Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaiyoppam
Kaiyoppam
Kaiyoppam
Ebook114 pages1 hour

Kaiyoppam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Kavingar Puviyarasu live in Coimbatore. He was born in 19th September 1931. More than 30 years he worked as Tamil teacher.
He also interested to do work in Kavithai, Drama, Art, Newspaper, Radio, Television, Film industry. He wrote 96 books in Tamil.
"Moonram Pirai" Drama has won the first prize in State level. In 2007, he won "Saathiya Academy Award"" for "Purachikaram" novel.
Again he won the Saathiya Academy Award in 2010 for "Kaiyapam". His Kavithai has transulated to Malayalam, Hindi, Kannada, Singalam, English, Aghori
and Russian.
Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580104201586
Kaiyoppam

Read more from Puviyarasu

Related to Kaiyoppam

Related ebooks

Reviews for Kaiyoppam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaiyoppam - Puviyarasu

    http://www.pustaka.co.in

    கையொப்பம்

    Kaiyoppam

    Author :

    புவியரசு

    Puviarasu

    For other books

    http://www.pustaka.co.in/home/author/puviyarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அமுதசுரபிகள் வற்றுவதில்லை

    சிற்பி

    கண் புருவங்களின் மீது விரல்களைக் குவித்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் - அடுத்த கரை முடியாத அந்த மகாநதியை.

    விம்மி, குமிழியிட்டு, விரிந்து - கங்கு கரை காணாமல் பொங்கி…

    இந்தக் கார்த்திகையில் எங்கள் கிராமத்து நதியைப் பார்த்தபோது இப்படித்தான். வரலாறு காணாத மழையில் அது மகாநதி ஆகிப் போனது.

    கவிஞர் புவியரசு எனக்கு எப்போதும் வியப்புக்களின், விரிவுகளின், விசாலத்தின் மகாநதி.

    நாற்பதோ, நாற்பத்தைந்தோ - எத்தனை ஆண்டுகள் நட்பு? ஞாபகமில்லை. ஒரு நாள் அவரோடு பழகியிருந்தாலும் இந்தப் பெருமிதத்தில் எவ்வகை மாற்றமும் இருந்திருக்காது.

    வானம்பாடிக் காலத்துக்கும் முந்தியது எங்கள் நட்பு. வாழும் வரை ஆழ்ந்து வேர்விட்டு - அதன் பின்னும் பேசப்படும் பெருமைக்குரியதாய் நிலைக்கும் எங்கள் நட்பு.

    கவிஞர் புவியரசு கம்பீரங்களுக்குச் சொந்தக்காரர். தோற்றமும் அப்படி. எண்ணங்களும் எழுத்துக்களும் அப்படி. பேச்சும் பெருந்தகைமையும் அப்படி,

    எஸ்.பி.நரசிம்மலு நாயுடு பள்ளியை ஒரு இலக்கிய மையமாக மாற்றியதிலும், லங்கர் கானா பூக்கடைப் பின்புறம் வி.சி.எஸ். காலனியின் சிறிய வாடகை வீட்டை எழுத்தாளர்களின் சங்கமமாக ஆக்கியதிலும் அவருடைய ஆளுமையும், கம்பீரமும் துலங்கின.

    சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் கோவைச் சிந்தனையாளர் மத்தியில் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் ஓங்கி வளர்ந்து நின்றவர் புவியரசு.

    பேரூர்ப் புலவர் - மணிக்கணக்காக இதிகாசப் பேருரைகள் ஆற்றிய இன்னொரு வாரியார் - பிறகு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் அப்பழுக்கற்ற தொண்டர் - அதன் பிறகு மார்க்சியச் சிந்தனையில் மனம் தோய்ந்த படைப்பாளி - மரபிலிருந்து புதுக்கவிதைக்கு நெடும் பாய்ச்சல் செய்த புதுக்கவிஞர் - வானம்பாடி இயக்கத்தின் உறுதி வாய்ந்த அச்சு, அசல், பின்புலம், பின்பலம் எல்லாம் அவரே.

    சமகாலத் தமிழகம் அவரைப் பூரணமாக அறிந்துகொள்ளாமல் இன்னும் இருப்பது நமது தலைமுறையின் அவலம். தமிழ்க் கவிஞர்களைச் சூழ்ந்திருக்கும் கறை, களங்கம், சாபம்.

    'இதுதான்', 'மீறல்' 'புல்லாங்குழல்', 'ஒரு முக்கிய அறிவிப்பு', 'முக்கூடல்', 'கையொப்பம்' என அவர் தந்திருக்கும் கவிதைத் தொகுப்புகளும், எண்ணற்ற மொழிபெயர்ப்பு நூல்களும் அவருடைய படைப்புத் திறனுக்குச் சான்றுகள். ஒஷோ மொழிபெயர்ப்புக்களில் தவழும் இயல்பான நடையும் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புக்களில் புலனாகும் இலக்கியச் செறிவும் அவருடைய மொழி ஆளுமைக்கு அடையாளங்கள்.

    ஓஷோ பெரிதும் போற்றிய 'மிர்தாவின் புத்தகம்' நூலைக் கண்டுபிடித்துத் தமிழுக்குத் தந்து பெருமை சேர்த்திருப்பவர் புவியரசு. அவருடைய உமார் கய்யாம் மொழிபெயர்ப்பும், அதற்குத் தந்திருக்கும் பயனுள்ள முன்னுரையும் விலை மதிக்க முடியாதவை.

    இத்தனை எழுதிக் குவித்திருந்தும் காலச்சுவடு வெளியிட்டுள்ள தமிழ் இனி 2000, தமிழினி வெளியிட்டுள்ள கொங்கு தேர் வாழ்க்கை தொகுப்புக்கள் அவருக்கு உரிய இடத்தை நல்காத குழு மனப்பான்மை ஆழக் குழி வெட்டி ஆயிரம் அடிக்குக் கீழ் புதைக்கத் தக்கவன் கொடுமையின் வெளிப்பாடு எனில் மிகையாகாது.

    எழுபத்தைந்தை எட்டிய பழுத்த எழுத்தாளனைப்

    Enjoying the preview?
    Page 1 of 1