Appusamyum Azhagi Pottiyum
()
About this ebook
Read more from Bakkiyam Ramasamy
Mamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsCome on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal Rating: 5 out of 5 stars5/5Sila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSirikkatha Manamum Sirikkum Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsVeerappan Kaattil Appusami! Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathu Arpangal! Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsSirithe Ahavendiya Chinna Chinna Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamikkul Kuppusami Rating: 0 out of 5 stars0 ratingsEnnakinaru! Rating: 0 out of 5 stars0 ratingsRajini Illathil Ragalai Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Seitha Kidney Thaanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Appusamyum Azhagi Pottiyum
Related ebooks
Human Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsCharacter Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5August Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsMaanavar Thalaivar Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsDabbaji Bansleyudan Appusami Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Ghost Rating: 0 out of 5 stars0 ratingsSollathey! Rating: 5 out of 5 stars5/5Aavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Thailand Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratingsPoi Mugangal Rating: 5 out of 5 stars5/5Kumbakonam Vakkil Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Appusamyum Azhagi Pottiyum
0 ratings0 reviews
Book preview
Appusamyum Azhagi Pottiyum - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
அப்புசாமியும் அழகிய போட்டியும்
Appusamiyum Azhahi Pottiyum
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1.அப்புசாமியும் அழகிப் போட்டியும்
2. ஆ காஸ் !
3.மாண்புமிகு அப்புசாமி ஒன்லி
4. ஹியூமன் பாம் அப்புசாமி
5. பியூட்டி பார்லரில் அப்புசாமி
6. கட்சி செய்த கலாட்டா
7. வளவளா வைரஸ்
8. ஜெய் கார்கில்!
9. அம்மா வா...ரம்!
1. அப்புசாமியும் அழகிப் போட்டியும்
அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும் தேவைப்பட்டன.
மாம்பலத்தின் கசகச காய்மார்க்கெட்டில் தக்காளி செல்வ ரங்கத்தின் ஹோல்ஸேல் தக்காளி மண்டியில் பேரம் செய்து கொண்டிருந்தார்.
நல்ல அழுகியிருக்கணும். கூடைக்கு அஞ்சு, பத்து அதிகம் கேளு, குடுத்துடறேன். ஆனால் தக்காளி சும்மா கப்பெடுக்கணும். ஆமாம்,
என்றார்.
எதுக்கு சாமி அவ்வளவு அழுகின தக்காளி? ஒட்டல் எதுனா வெச்சிருக்கியா?
என்று செல்வரங்கம் விசாரித்தான்.
அதையெல்லாம் கேட்காதே. உன்னை வடையைத் தின்னச் சொன்னால் தொளையை எண்ணுறியே...
என்று அவனைக் கடிந்து கொண்டார். நீயாகப் பொறுக்கித் தர்றியா? நானாகப் பொறுக்கி எடுக்கட்டுமா?
ஒரு வழியாக நல்ல அழுகல் தக்காளி, கூடை இருநூறு ரூபாய் வீதம் விலை பேசி ஆட்டோவில் வைத்துக்கொண்டார்.
இன்னா சார், இந்தக் கப்பு அடிக்குது,
என்று முகம் சுளித்தான் ஆட்டோக்காரன். மாட்டுக்கா சார்?
எல்லாம் மனுசனுங்களுக்குத்தான். உன்னை வடையைத் தின்னச் சொன்னால் துளையை எண்ணுறியே. அம்பது ரூபா அதிகம் தர்றேன்னு சொல்லியிருக்கேனில்லே? நேராக முட்டைக் கடைக்கு வண்டியைச் சீக்கிரம் வுடு இரண்டு கூடை அழுகல் முட்டை வாங்கணும். அப்புறம் பிளாட்பாரத்திலே பழைய செருப்பு தைக்கிறவனாப் பார்த்து நிறுத்து. பழைய செருப்பு ஒரு கூடை வாங்கியாகணும்.
நாற்றம் குடலைப் பிடுங்கினாலும், வந்த கிராக்கியை விட்டு விடக் கூடாது என்று ஆட்டோக்காரன் பல்லையும், மூக்கையும் கடித்துக் கொண்டு பொறுமையாக வண்டியை விட்டான்.
திடீரென்று ஒரு பயம், வந்து விட்டது. 'ஒரு கால் இந்தக் கிராக்கி பைத்தியம் கியித்தியமோ? பாதியிலே மீட்டருக்குப் பணம் குடுக்காம இறங்கி ஓடிடுமோ …'
வண்டியை டக்கென்று ஒரு ஸ்பீடு பிரேக்கரில் வேகமாக ஏற்றி ஒரு மாபெரும் சிறப்புக் குலுக்கல் செய்தான். பல சில அழுகல் தக்காளிகள் எழும்பிக் குதித்தன. அவற்றுடன் அப்புசாமியும் எகிறிக் குதித்தார் என்று சொல்லத் தேவையில்லை.
