Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paartha Muthal Naalil…!
Paartha Muthal Naalil…!
Paartha Muthal Naalil…!
Ebook132 pages1 hour

Paartha Muthal Naalil…!

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580109901636
Paartha Muthal Naalil…!

Read more from Kanchana Jeyathilagar

Related to Paartha Muthal Naalil…!

Related ebooks

Reviews for Paartha Muthal Naalil…!

Rating: 2.3333333333333335 out of 5 stars
2.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paartha Muthal Naalil…! - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    பார்த்த முதல் நாளில்…!

    Paartha Muthal Naalil…!

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jayathilakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    பார்த்த முதல் நாளில்…!

    1

    சுவாதிக்கு அவனைப் பிடிக்கவில்லை!

    ஆக நேருக்கு நேராய் அவனைப் பாராமல் சற்று திரும்பி நின்று கொண்டாள்.

    முதலில் கண்களில் பட்டு பிடிக்காமற் போனது அவனது உயரம்தான்...! ஒடிசலாய் இருந்ததால் மிக வளர்த்தியாய் தெரிந்தான்.

    ஆட்டுக்கும் கூட வாலை அளநது வைத்திருக்கும் இறைவன் இவனைப் படைத்த விதம் அது... அளந்து விட்டிருந்த வரம் - சரி. ஆனால் ஆறடிககும துளி மேற்பட்ட அந்த உயரத்திலிருந்து அவன் தன்னை மிக இளக்காரமாய் பார்த்தது அவளை எரிச்சலூட்டியது.

    அவனைவிட தான் முக்காலடி கம்மியாயிருக்கக் கூடும் - அதனால் என்ன இப்போது?

    தான் புத்தியிலோ திறமையிலோ மட்டமானவள் இல்லையே...?

    இங்கிலாந்தில் தன்னந்தனியே ஒரு தங்கும் விடுதியை நடத்துமளவு திறமை உள்ளவள். தந்தையை இளம் வயதிலேயேப் பிரிந்து, இப்போது தாயையும் சாவிற்கு பறிகொடுத்த பின்பும் அலமலந்து அரற்றாத அளவு திண்ணிய மனதுடையவள்.

    இருபத்தி மூன்றே வயதுள்ள ஒரு அழகிய பெண் தொடர்ந்து தனியே இங்கே அதாவது அவளுக்கு சொந்த மல்லாத நாட்டில் இருப்பது உசிதமல்ல என்று அவளைச் சுற்றிலுமிருந்த அத்தனை பேரும் ஒருமுகமாய் சொன்னது தான் அவளை இப்போது இங்கே வரவழைத்தது. தவிர அம்மா உயிரோடு இருந்தபோதும் அவர்களும் இப் படியேத்தானே புலம்பினார்கள்?

    நீ பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில் என்றாலும், இது நம்ப தேசமல்ல சுவாதிம்மா - இது நம் தாய்நாடில்லை - நீ ஒரு இந்திய தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணினால்தான் இந்தியா பேக முடியும் - அங்கேப் பொருந்தி வாழக் கூடும்.

    அம்மா அரற்ற, அன்று சுவாதி சிரித்தாள் -

    இந்தியா போய் வாழ, நான் டெல்லியிலுள்ள 'ஹோம் டிபார்ட்மென்டி'ற்கு விண்ணப்பம் செய்தால் போதும்மா. அங்கிருந்து அனுமதி வந்தால் நான் இண்டியன் சிட்டினாய் வாழ முடியும்... அதற்கேன் கல்யாணம்...? அதிலும் தமிழ் மாப்பிள்ளை...?

    அப்படி சுலபமில்லை அந்த… மாற்றம் சுவாதி. இங்கேயே பிறந்து வளர்ந்த உனக்கு இந்திய வாழ்வுமுறை, பழக்க வழக்கங்கள் ஏதும் முழுமையாய் தெரியாது. ஒரு நல்ல, சரியான பையனைக் கல்யாணம் செய்து, அல்லது நிச்சயமாவது பண்ணின பிறகு, அவன் துணையோடு நீ அங்கே போனால் வாழ்வு சுலபம்… பிறரோடு சுமுகமாய் கலந்து பழக முடியும்… எளிதாய் ஒன்றக்கூடும்… தனியே போய் புது சூழலில் நின்றால், நீ அநாதைன்னு ஒரு எண்ணம், தவிப்பு உன் உள்ளேயிருக்கும் உறுத்தலாய்…

    ஏம்மா நாம சேர்ந்து போகலாமே? இந்தியா போவதற்காய் ஒரு கல்யாணமா?

    செல்லமாய் அலுத்தவளைத் தாயின் விழிகள் பரிவுடன் வருடின. நான் எவ்வளவு… எத்தனை நாள் சுவாதி உங்க கூட இருக்க முடியும்? உன் எதிர்காலம்ன்றது உனக்கு வரும் துணையோடுதான்…

    என் துணையை எப்படிம்மா தேடிப் பிடிக்கப் போறோம்-இந்த நாட்டு வழியிலா, இந்திய நாட்டு மரபிலா?

    பாதி கிண்டலான வினா, அது.

    உனக்கு எது சரின்னு படுது?

    அம்மா சுவாதிக்குப் போதிய சுதந்திரம் தந்து வளர்த்தவள்.

    இங்கிலாந்தில் உள்ளது போல 'டேட்டிங்' செய்வது ரொம்பக் கஷ்டம்மா! இப்போ பெண்கள்தான் பையன்களைத் துரத்த வேண்டியிருக்காம் - ப்யூலா ரொம்ப அலுத்துக்கறா. தினம் ஜாகிங் போகும் ஜேஸனின் குறுக்கும் மறுக்குமாய் இவள் சைக்கிளில் போய் அவன் கவனத்தை ஈர்க்க பெரும்பாடு படறா!. இந்தியாவில் நிலைமை உல்டான்னுவீங்களே?

