Thedatha Kaadhal!
4/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsBrindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsPallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsUppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsAllikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5
Related to Thedatha Kaadhal!
Related ebooks
Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Pon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Kannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsKarumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Kaadhaladum Manathu Rating: 3 out of 5 stars3/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Maalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Unakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsNinaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Ullam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Paalaivanathil Pannir! Rating: 4 out of 5 stars4/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Azhage Aaryuire! Rating: 3 out of 5 stars3/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Peiyena Peiyum - Kaadhal! Rating: 2 out of 5 stars2/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Thedatha Kaadhal!
8 ratings0 reviews
Book preview
Thedatha Kaadhal! - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
தேடாத காதல்!
Thedatha Kaadhal!
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jayathilakar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
தேடாத காதல்!
1
ரயில் விரைந்து கொண்டிருந்தது.
ஆனால் அந்த வேகம் தெரியாத அளவிற்கு உள்ளே சுக அலுங்கல்தான் - ஏ.ஸி.யின் இதமான அணைப்பு வேறு.
முதன் முதலாய் ரயில் ஏறியபோது நிமலாவிற்கு ஒன்பது வயது.
நெல்லையில் நடந்த ஒரு பாட்டு போட்டிக்காய், பள்ளியின் சக மாணவிகளோடு நேர்ந்த பயணம்.
அது முன் பதிவு செய்யப்படாத பகுதி-
ஆக ஏக நெரிசல்.
மாணவிகள் முதலிலேயே ஜன்னலோர இருக்கைகளைப் பிடித்து விட்டதால், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தங்களில் ஒருவருக்கு அந்த இடங்களை விட்டுக் கொடுத்துக் கொண்டார்கள்.
மரம், குளம், வீடுகள், வயல்வெளி, சாலைகளை அசுரத்தனமாய் பின்னுக்குத் தள்ளியபடி சீறிப் போன அந்த ரயில் பயணம், முகத்தில் மோதிய குளிர் காற்று உள்பட நிமலாவை வெகு நாள் வரை பரவசப் படுத்தியிருந்தது.
இப்போது அதைவிட வெகு செளகர்யமான பயணம். இரண்டாம் வகுப்பு ஏ.ஸி. பெட்டி, குளிருக்கு அடக்கமாய் கம்பளி போர்வையோடு கச்சிதமான தலையணை தந்திருந்தார்கள். இடிபிடி இல்லாமல் நீட்டி படுத்துக் கொள்ளலாம் - அல்லது தலைமாட்டிலிருந்த விளக்கை திறந்து வைத்தபடி வாசிக்கலாம். சக பயணிகள் யாரும் பேசவில்லை. மொபைல் போனில் பேசியவர்களும் அமர்த்தலான குரலையே பயன்படுத்தினார்கள்...
ஆக அனுபவித்து உறங்கலாம்.
ஆனால் நிமலாவிற்கு உறங்கும் எண்ணம் கூட இல்லை!
இப்படி ஒரு பொருளைப் போல தன்னை ஏற்றி அனுப்பி விட்டார்களே என்ற ஆற்றாமை அழுத்தியது.
காலையில் நடந்ததை நினைத்துப் பார்க்கவும் அச்சமாயிருந்தது. தான் அநாதைதான் - ஏழையும் கூட.
அதற்காகத் தன் சம்மதத்தை எதிர்பார்க்காமல்,
'உனக்கு மாசச் சம்பளமாய் பத்தாயிரம் தர்ரேன்னு சொல்றார், நிமலா, அதிர்ஷ்டம் உனக்கு மட்டுமில்லை நம்ப விடுதிக்கும் அடிச்சிருக்கு பாரேன். ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாய் தர்ராராம் -
'ஆதரவற்ற பெண்களுக்கான மையமா? நல்ல சேவை'ன்னு நம்மைப் பாராட்டறவங்க பத்து காசை எடுத்துத் தர்ரதில்லையே? ஆர்டருக்கு வந்த கைவேலை துணிகளை எல்லாம் உன் மூலம் நேரே சென்னைக்குக் கொடுத்து அனுப்பியது எவ்வளவு நல்லதாய் போனது - பாரேன். உனக்கு கை நிரம்ப சம்பளம், நம்ப விடுதிக்கு பெரிய நன்கொடை!'
தன் வாய் நிரம்ப இருந்த பெரிய பற்கள் அத்தனையும் காட்டினாள் வார்டன் தங்கம்மா!
நா… நான் இங்கயே இருந்திடறேன் அக்கா. சென்னையில் நான் எங்கே தங்கறது? அங்கே எனக்கு யாரையும் தெரியாது...
அதெல்லாம் சிதம்பரம் சார் பொறுப்பாய் பார்த்துக்குவார். நீ போய் அவர் சொல்ற வேலையைப் பார்த்துட்டு சுகமாய் இருக்க வேண்டியதுதான்.
தங்கமணியின் கண் சிமிட்டலில் இளையவளின் உடம்பு எரிந்தது.
'பெண்ணை ஒரு பொருள் போல, நடத்துவதால்தான் அத்தனை இன்னல்களும் வருகின்றன.'
என்று பேரறிஞர் பெர்னாட்ஷா சொன்னதை தங்கமணி அறிய மாட்டாள். அப்படியே தெரிந்தாலும் இப்போது காசு அவள் கண்களைக் கட்டி விட்டது!
