Meendum Meendum (Urchagamai) Uyirthezhalam!
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Nadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Megathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Meendum Meendum (Urchagamai) Uyirthezhalam!
Related ebooks
Mom From India Rating: 0 out of 5 stars0 ratingsIndru Nee Nalai Nee Endrum Nee Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsEn Kannottathil... Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsThisaimaari Paayum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsPoi Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Malukutti Rating: 0 out of 5 stars0 ratingsThagappan Sami Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsVaasal Illatha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsKathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Manasu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiranean! Rating: 0 out of 5 stars0 ratingsSaathaga Paravai Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Mezhuguvarthi Rating: 5 out of 5 stars5/5Aan Manam Rating: 0 out of 5 stars0 ratingsPogappoga... Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5Mannil Neendhum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyumo Vaanam? Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Kariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsPachonthigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Meendum Meendum (Urchagamai) Uyirthezhalam!
0 ratings0 reviews
Book preview
Meendum Meendum (Urchagamai) Uyirthezhalam! - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
மீண்டும் மீண்டும் (உற்சாகமாய்) உயிர்த்தெழலாம்!
Meendum Meendum (Urchagamai) Uyirthezhalam!
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கிடைத்ததை விரும்பு
2. 'டூயட்' பாடினால்கூட பிடிக்காது!
3. தோள்பட்டை அன்பு!
4. கட்டியா, குழந்தையான்னு சந்தேகம்
5. உடம்பை வளைத்து ஆடலாமே!
6. உண்பவனை உண்பவனும் நானே!
7. இனிப்பாக ஒரு தொந்திரவு
8. 'அமிர்தமாக இருந்தாலும்'
9. லலிதா, பத்மினிபோல
10. சாப்பிட்டு முடிச்சதும் எம். ஜி. ஆர் படம்!
11. ஒல்லியான எனக்கு பிளட் பிரஷரா?
12. நான் இந்த வாழ்க்கையை வெறுக்கவில்லை!
13. அலோபதி, ஹோமியோபதி, வெங்கடாஜலபதி
14. சுயம்பாக சுந்தரிகள்
15. சிவாஜி, கே. ஆர். விஜயா போல!
16. வலது பக்கம் ஒருக்களித்து ரங்கநாதர் சேவை
17. சிம்மாசன சிங்காரிகள்
18. மாமியார் சிக்கென மாறினார்!
19. நாகக் கன்னிகையாகக் கிடக்க வேண்டியதுதான்
20. மனோகரா சிவாஜியாக மாறினேன்!
21. ஃப்ளுட்டை முழுங்கிட்டீங்களா?
22. கனவு காணத் தொடங்கிவிட்டேன்!
23. ஒன்.... டூ.... த்ரீ. ஸ்டார்ட்!
24. கற்கக் கற்க - இளமையாகலாம்
மீண்டும், மீண்டும் (உற்சாகமாய்) உயிர்த்தெழலாம்!
அனுராதா ரமணன்
வணக்கம்.
நான் நலம்.
நீங்கள்... நலம்தானே? ஸ்டாப் ஸ்டாப்... யாரையாவது பார்த்து என்னங்க செளக்யமா... எப்படி இருக்கீங்க? என்று கேட்டால், யாருமே 'ஆஹா, நான் நல்லா இருக்கேன்...' என்று சொல்லுவதே இல்லை.
'என்னமோ போங்க. வண்டி ஒடிட்டிருக்கு' என்பார்கள். இதற்கும்மேல் இன்னும் சிலர் - உடம்பில் இல்லாத வியாதிகளே கிடையாது என்பது போல வரிசையாக சொல்லிவிட்டு, "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கடவுள் என்னை இப்படி வதைக்கப்போகிறாரோ தெரியலை' என்பார்கள்.
