Malargale Malarungal
5/5
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Mudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Oomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsAval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5
Related to Malargale Malarungal
Related ebooks
Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Yaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPoiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Kaanamal Pona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Ange Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsYaar Rating: 5 out of 5 stars5/5Paravaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothumey Rating: 0 out of 5 stars0 ratingsYen Eppadi Rating: 5 out of 5 stars5/5Yugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsEzhai Padum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsSuzhalil Mithakkum Deebangal Rating: 0 out of 5 stars0 ratingsInnoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Poo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Imayaga Naan Iruppean Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Malargale Malarungal
2 ratings0 reviews
Book preview
Malargale Malarungal - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
மலர்களே மலருங்கள்
Malargale Malarungal
Author :
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For other books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
மலர்களே மலருங்கள்
1
போர்டிகோவிலிருந்து வரிசையாய் கார்கள் புறப்பட்டுச் செல்லும் ஒலி கேட்ட பிறகு தான் படுக்கையை விட்டு எழுந்தாள் அனிதா. ஜன்னலருகில் வந்து கர்ட்டனை லேசாக விலக்கிப் பார்த்தாள். நாலைந்து கார்கள் பெட்ரோல் புகையை கக்கியபடி கேட் தாண்டி சென்று கொண்டிருந்தது. வாட்ச்மேன் சல்யூட் அடித்தபடி கார்கள் கடக்கும் வரை நின்று விட்டு பின் கேட்டை இழுத்து மூடிவிட்டு உருண்டையான தன் மர கேபினுக்குள் அக்கடா என்று உட்கார்ந்து கொண்டு ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டார்.
அனிதா கைகளை உயர்த்தி உடம்பை முறுக்கி சோம்பல் முறித்தாள். சீடி பிளேயரில் நல்ல சங்கீத கேஸட் ஒன்றை பொருத்தி மெல்லிய ஸ்தாயியில் ஒலிக்க வைத்து விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். பாத்ரூமில் ஒரு பக்க சுவர் முழுக்க கண்ணாடி பதித்திருந்தது. மற்ற சுவர்களில் அழகிய டைல்ஸ். தரையில் பெரிய பெரிய சதுர டைல்ஸ், பளபளவென்று குழாய்கள், அழகிய குதிரைதுள்ளும் கெய்ஸர், வெளிர் ரோஜா நிறநீளமான பாத் டப். ஒரு சாதாரண சராசரி இந்தியன் ஒருவன் அந்த பாத்ரூமைப் பார்த்தால் வாய் பிளந்து நின்று விடுவான். இது பாத்ரூமா படுக்கையறையா என்று திகைப்பான். அனிதா அந்த அறையை லேசான முகச்சுளிப்போடுதான் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரை அந்த வீடு ஒரு ஐந்து நட்சத்திர சிறை. அதன் பளபளப்பும் வாசமும் அவளுக்கு அருவறுப்பானவை. பட்டுப்பஞ்சணை அவளுக்கு முள் படுக்கை. ஏஸி குளிர் அவளுக்கு எரிமலை அனல். அறுசுவை உணவுகளும் வகை வகையான பழங்களும், இனிப்புகளும், பழச்சாறுகளும் அவளுக்கு விஷம். காரணம் இவை எதுவுமே நேர் வழியில் வந்தவை அல்ல. ஆயினும் வேறுவழியின்றி அந்தச் சிறையில் அவள் வசிக்கிறாள். அதற்குக் காரணம் அவளுக்கு வயது பதினாறு தான். இது வரை வெளி உலகைக் கண்டதில்லை. எங்கு போனாலும் பாதுகாப்போடு கைதி மாதிரிதான் போய் வந்து பழக்கம். கல்லூரிக்கும் அப்படித் தான் போய் வருகிறாள். அங்கேயும் யாருடனும் பேசிப் பழக அவளுக்கு அனுமதி இல்லை.
