Asaiye Alai Poley
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Thunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsCauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Pon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Oomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5
Related to Asaiye Alai Poley
Related ebooks
Amma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsSonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyai Oru Muthaliravu Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsUchimeethu Vaanidinthu... Rating: 5 out of 5 stars5/5Kanavodu Sila Naal Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Oru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsImayaga Naan Iruppean Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Malukutti Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsSuzhalil Mithakkum Deebangal Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Kannalaney Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Vaasal Illatha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsUravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsNee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Asaiye Alai Poley
0 ratings0 reviews
Book preview
Asaiye Alai Poley - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
ஆசையே அலை போலே
Asaiye Alai Poley
Author :
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For other books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
ஆசையே அலை போலே.
1
புறப்படும் முன்பு மீண்டும் ஒரு முறை கண்ணாடியின் முன்பு தன் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டாள் சுமித்ரா, திருப்தி ஏற்பட்டது.
வெளியில் வந்தவளை மொத்தக் குடும்பமும் வியப்போடு பார்த்தது.
ரோஜா நிறத்தில் சின்னச் சின்னப் பூப்போட்ட காட்டன் சாரியும், அதற்கேற்ற ரவிக்கையும், தளரப் பின்னிய கூந்தலில் ஒற்றை ரோஜாவும் சூடியிருந்த அவளது அலங்காரம்தான் அவர்களது வியப்புக்குக் காரணம். எப்போதும் கஞ்சி போட்ட வாயில் புடவையும் சின்னக் கொண்டையும் லேசாய் பவுடர் பூசிய முகத்தில் சின்னப் பொட்டும்தான் அவளது அலங்காரமா யிருக்கும்.
அம்மா! நான் போயிட்டு வரேன்!
ஆபீசுக்குத்தானே?
சுமித்ரா அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.
புதுசா இது என்ன கேள்விம்மா?
இன்னிக்கு எல்லாம் புதுசார்க்கே..
ஓஹோ என் ட்ரெஸ்ஸை சொல்றயா!
அதை மட்டும் சொல்லலை!"
உனக்கு என்ன தெரியணிம்மா? வெளிப்படையா கேட்டுடேன்.
திடீர்னு இந்த அலங்காரத்துக்கு என்ன காரணம் சொல்லு?
யாரு காரணம்னு கேளு…
அம்மா முகம் வெளிறுவதை ரசித்தாள் சுமித்ரா, நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறேம்மா.
என்னடி சொல்ற?
இதை பத்தி விவரமா நான் சாரங்காலம் வந்து பேசுறேனே. இப்போ எனக்கு டைமாகுது!
அம்மா திகைத்து நிற்கும் போதே செருப்புக்குள் பாதம் புதைத்துப் படியிங்கிப் போனான்.
இதென்னம்மா இப்படி குண்டைத் தூக்கிப் போட்டுட்டுப் போறா?
இப்படிச் சொன்னவன் பெயர் மது. சுமித்ராவை விட நாலைந்து வயது பெரியவன். அரசாங்க அலுவலகம் ஒன்றில் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தைக் காட்டிக் கொண்டு மாசம் பூராய் அழுது ரெவின்யூ ஸ்டாம்ப்பில் கையெழுத்துப் போடும் பொழுது மட்டும் முகம் மலர்பவன். ரெட்டை மண்டையோடு தோற்றமளித்தவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ஏம்மா, இது ஓடிக் கீடிப் போய்டுமா? ஏற்கெனவே னககு எந்த இடமும் குதிர மாட்டேங்குது. இது இந்த மாதிரிப் பண்ணிவெச்சுட்டா நான் கல்யாணத்தையே மறந்துற வேண்டியது தான்!
தள்ளுபடி ரகமில்லை. ஆயினும் இதுவரை ஒரு வரன் கூடி வராததன் காரணம் இன்னும் அவளுக்கு வேளை வர வில்லையோ என்னவோ!