மனிதர்களாக பிறந்த அத்தனை பேருக்குமே ஏதோ ஒரு வகையில் உடம்பு உபாதை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அட, சிறுவயதில் ஆரோக்கியமாக இருந்தால் போகப்போக ஒன்றிரண்டு உபத்திரங்கள் வரத்தான் செய்யும். எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி இருக்கிறார். உடம்பு சற்று ஸ்தூல சரீரமே தவிர மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை. அறுபது வயசுக்கும் இந்தப் பக்கம் மிளகாய் தொக்கும், அந்தப் பக்கம் ஐஸ்கிரீமும் வெளுத்துக் கட்டுவார். ஆனால் இவரது பாதங்களில் பித்தவெடிப்பு; ஒரடி எடுத்து வைக்கக்கூட முடியவில்லை என்று, அதற்காக ஏகப்பட்ட வைத்தியங்களை செய்து கொண்டிருக்கிறார். இவரால் சமையலறையில் ஐந்து பின் நிமிடம் நின்று கொண்டு எதையும் செய்ய முடியாது. தத்தித் தடுமாறி 'லபக்' கென உட்கார்ந்துவிடுவார். இவரையே 'ஷாப்பிங் போகிறோம் வருகிறீர்களா? என்று கேட்டால் உடனே துள்ளி குதித்துக் கொண்டு கிளம்பிவிடுவார். அதே பாதங்கள்தான்; அதே பாதரட்சைதான். பாண்டிபஜாரில் இந்த கோடியிலிருந்து அந்த கோடிவரை அலசுவார் பாருங்கள்... அப்படி அலசுவார். அந்தச் சமயத்தில் கால்வலியைப் பற்றி யாராவது விசாரித்தால் 'இப்பத்தான்... பத்து நிமிஷமாத்தான் நிற்க முடியறது, நடக்க முடியறது, எல்லாம் அலோபதி, ஹோமியோபதி... இப்படி ஏதோ தேடி ஒரு பதிலைச் சொல்லி, அதன் மகத்துவம்தான் என்பார்.
இவரே 'பாண்டிபஜார் வாக்கிங்'க்கு மறுநாள் ஆரே மறுபடியும் நொண்டியடிக்க ஆரம்பிப்பார் கேட்டால் 'நேற்று பல்லைக் கடித்துக் கொண்டு நடந்து வந்தேனாக்கும். உங்களுக்கெல்லாம் சிரமம் தெரியக்கூடாது என்று வலியை பொறுத்துக் கொண்டேன் என்பார். எனக்குச் சிரிப்புத்தான் வரும்.
உடம்பில் உபாதை இருக்கிறது என்பது என்னவோ நிஜம்தான். அதற்காக வைத்தியமும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்புறமும் ஏன் ஒரு துரும்பைத் தூக்கி போடக்கூட முடியாமல் சிடுமூஞ்சித் தனம்....?
என் கேள்வியெல்லாம் இதுதான் - ஆயிர
பத்து வயதில் ஒடி ஆடி விளையாடிய நாம், சிறுவயதில் கொஞ்சம் மென்மையாக தரை அதிராமல் நடக்கிறோம். முப்பத்துக்குள் வயிற்றுச் சுமையுடன் முதுகு இல்ை பின்நோக்கி வளைய வயிற்றைச் சாய்த்துக் கொண்டு தள்ளாடி நடக்கிறோம். நாற்பதுக்குள் பிள்ளைகளின் பின்னேயும், கணவரின் பின்னேயும் ஒடி, இன்னும் மாவுமிஷின், ரேஷன், மார்க்கெட்டுக்கு ஒடி, நடுவில் சமையல் செய்து, பேங்க்கு, எலக்ட்ரிக் பில், டெலிபோன் பில் கட்ட ஒடி.. (இதெல்லாம் வசந்தி மாமி சொல்வது போல அவரவரர் வாங்கிக் கொண்டு வந்த வரம் எப்படியோ அப்படி). இப்படி ஒடி ஒடி நடப்பதில் எலும்பு தேய்ந்து, ஐம்பதில் முழங்கால் வலி, முதுகுவலி, இடுப்பு வலி என முகம் சுளித்து உட்கார்ந்து, அறுபதில், 'ஊன்று கோல் இருந்தால் பரவாயில்லை' என உள்ளூர நினைத்து, நடைமுறையில் அதை ஏற்றுக் கொள்ளவும் வெட்கப்பட்டு, எழுபதில் அசட்டுப் புன்னகையுடன் வாக்கிங் ஸ்டிக்கைத் தேடி...
இப்படி நமது இளமையும், வலிமையும், ஆரோக்கியமும், தேய்ந்து கொண்டேதான் போகிறதே தவிர என்றைக்கு ஒரு நோயும் சொல்லாமல் நிம்மதியாய், பரவசமாய், பளிச்சென்று சிரித்தபடி விரும்பியவாறு எழுந்து நடக்கிறோம்?
'நாளைக்கு உடம்பு சரியானதும், வாக்கிங் போகலாம்'. 'இந்த ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் இந்த வேலைச் செய்யலாம் - இப்படி நம்முடைய இயலாமைக்கு எத்தனை சப்பைக்கட்டு கட்டுகிறோம்.
