெல்லாம் செய்யக்கூடாது. காலையில் காலேஜூக்குள் நுழைந்தால் எனக்குத் தாராளமாகவே அதெல்லாம் கிடைக்கிறது. உத்தியோகம் ஆஸ்பத்திரி மார்ச்சுவரியில் தினமும் இரவு ஷிப்ட் எனக்கு. அந்த வேலை அவ்வளவாகப் பிடிக்கவில்லையென்றாலும், அது கொஞ்சம் செளகரியமாக உள்ளது.
முதலாவது விஷயம் பகல் முழுவதும் ஒழுங்காகக் காலேஜ் போகவும், புத்தகங்களைத் தேடி அலையவும் நேரம் கிடைக்கிறது. ராத்திரி நேரங்களிலும் படிப்பதற்கு நிறைய நேரம் இருக்கிறது. நடுநடுவே தூங்குவதற்கும் அவ்வப்போது செளகரியம் கிடைக்கிறது. நம்பர் எழுதி, சீட்டுக் கட்டித் தொங்கவிட்டிருக்கிற அறைகளுக்குள் சுகமாகத் துரங்கிக் கொண்டிருக்கிற பிணங்கள், நான் தீவிரமான யோசனையிலிருக்கும் பொழுதும், கணக்குகளைப் போட்டுப் பார்க்கும் பொழுதும் எந்த விதமான தொந்தரவும் கொடுப்பதில்லை. எனக்கு இப்படியெல்லாம்தான் யோசிக்க முடிகிறது.
அன்றிரவும் வழக்கம்போல் நான் பகல் டூட்டிக்காரரான ஒலாஃப்டாலியிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டேன். ஒரு கால் விளங்காமற்போன ஒலாஃப், தள்ளாத வயதில் இந்த வேலையையும் விடமுடியாத நிலை. ஒவ்வொரு பகல் பொழுதிலும் அவர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது நான் வந்து பொறுப்பேற்றுக் கொள்கிற அந்த நிமிடங்களைத் தான். நான் வரவேண்டியதுதான் தாமதம், உடனேயே தயாராக எல்லா விவரங்களையும் ஒப்படைத்துவிட்டு உடனே வீட்டிற்குப் புறப்பட்டு விடுவார். ஹலோ
வையும் குட்பை
யையும் ஒரே குரலில் சொல்லிவிட்டு நல்ல ஒரு காலை வைத்து வேகமாக அவர் நடப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அன்றும் இதெல்லாம் நடந்தது.
மார்ச்சுவரிப் பிரிவில் எதிர்ப்புறமுள்ள எனது அறையில் ஃபிளாஸ்க், டிரான்சிஸ்டர், மற்றும் கொஞ்சம் பாட புத்தகங்களுடன் நுழைந்து மேஜைமேல் எல்லாவற்றையும் வைத்தேன். அருகில் தடிப்பாக இருந்த பதிவுப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். சிலந்திக் கூடு மாதிரி எழுத்தில் அன்றைய வரவு-செலவு
க் கணக்கை அவர் சுத்தமாக எழுதி வைத்திருந்தார். தண்ணிரில் மூழ்கி இறந்து போன ஒர் ஆண், கார் விபத்தில் காலமான ஒரு தம்பதி, படுக்கையில் தீப்பிடித்தபோது தாமதமாக எழுந்து கொள்ள முயற்சி செய்த ஒரு கேஸ், கத்திக் குத்தினால் காலியான ஒரு நபர், ஆற்றில் விழுந்து இறந்த ஒரு பெண். ஓலாஃபின் டூட்டி நேரத்தில் விசேஷமாக ஒன்றும் இல்லையென்று தெரிந்தது வழக்கம்போல் இதுவும் ஒருநாள்; சென்ற வாரம் வந்த மாதிரியான பிணம்
அதற்குப் பிறகு இன்று வரை எதுவும் வரவில்லையே என்று நினைத்தேன். ஒலைக் குடிசையில் வாழ்ந்திருந்த வயதான ஒரு மூதாட்டி அலங்கோலமான உருவம் பார்த்தாலே இரக்கம் தோன்றுகிற அனாதை எரியும் விளக்கைச் சுற்றி வந்து கடைசியில் தீயில் வெந்து சாகிற விட்டில் மாதிரி.
