Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Nilavey!
Kaadhal Nilavey!
Kaadhal Nilavey!
Ebook92 pages43 minutes

Kaadhal Nilavey!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580104901569
Kaadhal Nilavey!

Read more from Arunaa Nandhini

Related to Kaadhal Nilavey!

Related ebooks

Reviews for Kaadhal Nilavey!

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Nilavey! - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    காதல் நிலவே!

    Kaadhal Nilavey!

    Author:

    அருணா நந்தினி

    Aruna Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    காதல் நிலவே!

    1

    பெண்கள் கல்லூரி

    ஆங்காங்கு அரட்டைக் கச்சேரி…

    இதோ… ஒரு அரட்டை அரங்கம்... விஷயம்? அதே! காதல்… காதலைத் தவிர எதுவுமில்லை... காதலைத் துவைத்து அலசி சலவை செய்து காயப் போடுகிறார்கள்... பார்ப்போம்...

    அதோ... ஜீன்ஸ் பேண்ட் இடுப்பை கவ்விப் பிடிக்க... டீ ஷர்ட்டில் ஒய்யாரச் சிலையாய் இருக்கும் அவள் - காவ்யா... கேட்கிறாள்...

    காதல் காதல்னு அடிச்சுக்கிறீங்களேடி... பெரிசா... காதல்ங்கறது என்ன? ஒருத்தருக்காக ஒருத்தர் உருகி வழியறதுதான் காதலாக்கும்... போங்கடீ...

    மீனா பதில் சொன்னாள். யாரைக் காதலிக்கிறோமோ அவனைப் பற்றியே நினைக்கத் தோன்றும்.

    சரி... அப்புறம்.

    அவன் நினைவில் தூக்கம்... பசி... ஊகூம்... எதுவும் வராது இது ஸ்டெல்லா.

    அட! இன்னும் ஏதாவது...?

    இருக்கே... அவனுக்காக எதுவும் செய்யணும்னு தோன்றும். அவனைப் பார்க்காமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது.

    அச்சச்சோ... அதுக்கும் மேலே...

    அவனுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் என்று மனசு துடிக்கும்.

    இரு... இரு... அப்படிப் பார்த்தா... ம்ம்... என் அத்தை மகனை அடிக்கடி நினைக்கிறேன்... ஆனா, தூங்கறப்போ சத்தியமா அவன் நினைவு இல்லை. என் டாடியின் பார்ட்னர் மகன் சொல்வதை அப்படியே செய்வேன். ஆனா, அவனைப் பார்க்க முடியலை யேன்னு ஒருநாள்கூட துடிச்சது இல்லை. இதையெல்லாம் காதல்னு சொல்றது சுத்த பேத்தல்னு சொல்வேன். உங்களைச் சொல்லிக் குத்தமில்லைடீ. சினிமா உலகம் உங்களை அப்படிக் கெடுத்து வச்சிருக்கு. அவ்வளவுதான்... கொஞ்சம் பிராக்டிக்கலா இருக்கறதுக்கு பாருங்க" என்றாள் காவ்யா.

    நீ என்னம்மா... பெரிய்ய்ய பணக்காரப் பொண்ணு. காதல்ங்கறது சீரியஸான விஷயமில்ல உனக்கு. எல்லாம் டேக் இட் ஈஸின்னு தோன்றும் உனக்கு விடு... உதட்டை சுழித்தவாறு சொன்னவள் இளவரசி.

    அட.... காதல்ல ஏழைக்காதல்... பணக்காரக் காதல்னு இருக்கிறதாக்கும்...

    நிச்சயமா... ஏழையோட காதல் கல்லில் பொறித்த எழுத்துன்னா... பணக்காரக் காதல் நீரில் போட்ற கோலம். காதல் கூடாமல் போனால் பணத்தில் மறஞ்சிடும்.

    ஒகோ... பணக்காரர்களுக்கு காதல் அவசியமில்லைன்னு உன் அபிப்ராயமா... ஏம்மா... உனக்கு பணக்காரர் மேலே அப்படியொரு கோபம்…

    சேச்சே... அப்படீன்னு எதுவும் இல்லைடீ... பணம் பணத்தைத்தான் பார்க்கும். மனம் என்பது இரண்டாம் பட்சம் என்கிறேன.

    காவ்யா யோசித்தாள்.

    இவர்கள் சொல்லும் கோணத்தில் யோசித்தால்... "தான் யாரையாவது காதலிக்கிறோமா...’ யோசித்துப் பார்த்தாள்.

    கல்லூரியில் எத்தனையோ மாணவர்களிடம் சகஜ மாய் பேசுகிறேன்... பழகுகிறேன்... யாரிடமும் இவர்கள் சொல்வதுபோல் ஒரு ஈர்ப்பு இல்லையே…

    அந்த அரவிந்த்... ம்ம்... அதிகம் வாய் கொடுப்பது அவனிடம்தான். ஆனால், சுமுகமான பேச்சு இல்லையே. "சுள்’ளென்று அவன் எரிந்து விழுந்தால், நான் ‘வள்’ ளென்று குரைக்கிறேன்.

    நினைக்கும்போதே அவளுக்குச் சிரிப்பு வந்தது. காதலும் இல்லை... கத்தரிக்காயும் கிடையாது. எல்லாமே சுத்தப் பேத்தல். வாலிபப் பிதற்றல்! அட! இப்போது எதுக்கு இந்த வேண்டாத காதல் ஆராய்ச்சி... வெறும் குப்பை!

    உதறித் தள்ளணும்...

    தலையைச் சிலுப்பிக் கொண்டாள்... நினைவை உதறித் தள்ளுவது போல்.

    தூரத்தில் அரவிந்த்!

    நிதான நடையில் வந்து கொண்டிருந்தான்.

    ‘திங்க் ஆஃப் தி டெவில்!’

    ஆளைப் பார்... ஏழ்மை நிலையிலும் கர்வத்திற்கு ஒன்றும் கம்மி இல்லை.

    ஹீரோ வரார்டீ ஒருத்தி ராகமாய் இழுக்க...

    யாரு... இவன் ஹீரோ... ப்பூ! ஏளனமாய் உதட்டைப் பிதுக்கினாள் காவ்யா.

    "ஹீரோதான்டீ... அடிச்சு சொல்வேன். பணம் ஒண்ணைத் தவிர மத்த எதில் அவன் குறைஞ்சு போனான் சொல்லு, படிப்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1