Manathiley Oru Paattu
5/5
()
About this ebook
நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.
இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Read more from Vathsala Raghavan
Thoothu Se(So)llaayo Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsPuthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Iru Kannilum Un Gnabagam… Rating: 4 out of 5 stars4/5Poovile Then Thedavaa?! Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram Rating: 4 out of 5 stars4/5Vaana'madhu' Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Kannathu Muthamondru Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5Manam Thirudiya Malargal Rating: 4 out of 5 stars4/5Priyangaludan Mukilan Rating: 5 out of 5 stars5/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Vivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5Tamilnadu Express Rating: 0 out of 5 stars0 ratingsJathimalli Poocharam Rating: 0 out of 5 stars0 ratingsVaarthai Thavarivitten Kannamma Rating: 4 out of 5 stars4/5
Related to Manathiley Oru Paattu
Related ebooks
Engey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Amuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Nesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Ennamo Edho Rating: 4 out of 5 stars4/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsYamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Un Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsInnila Venugaanam Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Pesi Pesi Kollathey!!! Rating: 0 out of 5 stars0 ratingsThirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsKai Arugil Thendral Rating: 5 out of 5 stars5/5Vanavil Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Kalanthaval Rating: 3 out of 5 stars3/5Anbudai Nenjam Rating: 4 out of 5 stars4/5Vaa Ini Vasanthame Rating: 5 out of 5 stars5/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Manathukkul Aarathanai Rating: 4 out of 5 stars4/5Thodamaley Sudum Thanal Rating: 4 out of 5 stars4/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Un Kannil Neer Vazhinthal... Rating: 3 out of 5 stars3/5Naan Ezhuthanaal... Nee Vaarthaiyaavai... Rating: 0 out of 5 stars0 ratingsVivek Srinivasan!!! Rating: 5 out of 5 stars5/5Veenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Mazhaithuligal Rating: 3 out of 5 stars3/5
Reviews for Manathiley Oru Paattu
3 ratings0 reviews
Book preview
Manathiley Oru Paattu - Vathsala Raghavan
http://www.pustaka.co.in
மனதிலே ஒரு பாட்டு
Manathiley Oru Paattu
Author:
வத்சலா ராகவன்
Vathsala Raghavan
For other books
http://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
என்ன எல்லாம் ரெடியா ?
கேட்டபடியே அந்த அறைக்குள் நுழைந்தான் அர்ச்சனாவின் பெரியப்பா மகன் மனோ. அர்ச்சனாவை பெங்களூர் அழைத்து செல்ல சென்னை வந்திருக்கிறான் மனோ. இன்று இரவு கிளம்ப வேண்டும்.
அந்த அறைக்குள் வந்து ஜன்னலின் மீது சாய்ந்தபடி நின்றான். சில நாட்களாகவே அதிக உற்சாகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் மனோ.
என்னை பெங்களூர் அழைத்துச்செல்வதில் அவனுக்கு எதற்காம் இத்தனை உற்சாகம்?
புரியவே இல்லை அர்ச்சனாவுக்கு.
இந்த இருபத்தியெட்டு வருடங்களில் அப்பாவை விட்டு அர்ச்சனா பிரிந்திருந்தது இருபது நாட்கள். அந்த இருபது நாட்கள். அவள் வாழ்க்கையை மொத்தமாய் புரட்டிப்போட்ட இருபது நாட்கள்.
அது நடந்து மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது மறுபடியும் பிரிந்து போக வேண்டும். வேறு வழி இல்லை. கிடைத்திருக்கும் அரசாங்க வேலையை இழக்க மனமில்லை. கிளம்பியே ஆகவேண்டும்.
கட்டில் மீதமர்ந்து பெட்டியில் உடைகளை அடுக்கி கொண்டிருந்தாள் அர்ச்சனா. பீரோவிலிருந்து உடைகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.
