Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Robin Hood
Robin Hood
Robin Hood
Ebook258 pages1 hour

Robin Hood

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103701735
Robin Hood

Read more from Sivan

Related to Robin Hood

Related ebooks

Reviews for Robin Hood

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Robin Hood - Sivan

    http://www.pustaka.co.in

    ராபின் ஹூட்

    Robin Hood

    Author : Methew louk

    மேத்யூ லூக்

    Translated by : Sivan

    சிவன்

    For other books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    ராபின் ஹூட்

    1

    ராபின் ஹூட்டையும் அவரது சாகசச் செயல்களையும் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ராபின் ஹூட் வாழ்ந்த காலத்தில், அவர் பிறந்த நாடான இங்கிலாந்தில், இன்றைய மக்களாட்சி முறை நடைமுறையில் இல்லாதிருந்தது.

    அப்போதைய இங்கிலாந்து மன்னர்கள் அதிகாரம் நிறைந்தவர்களாக விளங்கினர். மன்னரிடம் விசுவாசமாக நடந்து கொண்டாலும், தங்களது சொந்த நலன்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தியும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும். பழிவாங்கிக் கொண்டும் இருந்தனர் அந்த நாட்டின் பிரபுக்கள். சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள், மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் ஆடம்பரம் நிறைந்த உல்லாச வாழ்க்கையின் மொத்த பாரத்தையும் சுமந்து மூச்சுத் திணறினர். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், கைத்தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தும் அப்பாவிகளாகவும் இருந்தனர். இதுதான் அந்தக் காலகட்ட இங்கிலாந்தின் நிலை. ஃபியூடலிசம் எனப்படும் நிலப்பிரபுத்துவ முறை அன்று நடைமுறையில் இருந்தது. அதனால், நிலப்பிரபுக்களின் கை சமூகத்தில் ஓங்கியிருந்தது. இவர்களைப் போலவே வலிமை பொருந்திய மற்றோர் அணி, மதகுருக்கள் எனப்படும் புரோகிதர்களுடையது.

    பிரபுக்களும், புரோகிதர்களும், மன்னரின் ஊழியர்களும் சாதாரணமான ஏழை மக்களிடம் ஏதாவது ஒரு வகையில்

    எப்போதும் அதிருப்தி கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் ஒருபோதும் ஏழை மக்களை நினைத்து ஆறுதல் கொள்ள முடிந்த தில்லை. விவசாயிகளும், கைவினைத் தொழில் புரிபவர்களும் மேற்குறிப்பிட்டோரிடம் அதிகமான தொல்லைகள் அனுபவித்தனர். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அன்றைக்கு இருந்த கடுமை யான சட்டங்களுக்கு பயந்து கொண்டு, ஆட்சியாளர்களிடமிருந்து விலகிக் காடுகளில் தஞ்சமடைவது வழக்கமாக இருந்தது.

    மேற்குறிப்பிட்டவர்களை எதிர்த்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாத - கடுமையான தண்டனைக்கு பயந்து காட்டுக்குள் புகுந்த அப்பாவி மக்களின் தலைவன்தான் ராபின் ஹூட் ஏழை எளியவர்களுக்கு உதவுவதே ராபின் ஹூட்டின் வாழ்க்கை லட்சியம். எனவே, இன்றைக்கும் இங்கிலாந்து நாட்டில் மெய்சிலிர்ப்புடன் நினைவு கூரப்படுகிற ஒரு வீரராக ராபின் ஹூட் போற்றப்படுகிறார். ஆங்கிலேயச் சிறுவர்-சிறுமிகளின் இயல்புகளில் பெருமளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிற கதாநாயகர்களில் முதல் இடம் ராபின் ஹூட்டுக்குத்தான்.

    ஏறத்தாழ இங்கிலாந்து நாட்டின் மையப் பகுதியிலுள்ள 'ஷெர்வுட்' காட்டுப் பகுதிதான் ராபின் ஹூட் மற்றும் அவர் தோழர்களின் தலைமையகமாக இருந்தது. அந்தக் காட்டை ஒட்டிய ஒரு கிராமத்தில் ராபின் ஹூட் பிறந்தார். மத்திய கால ஆங்கில வரலாற்றில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படும் ஹங்கிங்டன் பிரபுவின் பாரம்பரியத்தைச் சேர்ந்த குடும்பம் அவருடையது. காலச் சுழற்சியினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு குடும்பமும்கூட.