அனிதா கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தாள். வெண்ணையில் செய்த உடம்பு போல் பளீரென்று ஒரு நிறமும், வடிவமும் தொட்டால் தொட்ட இடம் கன்னிப் போய் விடும் போல் அப்படி ஒரு மிருதுவான சருமம். நல்ல உயரம், வட்டமான முகம், வளைந்த புருவம் கருகருவென்ற விழிக்குளத்தில் கிரே நிற கண்கள், துருதுருவென்று ஒரு நாசி, சற்று தடித்த ஆனால் கொள்ளை அழகு என்று சொல்லும் உதடுகள், அலையோடிய, பம்மென்று காற்றில் பறந்த கேசம், பஞ்சுக்கரங்கள் நடந்தால் சிவக்கும் பாதங்கள், ச்சட்... எதற்கு இத்தனை அழகு...! தேவையா...? இந்த அழகு சந்தோஷத்திற்கு பதில் ஆபத்தையல்லவா தரப் போகிறது. ஆபத்தை தரும் அழகால் என்ன பயன்? பூஜையறையில் அமைதியாய் எரியும் குத்துவிளக்காக இவள் இருக்க விரும்பினால், இல்லையில்லை நீ வெண்திரையில் மின்னும் மெர்க்குரி விளக்காக மாற வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். நடிகையின் மகள் என்றால் அவளும் நடிகையாகத்தான் ஆக வேண்டும் என்று யார் சொன்னார்களோ? அம்மா இன்னமும் கதாநாயகியாக நடிக்கிறாள். அழகு இருக்கிறது. திறமை இருக்கிறது. அத்தனை தயாரிப்பாளர்களும் அவள் கையில் இருக்க பிறகென்ன? இன்னும் ஐந்தாறு வருடத்திற்கு மக்களாக புறக்கணிக்கும் வரை அவள்தான் கதாநாயகி. அவள் அதிர்ஷ்டம் அவள் நடித்த நாலாந்தர படம் கூட வசூலை வாரிக் கொட்டி வெள்ளி விழா கொண்டாடியது. புரொடியூஸர்கள் அவள் வயதைப் பற்றி கவலைப்படாது அவளுக்கேற்ற கதைகளோடும், பெட்டி நிறையப் பணத்தோடும் அவள் வீட்டை முற்றுகையிட்டனர். அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதே இண்டஸ்ட்ரியில் நிறைய பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. ப்ளஸ் டூ முடித்து அனிதா இங்கு வரும் வரை அவளை நடிகை மாயாதேவியின் மகள் என்று பள்ளியிலும் யாருக்கும் தெரியாது. அனிதாவும் காட்டிக் கொண்டதில்லை. மாயாதேவியை பார்க்க வயது வித்யாசமின்றி எத்தனையோ லட்சம் பேர் பார்க்கத்துடிக்கையில், பெற்ற மகளுக்கோ அவள் முகத்தை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.
ஊட்டியில் அனிதா படித்துக் கொண்டிருந்த போது அம்மா ஒரு முறை கூட அங்கே எட்டிப் பார்த்ததில்லை. பள்ளியில் சேர்த்தது கூட அம்மாவின் அம்மாதான். மாயா தான் தன்னுடைய தாய் என்பதே ஏழாவது படிக்கும் போது தான் அனிதாவுக்குத் தெரிந்தது. மாயா அவளைப் பெற்றதோடு சரி. யாருக்குப் பெற்றால் என்பது கூட அவளுக்குத் தான் வெளிச்சம். கருவை கலைத்து விடத்தான் முதலில் முயன்றாள். கை மீறிய விஷயமாக அது வளர்ந்து விட்டதாக டாக்டர் சொன்னதும் வேறு வழியின்றி ஒரு நாள் இரவோடு இரவாக வெளிநாட்டுக்குச் சென்றவள் பிரசவத்திற்குப் பிறகு தான் இந்தியா திரும்பினாள். எங்கே காணாமல் போய் வீட்டீர்கள் என்று நிருபர்கள் குடைந்தெடுத்த போது, திடீரென்று ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்ததால் ஸ்கிரின் டெஸ்ட்டுக்குப் போய் விட்டு வந்ததாக தோள் குலுக்கினாள்.
என்ன படம்? ஷுட்டிங் முடிஞ்சுடுச்சா எப்போ ரிலீஸ் என்ன இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க?
ப்ஸு… சம்பளமே மூணு கோடி ரூபா தரேன்னாங்க. பட் நா ஒத்துக்கல.
ஏங்க..?
பின்னே...? ஸ்கிரின் டெஸ்ட்டுக்கே ஆறு மாசம் ஆக்கிட்டாங்க. இந்நேரம் இந்த ஆறு மாசத்துல இங்க நா நாலு படம் முடிச்சிருப்பேன். ஒரு கோடி ரூபா எனக்கு நஷ்டம். இந்த லட்சணத்துல நா நடிக்க ஒத்துக்கிட்ருந்தா ஒரு சீன் எடுக்கவே ஒரு மாசம்னு ஒரு படத்துலயே எனக்கு வயசாய்டும். அதான் தமிழ்ப் படமே போதும்னு ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துட்டேன்
ரொம்ப கூலாக சொல்லி விட்டு மறு நாள் முதலே ஷுட்டிங்கில் கலந்து கொண்டாள்.
