Athikalai Paravaigal
By Rajesh Kumar
()
About this ebook
அதிகாலை பறவைகள். இது ஒரு மன நோயாளிப் பெண்ணின் கதை, ஜீவா என்கிற டாக்டருக்கும் வினயா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஒரு உணர்வு பூர்வமான போராட்டம்தான் கதை.
- ராஜேஷ்குமார்.
Read more from Rajesh Kumar
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5
Related to Athikalai Paravaigal
Related ebooks
Thodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Thaduthal Kooda Tharuvean Rating: 5 out of 5 stars5/5Jeippathu Nijam Rating: 5 out of 5 stars5/5Brindha Private Limited Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Thapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Velvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsVivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Arivu Rating: 2 out of 5 stars2/5Engiruntho Aasaikal Rating: 0 out of 5 stars0 ratingsKannale Kollathey! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsIrakka Piranthaval Sindhu Rating: 4 out of 5 stars4/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Xerox Kathali Rating: 5 out of 5 stars5/5Un Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/525 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsMeendum… Meendum… Rating: 5 out of 5 stars5/5Aayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Aabathu Ingey Aarambam Rating: 5 out of 5 stars5/5Kangalil Eththanai Kallamadi Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsKoodave Oru Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsAinthaam Pirai Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Samaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5
Reviews for Athikalai Paravaigal
0 ratings0 reviews
Book preview
Athikalai Paravaigal - Rajesh Kumar
http://www.pustaka.co.in
அதிகாலைப் பறவைகள்
Athikalai Paravaigal
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For other books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அதிகாலைப் பறவைகள்
1
காலைநேரம். கேரட் நிறத்தில் விடிந்து கொண்டிருந்தது. பக்கத்துத் தெரு கலியபெருமாள் கோயில் கோபுரத்தில் இருந்து ஒலி பெருக்கியின் வழியே வழிந்த சுப்ரபாதம் கேட்டு கண் விழித்தான் ஜீவா.
ஜீவாவுக்கு இந்தக் குளிர்கால வேளைகள் ரொம்பவும் பிடிக்கும். ஜன்னல் வழியாக வீசுகிற குளிர்காற்றுக்கு அடக்கமாய் - கழுத்துவரைக்கும் போர்வையை போர்த்திக்கொண்டு காதில் விழுகிற சுப்ரபாதத்தைக் கேட்டுக்கொண்டே பாதி முழிப்பும் தூக்கமுமாய் காலைநேர நிமிஷங்களை கரைப்பதில் ஒரு ஈடுபாடு. அதில் ஒரு தனி சுகம்.
அன்றைக்கும் ஜீவா அந்த சுகத்தில் திளைக்க ஆயத்தப்பட்ட விநாடி –
டொக்... டொக்...
அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தொடர்ந்து அம்மா புவனேஸ்வரியின் குரல்.
ஜீவா... ஜீவா...
ʻʻம்...ம்ʼʼ
எந்திரிச்சிட்டியா... இல்லையா?
மணி என்னம்மா...
அஞ்சே முக்கால்...
இவ்வளவுதானே... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே?
உதைவிழும்...! சரியா ஆறேமுக்கால் மணிக்கு உனக்கு ஒரு முக்கியமான என்கேஜ்மெண்ட் இருக்கிறதை மறத்துட்டியா..?
அட…ஆமாம்
ஜீவா போர்வையை விலக்கிக் கொண்டு பளிச்சென்று எழுந்துபோய் கதவைத் திறந்தான்.
புவனேஸ்வரி இடுப்பில் கைவைத்து நின்றிருந்தாள். அந்நேரத்துக்கே குளித்திருந்தாள். பத்து வருடங்களாய் குங்குமத்தை மறந்துபோன நெற்றி விபூதி தீற்றலோடு தெரிந்தது.
ஸாரிம்மா... ஆறே முக்கால்மணி என்கேஜ்மெண்டை மறந்துட்டேன்…
புவனேஸ்வரி பளிச்சென்று சிரித்தாள்.
ஒரு வயசு பையன் அதை மறக்கலாமா..? இந்த லட்சணத்துல நீ ஒரு டாக்டர்... ஒரு விஷயம் முக்கியம்னா அதை மனசுக்குள்ளே செதுக்கி வெச்சுக்க வேண்டாமோ..?