வண்டி பிரேக்வுடன் சார் இறங்கிக்குங்க.
என்னப்பா இது? டகால்னு இப்படிச் சொன்னால் எப்படி?
நீங்க துட்டை முதல்லே அட்வான்ஸாக் குடுத்துடுங்க. ரிப்பேர் பண்ணிப் பார்க்கறேன். வண்டியைத் துடைச்சுக் கிளின் பண்ணினாக்கூட கப்பு நாத்தம் போக ஒரு வாரம் ஆகும்.
அப்புசாமி புரிந்துகொண்டார். இன்னா நைனா… கலாச்சாரக் காவலர் நான் என்கிட்டே இப்படி 'கப்' அண்ட் ரைடாப் பேசிறியே. துட்டா பெரிசு? மனுசங்கதான் முக்கியம். நம்ம நாட்டோட பண்பு, கலாச்சாரம், கிழவிங்க இவங்கதான் முக்கியம்.
சரி. சரி… துட்டை வெட்டுங்க மொதல்லே. இல்லாட்டி வண்டி நவுராது.
அப்புசாமி இரண்டு நூறு ரூபாய் நோட்டை அலட்சியமாக அவனிடம் நீட்டினார். ஏம்பா, என்னை அன்னக்காவடின்னு நினைச்சிட்டியா? சரி… சரி… முட்டைக் கடைக்கு வுடு, ரெண்டு கூடை அழுகல் முட்டை உடனடியாக வேணும்.
ஆட்டோக்காரன் ரூபாயை வாங்கிப் போட்டுக் கொண்டதும் அவரது பரம தாசனாக ஆகிவிட்டான்.
செய் சார். தப்பா நெனச்சிக்காதேபா… வண்டியிலே நல்லவனும் ஏறுவான். மிஸ்டீக்கான கசுமாலங்களும் ஏறும். ஆட்டோக்காரன் பொல்லாதவன்னு பப்ளிக்கு நெனக்கறாங்களே கண்டி, ஏறுகிறவன்லே எத்தினி பேரு சாவு கிராக்கி, ரெளடின்னு யார் ஆக்ஷன் எடுக்கறானுங்க. சொம்மா ஒரு வார்த்தைக்கு சொல்றேன்.
சரி… சரி… நீ ரொம்ப நல்லவன். வண்டியை வுடுப்பா முட்டை கடைக்கு.
அப்புசாமியைத் தேடித் தடாலென்று ஒரு பட்டம் வந்தது. வீடு தேடி வந்த மகாலட்சுமியைக் காலால் உதைப்பதாவது என்று எண்ணி ஒப்புக்கொண்டார்.
சில தினங்கள் முன்பு அவரிடம் சஞ்சீவி என்ற கிழவர் வந்து கண்ணீர் விட்டுக் கதறி விட்டார். அண்ணா, உங்களைச் சொந்த அண்ணா மாதிரியே நினைச்சுச் சொல்றேன். நம்ம தமிழ்ப் பண்பாட்டை நீங்கதான் காப்பாத்தணும். நம்ம தமிழ்நாட்டிலே இப்படி ஒரு அக்கிரமமான விழா நடக்கலாமா? நம்ம வீட்டுக் கிழவிங்களை அடக்க ஒடுக்கமா வீட்டோடு இரு என்று நாம சொல்லலை. அவுங்களுக்கு நல்லாச் சுதந்திரம் குடுத்துத்தான் இருக்கோம். நகைக் கடையிலே, புடவைக் கடையிலே, ஏஸி ஓட்டலிலே, பஸ்ஸிலே, ரயிலிலே, கடையிலே, ஏஸி ஓட்டலிலே, பஸ்ஸிலே, ரயிலிலே, விழாக்களிலே பாருங்கள். எல்லா இடத்திலும் கிழவிங்கதான் மினுக்கிகிட்டுத் திரியறாங்க. உங்க சம்சாரம் நடத்தற பாட்டிகள் முன்னேற்றக் கழகத்திலே பாருங்க. கில்லாடிக் கிழவிங்க கூட்டம் அட்டகாசம் பண்ணுது.
அப்புசாமிக்குக் கேட்கக் கேட்கக் காதிலே ஜிலேபி நீங்கிய ஜீரா பாய்வது போலிருந்தது.
சபாஷ் பாண்டியா!
என்று அந்தக் கிழவரைத் தட்டிக் கொடுத்தார். சரியான போடு போடறீங்க… கிழவிங்க கொட்டம் அடங்கணும்.
எப்போ எப்போவெல்லாம் அதர்மம் மிகுந்து தருமம் நலிவடைகிறதோ அப்போ அப்போவெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையிலே பகவான் சொன்னாரில்லையா? அந்த மாதிரி கிழவிங்க தொல்லை எப்போ எப்போவெல்லாம் அதிகமாகப் போகுதோ அப்போ அப்போவெல்லாம் அவுங்களை அடக்க உங்க மாதிரி ஒருத்தர் பொறக்கறாரு, அவதரிக்கிறார்னும் சொல்லலாம்.