இது நல்லாருக்குமா இதை வெச்சுக்கோ
சரிப்பா
இது வேண்டாம். கலர் நல்லா இல்லை
சரிப்பா
அர்ச்சனாவை பார்க்கவே ஆச்சர்யமாய் இருந்தது மனோவிற்கு. இப்படி கூடவா இருந்து விட முடியும் ? அப்பாவின் வார்த்தைகளை கேட்டுக்கொள்வதே வாழ்க்கையாய். தனக்கென்று விருப்பு வெறுப்புகளே இல்லாமல்......
அவன் யோசித்து கொண்டிருந்த நிமிடத்தில் தான் நிகழந்தது அது.
எல்லா புடவைகளுக்கும் அடியிலிருந்து அந்தப்புடவையை வெளியில் எடுத்தார் அப்பா.
அதை அவர் வெளியில் எடுத்த நொடியில் சரேலென ஒரே நேரத்தில் விரிந்தன, அர்ச்சனாவின் கண்களும், மனோவின் கண்களும்.
அர்ச்சனாவின் சுவாசம் கிட்டத்தட்ட நின்றே போனது.
அந்த புடவை. கரும்பச்சை நிறத்தில் பூவேலைப்பாடுகளுடன் ஜொலித்த அந்த புடவை......
இமைக்காமல் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்
மூன்று ஆண்டுகளுக்கு முன் அவள் வாழ்க்கையில் சில்லென்று பெய்த பனி மழையின் ஞாபகார்த்த துளியாய், எல்லா புடவைகளுக்கும் அடியில் அந்த புடவையை ஒளித்து வைத்திருந்தாள் அர்ச்சனா.
தெரியும். அந்த புடவையை கொடுத்தது யார் என்பது அப்பாவுக்கு தெரியும். அவன் சம்பந்தமானதாக எதை பார்த்தாலும் அப்பாவுக்கு கோபம் வரும்.
கோபம் வந்தால் என்னவாகும்? வீட்டில் பிரளயம் வெடிக்குமா? சுனாமி தாக்குமா?
எதுவுமே நடக்காது. மௌனமாய் அவள் கண்களை ஒரு முறை பார்ப்பார். அதன் பிறகு? அதன் பிறகு, எதுவுமே சொல்லமாட்டார் .அவளுடன் எதுவுமே பேசமாட்டார். அவ்வளவுதான்.
நரகமது. அர்ச்சனாவுக்கு அதுதான் நரகம். அப்பாவுடன் பேசாமல், அவர் அன்பை இழந்து.....
உடல் நடுங்கியது அர்ச்சனாவுக்கு
ரொம்ப அழகா இருக்குமா இந்தப்புடவை
என்றார் அப்பா. மறந்துவிட்டிருந்தார். அந்த புடவையை அடையாளம் தெரியவில்லை அவருக்கு.
நாளைக்கு உன் ராசிக்கு இந்த கலர்தான் கட்டணும். இதையே கட்டிக்கோ
புடவையை அவள் கையில் கொடுத்துவிட்டிருந்தார் அப்பா.
போன உயிர் திரும்பியது போல் ஆழமாய் சுவாசித்தாள் அர்ச்சனா.
அவ்வளவுதானே மா? முடிஞ்சதா?
கேட்டபடி பீரோவை மூடினார்.
ஆங்..... ம்... முடிஞ்சுது பா. இன்னும் அஞ்சு நிமிஷத்துலே எல்லாம் சரிபார்த்துட்டு வந்திடறேன்
சரிம்மா
அறையை விட்டு வெளியேறினார் அப்பா.
அடுத்த நொடி அர்ச்சனாவின் பார்வை அந்த புடவையின் மீது பதிந்தது. அர்ச்சனாவையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ
ஒரு நிமிடம். மொத்தமாய் ஒரு நிமிடம் அந்தபுடவையை விட்டு அகலவில்லை அவள் பார்வை. அவள் விரல்கள் அந்தப்புடவையை மெல்ல வருடின. கண்களில் நீர் கோடிட அதை கட்டிலின் மீது வைத்தாள் அர்ச்சனா.