என் சினேகிதி ஒருத்தி இருக்கிறாள். அவள் நாளை விடிகாலையில் எழுந்து வாக்கிங் போக வேண்டுமென்றால், இன்று மதியத்திலிருந்தே அதை தவிர்ப்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லுவாள்.
நாளைக்கு அமாவாசை.... சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு சமைக்கணும்பா. 'வாக்' போக எல்லாம் நேரமே இல்லை.
இன்னிக்கு சாயந்திரம் முழுக்க அடுப்படியில் நின்னுகிட்டே இருந்தேன். தலை சுற்றுது, கால் இரண்டும் துணியா துவண்டு போச்சு. இப்பவே சொல்லிட்டேன் நாளைக்கு என்னால வாக்கிங் வர முடியாது...
நான் டாக்டர் கிட்டே கேட்டேன். தினமும் ஒண்ணும் வாக்கிங் போகணும்னு அவசியமில்லையாம். வாரத்தில் நாலுநாள் போனப்போதுமாம்.
இப்படி நடக்கறதால ஒண்ணும் உடம்பு இளைக்காது. அப்படிப் பார்க்கப்போனா ரெண்டு வருஷமா பக்கத்துவீட்டு குண்டு மாமா தினமும் ஐந்து ஆறு கிலோ மீட்டர் நடந்துட்டுதானே இருக்கார். இளைச்சாரா? அதெல்லாம் தேகவாகு...
இப்படிப்பட்ட 'ஒத்துகொள்ளும்படியான அல்லது மறுப்பேதும் சொல்ல முடியாத சாக்கு போக்குகள் ஆயிரம்' என்கிற தலைப்பில் தனிப்புத்தகமே எழுத நான் தயார்.
அத்தனை சமாளிப்பு, சாக்கு போக்குகள் கைவசம் இருக்கிறது.
வம்சாவளியாகவே உடம்பில் ஏற்படும் ரசாயன மாறுதல்களினாலோ, குடும்ப சூழ்நிலைகளினாலோ, சரிவர கவனிக்கவில்லை என்றாலோ, தேகத்தில் பல அசெளகரியங்கள் ஏற்பட்டு விடுகிறது. சில பிரச்சினைகளுக்கு அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, சரிசெய்தாலே போதும். சிலவற்றுக்கு பத்தியமோ, உடற்பயிற்சியோ தேவையாக இருக்கும். இன்னும் சிலவற்றிற்கு மருந்துகள், கடுமையான டயட், அடிக்கடி மருத்துவ கவனிப்பு இதெல்லாம் தேவையாக இருக்கும்.
'நோய் நாடி நோயின் முதல் நாடி மிகைநாடி மிக்கக் கொளல்' என்பதுபோல, நோயின் காரணத்தை அறிந்து கொண்டு, தேவையான சிகிச்சையை எடுத்துக் கொண்டு, அதேசமயம் எதெல்லாம் கூடாது என்று மருத்துவர் சொல்கிறாரோ அவைகளை ஏற்றுக்கொண்டு, புன்னகையுடன் வலம் வந்தாலே போதும்; வந்த நோய் ஓடிவிடும்.
அதைவிட்டு, 'எனக்கேன் இப்படி?' என்றோ, 'எனக்குத்தான் இத்தனைக் கஷ்டமும்' என்றோ, 'ஊர் உலகத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களே, நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்? என்றோ, 'எங்க மாமியார் உள்ளங்கையில் நெய்விட்டு சாப்பிடுகிறார். நான் என்ன அதெல்லாம் கேட்டேனா? சோற்றை கப்பில் அளந்து சாப்பிடச் சொல்கிறாரே அந்தப் பாழாய் போன டாக்டர்....' புலம்புவதில் பயன் இல்லை சகோதரி.
இது ஏற்கனவே நமக்கு இருக்கும் பிரச்சினையை அதிகரிக்க செய்யுமே தவிர குறைக்காது.
இங்கே இந்த புத்தகத்தில் நான் எழுதியது எல்லாமே உடல் ரீதியாகவும், அனுபவத்தினாலும், நானே உணர்ந்ததும்தான். ஆனாலும் இதற்குப் பிறகும் எனக்கு இருக்கும் நகைச்சுவை உணர்ச்சி குறையவில்லை. பார்க்கப்போனால் இன்னும் கொஞ்சம் அதிகமாகியது. வாழ்க்கையில் எல்லாம் சரியாக அமைந்தபின்புதான் சிரிப்பது என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொண்டால் சிரிக்கவே வாய்ப்பில்லாமல் சிடுமூஞ்சி யாகவே அவனது காலம் முழுதும் போய்விடும்.
