Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mobydick
Mobydick
Mobydick
Ebook260 pages3 hours

Mobydick

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580103701503
Mobydick

Read more from Sivan

Related to Mobydick

Related ebooks

Related categories

Reviews for Mobydick

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mobydick - Sivan

    http://www.pustaka.co.in

    மோபிடிக்

    Mobydick

    Author :

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    ஒர் அறிமுகம்

    மோபிடிக் என்கிற இந்த நாவலை எழுதிய ஹெர்மன் மெல்வில், ஒற்றைக் கால் கொண்ட சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மகத்தான அமெரிக்க எழுத்தாளர் என்று கருதப்படுபவர்.

    தொடர்ந்து படிக்க ஆவலைத் தூண்டும் விதமாகவும், ஆழ்ந்த பொருட்செறிவுடனும் படைக்கப்பட்டுள்ள இந்த நாவல், வெளியான சந்தர்ப்பத்தில் தோல்வியடைந்த ஒரு முயற்சியாகவே கருதப்பட்டது.

    மோபிடிக் நாவலை மெல்வில் எழுதும்போது அவரது வயது முப்பத்தியிரண்டு. ஏறத்தாழ இருபத்தோரு வருடங்கள் அவர் மேற்கொண்ட கடல் வாழ்க்கையைக் கெளரவிக்குமாறு அழகாக இதில் வடித்திருக்கிறார். இது கடவுளால்கூட மறுக்க முடியாத மனித சாகசத்தின் ஒர் இதிகாசமாக விளங்குகிறது.

    ஏறத்தாழ சுயசரிதை மாதிரியான நான்கு நாவல்கள், இரண்டு பயண நூல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிற மெல்வில், வெளியுலகுக்கு அறிமுகமானதே சாகா வரம் பெற்ற இந்த மோபிடிக் நாவல் மூலமாகத்தான்!

    நாவல் வெளியானபோது 'பைத்தியக்காரத்தனம், துடுக்குத்தனம், வார்த்தைஜாலம், மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்கள்’ என்றெல்லாம் கூறப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த நாவல், 72 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெற்றது. இப்போது உலகின் மிகச் சிறந்த பத்து அமெரிக்க நாவல்களில் ஒன்று என்று மோபிடிக் உயரிய இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது.

    1819-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று, இங்கிலாந்திலிருந்து குடியேறிய ஒரு தொழிலதிபரின் மகனாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர் ஹெர்மன் மெல்வில். தனது எழுபத்தியிரண்டாவது வயதில் எவருக்குமே தெரியாத ஒரு மனிதராக நியூயார்க் நகரிலேயே இறந்தார். மெல்வில் இறந்த முப்பது வருடங்களுக்குப் பிறகே, அந்த மகத்தான எழுத்தாளரின் எழுத்துக்களை இந்த உலகம் அங்கீகரித்தது எனலாம். மெல்விலின் பதின்மூன்றாவது வயதில் அவரது அப்பா மிகப் பெரிய கடன்காரனாகி, மொத்தச் சொத்துக்களையும் இழந்தார். அத்துடன் மெல்விலின் படிப்புத் தடைப்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மெல்வில் என்னென்னவோ தொழில்களைச் செய்தார். எதிலும் வெற்றி பெறாமல், தனது பத்தொன்பதாம் வயதில் கப்பல் ஒன்றில் எடுபிடி வேலையாளாகச் சேர்ந்தார். மனத்தையே மரத்துப் போகச் செய்யும் விதமாக கோழிகளின் கழுத்தை அறுத்தும், பன்றிக்கறியைச் சுத்தம் செய்தும் வாழ்நாளைக் கரைத்தார்.

    1841-ம் ஆண்டில் அக்யூஷ்னெட் என்ற திமிங்கில வேட்டைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தக் கப்பலில் அவர் மேற்கொண்ட வாழ்க்கையைக் குறித்து மெல்வில் பிற்பாடு இப்படி எழுதினார். ஒர் அடிமையிடம் கட்டளையிடுவது மாதிரி என்னிடம் கட்டளையிட்டனர். ஒரு கழுதை மாதிரி என்னிடம் வேலை வாங்கினர். அசிங்கமானவர்களும் கருணை என்பதே கிஞ்சித்தும் இல்லாதவர்களுமான அவர்கள் எப்போதுமே என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டுமே இருந்தனர்.