ஒரு பிள்ளை ஒரு பெண் பிறந்த பிறகு சுமித்ராவையே பெற்றிருக்க வேண்டாம் என்ற நிலையில், சுமித்ராவுக்குப் புறகும் பாலுவைப் பெற்றது அந்தக் காலக் கட்டுப்பாடின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
பாலுவுக்குப் படிப்பைவிட ஓவியத்தில்தான் ஈடுபாடு அதிகமிருந்தது. அதுவும் கார்ட்டூங்கள் அருமையாகப் போட்டான். அவன் கை வண்ணம் வீட்டுக் சுவரில் எல்லாம் தெரியும்! அதிகம் யாரோடும் பேச மாட்டான். மற்றவர்கள் ஒப்பிட்டால், பாலுவுக்குச் சின்ன வயதுதான் என்றாலும், மதுவைப் போலவோ, சுபத்ராவைப் போலவோ, சின்னப் புத்தியில் லாத்தால் அக்காவின் அன்றைய அலங்காரத்திற்கு ஏதோ அழுத்தமான காரணம் இருக்க வேண்டும் என்றுதான் அவன் நினைத்தான். வெளியில் சொல்லவில்லை.
மீண்டும் மது சொன்னான். நான் சந்தேகப்பட்டேண்.. அவயாரோடயோ சுத்தறதா, என் ப்ரண்டஸ் சொன்னாங்க அப்பவே!
இதை ஏண்டா முன்னாலேயே சொல்லலை?
அம்மா கத்தினாள்.
சொல்லியிருந்தா மட்டும் நீ என்ன செஞ்சிருப்ப?
அம்மா மலைந்து நின்றாள். உண்மைதான்.. அவள் என்ன செய்திருப்பாள்? அவளால் என்னதான் செய்ய முடியும்? சின்னக் குழந்தையா, இழுத்து நாலு அறை விட்டுக் கண்டிக்க?
அப்போது வாய் நிறைய வெற்றிலையை மென்று கொண்டு உள்ளே வந்தார் துரைசாமி. அந்தக் குடும்பத்தின் தலைவர். சீட்டாட்டப் பிரியர். ரிடையரான பிறகு சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரம் முழுக்க ஜமா சேர்த்துக் கொண்டு சீட்டுக்கட்டும் கையுமாகவே காட்சியளிப்பவர். பென்ஷன் பணம் பூராவும் சீட்டாட்டத்திலேயே தொலைத்து வருபவர்.
ஏண்டி ரங்கம், இன்னிக்கென்ன சுமித்ராவுக்குப் பிறந்த நாளா? ஜிகுஜிகுன்னு புடவையும் தலை நிறையப் பூவுமா போறா, அதிசயமா இருக்கு
ரங்கம் பதில் சொல்லாமல், அவரை முறைத்துப் பார்த்து விட்டு உள்ளே போனாள்.
மது அப்பாவின் அருகில் வந்தான்.
அப்பா,இனிமே நீ உன் சீட்டாட்டத்தைக் குறைச்சுக்கறது நல்லது. சுமித்ரா கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். அவ கல்யாணம் பண்ணிண்டு போய்ட்டா, அவ சம்பளம் முழுக்கப் போய்டும்... ஒண்ணில்ல, ரெண்டில்ல, சுளையா நாலாயிரம். வீட்லேர்ந்து டெலிபோன் போய்டும். அவ வாங்கி வெச்சிருக்கிற டிவி, ப்ரிட்ஜ் டேப்ரெக்கார்டர் இப்படி எல்லாத்தையும் கொண்டு போய்டுவா... அப்பறம் என் சம்பளத்தில் இங்கே எல்லோரும் ஒரு வேளை கஞ்சி குடிக்கலாம். அவ்வளவுதான்! மிச்சச் செலவுக்கு உன் பென் ஷனைத்தான் நீ தந்தாகணும்!
துரைசாமியின் முகம் சுருங்கிப் போனது. ஒரு நிமிடம் அப்படியே நின்றவர், அதன் பிறகு அடுக்களைக்கு வந்து மனைவியிடம் குதிகுதியென்று குதிக்கத் தொடங்கினார்.
"ஏன், நாம என்ன செத்தா போய்ட்டோம்...? என்ன துணிச்சல் இருந்தா இப்படி பேசிட்டுப் போயிருப்பா! எல்லாம் நீ கொடுத்த இடம்தான்டி... உன்னைத்தான் கட்டிவெச்சு உதைக்கணும். படிக்கறா படிக்கறான்னு செல்லம் குடுத்த. என்னென்னவோ படிச்சா நல்லா, சம்பாதிக்கவும் தொடங்கினா. அந்த திமிர் சும்மா போகுமா? அதான் இப்படி பேசச் சொல்லுது கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கறவளா இருந்தா இப்படி திடுதிப்புன்னு கல்யாணம்னு சொல்லுவாளா? அம்மாவும் பொண்ணும் எப்படியோ போங்க... இப்பவே சொல்லிட்டேன்... என் பென்ஷன் பணத்தில் இருந்து