Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennuyir Neethaney…!
Ennuyir Neethaney…!
Ennuyir Neethaney…!
Ebook86 pages41 minutes

Ennuyir Neethaney…!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580102601545
Ennuyir Neethaney…!

Read more from Lakshmi Praba

Related to Ennuyir Neethaney…!

Related ebooks

Reviews for Ennuyir Neethaney…!

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennuyir Neethaney…! - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    என்னுயிர் நீதானே...!

    Ennuyir Neethaney...!

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    என்னுயிர் நீதானே...!

    1

    நேர்த்தியாய் அளவு வைத்துக் கோடு போட்டது போல் மழை, நேர்க் கோடாய் பூமியைத் துளைத்துக் கொண்டிருந்தது.

    இட்லி குக்கரை அடுப்பிலேற்றி விட்டு தக்காளி சட்னியை மிக்ஸியில் அரைத்து முடித்த பவ்யா... ஈரக் கைகளைத் துவாலையில் துடைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தாள்.

    மழை ஆவேசமாய் பெய்தது. சுழன்றடித்த காற்றில் மரங்கள் பேயாட்டம் போட்டன. தோட்டத்துச் செடிகள் குளிருக்கு நடுங்கி, ஒன்றுடன் ஒன்று சாய்ந்து ஒட்டிக் கொண்டிருந்தன.

    "அம்மா! எனக்கு ரொம்ப பயமாயிருக்கும்மா' மூன்று வயது குழந்தை தீபிகா ஓடி வந்து அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டாள்.

    குழந்தையைத் தூக்கி வாரி அணைத்துக் கொண்டாள் பவ்யா.

    அதி பயங்கர வெளிச்சத்தோடு மின்னலொன்று வானில் முகம் காட்டிவிட்டுப் போனது. அடுத்த சில கணங்களில் 'டம டம'வென்று இடிச் சத்தம்.

    தாயின் கழுத்தை இறுகக் கட்டியபடி அவளது தோளில் முகம் புதைத்துக் கொண்ட குழந்தையின் முதுகை வாத்சல்யமாய் தட்டிக் கொடுத்தாள் பவ்யா.

    தீபி குட்டிக்கு எதுக்கு பயமாம்? மழை பெய்தால் தானே பூமி செழிக்கும். மழை பெய்யலேன்னா... தோட்டத்துச் செடிகள் எல்லாம் காய்ஞ்சு கருவாடா போயிடுமே?

    போன வாரம் எப்படி வாடிக் கிடந்த செடிங்க... இப்போ மழை பெய்யவும். தளதளன்னு குஷியா மழையில குளிச்சுட்டிருக்கு... பாரேன்!

    ஊகூம்... இடிச் சத்தம் கேட்டா எனக்கு பயம். மழை வேணாம்மா... போதும். அப்பா எப்போ வருவாரு?

    கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்த கோடை மழை குழந்தைக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது.

    வெளியில் எங்கும் தலைகாட்ட முடியவில்லை. நான்கு சுவர்களுக்குள் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறோம் என்று குழந்தை வெறுத்துப் போய் விட்டாள் போலும்.

    பவ்யாவின் கணவன் நரேந்திரன் ஊரில் இருந்திருந்தால்... இவள் மறுப்பைக் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டான்.

    தீபு குட்டிக்கு சின்ன ரெயின் கோட் அணிவித்து காரில் அருகில் அமரவைத்துக் கொண்டு... ஷாப்பிங் காம்ப்ளெக்ஸிற்குச் சென்று மெல்ல வேடிக்கை காட்டி... குழந்தைக்குப் பிடித்த சாக்லெட், பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு... அந்த ஏரியாவை ஒருமுறை வலம் வந்து விடுவான்.

    என்னங்க இது? மழை பெய்யறப்போ கூட அவளை வெளியில கூட்டிட்டுப் போகணுமா?

    குழந்தைக்கு சளி, ஜூரம்னு ஏதாச்சும் வந்துட்டா என்ன பண்றதாம்? ஆதங்கப்படுவாள் பவ்யா.

    ஏன் வீணா பதட்டப்படறே? தீபுகுட்டிக்கு ரெயின் கோட் மாட்டியிருக்கேன். அவளை எங்கேயும் இறக்கியே விடலை. நான் தான் தூக்கியே வச்சுட்டிருக்கேனே?

    "குழந்தைக்கு போரடிச்சு அவ முகம் எப்படி வாடிக்கிடந்துச்சு. இப்போ பாரேன். கலகலன்னு ஆயிட்டா... வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கக்கூடாது.

    "குழந்தையை வெளியில் அழைச்சுட்டுப் போனாத்தான்... மைண்ட் ஃப்ரீயா இருக்கும். நிறைய விஷயங்களை அது அப்சர்வ் பண்ணிக்கும்.

    "போன வாரம் ஜி.கே.புக் வாங்கிக் குடுத்தேனே? கலர்ப் படங்களைக் காட்டி சொல்லிக் கொடுத்ததும்... அத்தனை 'அனிமல்ஸை'யும் எவ்ளோ அழகா ஜடென்டி ஃபை பண்ணி கரெக்டா பேர் சொல்றா பாத்தியா?

    குழந்தைக்கு நான் அப்பா... எனக்கும் உன்னை மாதிரியே அவளோட நலன்லே அக்கறையும் கவனமும் இருக்கு. வீணா கவலைப்படாதே.

    மென்மையான குரலில் பேசி, அவளது வாயை அடைத்து விடுவான் நரேந்திரன்.

    சாயந்தரம் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு வந்து விட்டால்... சதா தீபிகாவுடனேயே பொழுதைக் கழிப்பான் நரேந்திரன்.

    குழந்தைகள் கண்டு மகிழக்கூடிய 'சி.டி.'யை வாங்கி வந்து போட்டுக் காட்டுவான்.

    அதோ பாரு... காட்டு யானை! தும்பிக்கையைத் தூக்கிக்கிட்டு தண்ணியில எப்படி முங்கிக் குளிக்குது. பார்த்தியா? என்பான்.

    குழந்தைக்கு குஷி பிய்த்துக் கொண்டு போகும். கைகளைத் தட்டி ஆர்ப்பரிப்பாள்.

    சில நாட்களில்..."

    Enjoying the preview?
    Page 1 of 1