அந்த மூதாட்டி ஒரு பைத்தியம். இருந்தாலும் மோசமில்லாத, விகாரமில்லாத, முதிர்ச்சியும் இல்லாத ஒரு கனவு உலகத்திற்குள் அவனுக்கு அனுமதி கிடைத்துவிட்டிருந்தது. அந்தப் பகுதியிலேயேதாம் தான் நான்காவது திறமையான பெண் மந்திரவாதியென்று அவள் நினைத்திருந்தாள். குடிசைப் பகுதிகளில் மூடநம்பிக்கையும், பாமரத்தனமும் மலிந்து விளங்குகிற நிலையில் பக்கத்துக் குடிசைக்காரர்கள் அந்தப் பாட்டியையும் ஒரு மந்திரவாதியாகக் கருதியதில் வியப்பில்லை,
அவளது தோற்றமே அப்படித்தான் இருந்தது எலும்புக் கூட்டின் தலைப்பகுதி மாதிரியான முகம். கழுகின் அலகு கதி நீண்டு வளைந்த மூக்கு, அதன் முனையில் ஒரு கறுப்பான பரு, புல்லில்லாத வாய், நீண்ட கூர்மையான தாடைகள் காற்றில் ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்த பரட்டைத் தலைமுடி இவ்வளவும் உள்ள பொழுது மந்திர வசதி பாட்டியாகாமல் வேறெப்படி தோன்றுவாள் ஞான திருஷ்டி மூலம் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியும், அதிர்ஷ்ட வழிகளைக் கூறியும், சாமி வந்து குறி சொல்லியும், ஏதேதோ பூஜைகள் செய்தும், லாட்டரிச் சீட்டுகளில் பரிது வழங்கப்போகிற நம்பர்களைச் சொல்லியும், பில்லிசூனியம் செய்தும், ஆண்-பெண் வசீகரத்திற்காக மை செய்து கொடுத்தும் அவள் அரைப்பட்டினி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். பக்கத்துக் குடிசைக்காரர்கள் சொன்னபடி, அவள் கெட்ட காரியங்களுக்கு இதுவரை இனது மந்திர சக்தியைப் பயன்படுத்தியதில்லையாம். நல்ல விஷயங்களுக்காக மட்டுமே மந்திரங்களைப் பயன்படுத்தி ஆள்களை வசீகரிப்பாளாம். தனது மந்திரத்தால் இதொன்றும் பலிக்கவில்லையானால் அதற்குப் பிறகு அந்த மாதிரி மனிதர்களிடம் தனது மந்திரத்தைப் பிரயோகிப்பதில்லையாம்.
வெயில் கால ராத்திரியில் ஒரு நாள் அதே இடத்தைச் சேர்ந்த ஆறு மாடிக் கட்டடத்தின் மேல் தளத்திற்குப் போனாள் பாட்டி. நிலாவை நோக்கி வேகமாகப் பறந்தாளோ அல்லது கால் தவறி விழுந்தாளோ தெரியாது. எப்படி இருந்தாலும் ஆறு மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து நடு ரோட்டில் விழுந்த பாட்டியின் உடம்பை, உண்மையைச் சொல்வதானால் ரோட்டிலிருந்து சுரண்டித் தான் எடுக்க வேண்டியிருந்தது. மார்ச்சுவரிக்குள்ளேயும் அப்படித்தான் பாட்டியைக் கொண்டு வந்தார்கள். பதினான்காவது அறையில் தான் அவளது உடம்பை வைத்தார்கள். குளிரூட்டப் பட்ட அந்த அறையில் நான்கு நாள்களும் அது அங்கேயே இருந்தது. அதற்குப் பிறகு தான் எங்கேயோ வெகு தூரத்திலிருந்து டிப்டாப்பான உடையில் அவளது மகன் வந்து பிணத்தை வாங்கிப் போனார். அந்தப் பிணத்தைத்கொண்டு போன பிறகு தான் வயதான ஒலாஃபுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.