மனோ மெல்ல நடந்து அவள் அருகில் வந்தான். அவளது சந்தோஷங்களிலும்,வலிகளிலும் எப்போதுமே உடனிருந்தவன், உடனிருப்பவன் மனோ.
இன்னமும் வெச்சுருக்கியா அர்ச்சனா இந்த புடவையை? தூக்கியே போட்டிருப்பேன்னு நினைச்சேன்
கட்டிலை விட்டு மெல்ல எழுந்தாள் அர்ச்சனா.
அவள் கண்களுக்குள் பார்த்து கேட்டான் மனோ அவனை ஞாபகம் இருக்கா அர்ச்சனா உனக்கு? ஆச்சரியமா இருக்கு
சுரீரென்று நெஞ்சுக்குள் ஊசி இறங்கியது. கண்களில் நீர் சேர பார்வையை தாழ்த்திக்கொண்டாள் அர்ச்சனா.
இருபத்தியெட்டு வயசாச்சு உனக்கு. இப்பவும் கட்டிக்கிற புடவையிலேயிருந்து, கட்டிக்க போறவன் வரைக்கும் உங்கப்பா சொல்றதுதான் உனக்கு வேதமா? அவர் செய்யறதெல்லாம் நியாயம்தானான்னு ஒரு நாளாவது யோசிச்சு பாத்திருக்கியா?
மனோ... ப்ளீஸ்.....
என்ன ப்ளீஸ் ? சரி அதை விடு . உன் மனசை பத்தி எப்பவாவது யோசிச்சு பாத்திருக்கியா?
நிறுத்தி நிதானமாய் சொன்னாள் அர்ச்சனா எனக்கு மனசெல்லாம் கிடையாது மனோ. அப்பா மட்டும்தான்
சுள்ளென்று பொங்கியது மனோவின் கோபம். அந்த நொடியில், சரியாய் அந்த நொடியில் , சின்னதாய் சிணுங்கியது மனோவின் கைப்பேசி. அதை எடுத்து பார்த்தவனின் கண்களில் பொங்கிக்கொண்டிருந்த கோபம் சட்டென விலகி அவன் உதடுகளில் மெல்ல மெல்ல புன்னகை ஓட துவங்கியது.
கைபேசியில் வந்திருந்தது , ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி waiting for your arrival
அனுப்பியவன் மனோவின் உயிர் நண்பன்.
மெல்ல சிரித்து கொண்டான் மனோ. உன் வருகைக்காக காத்திருக்கிறேன்
யார் வருகைக்காகவாம்?
நிச்சியமாக என் வருகைக்காக இல்லை
சட்டென்று அவன் கோபம் விலகிவிட்ட மாயம் புரியாமல் ஆச்சர்யமாய் பார்த்தாள் அர்ச்சனா
மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அர்ச்சனாவின் கண்களுக்குள் பார்த்தான் மனோ. அவன் உதடுகளில் புன்னகை ஓடிக்கொண்டிருந்தது.
என்னாச்சு மனோ
புரியாமல் கேட்டாள் அர்ச்சனா
அவள் கண்களை பார்த்து நிதானமாக சொன்னான் காத்திருக்கிறேன் உன் வருகைக்காக
ம்? என்னது?
இல்ல ஒரு மெசேஜ் வந்தது
யாரு ஸ்வேதாவா? சிரித்தாள் அர்ச்சனா. ஸ்வேதா மனோவின் மனைவி.
அனுப்பியது ஸ்வேதா இல்லையடி பெண்ணே. காத்திருப்பவன் வேறொருவன்
உதடுகள் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டான் மனோ.
பின்னர் புன்னகைத்தபடி கேட்டான் நாளைக்கு இந்தப்புடவையை தானே கட்டப்போறே?