வர்ர காசில் நம் சென்டருக்கு மேலும் நாலு தையல் மெஷின் வாங்கிப் போடுவேன். பிள்ளைங்க படுக்கற அறைகளுக்கெல்லாம் ஃபேன் மாட்டிடலாம். குளியலுக்கு பெரிய சிமெண்ட் தொட்டி, கூடுதலாய் ரெண்டு டாய்லெட்… இங்கேருக்கற 40 பொண்டுகளும் உன் தயவில கொஞ்சம் செளகர்யமாய் இருப்பாங்க. அந்தப் புண்ணியத்தை மறுக்கவாப் போற நீ?
இன்னும் தன் பற்களை மூடாமல் தங்கமணி கொட்டிய வார்த்தை ஜாலத்தில் இவள் தடுமாறி நின்றாள்.
நிர்வாகிகளின் பேச்சிற்கு எதிர் பேச்சு கூடாது என்ற கண்டிப்புடன் இந்த ஆதரவற்ற பெண்களுக்கான விடுதியில் வளர்ந்திருந்த நிமலாவிற்கு மறுக்க நா புரளவில்லை.
தன்னை ஒரு பொருள் போல எண்ணி விலை பேசுபவன் ஒரு கயவன் என்றாலும் இந்தப் பெண் ஏன் அதற்கு உடந்தையாய் நிற்க வேண்டும்?
பொறுப்பாளர் தங்கமணியிடம் எதிர்த்துப் பேச முடியாதவள், உடன் வேலை பார்த்த தோழியிடம் குமுறினாள் –
போன வாரம் நான் நாம பூ வேலை செய்த துணிகளை எல்லாம் கொண்டு போய் தந்த அந்த சென்னை ஆளின் பார்வை சரியில்லைன்னு சொன்னேனில்ல பானு? தப்பிச்சு வந்துட்டேன்னு நினைத்தால், அவன் விடாமல் துரத்தி என்னைப் பிடிச்சிடுவான் போல. எனக்கு பத்தாயிரம் சம்பளத்தில் வேலையாம் - நம்ப விடுதிக்கு லட்ச ரூபாய் நன்கொடையாம்... என்ன பண்றதுன்னு தெரியலை.
நமக்கு வேற போக்கிடம் கிடையாதே நிமி? ஆக பந்து போல இவங்க உருட்டி விடற இடத்துக்குப் போக வேண்டியதுதான்.
படுகுழியில் தள்ளிடறாங்களே? இதில் விழுந்தால் நா மீள முடியாது பானு.
அந்த ஆள் கல்யாணமானவன்னு சொன்னியே?
"அது பணக்காரப் பொண்ணாம் -
'பார்க்க சகிக்கமாட்டாள். ஆனால் கண்ணுக்கு அழகான புருஷன் வேணும்னு என்னை வாங்கிட்டா'ன்னு எங்கிட்ட புலம்பினான்.
அவள் நடத்தும் பிரத்தியேக 'பொட்டீக்'கில் விற்பனை செய்யத்தான் நம்மிடம் ஆடைகள், விரிப்புகள்னு ஆர்டர் தந்திருக்காங்க."
அதையெல்லாம் தங்கமணியே எடுத்துட்டுப் போயிருக்கலாம். அந்த ஜொள்ளு பார்ட்டி, திரும்பியே பார்க்காமல் நம்ப வார்டனை பத்திரமாய் அனுப்பி வச்சிருப்பான்.
அங்கலாய்த்தாள் சிநேகிதி.
பார்க்க அம்சமாய் ஒருத்தி கொண்டு போனால்தான் பேரம் பேசாமல் வாங்கிக் கொள்வாங்கனு தங்கமணி சொல்லி என்னை அனுப்பினாங்க. தவிர வேறு சில கடைகளுக்கும் பேசி ஆர்டர் வாங்கினேன்.
"இப்போ உன்னையே பார்சல் பண்ணச் சொல்லி ஆர்டர் பண்ணிட்டானே பயல்! என்ன பண்ணப் போறே?
நிமலாவின் மனதுள் ஒரு திட்டம் பொறி தட்டியிருந்தது –
ஆனால் அதை யாரிடமும் அவள் பகிருவதாயில்லை.
இப்போது விலை பேசப்படுவது அவளது மானம்.
அதைத் தெளிவாகவே தங்கமணி சொல்லி விட்டாள்.
அங்கே போய் நீ இப்படி முதுகு ஒடிய கிடந்து தைக்க வேணாம் நிமலா, மேம்போக்கான வேலைதான். குஷியான வாழ்வு - தயங்காம ஒத்துக்கோ - பிறகு நீயே எனக்கு நன்றி சொல்லுவே பாரு.
எனக்கு அப்படி... அங்க போகணும்னு தோணலைக்கா.
அப்ப எங்க போகறதுன்னு முடிவு பண்ணிக்கோ- எங்க முடிவை ஏற்க முடியாதுன்னால் நீ தொடர்ந்து இங்கே தங்கவும் முடியாது.
பதில் கறாராய் வந்தது!
இவள் முகத்து அதிர்ச்சியை நோட்டமிட்டவள்,
ஃப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்பவானு பறக்கறாரு சிதம்பரம் சார். அவ்வளவு அவசரம்
என்று குழைய, நிமலா அருவெறுப்பில் குறுகினாள்.
இங்கே என் வேலைகள் எல்லாம் மற்றவங்களிடையே பிரிச்சு தந்துடணுமே. பிறகு ரயில் டிக்கெட்டிற்கு பதிவு பண்ணிடறேன்.
சமத்துப் பொண்ணு. புரிஞ்சுகிட்டே… இனி பிழைச்சுக்குவே.
என்று