Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaarukkum Mugam Illai
Yaarukkum Mugam Illai
Yaarukkum Mugam Illai
Ebook94 pages51 minutes

Yaarukkum Mugam Illai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580100901646
Yaarukkum Mugam Illai

Read more from Pattukottai Prabakar

Related to Yaarukkum Mugam Illai

Related ebooks

Related categories

Reviews for Yaarukkum Mugam Illai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaarukkum Mugam Illai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    யாருக்கும் முகமில்லை

    Yaarukkum Mugamillai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    யாருக்கும் முகமில்லை

    1

    மோட்டார் பம்ப்செட் இயங்கிக் கொண்டிருந்தது. கால் வட்டமாக அடர்த்தியான தண்ணீர் வளைந்து விழுந்து சின்னச் சின்ன கிளை வாய்க்கால்கள் வழியாக வயலுக்குப் பாய்ந்து கொண்டிருந்தது.

    வயலில் நெல் நாற்றுகள் பச்சை யூனிஃபார்ம் அணிந்து காற்றின் தடவலில் சிலுசிலுவென்று சிணுங்கிக் கொண்டிருந்தது. அடுத்த வயலில் சூரியகாந்தி செடிகளில் வட்ட மஞ்சள் பூக்கள் எல்லாம் பேசி வைத்துக்கொண்டு ஒரே திசையில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தன.

    முக்கிய சாலையில் இருந்து வயலைக் குறுக்கில் கடந்து சென்று மின்சாரக் கம்பிகளின் மேல் முப்பது நாற்பது குருவிகள் பள்ளிக்கூட பிரேயர் போல வரிசையாக அமர்ந்திருந்தன.

    தடதடத்து வந்து நின்ற மோட்டார் பைக்கிள் சத்த அதிர்விலும், அது வெளியேற்றிய பெட்ரோலிய புகையின் தொடலிலும் சில குருவிகள் பறந்து இடம் மாற்றம் செய்து கொண்டன.

    பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார் பாண்டித் தேவர். அவருக்குப் பின்னால் அமர்ந்து வந்த மருது அவசரமாக இறங்கி உடனே குடையை விரித்து அவருக்குப் பிடித்தான்.

    பாண்டித் தேவர் வெள்ளை வெளேரென்று எட்டு முழம் பாலியெஸ்டர் வேட்டி கட்டி பச்சை நிற பட்டை பெல்ட் அணிந்திருந்தார். முழுக்கை பாலியெஸ்டர் வெள்ளை சட்டை இரண்டு தோள்களிலும் ஒரு அடி நீளம் மட்டும் தொங்கும் ஒரு மடிக்கப்பட்ட கழுத்துத் துண்டு. காதோரங்கள் மட்டுமே நரைத்திருக்க, மீசையில் ஒரு முடிகூட வெள்ளை இல்லை.

    பாண்டித் தேவருக்கு நாற்பத்தெட்டு வயது என்று ஊர் பெரியவரான, பஞ்சாயத்து தலைவரான அவரே சூடம் அடித்து சத்தியம் செய்தால்கூட சற்று சந்தேகத்தோடுதான் ஒப்புக் கொள்வார்கள்.

    அந்த பண்ணைக்காடு கிராமத்தில் மட்டுமல்ல சுற்றுப்பட்டில் உள்ள இருபத்தேழு கிராமங்களிலும் கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, கபடிப் போட்டியாக இருந்தாலும் சரி, தேவரின் தலைமையில்தான் நிகழும்.

    ஊருக்குள் போலீஸ் வருவதாக இருந்தாலும் முதலில் பாண்டித் தேவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் வரும். பண்ணைக்காடு கிராமத்திலிருந்து வழக்கு என்று எதுவும் அருகாமை காவல் நிலையமான அபிராமபுரம் காவல் நிலையத்திற்குப் போவதே இல்லை.

    எல்லாமே பஞ்சாயத்து பைசல்தான்.

    இந்த பஞ்சாயத்து சமாச்சாரத்திற்காகவே தன் வீட்டு வாசலில் பதினைந்தடி அகலத்தில் திண்ணை கட்டி சிமெண்ட் போட்டு மெழுகி வைத்திருக்கிறார்.

    அங்குதான் பஞ்சாயத்து நடக்கும் என்றில்லை. பாண்டித் தேவர் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கே தேடிக் கொண்டு வந்து பிரச்சினைகளைச் சொல்வார்கள்.

    மாந்தோப்புக்கு நடவில் ஓடு வேய்ந்து சுற்றிலும் வெட்டி வேர் தட்டி கட்டி ஒரு ஆய்வுக்கூடம் அமைத்திருக்கிறார் தேவர். அங்கே நல்ல தேக்கில் செய்து வார்னீஷ் பூசி மெருகேற்றப்பட்ட வட்டமான மேஜையுண்டு. மேஜையைச் சுற்றிலும் ஐந்தாறு நாற்காலிகள் உண்டு.

    சாயங்காலம் ஐந்து ஐந்தரைக்கெல்லாம் பாண்டித்தேவர் அங்கே வந்து உட்கார்ந்து விடுவார். பக்கத்துப் பக்கத்து கிராமங்களில் இருந்து சம அந்தஸ்து உள்ள பெரிய மனிதர்கள் காரிலும், புல்லட் பைக்கிலுமாக வந்து சேர்வார்கள்.

    பிறகு ராத்திரி ஒரு மணி, இரண்டு மணிவரை சீட்டாட்டம்தான். அத்தனை பேருக்கும் இரண்டு மூன்று கேரியர்களில் கோழிக்கறி, ஆட்டுக்கறியோடு சாப்பாடு பாண்டித் தேவர் வீட்டிலிருந்து வந்து சேர்ந்துவிடும்.

    அந்த மேஜை மேல் நூறு ரூபாய் நோட்டைத் தவிர வேறு நோட்டுக்களே புழங்காது. எத்தனை ஜெயித்தாலும் யாரும் மார் தட்டுவதில்லை. எத்தனைதோற்றாலும் யாரும் முகத்தைத் தொங்க விடுவதில்லை.

    பாண்டித் தேவருக்கு கணீரென்று குரல். ஒரு சாதாரண வாக்கியத்தை அவர் பேசினால் அது உத்தரவு போல இருக்கும். தனி அர்த்தங்கள் தொணிக்கும்.

    பாண்டித் தேவர் செருப்புக்களைக் கழற்றிப் போட்டு விட்டு வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டு வயலின் வரப்பில் நடக்கத் துவங்க, அவருக்குக் குடைபிடித்த மருது அந்த வேத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் கிட்டத்தட்ட பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தான்.

    ஒரு வயலில் ஒரு மாடு இறங்கி சாவகாசமாக பயிரை சாப்பிட்டுக் கொண்டிருக்க, எங்கடா அவன் பழனி? வயல்ல மாட்டை மேய விட்டுட்டு இவன் எங்கே என்ன புடுங்கிட்டிருக்கான்? என்றார் பாண்டித் தேவர்.

    வாயைச் சுற்றி இரண்டு கைகளைக் குவித்து வைத்து, ஏ… பழனி… என்று கத்தினான் மருது.

    Enjoying the preview?
    Page 1 of 1