    உரையாடல்களே இல்லாமற்போன அந்த மாலுமிக்கூட்டத்தில் உழன்றபோதுதான் மெல்வில் தனது இலக்கியப்படைப்புக்கான விதைகளைத் தேர்ந்தெடுத்தார். ‘திமிங்கில வேட்டைக் கப்பல்தான் என்னுடைய ஹார் வார்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்கள்.’ மெல்வில் குறிப்பிடுகிறார். மனத்தைப் பயப்படுத்திய அந்தப் பயணத்தில் திமிங்கில வேடடை குறித்த மிகவும் சாதாரணமான சம்பவங்களைக்கூட நுட்பமாகக் குறிப்புகள் எடுத்தார். வேலைசெய்து களைத்துப் போய்ப் படுத்திருக்கும் ஏகாந்தமான பொழுதுகளில் மெல்விலின் மனம் சொந்த வாழ்க்கையின் பொருளைத் தேடி அலைந்தது.

    ஏறத்தாழப் பதினெட்டு மாத காலம் நீண்ட அக்யூஷ்னெட் கப்பல் வாழ்க்கையின் நரக வேதனையைத் தாங்க முடியாத மெல்வில், 'மார்க்யூஸ்ட்’ தீவைக் கப்பல் நெருங்கியபோது கடலில் குதித்தார். அதன் மூலம் அவர் சிக்கிக் கொண்டது மனித மாமிசம் சாப்பிடும் நர போஜிகளான காட்டுமிராண்டிகளிடம்தான். இன்றும் விளங்காத ஏதோ ஒரு சில காரணங்களால் அவர்கள் மெல்விலின் உடலைச் சாப்பிடாமல் விட்டுவைத்தனர்.

    ஏறத்தாழ நான்கு வார காலங்கள் நரபோஜிகளுடன் வசித்த மெல்வில் அங்கிருந்து தப்பித்து ஆஸ்திரேலியக் கப்பல் ஒன்றில் தஞ்சம் அடைந்தார். நரபோஜிகளுடன் வசித்தபோது மெல்விலின் காலில் ஆறாத காயம் ஒன்று ஏற்பட்டது. காலையே துண்டாக வெட்டியெடுக்க வேண்டியிருக்குமென்று கூட மெல்வில் பயப்பட்டார். ஆஸ்திரேலியக் கப்பலில் தஞ்சமடைந்தது அவர் நான்கு மாதச் சிறைத்தண்டனை பெறக் காரணமானது. விடுதலை அடைந்த அவர், மீண்டும் ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டார்.

    வியாபாரக் கப்பல்கள், திமிங்கில வேட்டைக் கப்பல்கள் என்று மாறி மாறி இருபத்தோரு வருடங்களைச் செலவழித்த மெல்வில், கடைசி யாக அந்த வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பாஸ்டன் நகருக்குத் திரும்பி வந்தார். நோயாளியும், உடல் வலுவற்றவருமான மெல்வில் அதன் பிறகு ஒர் எழுத்தாளராகும் முயற்சியில் ஈடுபட்டார். நரபோஜிகளுடனான வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் 'டைப்பி’ என்ற முதல் நாவலை எழுதினார். அதற்கு அடுத்த வருடம் 'ஒமோ’ என்ற நாவலும், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'மார்டி’ என்ற நாவலையும் எழுதினார்.

    இதிகாசக் கதைகளின் சோகக் கதாநாயகர்களை நினைவூட்டும் சாகசங்களும், சோகமும் நிறைந்த ஒரு வாழ்க்கை மெல்விலினுடையது. விதி ஒரு போதும் அவரிடம் கருணையுடன் நடந்து கொண்டதில்லை என்றே சொல்லலாம்.

    மெல்விலின் இலக்கிய முயற்சிகள் எல்லாம் படுபயங்கரமான தோல்வி முயற்சிகளாகவே இருந்தன. டைப்பி நாவல் மூலம் கிடைத்த சிறிய அளவிலான புகழின் அடிப்படையில் மெல்வில், பாஸ்டனின் நீதிபதி ஒருவரின் மகளான எலிஸபெத்ஷா வைத் திருமணம் புரிந்தார். ஆரம்பத்திலிருந்தே மிகவும் மோசமான ஒரு தாம்பத்திய வாழ்க்கையாகவே அது தொடர்ந்தது. குறுகிய, காலத்துக்குள்ளேயே மெல்விலின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டான். மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து போனார். இரண்டாவது மகன் காசநோயால் பீடிக்கப்பட்டு, போதிய சிகிச்சையின்றி இறந்தான்.