ம்
வெரி குட். வெரி நைஸ்
சிரித்துக்கொண்டே கைபேசியை அழுத்தியபடி அறையைவிட்டு வெளியேறினான் மனோ.
அவன் மனதில் என்ன இருக்கிறது என்று யூகிக்கவே முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள் அர்ச்சனா. அந்த புடவையை மெல்ல கையிலெடுத்தாள் இருப்பான். இந்த புடவையை கொடுத்தவன், எங்காவது இருப்பான். தன் மனைவியுடன் பேசிக்கொண்டு, தன் குழந்தையை கொஞ்சிக்கொண்டு ,என்னை பற்றி நினைக்கவே நேரமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பான்
தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டவளாய் புடவையை பெட்டிக்குள் வைத்து மூடினாள் அர்ச்சனா
2
டாக்ஸி வந்துவிட்டிருந்தது. மொட்டை மாடியில் நின்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த மனோ அதை பார்த்ததும் பேசியபடியே கீழேயிறங்கினான்.
பெட்டிகளெல்லாம் ஹாலில் இருந்தன.
ம்
, சரி
, அப்புறம் கூப்பிடறேன்
கைப்பேசியில் பேசியபடியே நாற்காலியின் மேலிருந்த அர்ச்சனாவின் பெட்டியை எடுத்தான் மனோ. அந்த பெட்டி மூடப்பட்டிருக்கவில்லை. அவன் அதை தூக்கியபோது அந்த பெட்டியில் இருந்தவை எல்லாம் அப்படியே கீழே சரிந்து...........
என்ன மனோ கிளம்பற நேரத்துல...........
என்றபடியே அருகில் வந்தார் அர்ச்சனாவின் அப்பா .
மூவருமாக சேர்ந்து எல்லாவற்றையும் அள்ளி உள்ளே போட்டுக்கொண்டிருந்த போதுதான் அப்பா அதை கையில் எடுத்தார். அதை எடுத்து பார்த்..............
அப்பாவின் உடல் அதிர்ச்சியில் குலுங்கியது. நெஞ்சமெங்கும் பூகம்பம்.
என்ன திட்டத்துடன் என் மகளை அழைத்துச்செல்கிறான் மனோ?
என்ன செய்வதென்றே புரியாதவராய் நின்றிருந்தார் அப்பா. சில நிமிடங்கள் மூளை செயலற்றுப்போனது போலே இருந்தது. அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கவில்லை மனோ.
அவர் நிதானத்துக்கு வந்தபோது உடம்பை பார்த்துக்கோங்க சித்தப்பா
என்றபடியே அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு பறந்துவிட்டிருந்தான் மனோ. மகள் கண்ணீருடன் கையசைத்துவிட்டு செல்வதைக்கூட கவனிக்காதவராய் நின்றிருந்தார் அப்பா. அவர் மனதில் விழுந்திருந்தது அழுத்தமானதொரு சந்தேகக்கீறல்.
ரயில் கிளம்பியதும் அப்பாவை அழைத்தாள் அர்ச்சனா.
ட்ரெயின் கிளம்பிடிச்சுப்பா
ம் சரிம்மா. அப்பாவை ஞாபகம் வெச்சுக்கோ. தூங்கணும். வெச்சிடறேன்
குழம்பிப்போனாள் அர்ச்சனா. என்னவாயிற்று அப்பாவுக்கு? இப்படி சட்டென துண்டிக்க மாட்டாரே?
தூங்கப்போகிறேன் என்றவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மனமில்லை.
ஜன்னலின் மீது தலையை சாய்த்துக்கொண்டாள் அர்ச்சனா. அப்பா கல்லூரி பேராசிரியர். எவ்வளவோ கேட்டாகிவிட்டது. அவள் திருமணம் முடியும் வரை அப்பா வேலையை விடுவதாகவும் இல்லை. அவளுடன் வருவதாகவும் இல்லை.