குழந்தையை மாயாதேவியின் தமக்கைதான் பெங்களூரில் வைத்து வளர்த்தாள். பெரியம்மாவைத்தான் அம்மா என்று அனிதா நினைத்திருந்தாள். ஏழு வயதில் அவளை ஊட்டி கான்வென்ட்டில் சேர்ப்பதற்காக பாட்டியை அம்மா பெங்களூருக்கு அனுப்பி வைத்தாள். பாட்டியோடு போக மறுத்து அழுதவளை பெரியம்மாதான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். ஏழாவது வகுப்பு முடிந்து விடுமுறை விட்ட போது தான் ஒரு முறை பாட்டி அவளை சென்னைக்கு அழைத்து வந்தாள். மாயாதேவி அவளை இழுத்தணைத்து முத்தமிட்ட போது அனிதா தயங்கி விலகினாள். இவங்க யாரு பாட்டி
என்றாள் பாட்டியிடம்.
இவதாண்டி உன் அம்மா. என்ன பார்க்கற நடிகை மாயாதேவிடி! நீ இவளோட பொண்ணே தான்...போ... போய் கட்டிக்க.
பாட்டி அவளைத் தள்ளி விட அனிதா வேறு பக்கமாய் ஒதுங்கிச் சென்றாள்.
எம் பொண்ணாம்மா இது…! மை காட்... எவ்ளோ அழகாய்டுச்சு. எங்கண்ணே பட்ரும் போல இருக்கே. இது மட்டும் இன்னும் நாலு வருஷம் கழிச்சு ஃபீல்டுக்கு வந்துச்சு…, அத்தினி பேரும் காலி தான். ஹேமமாலினி, ஸ்ரீதேவிக்கு அப்புறம் இவதான் இன்னும் இருபது வருஷத்துக்கு கனவுக்கன்னி என்ன சொல்ற...!
அதான் நீயே சொல்லிட்டயே. ஆமா இவ யாருன்னு கேட்டா என்ன சொல்லிட்ட உன் பொண்ணுன்னா..?
அக்கா பொண்ணுன்னுவேன். அடாப்ட் பண்ணிக்கிட்டேன்னு சொல்லிட்டா போச்சு.
அதுவும் சரி தான்
பாட்டி அனிதாவிடம் வந்து நெற்றி வழித்து சுடக்கிட்டாள். போ கண்ணு போய் ரெஸ்ட் எடு. தாகம் எடுத்தா ஆப்பிள் ஜூஸ் சாப்டு பசிச்சா சாப்பாடு, சப்பாத்தி எல்லாம் இருக்கு. சாப்ட்டுக்க என்ன. நான் அம்மாவோட ஷுட்டிங் போய்ட்டு வர ராத்திரி மணி ஒண்ணு ரெண்டாகும். நீ படுத்து தூங்கிக்க என்ன?
பாட்டியும் அம்மாவும் போனதும் அனிதா அந்த வீட்டை வினோதமாகப் பார்த்தாள். ஏனோ மிக அந்நியமாக இருந்தது அவளுக்கு அந்த வீடு. அம்மாவின் புகைப்பட ஆல்பங்கள் அருவறுக்க வைத்தது. கவர்ச்சி என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாய் சிலவற்றில் காட்சியளித்தாள். பார்க்கவே கண் கூசியது. மனம் வெட்கியது.
யார் யாரோ வீட்டுக்கு வந்தார்கள். அம்மாவை கண்ட இடத்திலும் தொட்டு அல்லது தட்டி பேசினார்கள். அம்மா அடிக்கடி ஆபாசமாய் சிரித்தாள். ஒரு சிலர் அவளை வெளியில் அழைத்துச் சென்றால் விடியலில் தான் திரும்பி வந்தாள்.
அனிதாவுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ஏனோ அங்கிருக்க மட்டும் பிடிக்கவில்லை. எப்போதடா ஹாஸ்டலுக்குத் திரும்புவோம் என்றிருந்தது. விடுமுறை ஒரு வழியாக முடிய, பாட்டி அவளை ஹாஸ்டலில் கொண்டு விட்டாள். அதன் பிறகு சரியாய் ஐந்து வருடம் கழித்து இப்போது தான் இங்கு வருகிறாள். இங்கு வரக் கூட முதலில் விரும்பவில்லை. பெரியம்மாவிடம் போய் விடத்தான் நினைத்தாள்.