சரி கீழே வா... காபி கலந்து தர்றேன். குடிச்சிட்டு அரைமணி நேரத்துக்குள்ளே... குளிச்சு ரெடியாகி புறப்படனும்...
சொன்ன புவனேஸ்வரி மாடிப்படிகளில் இறங்க ஜீவா பின் தொடர்ந்தான். வேலைக்காரி ஜோதி வாசலில் நீர்தெளிக்கும் சத்தமும் பக்கத்துவீட்டு மாமரத்தில் ஒண்டியிருந்த பறவைகளின் இரைச்சலும் கதம்பமாய் கலந்து கேட்டது. கண்ணாடி ஜன்னல்களில் சூரியனின் ஆரஞ்சுநிற வெளிச்சம்.
வேலைக்காரி ஜோதி நேரத்துக்கு வந்துட்டா போலிருக்கே.
தீபாவளி பக்கத்துல வருதுல்ல..! புடவை வாங்க வேண்டாம்...?
புவனேஸ்வரி சொல்லிக்கொண்டே சமை யலறைக்குப் போக முயன்ற விநாடி -
டீபாயின் மேல் வைத்திருந்த டெலிபோன் அவளை கூப்பிட்டது. ஜிவா எடுக்க முயல - புவனேஸ்வரி அவளை கையமர்த்தி விட்டு ரீஸிவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
ஹலோ...
மறுமுனையில் கல்யாணத்தரகர் கிருஷ்ணமணி இரைந்து பேசினார். யாரு புவனேசுவரி அம்மாங்களா..? அம்மா! நான் கிருஷ்ணமணி பேசறேன்.
சொல்லுங்க.
தம்பி ஜீவா எந்திரிச்சி ரெடியாகி, ஆறே முக்கால் மணிக்கெல்லாம் வாசலுக்குப் போயிடுவார் இல்லே...?
கண்டிப்பா.
பொண்ணும் சரியா ஆறே முக்கால்மணிக்கு ஸ்டேடியம் வாசலுக்குப் போயிடும்... தம்பி லேட் பண்ணிடப் போறார்.
அதெல்லாம் லேட்டாகாது... ஜீவா குளிச்சு கிளம்பியாச்சு... ஆறரை மணிக்கெல்லாம் ரெடியாகி கார்ல ஏறிடுவான்.
நான் எதுக்காக சொல்றேன்னா தம்பி ஒரு டாக்டர். வெளியே புறப்பட்டு போகிற நேரத்துல... பேஷண்ட் யாராவது வந்துடுவாங்க...
அதெல்லாம் வராம நான் பார்த்துக்கிறேன்... பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த ஏற்பாட்டால் எதாவது வருத்தமா?
கொஞ்சம் வருத்தம்தான்...! வீட்டுக்கு நேரடியா வந்து சாவகாசமா உட்கார்ந்து ஸ்வீட் காரம் காப்பி சாப்பிட்டுகிட்டே பெண் பார்த்துட்டு போகலாமே... தெருவுல ஏன் பார்க்கணும்னு அபிப்ராயப் பட்டாங்க. கும்பலா போய் பொண்ணு பார்க்கற சடங்கெல்லாம் தம்பிக்கு பிடிக்காதுன்னு சொன்னேன்... பெத்தவங்களுக்கு எப்படி இருந்தாலும் பொண்ணுக்கு இந்த ஏற்பாடு பிடிச்சுருக்கு. அந்தப் பொண்ணும் கொஞ்சம் சோஷியல் டைப்...
எப்படியோ... நல்லபடியா எல்லாம் முடிஞ்சா சரி. நீங்க காலையில் பத்துமணி சுமார்க்கு... ஒரு நடை வந்துட்டுப் போங்க. ஜீவாவுக்கு பொண்ணு புடிச்சுட்டா... மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கலாம் இல்லையா?
நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பொண்ணு வீட்ல அபிப்ராயத்தைக் கேட்டுட்டு உங்க வீட்டுக்கு பத்துமணி சுமார்க்கு வரத்தான் போறேன்…
தரகர் கிருஷ்ணமணி மறுமுனையில் வினோதமாய் சிரித்துக் கொண்டிருக்கும்போதே புவனேஸ்வரி ரிஸிவரை வைத்தாள். சோபாவில் உட்காந்திருந்த ஜீவாவிடம் திரும்பினாள்.