    மிகவும் சோர்வடைந்த மனநிலையின் போதுதான் அவர் இந்த நாவலை எழுதத் தொடங்கினார். 1851-ல் நாவலை எழுதி முடித்தார் தனது மனத்திலுள்ள மொத்த விஷயங்களையும் இந்த நாவலில் இறக்கிவைத்த மெல்வில், தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டாராம்: 'எழுதுவதற்காக எனக்குக் கழுகின் இறகு ஒன்றைத் தாருங்கள். மையை நிரப்புவதற்கு வெகுவியஸ் கடலின் உட்புறத்தைத் தாருங்கள். நண்பரே, எனது கைகளைத் தாங்குங்கள். திமிங்கிலம் தொடர்பான என்னுடைய சிந்தனைகளை எழுத்தில் வடிக்கும் முயற்சியில்கூட நான் சோர்ந்து விட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அதன் தெளிவற்ற, வேதனை நிறைந்த தாக்கம், என்னுடைய உயிரணுக்களையே மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன.’

    மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட மோபிடிக் நாவல் விற்பனையாகாமல் கட்டுக் கட்டாகத் தேங்கிக் கிடந்தன. 1853-ம் ஆண்டில் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மோபிடிக்கின் விற்பனையாகாத பிரதிகள் மொத்தத்தையும் அழித்தது. அதன் பிறகு இதை வெளியிட வேறு எவரும் முன்வராததால் மனமுடைந்த மெல்வில் வறுமையில் வாடினார்.

    அதன் பின்னரும் இரண்டு நல்ல புத்தகங்களை மெல்வில் எழுதினார். இருப்பினும் அதனால் எந்தவிதமான விளைவும் ஏற்படவில்லை. அதன் பிறகு எழுத்தாளராகும் வீணான முயற்சியில் ஈடுபடுவதைக் கைவிட்டு, வாழ்க்கை நடத்துவதற்காக ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடியலைந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தனது நண்பரான நதானியேல் ஹோதோனுக்கு இப்படியொரு கடிதம் எழுதினார்: ‘என் இதயத்தின் அடித்தட்டில் சலனங்களை ஏற்படுத்தும் எதைக் குறித்தும் என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. நான் எழுதுவதெல்லாம் விற்பனையாகவில்லை. விற்பனையாகும்படி எழுதவும் என்னால் முடியவில்லை. என்னுடைய எழுத்துக்கள் எல்லாம் ஒருவேளை தெளிவற்ற படைப்புகளாக இருக்கலாம்.'

    அதன் பிறகு ஒருபோதும் இலக்கிய உலகத்தின் பக்கமாகத் திரும்பாத மெல்வில், சுங்க இலாகாவில் ஒரு இன்ஸ்பெக்டராக வாழ்க்கையைத் தொடர்ந்தார். அதன் மூலம் கிடைத்த மிகவும் குறைவான வருமானமே வாழ்நாள் முழுவதும் அவருக்கு உதவியது. 1891-ம் ஆண்டு அவர் இறந்தபோது பெயர்கூட அறியப்படாத ஒரு நபர் என்றுதான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அவரது மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டது.

    மெல்வில் கடைசியாக எழுதிய 'பில்லிபட்’ என்ற நூல், அவரது மரணத்துக்குப் பிறகு முப்பத்து மூன்று வருடங்கள் கழித்தே (1924-ல்) முதன் முதலாக அச்சேறியது.

    அசாதாரணமான ஒரு நடையை மெல்வில் கதை சொல்லப் பயன்படுத்தியிருக்கிறார். திமிங்கில வேட்டையைக் குறித்து ஒர் அகராதி சொல்லக் கூடியதைவிட அதிகமான விவரங்கள் இதில் உள்ளன. புராணம் மற்றும் பைபிளின் முறையில் எழுதப்பட்டுள்ள நயம். கவிதை மயமான நடை. அமெரிக்கப் படைப்பிலக்கியத்தின் மிகவும் புதிய ஒரு முகத்தை மெல்வில் இந்த நாவலின் மூலம் அறிமுகப் படுத்தியிருக்கிறார் எனலாம்.