பெரியம்மா அம்மாவுக்கு நேர் மாறானவள். பாட்டி தன் இரண்டு பெண்களையுமே திரையில் மின்ன வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கத்தான் எண்ணினாள். ஆனால் பெரியம்மா அதற்கு உடன்பட மறுத்து விட்டாள். அதோடு அவள் ஒருவரை காதலிக்கவும் ஆரம்பிக்க பாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, பாட்டிக்கே தெரியாமல்தான் பெரியம்மாவின் கல்யாணம் நடந்தது. முதலில் பாட்டியும் அம்மாவும் அவளிடம் பேசா விட்டாலும் அம்மா திரையுலகில் முன்னுக்கு வர வர கோபம் குறைந்து அவளோடு சகஜமாகி விட்டார்கள். பெங்களூரில் பெரியம்மாவும் வசதியாகத்தான் இருந்தாள். பெரியப்பா பல பெரிய கம்பெனிகளில் ஆடிட்டராக இருந்தார். பணம் கொட்டியது. ஆனால் குழந்தைகள் தான் பிறக்கவில்லை. எனவே தான் அனிதாவை பாட்டி அங்கே கொண்டு விட்ட போது முகம் மலர ஏற்றுக் கொண்டாள். அடிவயிற்றிலிருந்து அன்பைக் கொட்டி வளர்த்தாள். அந்த அன்பும் கொஞ்ச காலம் தான் கிடைத்தது. அதற்குள் ஹாஸ்டல் வாசம் பிரிக்க தாயன்பு என்பது இன்று வரை கிடைக்காத ஒன்றாக ஆகி விட்டது.
இரண்டு வருடத்திற்கு முன்பு மாயாதேவியைப் பற்றி ஒரு முன்னணி பத்திரிகை கிசுகிசு எழுதியது. மாயாதேவிக்கும் ஒரு கோடீஸ்வர தெலுங்கு தயாரிப்பாள நடிகருக்கும் காதல் என்று. சம்பந்தப்பட்ட இருவரும் மாற்றி மாற்றி ஒரு பக்கம் மறுப்பு அறிக்கை விட்டபடியே மறுபக்கம் ரகசியமாய பல இடங்களில் சந்தித்துக் கொண்டார்கள். இந்த கோடீஸ்வரனை விட்டு விட்டால் தான் வாழ்வில் செட்டிலாவது கடினம் என்பது மாயாதேவிக்குப் புரிந்தது. வயது வேறு முப்பத்தி ஐந்தாகி விட்டது. இன்னும் ஒரு வருடம் தாக்குப் பிடிக்கலாம். இப்போதே நிறைய வடக்கத்திய அரை நிர்வாண நாயகிகள் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று வந்து விட்டனர். அவர்களோடு போட்டி போட்டு நடிக்க இனி வயதில்லை. எனவே, கிடைத்திருக்கும் புளியங்கொம்பை கெட்டியாகப் பற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பது புரிய மாயாதேவி ஒரு முடிவுக்கு வந்தாள். தன் காதலன் வெங்கட்ராவோடு மனம் விட்டுப் பேசினாள். அனிதாவைப் பற்றி அவரிடம் சொல்லி அவள் புகைப்படங்களையும் வீடியோ கேசட்டுகளையும் காட்டினாள். அனிதாவின் அழகைக் கண்டதும் வெங்கட்ராவுக்கு மூச்சடைத்தது. பிரம்மிப்பில் வாய் பிளந்தார்.
இனி இவ தான் நம்ம முதலீடு வெங்கட் நாம கல்யாணம் பண்ணிக்கணும். இவளை நம்ம வளர்ப்பு மகளா அறிவிக்கணும். அதுக்கப்புறம் பாருங்க எம்பொண்ணு அகில உலகத்தையும் தன் அழகால கட்டிப் போடுவா. அவளால நம்ம பெருமை உயரும். நம்மளைத் தாண்டி அவளை யாரும் நெருங்கிட முடியாது. ஸோ மறுபடியும் நமக்கு வழக்கம் போல எங்க போனாலும் முதல் மரியாதையும், கூழைக் கும்பிடுகளும் தொடர்ந்து கிடைக்கும்.