அப்பா அவளுடனே வந்துவிடவேண்டும் என்பதற்காகவேதான் மனோ அத்தனை மறுத்தும் அவன் வீட்டு மாடியில் தனியே தங்கி, சமைத்து சாப்பிடும், முடிவை எடுத்திருந்தாள். ஓரிரு நாட்களே அப்பா வந்தாலும் சரி, அவருக்கு எந்த சங்கோஜமும், சிரமமும் இருக்கக்கூடாது.
அப்பாவை ஞாபகம் வெச்சுக்கோமா...........
இரவு முழுதும் அந்த வார்த்தைகள் படுத்திக்கொண்டே இருந்தன.
பெங்களூரின் காலைப்பொழுது சில்லென விடிந்திருந்தது. அழகான புன்னகையுடன் மலர்ந்து வரவேற்றாள் ஸ்வேதா.
காலை ஆறரை மணிக்கே ஷூவை மாட்டிக்கொண்டு எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த ஸ்வேதாவை பார்த்துக்கேட்டான் மனோ எங்கே டென்னிஸா?
வாரத்துல மூணு நாள் டென்னிஸ், ரெண்டு நாள் யோகா, ரெண்டு நாள் ஷட்டில். மீதி நேரம் ஆபீஸ். புருஷனுக்கு எதுவுமே கிடையாது. இன்னும் ரெண்டு நாள்லே உனக்கு டைவோர்ஸ் பேப்பர்ஸ் வரும் பாரு
என்றபடியே தன் அறைக்குள் நுழைந்தான் மனோ.
நல்லது. இன்னும் ஏரோபிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் எல்லாம் பண்ணுவேன் உங்க தொல்லை இல்லாமல்
என்று சத்தமாக சொல்லியபடியே அர்ச்சனாவின் அருகில் வந்த ஸ்வேதா ரகசியமாக சொன்னாள்,
உங்க அண்ணன் இப்பவே 76 கிலோ. நான் ஸ்லிம்மா இருக்கேன்னில்ல அதான் பொறாமை
மலர்ந்து சிரித்தாள் அர்ச்சனா. மனோவும் ஸ்வேதாவும் எப்போதுமே இப்படித்தான்.
அர்ச்சனாவின் சொந்த மாமன் மகள் ஸ்வேதா. இந்தத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது அர்ச்சனாவின் அப்பா. அந்த திருமணத்தில் அத்தனை சந்தோஷம் அர்ச்சனாவுக்கு. அவன் திருமணத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பல திட்டங்கள் வைத்திருந்தாள் அர்ச்சனா. ஆனால் அவன் திருமணத்தன்று..........
தலையை குலுக்கிக்கொண்டாள் அர்ச்சனா. பழைய நினைவுகள் அழுத்தினால் மூளை செயலிழந்து போகும்.
குளித்து, சாப்பிட்டு தயாராகிவிட்டிருந்தாள் அர்ச்சனா. அந்த கரும்பச்சை புடவையில் தோளில் கைப்பையுடன் அவன் முன்னால் வந்து அவள் நின்ற போது சில நொடிகள் இமைக்க மறந்துதான் போனான் மனோ.
பின்னர் உதடுகளில் புன்னகை ஓட கிளம்..ப...லாமா?
குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள் அர்ச்சனா.
கம்
என்றபடி படியிறங்கியவன், இங்கே பக்கத்துக்கு வீட்டிலே ஒரு friend இருக்கார். அவரும் உங்க ஆபீஸ் தான். அவர்கிட்டே உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வா
என்றபடி நடந்தான்
பக்கத்துக்கு வீட்டுக்குள் அழைத்து சென்றான் மனோ. கேட்டை திறந்து உள்ளே நுழைந்த நொடியில் அப்படியே நின்றுவிட்டாள் அர்ச்சனா.
அந்த வீட்டு வாசலில் அழகாய் ஒரு தோட்டம். அந்த தோட்டம் முழுவதும் பூக்கள்.
அந்தப்பூக்கள்!