    'இந்த நாவலின் கதாநாயகனான எணாப் பாத்திரப் படைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிதிலமடைந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளமாகவே தோன்றுகிறது!’ என்று குறிப்பிடுகிறார் பிரபல இலக்கிய விமரிசகரான மேட்டிசான். 1921-ம் ஆண்டுக்குப் பிறகும் பல்வேறு வகையான விமரிசனங்களுக்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்டாலும், இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற உன்னதமான ஒரு நாவல் மோபிடிக் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது!

    தோழமையுடன் சிவன்

    மோபிடிக்

    1

    இஷ்மேல் என் சுருக்கமான பெயரிலேயே என்னைத் தெரிந்து கொள்ளுங்கள்...

    எத்தனையோ வருடங்களுக்கு முன்பு..... தேதி, மாதம், வருடம் உட்பட எல்லாவற்றையும் மற்ந்துவிட்டேன்!

    எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை.... கையில் பணமில்லாதிருந்த என்னை கரையில் பிடித்து நிறுத்த எந்தவிதப் பிடிப்புமற்றபோது நான் கடல் பயணத்தை மேற்கொண்டேன்.

    கடல்! எப்படிப்பட்ட அற்புதமான ஓர் இடம்! என்றென்றும் என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்திய பகுதி. கடற்பயணம்.... தனிமையும், பயங்கரங்களும் நிறைந்த பெரும் கடல்களின் நெஞ்சைக் கிழித்துக் கொண்டு செல்லும் பயணம்!

    மனத்தில் அவ்வப்போது கூடுகட்டிக் குடியிருக்க வரும் துயரங்களைத் துரத்தியடிக்க நான் கண்டுபிடித்த ஒருவழி. நடுங்க வைக்கும் நவம்பர் மாதக் குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தைப் போல் மனம் நிம்மதியற்றுத் தவிக்கும்போ நான், சவப்பெட்டிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்பாக நின்று வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இல்லாவிட்டால், முகம் தெரியாத ஏதோ ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் மிகவும் கடைசி நபராகச் சும்மர் நடந்து கொண்டிருப்பேன். தெருவில் நடக்கும்போது எதிர்ப்படுகிற மனிதர்களின் தலையிலிருக்கிற தொப்பிகளையெல்லாம் ஒன்று விடாமல் வரிசையாகத் தட்டிக் கீழே தள்ளிவிட வேண்டும்போல் எனக்குத் தோன்றும். இந்த நினைவுகளிலிருந்து என்னைப் பின்வாங்கச் செய்யும் சரியான ஒன்று எனக்கு தட்டுப்படுவது வரை, என் மனம் நிம்மதியற்றுப் பரபரப்பில் சிறகுகளை விரித்தபடி சிலிர்துக் கொண்டிருக்கும்.

    கடற்பயணம்!

    அது ஒன்றுமட்டுமே கைத் துப் பாக்கிக்கும், வெடி குண்டுகளுக்கு பதிலாக நான் கண்டுபிடித்த ஒரு மாற்று வழி!

    ஏதாவது ஒரு கப்பலில் அமைதியாகத் தொற்றிக்கொள்ள வேண்டும். வெறும் ஒரு மாலுமியாகச் சேர்ந்தாலே போதும்.

    அலைக்குன்றுகளிள் அசைந்து விளையாடும் படகில் குதித்து எழுந்து ஒரு ராஜாவைப்போல் தலையுயர்த்தி நிற்கும் புடத்த பாய்மரங்களில், வெட்டுக்கிளிகள் போல் தாவித்தாவிக் கழித்த நாட்களை ஒதுக்கி விடுங்கள். யாருடைய கட்டளைக்காகவோ, ஏவலுக்காகவோ, சிந்தனையைச் சூனியமாக்கிக் கொண்டு அங்குமிங்கும் மிதக்கும் ஒரு மரத்துண்டுபோல் அல்லாடும் நிலை அது.