வெங்கட்ராவ் அனிதாவின் அழகை மறுபடியும் ஒருமுறை வீடியோ டேப்பில் பார்த்து ரசித்தான்.
ஆமா இதெல்லாம் எப்பொ எடுத்த?
அவளுக்கே தெரியாமதான். ஸ்கூல் ஃபங்ஷன்லல்லாம் எங்கம்மா கலந்துக்க போவாங்கல்ல. அப்பொ எடுத்தது.
ஆனாலும் நீ ரொம்ப அழுத்தம்தான். இதுவரை சொல்லவேயில்லை!
என்ன செய்ய. நம்ம ஃபீல்டு அந்த மாதிரி எங்கடான்னு காத்துட்ருக்காங்க. நம்ம அந்தரங்கம், அவங்களுக்கு அல்வா மாதிரி. கண்ணகியா வெள்ளித் திரைலதான் வேஷம் கட்ட முடியுது. அதை விடுங்க. நம்ம கல்யாணத்தைப் பத்திச் சொல்லுங்க அறிக்கை விட்ருவோமா சேர்ந்து?
விட்ர வேண்டியதுதான். ஆனா... எம் பெண்டாட்டிய நினைச்சாதான் கொஞ்சம் பகீர்ங்குது. விவரம் தெரிஞ்ச பொண்ணுங்க வேற ரெண்டு இருக்கே! என்னடா அப்பன் இப்டி செய்துட்டானேன்னு நினைச்சா...?
நெனைச்சேன். உங்களுக்கெல்லாம் நேரங்காலம் தெரியாம மனசாட்சி பேச ஆரம்பிச்சுடுமே. நடிகைன்னா தாலி கட்டாமயே வாழணும் உங்களுக்கெல்லாம். எனக்கு வேணும், அந்த பம்பாய் சேட் தாலியும் கையுமா சுத்திச் சுத்தி வந்தான், கட்டிக்கிட்டா என்னைத் தான் கட்டிப்பேன்னு ஜூஹூ பீச் பக்கம் ரெண்டு கோடி ரூபாய்க்கு வீடெழுதி வெக்கறேன்னான். பேசாம அந்த ஆளுக்கே கழுத்தை நீட்டியிருக்கலாம். உன்னை நம்பினேன் பாரு. எனக்கு நல்லா வேணும்
இதானே உடனே சலிச்சுக்கறயே. சரி விடு நாளைக்கே ரிப்போர்ட்டர்ஸை கூப்பிட்டு நமக்கு கல்யாணமாய்டுச்சுன்னு சொல்லிடுவோம்.
ஆய்டுச்சுன்னா? இனிமே தானே ஆவணும்?
ரகசியமா ஏற்கனவே ஆய்டுச்சு. இனிமே பப்ளிக்கா இன்னொரு முறை ஆகும்னு சொல்லுவோம். இல்லாட்டி வேற பிரச்சனை வந்துடும்.
என்னவோ செய்ங்க. ஆமா இது சட்டப்படி தப்புன்னு யாராவது சொன்னா?
கூடிய சீக்கிரமே என் மனைவிய டைவர்ஸ் பண்ணிடுவேன்னு சொல்லிட வேண்டியது தான்.
யப்பா... விட்டுது கவலை.
மாயாதேவி அவனை இறுகத் தழுவிக் கொண்டு வெறி ஏற்றினாள்.
நம்ம பேர் எப்பவும் பேப்பர்ல வந்துட்டே இருக்கணும்மா. இனிமே சினிமால தாக்கு பிடிக்கறது கஷ்டம். எம்பொண்ணு நடிச்சா கூட மிஞ்சிப் போனா பத்து வருஷம். அதுக்கப்பறம் அவளுக்கும் வயசாய்டும். அப்புறமும் கூட நாம லைம்லைட்லயே இருக்கணும். அதுக்கென்ன செய்யலாம் சொல்லுங்களேன்.
அதுக்கு ஒரே வழி அரசியல்தான். தொண்ணுறு வயசானாலும் கலக்கலாம்.