இந்த கட்டுரையில் நான் எதையும் மறைக்கவில்லை. ஒருபக்கம் சர்க்கரை வியாதி. இன்னொரு பக்கம் ரத்தக் கொதிப்பு. நடுவே இவ்விரண்டினாலும் ஏற்பட்ட இதயநோய், இது எல்லாம் போதாது என்று தீபாவளி பண்டிகை, பொங்கல் இனாம் கேட்க வரும் தபால்காரர், குப்பை வண்டிக்காரர் போல டியுபர் க்ளோஸிஸ், ஈஸ்னோபிலியா, தைராய்டு, ஜாண்டீஸ்... இவை தவிர தானே வலியப் போய் வரவழைத்துக் கொள்ளும் எலும்பு முறிவுகள்...
மேற்கண்ட பிரச்சினைகளுக்கு பல சமயங்களில் ரோக நிவர்த்திக்காக எதுவுமே வைத்தியம் பார்த்துக் கொள்ளாமல் இருந்ததோடு, அதற்கு எதிர்மாறாக என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்திருக்கிறேன். ஆனாலும், என் விஷயத்தில் கடவுள் மிகவும் கருணையுள்ளவராக இருந்தார். எத்தனைதான் அடித்து துவைத்தாலும், மண்ணில் போட்டு புரட்டினாலும் சீக்கிரத்தில் நைந்து கிழிந்துவிடாதபடி மிக நல்ல சட்டையையே எனக்குக் கொடுத்திருக்கிறார்.
தாமதமாக நான் இதைப் புரிந்து கொண்டாலும், தன்னம்பிக்கையோடு எடுத்துக் கொண்டுள்ளேன். அதுமட்டுமின்றி, உடம்பு விஷயத்தில் என்னைப் போல மற்றவர்களும், அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்கிற அக்கறை பிறந்ததினாலேயே இதை 'மீண்டும் மீண்டும்.... உற்சாகமாய் எழுதுகிறேன்.
சில குழந்தைகளுக்கு 'நெருப்பு சுடும்' என்று சொன்னாலே போதும், புரிந்து கொண்டுவிடும். இன்னும் சில குழந்தைகளுக்கு நாம் நெருப்பிலே விரலைக் கொண்டு வைப்பதுபோல நடித்துக் காட்டி 'ஐயோ சுட்டுவிட்டதே' என்று விரலை உதறினால் புரிந்து கொள்வார்கள். இன்னும் சில குழந்தைகள் தாங்களே செய்துப் பார்த்தால்தான் நம்புவார்கள். இவர்களுக்கு எப்படி நெருப்பு சுடும் என்பதை சொல்லித் தருகிறோமோ அதுபோல, கூடவே நெருப்பு சுட்டாலும் அதை நாம் சமையலுக்கு கையாள்வதுடன் பல விதங்களில் அது நமக்கு நன்மையே தரும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஆம். இல்லாவிட்டால், ரத்தக் கொதிப்பு கொஞ்சமே கொஞ்சம் ஏறிவிட்டது என்பதற்காக படுத்துவிட்ட என் இனிய சிநேகிதி அதன் பிறகு லேசில் எழுந்திருக்க மறுத்துவிட்டாள்.
நடந்தால் மாரடைக்கும், தும்மினால் மூச்சு போய்விடும். இப்படிப் படுத்து இருப்பதினால் தினமும் செத்துப் பிழைப்பதைக் காட்டினாலும் - உற்சாகத்துடன் நோயை எதிர்கொள்ளலாம்... இல்லையா? என் அன்புச் சகோதரிகள் சரோஜா, சந்திரா, சகுந்தலா, ஜலஜா, சுதந்திரா உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வதும் இதுதான். மனதில் சந்தோஷமும், தைரியமும், எதையும் தாங்கக்கூடிய பக்குவமும் இருந்தால் மலையாய் வருவது கூட கடுகாய் போய்விடும்.