பொண்ணு ஆறே முக்காலுக்கெல்லாம் ஸ்டேடியம் வாசல்ல இருப்பளாம்...
பொண்ணோட பேர் என்னம்மா..?
என்ன புள்ளடா நீ...? ராத்திரியே ரெண்டு தடவை பெண்ணோட பேர் என்னன்னு கேட்டே... நான் 'பூமா'ன்னு அழுத்தம் திருத்தமா சொன்னேன். இப்ப மறுபடியும் கேட்கறே...! டாக்டர் தொழில் தவிர வேற எதுவுமே முக்கியமா படாதா..?
ஸாரிம்மா... மறந்துட்டேன்...
பொண்ணு பூமா ஸ்டேடியம் வாசலுக்கு ப்ளுகலர் கைனடிக் ஹோண்டாவில் வருவா... அதாவது ஞாபகம் இருக்கா...?
ம்...ம்...
பூமாகிட்ட ஏதாவது பேசறதாயிருந்தா... அழுத்தமா பேசிட்டு அந்த நிமிஷத்துல கிளம்பிடணும். வளவளன்னு பேசிட்டு இருக்காதேஸ்!
சரி…
புவனேஸ்வரி சமையலறைக்குள் நுழைந்துவிட ஜீவா பல்லைத் தேய்ப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்து - வாஷ்பேசின் கண்ணாடி முன்பாய் நின்றான்.
கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்கச் செயினும் செயினில் கோர்க்கப்பட்டிருந்த டாலரும் மார்பு ரோமங்களுக்கு மத்தியில் புதைந்திருந்தது. முகம் ஒரு நிறத்திற்குப்போக லாக்கெட் பட்டனை பெருவிரல் தன்னிச்சையாய் அழுத்தியது-
'ப்ளக்; என்ற சின்ன சத்தத்தோடு இதயத்தின் வடிவத்தோடு இருந்த அந்த லாக்கெட் திறந்துகொள்ள –
உள்ளே இருந்த சின்னஞ்சிறிய போட்டோவில் ஒரு பெண் சிரித்தாள். அழகாக மின்னும் கண்கள். ஈர உதடுகளுக்கு நடுவில் கவர்ச்சியான பல்வரிசை, வலது கன்னக்கதுப்பில் ஒரு சிவப்பு மச்சம் கடுகு சைசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருந்தது.
ஸாரி...வினயா இனிமேலும் உனக்காக என்னால் காத்துகிட்டு இருக்க முடியாது. இத்தனை நாளும் ஏதேதோ காரணம் சொல்லிக் கல்யாணத்தை தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தேன்.. இனிமே எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. உடம்புக்கு முடியாத அம்மா வோட வற்புறுத்தலுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயம்.. பொண்ணு பேரு பூமா. பொண்ணை போட்டோவில் பார்த்தேன். உன்னோட அளவுக்கு இல்லேன்னாலும் அழகாகவே இருக்கா... அம்மாவுக்கும் பொண்ணைப் புடிச்சுடிச்சு. மரியாதைப் பட்ட குடும்பம். பொண்ணோட தாத்தா ஹைகோர்ட் சீஃப் ஜட்ஜா இருந்தவர். அப்பா ஜட்ஜ் ஆகக்கூடிய பக்குவத்துல இருக்கார் எந்தக் காரணத்தைக் காட்டியும் பூமாவை வேண்டாம்ன்னு சொல்ல முடியாது. இனிமேலும் உனக்காகக் காத்து நிமிஷங்களை கரைச்சிக்கிட்டிருந்தா... என்னை பெத்தவளை நான் சந்தோஷமா வெச்சுக்கிட்டிருக்க முடியாது. நான் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்...
ஜீவா பல்லைத் தேய்ச்சுட்டியா..
காப்பி சுடச்சுட ரெடி...!"
அம்மாவின் குரல் கேட்டதும் லாக்கெட்டை 'பட்' டென்று மூடி கண்ணோரம் துரிர்ந்து விட்டிருந்த நீரை இமைகளை படபடத்து உதிர்த்தான் ஜீவா.
இதயம் முழுவதும் வினயா வியாபித்து இருந்தாள்.
ஜீவா ஸ்டேடியம் வாசலைத் தொட்டபோது காலை மணி 6.49, காரை ஒரு