வெங்கட்ராவ் கிண்டலாகத்தான் சொன்னார். ஆனால் அதைக் கேட்டதும் உண்மையிலேயே மாயாதேவியின் முகம் பளிச்சிட்டது. நானும் ரொம்ப நாளா அரசியலுக்குப் போனா என்னன்னு யோசிச்சிருக்கேன். சினிமால பீல்ட் அவுட் ஆறவங்களுக்கெல்லாம் நீங்க சொல்றாப்போல அதானே அடுத்த போக்கிடம்! புகழோட இருக்கும் போதே ஏதாவது பெரிய கட்சில சேர்ந்துடறதுதான் நல்லது. எந்தக் கட்சிக்கு இப்பொ ஜனங்ககிட்ட மவுசுன்னு சொல்லுங்க. அதுலயே சேர்ந்துடுவோம். பெரிய விழாவா எடுத்து கட்சித் தலைவர் கிட்ட ஆசி வாங்கிடுவோம். என்ன சொல்றீங்க?
யம்மா நா சும்மாதான்...
நாநிஜமாவே சொல்றேன். மொதல்ல கட்சில தனித்தனியா சேர்றோம். அந்த பரபரப்பு அடங்கறதுக்குள்ள கல்யாண நியூஸ் கொடுத்து பரபரப்பு கொடுக்கணும். அது அடங்கறதுக்குள்ள வளர்ப்பு மகள் பரபரப்பு, அவளோட சினிமா என்ட்ரி பரபரப்புன்னு தொடர்ந்து நம்ம நியூஸ் தான் ஹெட் லைன்ஸ்ல வரணும்.
மாயாதேவி சொல்ல அந்த ஆசையும் வேகமும் வெங்கட்ராவையும் பற்றிக் கொண்டது.
தனக்கு மிகநெருங்கியவர்களிடமெல்லாம் எந்தக் கட்சியில் சேரலாம் என்று ஆலோசனை கேட்டார். இறுதியில் ஒரு சக்தி வாய்ந்த ஒரு தேசிய கட்சியில் சேருவது என்று முடிவு செய்து அந்த கட்சித் தலைமைக்கு ரகசியமாக ஆள் அனுப்பினார். சில பல பேரங்கள் ரகசியமாக நடக்க கடைசியாக விழாவுக்கான நாள் குறிக்கப்பட்டது. கட்சியின் மாநில செயலாளர்களும் கடைசி மட்ட முக்கியஸ்தர்களும் மாயாதேவியின் வீட்டுக்கே வர, வீடு அரசியல் சாயம் பூசிக் கொண்டது. நிருபர்கள் செய்திக்காக அலைந்தார்கள். ஒரு வழியாக விர்விர்ரென்று கார்கள் புறப்பட்டு போக அனிதா இழுத்து மூச்சு விட்டாள். அம்மாவும் அந்த வெங்கட்ராவும் பேசியதெல்லாம் வேலைக்காரர்கள் கிசுகிசுவென்று பேசிக் கொண்டதிலிருந்து அனிதாவுக்குத் தெரிந்தது. சினிமாவிலா… அவளுமா...? நினைக்கும்போதே அடிவயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டு வந்தது. அபரிமிதமான அழகு இருந்தால் அவர்கள் சினிமாவில் நடித்தே ஆகவேண்டுமென்று கட்டாயமா என்ன? தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்றே அம்மாவின் அநியாயமான ஆசைகளுக்காக தான் ஏன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள வேண்டுமென்று எரிச்சல் ஏற்பட்டது. மிக அமைதியான ஒரு வாழ்க்கையைத்தான் அவள் மனம் விரும்பியது. இந்த வீட்டில் இருந்தால் என்றைக்கிருந்தாலும் தன்னையும் அந்த புதை சேற்றில் இழுக்கத்தான் பார்க்கும். இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சென்று இவர்கள் கண்காணாமல் போய் விட வேண்டும் என்று தோன்றியது. எப்படி என்று யோசித்தாள் அவள்.
2
அனிதாம்மா சாப்பாடு எடுத்து வெச்சு ரொம்ப நேரமாச்சு. வரீங்களாம்மா
வேலைக்காரி நாலாவது முறையாக வந்து அழைக்க, அனிதா வேண்டா வெறுப்பாக டைனிங் டேபிளுக்கு வந்தாள்.
கீழே ஹால் முழுக்க பொக்கேக்களும் பரிசுப் பொருட்களும் வாழ்த்து மடல்களுமாக நிரம்பியிருந்தது. மாயாதேவி கட்சியில் சேருவதை வரவேற்பதற்கான அடையாளங்கள். அன்றைய தினசரிகள் முழுக்க மாயாதேவியின் அரசியல் பிரவேசத்தை கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக்கியிருந்தன. தவிர மாயாதேவிக்கு வாழ்த்துச் சொல்லியும் வரவேற்றும்