"அந்தப் பதினான்காம் நம்பர் ரூமில் இப்பொழுதும் என்னமோ ஒரு நாற்றம் அடிக்கிறது. கந்தகமோ, வேறு ஏதோ ஒரு மோசமான நாற்றம்: இப்படித் தான் என்னமோ ஒலாஃப் சொன்னார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவே இல்லை. என் மூக்கில் தட்டுப்பட்டதெல்லாம் இரசாயனப் பரிசோதனை அறையின் வாசனை மட்டுதான். செய்முறை வகுப்புகளில் கெட்டிக்காரப் பெயர் எடுக்க வேண்டுமென்கிற வேட்கை.
பதிவுப் புத்தகத்தை மேசை மேலேயே வைத்து விட்டு ஒரு தடவை மார்ச்சுவரி அறைகளைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று எழுந்தேன். மார்ச்சுவரியின் தளத்தில் சாம்பல் நிறமான கற்களைப் புதைத்திருந்தார்கள். சுத்தமான தரை. டெட்டாலின் வாசனை தூக்கலாகத் தெரிந்தது; அறைக்கு எதிரே இரட்டைக் கதவுள்ள ஒரு வாசல். அதன் வழியாகப் போனால் மார்ச்சுவாககுக் கொண்டு வருகிற பிணங்களை வாங்கும் அறை வரும். கதவிற்குப் பக்கத்தில் நீண்ட, அகலம் குறைந்த மார்பிள் கல்லாலான மேசை. அதிர்ஷ்டவசமாக அதன் மீது இப்பொழுது யாரும் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல் சுத்தமாக இருந்தது. ஏர்கண்டிஷனரின் மெல்லிய உறுமல் காதில் கேட்கிற அளவிற்கு இல்லையானாலும் உணர முடிகிறது.
எனக்கு வலப்புறத்தில் தான் தேன்கூடு மாதிரியான அறைகள் உள்ளன. சொந்தக்காரர்கள் வந்து வாங்கிக் கொள்வது வரையிலோ, அல்லது மாநகராட்சியின் கைங்கர்யத்தால் எரிப்பது வரையிலோ இங்கே தான் பிணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உடல்கள் உள்ள எல்லா அறையிலும் ஓர் அடையாளச் சீட்டு இருக்கும். கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவார்களே அந்த மாதிரியான சீட்டை ஒரு சின்னக் கம்பியில் கோத்து அந்த அறையின் கைப்பிடியில் அதைத் தொங்க விட்டிருப்பார்கள்.
அறைக்குள் வந்த பிணம் வெளியேறும் வரை சீட்டு அங்கேயே தொங்கிக் கொண்டிருக்கும். பதிவுப் புத்தகத்தில் பார்த்த பிணங்களின் எண்ணிக்கை ஞாபகத்திலேயே இருந்ததால் மெதுவாக விசிலடித்தபடியே நான் ஒரு முறை சரி பார்க்கத் தொடங்கினேன். ஒவ்வொரு சீட்டைப் படித்தவுடனே, பதிவுப் புத்தகத்திலிருந்த விவரங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். பதினான்காவது அறை சமீபித்த போது ஏதோ தட்டுப்பட்டது. உடனேயே எனக்கு ஒலாஃபியின் ஞாபகம் வந்தது. அவனும், அவனுடைய மூக்கும் எனக்கு எரிச்சலாக வந்தது. பதினான்காவது அறையைத் தாண்டிய பிறகு சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தேன். பார்வையில் பட்டது சரிதானா என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பி நின்றேன். பதினான்காவது அறையில் பிணம் உள்ளதாக ஒலாஃபி பதிவுப் புத்தகத்தில் எழுதவில்லையே, ஆனால் அந்த அறையின் மீது ஒரு சீட்டு இருந்தது. அந்தச் சீட்டு தான் சட்டென்று என் கவனத்தைக் கவர்ந்தது. நான் குனிந்தபடியே அந்தச் சீட்டைப் புரட்டிப் பார்த்தேன்.
என்னை அறியாமலேயே விசில் சப்தம் நின்று போனது.
திரும்பத் திரும்ப மூன்றாவது முறையும் சீட்டைப் புரட்டினேன். எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. நிமிர்ந்து நின்று தலை சொறியத் தொடங்கினேன்.