    ஒருநாள் காட்டுக்குள் அலைந்து திரிந்த சிறுவன் ராபின் ஹூட் மதிய நேரத்தில் வீட்டுக்கு வந்தான். வந்தவன் அம்மாவிடம் காலைச் சிற்றுண்டி தயாராகி விட்டதா? என்று கேட்டான்.

    தயாரா இருக்கு. உள்ளே வா ராபின் என்று அம்மா அவனை அன்புடன் அழைத்தார்.

    ராபின் சமையலறைக்குள் நுழைந்தபோது சிற்றுண்டி பரிமாறப்பட்டிருந்தது. அவன் கரடுமுரடான டைனிங் டேபிளின் முன்னால், அதே மாதிரி கரடுமுரடான நாற்காலி ஒன்றில் அமர்ந்து சிற்றுண்டியைச் சாப்பிட்டான். பிறகு சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கழுவும் அம்மாவுக்கு உதவி செய்ய விரைந்தான். அம்மா துலக்கி வைத்த ஒவ்வொரு பாத்திரத்தையும் துணி ஒன்றால் துடைத்து எடுத்து வைத்தான்.

    அம்மா... துடைக்கும்போது அம்மாவிடம் பேச்சு கொடுத் தான் கவென்ட்ரியைச் சேர்ந்த ஸர்கை உங்கள் தாய்மாமாவா? என்று கேட்டான்.

    ஆமாம் ராபின் என்ன விஷயம்? அம்மா கேட்டார். உனக்கு யார் இதைச் சொன்னார்கள்?

    அம்மா... அவர் தன்னந்தனியாக ஒரு கரடியைக் கொன்னார்னு சொல்றாங்களே. அது நிஜமாம்மா? ராபின் கேட்டான்.

    ஆமாண்டா கண்ணு அம்மா சிரித்தபடியே மகனது ஆர்வத்தைத் தணிப்பதற்காகச் சொன்னார். நிஜமாவே அது அசாதாரணமான ஒரு தீரச்செயல்தான்

    அந்தக் கதையைச் சொல்றீங்களா அம்மா? ராபினுக்கு அம்மாவின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.

    நீல நிறமான நீண்ட கவுன் ஒன்றை அணிந்திருந்த அந்த நல்ல தாய், நாற்காலி ஒன்றை எடுத்துப்போட்டு மகனுக்கு அருகில் அமர்ந்தார். தன் தாய்மாமன் தன்னந்தனி மனிதனாக பிரமாண்ட மான ஒரு கரடியுடன் போராடி வெற்றி பெற்ற கதையை விளக்கினார். அம்மாவின் அருகிலிருந்த ராபின் அந்தக் கதை முழுவதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டான்.

    தன் அம்மாவின் தாய்மாமா, தனி மனிதனாக, ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்த ஒரு கரடியுடன் போராடி, அதன் மார்பில் கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற கதையைக் கேட்டபோது ராபின் மகிழ்ச்சியுடன் துள்ளியெழுந்தான். பிறகு மீண்டும் அம்மாவின் அருகிலேயே அமர்ந்தான். அம்மா அந்தக் கதையைச் சொல்லி முடித்த பிறகும் ஒரு கையில் ரத்தம் படிந்த கத்தியுடனும், மறு கையில் கொன்ற கரடியின் தலையுடனும் வீட்டுக்குத் திரும்பி வந்த அவரது உருவத்தையே கனவு கண்டு கொண்டிருந்தான் ராபின்,

    தனது இருக்கையிலிருந்து எழுந்த அம்மா, அருகிலிருக்கும் அருவியிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்காக வாளியுடன் கிளம்பினார். அப்போதும் கனவுலகிலிருந்து விடுபடாதவனாகத் தொலைவிலிருந்த காட்டுப் பகுதியையே பார்த்தான் ராபின். அவர், மகனை அழைத்தார்.

    ராபின், நீ குளிக்கப் போகலையா?

    அம்மா, எனக்கு ஒரு யோசனை. தனது கனவிலிருந்து விடுபட்டவனாகக் கேட்டான் இப்பவும் அந்தக் காட்டுக்குள்ள கரடிங்க இருக்குமில்லையா?