கொத்து கொத்தாய், சிகப்பும், ஆரஞ்சும்,வெள்ளையுமாய் அந்தப்பூக்கள்!
மறக்கமுடியுமா? எத்தனை ரசித்திருக்கிறாள் அந்தப்பூக்களை? அவன் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு அவைகளை ரசித்தப்படியே சொல்லியிருக்கிறாள்.
இந்த பூவுக்காகவே உன் வீட்டுக்கு வாழ வரணும்பா
ஏன்? என் முகத்தை பார்த்தா என் கூட வாழணும்னு தோணலியா உனக்கு?
அதை எப்படிப்பா நேரடியா சொல்றது?
சிரித்தாள்
வேணும்டி எனக்கு. உன் பின்னாடியே பைத்தியக்காரன் மாதிரி சுத்தறேன் இல்ல. எனக்கு வேணும்
அன்று விளையாட்டாய் அலுத்துக்கொண்டான்.
அவனை பிரிந்த பின்னால் பல முறை, பல முறை அவள் வீட்டில் அந்த செடியை வளர்த்துப்பார்த்திருக்கிறாள். ஏதேதோ செய்தும் ஒரு பூ கூட பூத்ததில்லை. எல்லா பூக்களும் ஒன்று கூடி முடிவெடுத்திருக்கவேண்டுமோ? இவள் வீட்டில் மலர்ந்து விடாதே இவளுக்கு அந்த தகுதி இல்லையென்று!
இரண்டடி முன்னால் எடுத்து வைத்தவளின் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் சுருக்கென்றது.
யார் வீடு இது?!
அங்கேயே, அப்படியே நின்று விட்டாள் அர்ச்சனா.
வீட்டின் கதவு திறந்தே இருந்தது. அழைப்பு மணியை அழுத்திவிட்டு அவள் அருகில் வந்த மனோ, பின்னாலிருந்து அவள் கண்களை அப்படியே பொத்திக்கொண்டான்.
ஏய். என்னாச்சு ?
ஒரு சின்ன சர்ப்ரைஸ். அப்படியே உள்ளே வா
நடந்தாள் அர்ச்சனா. லேசாய் புரிய துவங்கியது. அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்பது போலிருந்தது. சுவாசம் அழுத்தமானது போலிருந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும் என்னடா ரெடியா?
என்றான் மனோ.
3
என்னடா ரெடியா
என்றான் மனோ.
"புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு. மனோ கண்களை திறந்ததும் விரியப்போகும் காட்சி என்னவென்பது தெளிவாய் புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு.
சுவாசத்தை சீராக்கி கொண்டாள் அர்ச்சனா.
என்ன அர்ச்சனா கண்ணை திறக்கலாமா?
என்றபடி மெல்ல மெல்ல விரல்களை விலக்கினான் மனோ
அவள் எதிர்பார்த்த காட்சி அப்படியே கண்முன்னால் விரிந்தது.
நின்றிருந்தான் அவன்.
"மனமார நேசிப்பதென்றால் என்னவென்று அவளுக்கு காட்டிய வசந்த்
"இதமான அன்னியோன்னியம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு காட்டிய வசந்த்'
இது எதுவுமே வேண்டாமென்று அவள் தூக்கி எறிந்த போதும் அவளைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டு நிற்கும் வசந்த்.
காற்றில் ஆடும் கேசமும், துரு துரு கண்களும் , நேர்த்தியான உடையும், அவனை பார்த்தபடியே நின்று விட்டாள் அர்ச்சனா.
உதடுகளில் ஓடிய புன்னகையுடன் மெல்ல மெல்ல அவள் முகத்தை ஆராய்ந்தான் வசந்த்.
மனோ சற்று குனிந்து புன்னகையுடன் அவள் முகத்தை ஆராய்ந்தான். அந்த நொடியில் சட்டென இயல்புக்கு வந்தவளாய்
"வசந்த் தானா ? இதுக்குதான் இவ்வளவு பில்டப் குடுத்தியா? என்றாள் சாதரணமாய்.
