Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pudhumaipithan Short Stories - Part 11
Pudhumaipithan Short Stories - Part 11
Pudhumaipithan Short Stories - Part 11
Ebook104 pages28 minutes

Pudhumaipithan Short Stories - Part 11

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pudhumaipithan, also spelt as Pudumaipithan or Puthumaippiththan (Tamil: புதுமைப்பித்தன்), is the pseudonym of C. Viruthachalam (25 April 1906 – 5 May 1948),[1] one of the most influential and revolutionary writers of Tamil fiction.His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Contemporary writers and critics found it difficult to accept his views and his works were received with extreme hostility. He as an individual and his works have been extensively reviewed and debated for over sixty years since his death. His influence has been accepted and appreciated by the present day writers and critics of Tamil fiction. In 2002, the Government of Tamil Nadu nationalised the works of Pudumaippithan.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112601678
Pudhumaipithan Short Stories - Part 11

Read more from Pudhumaipithan

Related to Pudhumaipithan Short Stories - Part 11

Related ebooks

Reviews for Pudhumaipithan Short Stories - Part 11

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pudhumaipithan Short Stories - Part 11 - Pudhumaipithan

    http://www.pustaka.co.in

    புதுமைப்பித்தன் சிறுகதைகள் - பகுதி 11

    Pudhumaipithan Short Stories - Part 11

    Author:

    புதுமைப்பித்தன்

    Pudhumaipithan

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வாழ்க்கை

    2. விநாயக சதுர்த்தி

    3. விபரீத ஆசை

    4. வெளிப்பூச்சு

    5. வேதாளம் சொன்ன கதை

    6. 'நானே கொன்றேன்!'

    7. 'பூசனிக்காய்' அம்பி

    8. ?

    1. வாழ்க்கை

    1

    அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு கோலாகலமான ஓட்டை இரும்புக் கோஷத்துடன் செல்லும். மலை விறகு வண்டிகள் லொடக்லொடக் என்று, அல்லது சக்கரத்தின் பக்கத்தில் வண்டி சரிவில் வேகமாக உருண்டுவிடாதபடி கட்டும் கட்டையை வண்டிக்காரன் அவிழ்க்க மறந்துவிட்டிருந்தால், 'கிரீச்' என்ற நாதத்துடன், தூங்கி வழிந்துகொண்டு சாரை சாரையாகச் செல்லும். வண்டிக்காரர்களும் வண்டி மாடுகளும் சமதளத்தில் இறங்கிவிட்டால் எதிரிலோ பின்னோ என்ன வருகிறது என்று கவனியாது, தூங்கி வழிந்து கொண்டு செல்ல இச்சாலையில் பூரண உரிமையுண்டு.

    சாலையில் இரண்டு பக்கங்களில் இருக்கும் மரங்களின் சம்பிரமத்திற்குக் கேட்கவேண்டியதில்லை. எதிரே காணப்படும் மலைகளைக் கூடப் பார்க்க முடியாத குறுகிய பார்வையுடையவனானால், அடிமை நாட்டினர் மாதிரி பவ்வியமாக அடங்கி ஒடுங்கி வளர்ந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் போகும்வழி ஒரு நாளும் மலைப்பிரதேசத்தையடையாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயாராக இருப்பான். விக்கிரமசிங்கபுரம் தாண்டிய பிறகுதான், நாணிக் குழைந்து வளர்ந்த இந்த மரங்கள் தங்கள் குலப் பெருமைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

    அன்று அவ்வளவு மோசமான வெய்யில் இல்லை. மலைச்சிகரத்தின் இரு பக்கங்களிலும் கவிந்திருந்த கறுப்பு மேகங்களில் மறைந்து, அதற்குச் சிவப்பும், பொன்னுமான ஜரிகைக் கரையிட்ட சூரியன், கீழ்த்திசையில் மிதக்கும் பஞ்சுமேகங்களில் தனது பல வர்ணக் கனவுகளைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான். பொதியை, பெரிய ரிஷிக் கிழவர் மாதிரி கரு நீலமும் வெண்மையும் கலந்து கறையேற்றிய மஞ்சுத் தாடிகளை அடிக்கடி ரூபம் மாற்றிக்கொண்டு, பார்ப்பவனின் மனத்தில் சொல்ல முடியாத அமைதி, துன்பக் கலப்பில்லாத சோகம், இவற்றை எழுப்பியது. பக்கத்தில், அதாவது இரு சிகரங்களுக்கும் ஊடே தெரியும் வான வெளியில், அக்னிக் கரையிட்ட கறுப்பு மேகங்கள் அதற்குத் துணைபுரிந்தன என்று சொல்லலாம். சக்தி பூஜைக்காரனுக்கு, சிவனும் சக்தியும் மாதிரி, இக்காட்சி தோன்றியிருக்கும்.

    விக்கிரமசிங்கபுரத்திற்கு இரண்டாவது மைலில், மலையை நோக்கி, அதாவது, பாபநாசத்தை நோக்கி ஒருவன் நடந்துகொண்டிருந்தான். நாற்பது வயது இருக்கும். இடையிடையே நரையோடிய, தூசி படிந்த, கறுப்புத்தாடி. அகன்ற நெற்றியின் மீது சிறிது வழுக்கையைவிட்டு, இரண்டு பக்கமும் கோதாமல் வளர்ந்து பின்னிய தலைமயிர் உச்சியில் சிறிது வழுக்கையைக் காண்பித்து, கழுத்தை நன்றாக மறைத்தது. மூக்கு நீண்டிருந்தாலும் வாலிபத்தின் பிடிப்பு விட்டதினால், சிறிது தொங்கி மீசையில் மறைந்தது.

    கீழுதடு மட்டிலும் மீசைக்கு வெளியே தெரிந்தது. வாயின் இருபுறத்திலும் மூக்கிலிருந்து ஆரம்பித்து தாடியில் மறையும் கோடுகள் அடிக்கடி நினைத்து நினைத்து நெஞ்சையலட்டிக் கொள்வதனால் சுருங்கல் விழுந்து கண்ணின் மீது தொங்கும் புருவங்கள். உடல் திடகாத்திரமானதன்று; ஆனால் நாடோடியாக அலைந்து மரத்துப்போன தேகம். கிழிந்த சட்டையும் ஓரங்களில் முழங்கால் தடுக்கியதால் கரைகள் கிழிந்த வேஷ்டியும் உடுத்தியிருந்தான். கைகளும் கண்களும் அவன் வயிற்றிற்காகத் திரியும் நாடோடியல்ல என்பதைக் காண்பித்தன. கையிலே xU jo. தோள்பட்டையில் ஒரு மூட்டை - அதில் ஒரு செம்பும் புஸ்தகமும் துருத்திக் கொண்டிருந்தன - அதன் மேல் ஒரு கம்பளி.

    2

    கண்களில், அடிக்கடி

    Enjoying the preview?
    Page 1 of 1