    இருக்கு, இருந்தாலும் எங்க மாமா கொன்னது மாதிரியான பெரிய கரடிங்க இப்பக் கிடையாது அம்மா பதிலளித்தார்.

    ராபின் தனது வீட்டிலிருந்து நிதானமாக வெளியேறினான். சிந்தனையில் ஆழ்ந்தவனாக ஷெர்வுட் காட்டுக்குள் செல்லும் பசும் புற்கள் நிறைந்த பாதையில் நடந்தான். படிப்படியாக அந்தச் சிறுவனின் உருவம், காட்டு மரங்களுக்கு இடையில் மறைந்தது.

    மாலை நேரம். சூரியன் மறைந்து விட்டான். ராபின் இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை. எப்போதும் காட்டுக்குள்ளேயே அலைந்து கொண்டிருக்கும் மகனைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த அவன் அம்மா, அவனுக்கான தேநீரைச் சூடு ஆறாமல் பத்திரமாக எடுத்து வைத்திருந்தார். பிறகு இரவுச் சாப்பாட்டு வேலைகளில் ஈடுபட்டார். அவர்களது சிறிய வீட்டில் பழங்காலப் பாணியிலான எண்ணெய் விளக்குகள் மங்கலாக எரிந்தன. ராபின் பத்திரமாக இருக்கிறானா என்கிற சன்னமான பயம் அவருக்குள் பரவத் தொடங்கியது.

    வேலைக்குப் போயிருந்த ராபினின் அப்பாவும் வீட்டுக்குத் திரும்பி விட்டார். நெடுநேரமாகியும் ராபினைக் காணாததால், அவர் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போய்த் தேடுவது என்று தீர்மானித்தார். வாசலைத் தாண்டியபோதே காட்டுக்குள்ளிருந்து சிறிய உருவம் ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதை கவனித்தார். அது ராபின்தான்!

    இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த? அப்பா கோபத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டார்.

    அவரது கோபக்குரலைக் கேட்டு அம்மா வெளியே வந்தார்.

    ராபினின் உடைகள் தாறுமாறாகக் கிழிந்திருந்தன. அவன் நேராக அம்மாவிடம் ஓடினான். அம்மா அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

    ராபின்… நான் கேட்டதுக்கு பதில் சொல். நீ எங்கு போயிருந்த? வீட்டின் சுவரில் தொங்கும் சாட்டை வாரைப் பார்த்தபடி அப்பா மறுபடியும் கேட்டார்.

    நான்… நான் கரடியைத் தேடிக் காட்டுக்குள்ள போனேன்ப்பா. ஸர்கை செஞ்சது மாதிரி அதைக் கொல்லணும்கிறதுக்காக!

    சரி… எப்படியோ கரடி தட்டுப்படாமல் போனது உன்னோட நல்ல காலம் என்று சொல்லிவிட்டு ராபினின் அப்பா வீட்டுக்குள் நுழைந்தார். அம்மாவும் மகனும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

    சமையலறைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்த அப்பா கோபம் இல்லாதவராகச் சிரித்தபடியே சொன்னார். கரடியைத் தேடிப் போன நீ ஒரு வீரன்தான் ராபின், அப்படியும் கரடிகளைப் பாக்காம நீ திரும்பி வந்தது உன்னோடது மட்டுமில்லை. உன்மேல அன்பு வெச்சிருக்கிற எங்களோடயும் அதிர்ஷ்டத்தாலதான்.

    இருந்தாலும் எனது பயணம் சுவாரஸ்யமா இருந்துச்சுப்பா' அப்பாவின் கோபம் தணிந்துவிட்டதால், உற்சாகம் அடைந்த ராபின் விவரிக்கத் தொடங்கினான். நான் காட்டுக்குள்ள இருக்குற முரட்டுத்தனமான மனுஷக் கூட்டத்தைப் பார்த்தேன். எதுக்காக இங்க வந்திருக்கேன்னு என்னைக் கேட்டாங்க. நான் பதில் சொன்னதைக் கேட்டுச் சத்தம் போட்டுச் சிரிச்சாங்க"

    நீ ஒரு சின்னப் பையனாச்சே... அதனாலதான் சிரிச்சாங்க! அப்பா புன்னகைத்தபடி சொன்னார்.