திகைத்தே போனான் மனோ.
என்ன மனோ நீ.? முதலிலேயே வசந்த் வீட்டுக்கு போறோம்ன்னு சொல்லியிருந்தேனா நான் ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேன். இப்போ பாரு வெறுங்கையோட வந்திருக்கேன்.
அவள் முகத்தைப்பார்த்தப்படியே நின்றிருந்தான் வசந்த். "என்ன சொல்ல வருகிறாள் இவள்.?
அப்புறம் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு வசந்த்?
என்றாள் வெகு இயல்பாய். நீ எப்போ பெங்களூர் வந்தே ? நாம ரெண்டு பேரும் ஒரே ஆபீஸ் தானா? எதுவுமே சொல்லலை பாரு இந்த மனோ.
என்றபடியே ஸோபாவில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.
ஆக்சுவலா எனக்கு நேத்து வரைக்கும் உன் ஞாபகமே இல்லை வசந்த். நேத்து திடீர்னு இந்த புடவையை பார்த்தவுடனேதான் உன் ஞாபகம் வந்தது.
நிதானமாக சொன்னாள் அர்ச்சனா.
எதுவுமே பேசாமல் அவள் முகத்தை ஆராய்ந்த படியே நின்றிருந்தான் வசந்த்
. நேற்று நடந்ததை இப்படி கூட சொல்லலாமா?
சுள்ளென்று ஏறியது மனோவின் கோபம் "என்ன காட்டிக்கொள்ள விரும்புகிறாளாம்? அவள் இயல்பாய் இருக்கிறாள் என்றா? அவள் மனதில் வசந்த் இல்லையென்றா? இல்லை அவளுக்கு மனமென்ற ஒன்றே இல்லையென்றா?
நான் கிளம்பறேண்டா ஆபீஸுக்கு டைம் ஆச்சு
ஏதாவது தவறாக பேசிவிடக்கூடாது என்று எண்ணியபடி மனோ நகரப்போன நேரத்தில் சட்டென கேட்டாள் அர்ச்சனா
"கல்யாணம் ஆயிடிச்சுதானே வசந்த் உனக்கு? உன் கல்யாணத்துக்குதான் கூப்பிடலை உன் wife எங்கே? நான் அவங்களையாவது பார்க்கணும்.
கொதித்தே போனான் மனோ. சட்டென்று அவள் அருகில் வந்து சொன்னான்
அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவன் wife உன்னை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு நல்ல பொண்ணு. அவனை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கறா போதுமா? ஊருக்கு போயிருக்கா வந்ததும் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்
நான் வரேன்டா
நகர்ந்தான் மனோ.
வாசலுக்கு வந்தவனை தொடர்ந்து வந்தான் வசந்த்.
ராட்ஷசி! நடிக்கிறாடா. அவ அப்பாவுக்காக நடிக்கிறா. உனக்கும் அவளுக்கும் எதுவுமே இல்லையாமாம். உன்னை மறந்துட்டாளாம் சொல்லாம சொல்றாடா
பதில் சொல்லாமல் சிரித்தான் வசந்த்.
முன்னாடியே சொல்லியிருந்தா ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பாளாம். என்ன தந்திட முடியும் அவளாலே? உன் பாசத்துக்கும், நீ இழந்த இழப்புக்கும், அவளையே மொத்தமா கொடுத்தாலும் ஈடுக்கட்ட முடியாது.
பொங்கினான் மனோ.
அவன் தோள்களை பற்றி அழுத்தினான் வசந்த். சரி விடுடா. நீ கிளம்பு
ஆயிரம் தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். அவளை தூக்கி போட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ .உன் மனசுக்கு நீ சந்தோஷமா இருப்பே
சிரித்தான் வசந்த். "டைம் ஆச்சு பாரு. நீ