    பின்னே? பசங்கதான், வீட்டை விட்டு பெண்கள் வெளியே தலைகாட்ட மாட்டாங்களான்னு அலை பாய்வாங்க.. ஆனால் அங்கே பெரும்வாரியாய் பெரியவங்க பார்த்து நிச்சயிக்கறதுதான்... என் கல்யாணமும் அப்படி நடந்திருந்தால் நிலைச்சிருக்குமோ... என்னவோ?

    பெருமூச்சுடன் சொல்லியதுண்டு அம்மா.

    எனக்கும் காதலில் நம்பிக்கையில்லம்மா - அது பற்றிய நக்கலான ஒரு அபிப்ராயம் - கேட்கறீங்களா?

    ம்ம்.

    காதல் என்பது நீங்கள் சொறிந்து கொள்ள முடியாத ஒரு நமைச்சல்… இதயத்தைச் சுற்றி ஏற்படக் கூடியது! - எப்படி?

    அம்மா சின்னதாய் முறுவலித்தார்கள் - அதனுடே கசப்பு தெரிந்தது. ம்ம்.. ஆரம்பத்தில் சொறிந்தால் சுகம்… பிறகு ரணமாயிடுது! உனக்கேற்ற பையனாய் எனக்கு... நமக்குத் தெரிஞ்சவங்களிடத்தில் சொல்லி வச்சிருக்கேம்மா சுவாதி... அதுவும் உன் அழகுக்கு ராஜகுமாரனே வருவாம் பாரு...

    அம்மா சொன்னதை - அதாவது தன் அழகு பற்றியதை சுவாதி நம்பவில்லை – காக்கைக்கும் தன் குஞ்சு பீற்றத்தக்க பொன் குஞ்சு தானே என்ற அலட்சியம். ஆனால் அதை பலரும் சொல்லியதுண்டு - சாலையில் நடந்து போபவர்களின் பார்வைக் கண்ணாடியின் பிரதி பலிப்பில் தான் அழகிதானோ என்று சந்தேகமாய் சந்தோஷித்திருக்கிறாள்!

    ஆனால் இப்போது தன் எதிரே நிற்பவனின் முகபாவம் வெகு அலட்சியமாயிருக்கிறது.

    'நீ அழகியென்றால் அதில் எனக்கென்ன?' என்ற ஒரு அகம்பாவ பாவனை.

    இவன் எதிரே ஏன் தான் ஒரு அசடு போல நிற்க வேணும்? புறமுதுகு காட்டி ஓடிவிட்டால் என்ன?

    அவளது யோசனைகளை அவனது ஆழ்ந்த குரல் ஊடுருவியது.

    உன் முகமே பேசுது.. உன் யோசனைகளை எல்லாம் பளிங்காய் காட்டும் முகம் உனக்கு. ஆக நீ எதையும் என்னிடமிருந்து மறைக்க முடியாது.

    இப்போது சுவாதிக்கு அவனை மேலும் பிடிக்க வில்லை!

    சகலமும் தெரிந்தவன் போலல்லவா அலட்டுகிறான்?

    முகபாவங்கள் மூலம் மனதின் எண்ணங்களை எப்படி யூகிப்பதாம்? பெரும் ஞானி போல அவன் தன்னைக் கீழ்பார்வையாய் பார்த்து பேசியதும் சுவாதிக்கு ரசிக்க வில்லை.

    அவனது கூரிய பார்வை அவளைக் கூறு போட்டது தான். ஆனாலும் உன் சிந்தனைகள் எனக்குத் தெரிகிறது என்பதெல்லாம் சரடு... அப்படித் தெரிந்தால்

    'ஆஹா தன்னை இவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை' என்பது புரிந்து விலகியிருக்க மாட்டானா?

    அவனை சந்திப்பதற்காய் அவள் வந்திருந்த இந்த இடம், அவளுக்கு மிகப் பிடித்தமானது - லண்டன் நகரின் 'கவன்ட் கார்டன்'. சந்திப்பிற்கு ஏற்ற இடம். அதிலும் அறிமுகமற்ற இருவர் சந்திக்க கச்சிதமானது. இப்போதும் அந்தரத்தில் கயிறு கட்டி அதில் பல வேடிக்கை விநோதங்களைச் செய்து கொண்டிருந்தான் ஒருவன்! சுற்றிலும் நின்ற சிலர் ரசித்துக்கை தட்டியபடி - இந்தியாவிலும் முன்பு கழை கூத்தாடிகள் இப்படி சாலைகளில் வித்தைக் காட்டி பிழைப்பதுண்டு என்றிருக்கிறார்கள் அம்மா.

    இது மைதானம் போன்ற சிறு இடம் - இங்கு இப்புதியவனை வரச் சொன்னது இவள்தான். ஆனால் இப்போது ஏன் வரச் சொன்னோம் என்ற தவிப்புடன் திரும்பி வித்தைக்காரனைப் பார்த்தபடி நின்றாள். கூட்டம் அடுத்த பக்கம் சாய்ந்தது. காரணம் அங்கு சில பெண்கள் தங்களின் நவீன ஆடைகளைக் காட்ட அணிவகுத்திருந்ததுதான். மலர்களும், புட்டாக்களும் கோடுகளுமான பருத்தி ஆடைகளை அவர்கள் விளம் பரப்படுத்திக் கொண்டிருந்தனர் போலும் - முழங்கிய இசைக்கேற்ப அங்கிருந்த மேடையில் இப்படியும் அப்படியுமாய் சுழன்று

    Enjoying the preview?
    Page 1 of 1