    அப்புறமா அவங்க என்னென்னமோவெல்லாம் சாப்பிடக் கொடுத்தாங்க. குடிக்கிறதுக்கு ருசியான பானம் கொடுத்தாங்க ராபின் தொடர்ந்தான் அப்புறம் அவங்க என்ன சொன்னாங்க தெரியுமாப்பா? ஒரு காலத்துல நானும் அவங்களோட சேர்ந்துக்க வாய்ப்பு கிடைக்கட்டும்னாங்க!

    கடவுள் அப்படிச் செய்யாம இருக்கட்டும் என்று சொன்ன அம்மா, தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தேநீரை மகனிடம் கொடுத்தார்.

    நிச்சயமா அது உல்லாசமான ஒரு வாழ்க்கையா இருக்கும். ராபின் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் சொன்னான். காட்டுக்குள்ள படுத்துத் தூங்குறதும், திறந்த வெளிகளில் வாழ்வதும், ஆகா. என்ன ஒரு வாழ்க்கை!

    ராபின் அதைப் பற்றிய சிந்தனையுடனே தனது மர வீட்டில் படுத்திருந்தான். தொலைவில், காட்டின்மீது நிலா உதித்து உயர்வதைப் பார்த்தபோது, எதிர்காலத்தைக் குறித்து அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். தன்னுடைய சுதந்திரத்துக்கோ, சாகசச் செயல்களுக்கோ எந்த ஒரு தடையுமில்லாத அப்படிப்பட்ட காட்டு வாழ்க்கையையே மேற்கொள்வதென்று!

    அதன் பிறகு வழக்கம்போல் அவன் தன்னுடைய ஓய்வு நேரங்களிலெல்லாம் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளை யாடினான். கூடவே ஓட்டம், தாண்டிக் குதித்தல், மற்போர் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தினான். கம்புச்சண்டை, வாள் சண்டை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றான். வில்லில் அம்பைப் பொருத்திக் குறி தவறாமல் எய்வதில் அவனை வெல்லக்கூடியவர் அந்தப் பகுதியிலேயே யாரும் இல்லை!

    2

    என் மகனுக்கு எந்தத் தொழிலைக் கற்றுக் கொடுப்பது என்பது குறித்து ராபினின் அப்பா தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். அவனது அசாதாரணமான உடல் வலு, எப்படிப்பட்ட கடுமையான வேலையையும் செய்து முடிக்க அவனுக்கு உதவியது. இருப்பினும் ராபினின் ஆவேசமான சாகச இயல்பு, அவனது அப்பாவின் மனநிம்மதியைக் குலைக்கவே செய்தது.

    அவன் பெற்றோர் தங்கள் மகனின் தைரியத்தால் பெருமிதம் அடைந்தனர். இதே மனநிலைதான் அவன் நண்பர்களுக்கும். ஊராருக்கும் ஏற்பட்டது. எல்லாருமே அவனை நினைத்துப் பெருமிதமடைந்தனர்.

    ஷெர்வுட் காடுகளுக்கு அப்பால், ஏறத்தாழ ஐம்பது மைல் தொலைவிலுள்ள நாட்டிங்ஹாம் நகரை ஒட்டி ராபினின் தாய்மாமா வாழ்ந்து வந்தார். ராபினின் அம்மா, தன் அண்ணனைப் பார்த்து வெகுநாளாகி விட்டது. மட்டுமின்றி கட்டுடல் வாய்ந்த பெருமிதத் துக்கு உரிய மகனைத் தன் மற்ற உறவினர்களுக்கும் அறிமுகப் படுத்த விரும்பினார். இப்படி அவர் ஆசைப்பட்டதும் இயல்பு தானே அதனால் ஒருநாள் அவர் தன் கணவரிடம், அண்ணனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். உடனே ராபினின் அப்பா யோசனையில் ஆழ்ந்தார்.

    நீ உன் அண்ணனைப் பார்க்கப் போவது எனக்கும் மகிழ்ச்சி யான விஷயம்தான் என்றவர் தொடர்ந்து கூறினார். ஆனால், காட்டுவழிப் பயணம் ஆபத்தானது. அதனால் நீ தனியாகப் போகக்கூடாது. யாராவது ஒருவர் உனக்குத் துணையாக வந்தே ஆகவேண்டும்!

    உங்களது பயம் நியாயமானதுதான். வழிநெடுக உள்ள கொள்ளைக்காரர்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க யாராவது எனக்குத் துணையாக இருப்பது அவசியம்தான் ராபினின் அம்மா ஒப்புக்கொண்டார்.

