Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Man Kudhiraigal
Man Kudhiraigal
Man Kudhiraigal
Ebook68 pages43 minutes

Man Kudhiraigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580109901708
Man Kudhiraigal

Read more from Kanchana Jeyathilagar

Related to Man Kudhiraigal

Related ebooks

Reviews for Man Kudhiraigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Man Kudhiraigal - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    மண் குதிரைகள்

    Man Kudhiraigal

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jayathilakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    மண் குதிரைகள்

    1

    டாக்டர். மகிபன் காலை எழுந்ததுமே செய்தித்தாளுடன் உட்காருவதில்லை.

    வரிசையாய் நவீன 'வில்லா'க்கள் அடுக்கப்பட்டிருந்த தங்களின் குடியிருப்பைச் சுற்றிக் காலார நடப்பார். பிறகு, காபி குளியல் எல்லாம் ஆன பிறகுதான், செய்தித்தாளைப் பிரிப்பது.

    இன்றும் அதே போல செய்தவர், தனது ஆரம்ப ஆர்வத்திற்கு தீனியிட்ட பின்பு, தனக்கு வேண்டிய செய்திகளில் அமிழ ஆரம்பித்தபோதுதான் மெல்லிய நறுமணம் அவரைத் தட்டித் திருப்பியது.

    நிமிர்ந்தவரின் புருவம் உயர்ந்தது.

    ஹாய்… ப்யூட்டி! எங்கே கிளம்பிட்ட?

    மனைவியை உற்சாகமாக விசாரித்தார்.

    ஏன் - நான் காலையிலேயே குளிச்சு... உங்களைப் போல ஸ்மார்ட்டாய் நிற்கக் கூடாதாக்கும்?

    மாலினியும் சல்லாபமும் சந்தோஷமாகவே பதிலளித்தாள்.

    நாற்பதுகளை எட்டி விட்ட அத்தம்பதிகள் பார்க்க மட்டுமல்ல, தங்களுக்கிடையேயான பழக்கத்திலும் இளமையானவர்கள் தான்.

    பத்து வருஷங்கள் முன்பு வரை மகிபன் மருத்துவதுறையின் மேற்படிப்பில் மூழ்கியிருந்தார். இப்போது அவர் நகரின் முன்னணி மனோதத்துவ நிபுணர்களில் ஒருவர்.

    பெரியவர்கள் தேடி இணைத்த அத்தம்பதிகள் வெகு காதலோடு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மொத்தக் குடும்பப் பொறுப்பு, இரு மகன்களின் கல்வி - எல்லாம் மாலதி கவனித்துக் கொண்டதால் அவர்களது தாம்பத்யம் தடுமாறவில்லை.

    ஆனால் பள்ளிப் படிப்பை முடித்த பிள்ளைகள் கல்லூரி படிப்பிற்காய் வெளியூர், வெளிநாடு என்று போன பிறகு, அதுவரை பரபரப்பாய் இயங்கிய மாலினியின் உடலும் மூளையும் அடுத்தது என்ன… என்று திகைத்து நின்றன!

    'இனி நாம நகருக்குள்ளே இருக்கணும்ற அவசியமில்லையே' என்றவள் கிழக்கு கடற்கரைச் சாலையில் எழும்பிய 'வில்லா' வீடுகள் ஒன்றை விலை பேசினாள். அடுத்த இரு வருடங்கள் வீட்டை தன் ரசனைக்கேற்ப அமைப்பதில் கழிந்தன. தனி வீட்டு அமைப்பு என்பதால், கிடைத்த சிறு தோட்டம் அவளுக்கு மிகுந்த ஆசுவாசம்.

    எவ்வளவு திருந்த செய்தாலும் தோட்ட வேலை ஒருவரை ஓய்ந்திருக்க விடுவதே இல்லையே...!

    களை எடுப்பது, நீர் வார்ப்பது, திருத்துவது, நடுவது என்று தொடர்ந்த ஓயாத வேலையை அவள் விரும்பியே செய்தாள். பெரும்பாலும் வெளியே நின்றவளின் காதில், அக்குடியிருப்பின் வேலையாட்கள் பேசிய கதைகள் விழுந்து, ஓய்ந்த இரவு நேரத்தில் எழுத்தாகி விட்டன!

    தனது முதல் சிறுகதை ஒரு முன்னணி பத்திரிகையில் வெளியானபோது மாலினிக்கே ஆச்சரியந்தான். பிறகு, அவளது எழுத்து தொடர்ந்தது- இரண்டு வருட எழுத்துப் பயிற்சி அவளை நாவல்களுக்கு உயர்த்தியது.

    பொழுது சுவாரஸ்யமாக கழிந்ததோடு, பரிச்சயமானவர்கள் மத்தியில் தன் அந்தஸ்து சட்டென உயர்ந்ததையும் மாலினி உணர்ந்தாள்!

    முன்பு,

    'டாக்டர். மகிபனின் மனைவி' என்று உபசாரமாய் பிறருக்கு அறிமுகப்படுத்தப் பட்டவள் இப்போது,

    'இவங்க யார்னு தெரியுமில்ல? எழுத்தாளர் மாலதி மகிபன்! போன வாரம் கூட இவங்க நாவல் வெளியானது' என்றாக,

    'இப்ப எது பற்றி எழுதறீங்க மிஸஸ்.மாலதி?' என்று கொண்டாடினார்கள்.

    இதைவிட சங்கடம், பலர் தங்களது

    Enjoying the preview?
    Page 1 of 1