சோர்ந்து உட்கார்ந்து விடுவது எந்த விதத்திலும் நன்மையைக் கொடுக்கப்போவதில்லை. எழுந்து, நின்றுதான் பார்ப்போமே... அட, நன்றாகவே நடக்க வருகிறதே.... கொஞ்சம் கால் மாற்றி கால் வைத்து ஆடிப்பார்க்கலாமா... என்ன வெட்கம்? ஆடலாம். ஆடிக்கொண்டே, பாடிக் கொண்டே, வாய்விட்டு சிரிக்கலாம். அப்புறமென்ன. இப்பொழுது உங்க ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்துப் பாருங்கள். கணிசமாக குறைந்திருக்குமே.... ரத்தக் கொதிப்பு நேற்று இருந்தது. இன்றைக்கு இல்லையா? நல்லது. நன்றி சொல்வோம் இறைவனுக்கு.
நன்றாக .. சந்தோஷமாக... மகிழ்ச்சியாக சிரித்து மகிழ்வதைவிடவும் சிறந்த மருந்து எதுவுமே இல்லை.
இந்த கட்டுரைத் தொடரை இரண்டு ஆண்டுகளாக 'மங்கையர் மலர்' இதழில் வெளியிட்டது மட்டுமின்றி, என்னைப் பார்க்கும் போதெல்லாம் வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை என்னுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட மஞ்சுளா ரமேஷ் அவர்களை நான் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். இந்த பாராட்டுக்கள் எனக்கு சுடச்சுட கோதுமை அல்வாவை சாப்பிடுவது போல இருந்தது என்று சொல்வதினால் என் உடம்பில் சர்க்கரை ஏறிவிடப்போவதில்லை.
இந்தத் கட்டுரைத் தொடருக்கு ஒவியர் திரு. கோபுலுவும், திரு. நடனமும் வரைந்த ஒவியங்களைப் பார்த்துப் பார்த்து... சிரித்துச் சிரித்து... கொப்பளித்த உற்சாகத்திற்கு வார்த்தைகளே இல்லை. இதற்கெல்லாம் நான் எந்த விதத்தில் கைம்மாறு செய்யப்போகிறேன்... மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் இதுபோல் எழுதுவதைத்தவிர...?
ஒவிய நண்பர் திரு. ஜெயராஜ் கைவண்ணத்தில் வடிவமைத்து, பலரும் படித்து பயன்பெறும் வகையில் இந்நூலை வெளியிட உறுதுணையாக இருந்த என் உதவியாளரும் அருமை நண்பருமான திரு. சர்ச்சில் பாண்டியனுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களும், நன்றியும்.
இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்ட பூம்புகார் பதிப்பகத்தாருக்கு என்றும் என் நன்றிகள் உரித்தாகும்.
இப்படிக்கு
என்றும் அன்புடன்
அனுராதா ரமணன்
மீண்டும் மீண்டும் (உற்சாகமாய்) உயிர்த்தெழலாம்!
1
கிடைத்ததை விரும்பு
அன்புக்குரிய என் வாசக, வாசகிகளுக்கு.... வணக்கம்.... நலம், நலம்தானே...
என்ன, புருவத்தை உயர்த்துகிறீர்கள்? பாதாதி கேசம் பலவிதமானப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, 'நலம்' ஒரு கேடா... என்கிறீர்களாக்கும்?
அட, நலமில்லையின்னே வச்சுக்குவோம்... எப்ப எல்லாம் சரியாகி - எப்பத்தான் 'நான் நலம்' என்று எழுதப் போறேன்....
அதனாலே, யார் என்னை, 'அனு, எப்படியிருக்கே.... செளக்யமா' என்று விசாரித்தாலும் உடனேயே, 'ஒ... நான் நல்லா இருக்கேனே... I am fine' என்று சொல்லி விடுவேன். பல சமயங்களில் அவர்கள் கேட்பதற்கு முன்பே நான் முந்திக் கொண்டு விடுவேன்.... (மேலே விசாரித் திருக்கிறேனே.... அந்தப் பாணியில்...)
நானும் பார்த்து விட்டேன்... 'எப்படியிருக்கீங்க' என்று கேட்டாலே போதும்... முகத்தைச் சுட்டக் கத்திரிக்காய் மாதிரி வைத்துக் கொண்டு, 'ஏதோ இருக்கேன்...' என்பார்களே தவிர.. 'I am fine' இந்த டயலாக் அபூர்வம்!
திருமதி மஞ்சுளா ரமேஷ்தான் அடிக்கடி கூறுவார்.