    மனத்தையும் உடலையும் ஒரேபோல் தொல்லைக்கு உள்ளாக்கும் அந்தக் கடின உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிப்பது சோர்ந்துபோன உடற்பயிற்சியும்கூட. இடுங்கிய சுவாசப்பைகளுக்குக் கடலின் ஜீவரசத்தை ஏந்திவரும் இளங்காற்றின் மாபெரும் விருந்து என்பேன் அதை. ஆமாம்.... கரையைப் போலவே கடலிலும் முன்புறமிருந்து வீசும் காற்றைவிட வலுவானது.

    'இஷ்மேல்... நீ எதற்காக இவ்வளவு காலமும் வெறும் வியாபாரக் கப்பல்களில் ஒரு மாலுமியாக உப்புக் காற்றை விழுங்கிக் கொண்டிருந்தாய்? இப்பொழுது மட்டும் நீயேன் ஒரு திமிங்கில வேட்டைக்காரனாக வேண்டுமென்று ஆசைப்படுகிறாய்?’ இந்தக் கேள்விகளை நான், என்னிடமே எத்தனையோ முறைகேட்டிருக்கிறேன்.உண்மைதான்! எதனால் இந்த ஆசை ஏற்பட்டது?

    உண்மையைச் சொல்லட்டுமா? என்னை ரகசியமாக நோட்டமிட்டும், பின்தொடர்ந்தும் வருகிற விதியென்கிற போலீஸ்காரனுக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரியும். திமிங்கில வேட்டையில் நான் ஈடுபடவேண்டும் என்பது, காலத்தின் ஏதோ ஒர் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் கட்டாயமாக இருந்திருக்கலாம். எல்லாம் வல்லசர்வ சக்தி மயமானவன் ஒவ்வொன்றிற்கும் வடிவம் கொடுத்துக் காரியங்களை நடத்துவதன் ஒரு பகுதியாகவும் அது இருக்கலாம்!

    ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி பதவிக்கான பொதுத் தேர்தல்...

    ஆஃப்கானிஸ்தான் – நடைபெறும் கடுமையான போராட்டம்...

    திமிங்கில வேட்டைக்காக இஷ்மேல் மேற்கொண்டுள்ள கடற்பயணம்!

    நிகழ்ச்சிநிரல் இப்படியும் அமைந்திருக்கலாம். ஆனால், மற்றவர்களை வாழ்க்கை என்கிற துயர்மிக்க நாடகங்களில் உல்லாச பூர்வமான நாயகர்களாகவும், நடுநடுவே சிரிக்க வைக்கும் கோமாளிகளாகவும் இயற்கை வேடமிட்டு அனுப்பும்போது, அது எனக்காக ஒதுக்கி வைத்தது திமிங்கில வேட்டைக்காரன் என்கிற அசிங்கமான வேடத்தைதான்!

    ஆமாம்.... என்னுடைய மனநிலையைத் தெரிந்து கொண்டு எனக்குத் தந்திருக்கிற வேடம்! இந்தத் தீர்மானத்திற்கு என்னைத் திருப்ப, பலவித வேடங்களேற்று என் முன்பாக வந்து ஆசைகாட்டியும், ஈடுபாடு கொள்ளவும் வைத்த காரணங்கள் பல. அவை என்னை விபரீதமான வேடத்தையேற்று நடிக்க மட்டுமா வைத்தன?

    என்னை அதிகமாகக் கவர்ந்து, பிரமிப்பை ஏற்படுத்தியவற்றில் முக்கியமான காரணம் ஒன்றும் உண்டு. அது திமிங்கிலத்தைக் குறித்த எனது கற்பனைகளும், தீர்மானங்களும்தான். வடிவத்தில் பெரியதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் விளங்கும் அதன் பயங்கர உருவம் எல்லா வகையிலும் என்னைக் கவர்ந்து ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. இது மறுக்க முடியாத ஓர் உண்மை. ஒரு தீவின் அளவிற்குப் பெரிதாக விளங்கும் திமிங்கிலம்.

    திமிங்கிலம் மகிழ்ச்சியில் கூத்தாடித் திளைக்கும் ஏகாந்தமான, மனித வாசனையற்ற கடல் பரப்புகள். வெகு தூரங்களில் பயத்தின் எல்லாவித வேடங்களையும் பூண்டு மறைந்திருக்கிற ஆயிரமாயிரம்

    Enjoying the preview?
    Page 1 of 1