    இப்போதைய சூழ்நிலையில் நான் உன்னுடன் பயணம் புறப்பட முடியாது. அது உனக்கே தெரியும். அதற்கு பதிலாக யாரை அனுப்புவது என்று எவ்வளவு யோசித்தும் எனக்கு விடை கிடைக்கவில்லையே? என்று பெருமூச்செறிந்தார்.

    அதற்கு உடனடியாக பதில் அளிக்காமல் ராபினின் அம்மா சற்று நேரம் மெளனமாக இருந்தார். கணவரது பதில், அவர் எதிர்பார்த்த ஒன்றுதான். தன் மனதிலிருக்கும் ஆசையை வெளியிட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவருக்குத் தோன்றியது.

    நான் ராபினைக் கூட்டிட்டுப் போகட்டுமா? சாதாரணமாகக் கேட்பது மாதிரி, தன் மனதின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டார். என்னுடைய பாதுகாப்புக்கு அவன் போதும். ஐம்பது மைல்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும் கூட அவனது துணை எனக்கு நல்ல பாதுகாப்பாக இருக்கும்

    அதைக் கேட்டதும் ராபினின் அப்பா உரத்த குரலில் சிரித்தார்.

    இப்ப எனக்கு விஷயம் புரிஞ்சிடுச்சு அவர் சொன்னார். தைரியசாலியான நம்ம மகனை வெளியுலகத்துக்கு அறிமுகப் படுத்தி வைக்கணும்கிறது உன்னோட ஆசை என்றவர் சற்று நேரம் மெளனமாகச் சிந்தனையில் ஆழ்ந்தார்.

    'இந்தப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைக்கலாமா? பயணத்தின்போது வழியில் ஏற்படும் ஆபத்துகளை சமாளிக்க நிச்சயமாக ராபினால் முடியும்!"

    நம்ம பையனை உன் அண்ணனுக்கு அறிமுகப்படுத்தறது உன்னோட ஆசையில்லையா? அவர் கேட்டார். இது இயல்பான ஆசைதான். நீ அவனைக் கூட்டிட்டுக் கிளம்பு. நான் உங்க அண்ணனை விசாரிச்சதாகவும் சொல்லு

    இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ராபினின் அம்மா மிகவும் மகிழ்ந்தார். இந்தச் செய்தியை ராபினிடம் தெரிவிக்க, அவன் வருவது வரையில் காத்திருக்க அவர் விரும்பவில்லை. உடனே அவனைத் தேடி விரைந்தார்.

    ராபின்! தன்னைப் பார்த்து விட்டதால், ஓடி வந்த மகனை அழைத்தார். ராபின் நாம நாட்டிங்ஹாம் போறோம்!

    நாட்டிங்ஹாமுக்கா?

    ஆமாம்... நாம ரெண்டு பேருமே!

    ஆகா… அது எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்? ராபின் உரத்த குரலில் சிரித்தான். நாம எப்பம்மா புறப்படுறோம்?

    ராபின் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். அந்தக் காலத்தில் ஐம்பது மைல் என்பது ஒரு நீண்ட பயணம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவே ஒரு சில நாட்கள் தேவைப்படும். குதிரை மீது அமர்ந்து பயணம் செய்ய வேண்டும்.

    பாதையில் எங்கும் உணவு கிடைக்காதாகையால், தேவையான வற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உடைகள், குதிரைக்கான உணவு போன்றவற்றுடன் லாடம், கடிவாளம் போன்றவை பழுது இல்லாததாகவும் இருக்க வேண்டும். ஒருசில வாரங்களாகப் பயணத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட அப்பா, ஒரு நாள் மகனை அருகில் வருமாறு அழைத்தார்.

    ராபின் இப்படி வா! அவன் வந்ததும் சொன்னார். நாம பயணம் போகவேண்டிய பாதையோட வரைபடத்தை நான் உனக்குத் தர்றேன்

    அவர்கள் பயணம் செய்யவேண்டிய பாதையைப் பற்றி அப்பா விவரித்ததை ராபின் கவனத்துடன் கேட்டான். எங்கெல்லாம் கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள் என்பதுடன், எந்தெந்த இடங்களில்

    Enjoying the preview?
    Page 1 of 1