'அனு.... உங்களுக்கு வராத நோயே கிடையாதா.... உடம்பில் எந்த பாகம் சரியாயிருக்கு? இப்படி ஒவ்வொரு தடவையும் எமலோகத்துக் கதவைத் தட்டிட்டு, டிக்கட் கிடைக்காத அரசியல்வாதி மாதிரி திரும்பி வர்றிங்க... அனு, அதையும் சிரிச்சிட்டே சொல்றீங்க... கின்னஸ் புத்தகத்துலதான் எழுதணும் உங்களைப் பத்தி..."
நான் சிரிப்பேன்... இந்த சிரிப்பு ஒன்றுதான் என்னை சகலத்திலிருந்தும் மீண்டும் வரச் செய்திருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.
எனக்கு, இந்த 'சுட்டக்கத்திரிக்காய்' முகமே பிடிக்காது.... அது மட்டுமில்லை.... சுட்டக்கத்திரிக்காய் துவையல், பச்சடி, இதெல்லாம் கூட, என்னைச் சுற்றியுள்ளவர்கள் 'ஆஹா - ஒஹோ' என்றாலும் எனக்குப் பிடிக்காதுங்க... உள்ளே என்ன இருக்கும்னே தெரியாம ... எப்படி... சரி விடுங்க.... நாம் விஷயத்துக்கு வருவோம்.
'யாம் பெற்ற இன்பம் - இவ்வையகம் பெறுக!
கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா?
அதுபோல, 'நான் பெற்ற துன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும்" என்று நான் நினைக்கவில்லை லட்சுமி... மைதிலி... ரேவதி.... எனக்கு ஏற்பட்டுள்ள உடல் பிரச்சினைகளையும், அதற்கு டாக்டர்கள் மண்டையைக் குழப்பிக் கொண்டு சிகிச்சை செய்து வெற்றி பெற்று - ஒருத்தருக்கொருத்தர் கை குலுக்கிக் கொண்டதையும், இப்படியொரு 'சிக்கலான பேஷண்ட்'டை அவர்கள் வெகு நேர்த்தியாக சமாளித்த விதத்தையும், அப்படியொரு நூல் கண்டு சிக்கல் எனக்குள் ஏற்பட நான் என்னவெல்லாம் அசட்டுத்தனம் - சமர்த்துத்தனமெல்லாம் இந்த ஐம்பத்து மூன்று வருட வாழ்க்கையில் செய்திருக்கிறேன் என்பதையும், உடம்புக்காக எடுத்துக் கொண்ட பத்தியத்தையும், சத்தியத்தையும் (இதுவும் உண்டுங்க... நேரம் வரும் போது சொல்றேன்) இங்கே கடை பரப்பி....
அம்மாக்களே... அக்கா, தங்கச்சிகளே... மகள்களே, பேத்திகளே.... (என் வயசுப் பாட்டிக்கு, விவரம் புரியாத ஐந்தாறு வயசுப் பேத்திதான் இருப்பாள். அதனால் அவர்களை விட்டு விடுவோம்) இதைப் படித்து முடித்து விட்டு, ஜோராய் ஒரு முறை கை தட்டுங்க.... உடம்பில் இருக்கிற வியாதிகளை எல்லாம் அலட்சியப்படுத்தாமல், அதற்காக - 'குய்யோ மறையோ' என்று அழுது அமர்க்களப்படுத்தாமல் - கவனிக்கிற விதத்தில் கவனித்து - மீண்டும் அந்த நோய் வராமல் ஆரோக்யமாய், ஆனந்தமாய் இருங்கள்....
பெரியவர்களுக்கு என் நமஸ்காரம். சிறியவர்களுக்கு என் ஆசீர்வாதம்.
தீர்க்காயுஷ்மான் பவ: பூரண திட, ஆயுள், ஆரோக்ய பிராப்தி ரஸ்து....
'விரும்பியது கிடைக்கவில்லை என்றால் - கிடைத்ததை விரும்பு' - இப்படியொரு பொன்மொழியை யார் உருவாக்கினார்களோ தெரியாது.... ஆனால், என் வரையில் நான், நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று, அதன்படி நடந்து வருகிறேன் என்பது தான் உண்மை.
ஆனாலும் எங்கேயாவது, எப்பொழுதாவது மனசு பலகீனப்பட்டு, எதையாவது நான் ஆசைப்பட்டு சாப்பிட்டு விடக் கூடாது என்பதில் என் குடும்பத்தாரை விடவும், என் வாசகர்கள் கவனமாயிருக்கிறார்கள்.
இதனால் பல செளகர்யங்களும், அசெளகர்யங்களும் எனக்கு