அப்புசாமிக்கு உச்சி பல செல்ஷியஸ் உறைந்து விட்டது. நான் ஒரு அவதார புருஷன் என்கிறீங்களா?
ஆமாம். சந்தேகமென்ன?
நான் ஏதோ சீதேக்கிழவியோட புருஷன்னு இத்தினி நாளா அஸால்ட்டா இருந்துட்டேன்,
வருந்தினார் அப்புசாமி.
ஆஞ்சுநேயருடைய பலம் அவருக்கே தெரியாது.
நான் ஆஞ்சநேயர் என்கிறீர். சந்தோஷம். இப்போ நான் எந்த சஞ்சீவி மலையைக் கொண்டு வரணும்? உம்ம பேர்கூட சஞ்சீவிதான். உம்மைத் தூக்கிக் கொண்டு கடலைத் தாண்டனுமா?
கிழவர் சஞ்சீவி விளக்கமாகச் சொன்னதன் சுருக்கமாவது:
சீதாப்பாட்டி ஒரு அழகிப்போட்டி நடத்தப் போகிறாள். அறுபது வயது தாண்டிய கிழவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
அழகுக் கிழவிகளுக்கான 'கிளவியோபாட்டிரா போட்டி' என்று அதற்குப் பெயர். மேற்படி போட்டியில் எல்லாக் கிழவிகளும் கலந்து கொள்ளலாம். சென்னை ராணி சீதை ஆச்சி ஹாலில் விரைவில் நடைபெறப் போகும் அந்த அழகுக் கிழவிப் போட்டியில் சஞ்சீவியின் மனைவியும் கலந்து கொள்ளத் துடிக்கிறாள். மேற்படி போட்டி நடப்பது தமிழகக் கலாச்சாரத்துக்கு விரோதமானது. அதை எப்படியாவது அப்புசாமி நிறுத்திவிட வேண்டும்.
உங்க சம்சாரம் ஒரு புரட்சிப் பாட்டியாக இருக்கலாம். ஆனால் ஊரிலுள்ள எல்லாக் கிழவிகளையும் தப்பாக ஊக்குவிக்கக் கூடாது. சார், உங்ககிட்டே சொல்றதுக்கென்ன?
என்று சஞ்சீவி குரலைத் தாழ்த்திக் கொண்டார். "என் சம்சாரம் நிஜமாகவே ரொம்ப அழகா இருப்பாள். வயசு அறுபத்திரண்டிலும் செக்கச் செவேல்னு நெகு நெகுன்னு சந்தன சோப்பாட்டம் இருப்பா. ஆனால் நான் அவளை 'பியர்ஸ்! பியர்ஸ்'னுதான் செல்லமாக் கூப்பிடுவேன். இந்தப் பக்கமிருந்து பார்த்தா அந்தப் பக்கம் தெரியும். ஸித்ரூ என்பாங்களே அந்த ரகம்.'
அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டார்.
யோவ்! என் சம்சாரம் சீதே கூடத்தான் பேரழகி. நீர் என்னவோ உங்க சம்சாரம்தான் ஒரே அழகிங்கற மாதிரி ஜம்பம் அடிச்சிக்கிறீங்களே? இப்படியெல்லாம் கர்வப்படறதாலேதான் அழகிப் போட்டிங்க வைக்கறாங்க. அப்புறம் குய்யோ முறையோன்னு கத்தறது. என் சம்சாரத்தைவிட உம்ம சம்சாரம் அழகா. தங்க பெல்ட்டு மாதிரி இடுப்பு என் சீதேக்கு இஞ்சி இடுப்பழகின்னு ஒரு பழைய பாட்டு வருமே அதைத்தான் நான் பாடறது. ஆனால் டபுக்குனு இழுத்துப் போர்த்துக் கொண்டு விடுவாள்.
'ரொம்ப மன்னிக்கணும். நான் அதிகப் பிரசங்கித் தனமாகப் பேசிட்டேன். என் சம்சாரம் ஒரு சுமாரான அழகின்னு வெச்சுக்குங்க."
அப்புசாமி கோபமாக, நான் கல்யாணமானவன். யார் சம்சாரத்தையும் நான் வெச்சுக்கத் தேவையில்லை…
என்றார்.
சார், மன்னிக்கணும். இந்த அழகிப்போட்டி நடக்கக் கூடாது. என் சம்சாரத்து அழகைப் பிறத்தியார் பார்க்கறதை நான் விரும்பலை. அவள் அழகு இத்தனை வயசிலும் ஒரு போதை ஊட்டற அழகு. சுபாவத்திலேயே கொஞ்சம் சுற்றுகிற சுபாவம்.
அப்புசாமி கவலையுடன், கற்பு, கிற்பு எல்லாம் கியாரண்டி தானே?
என்றார்.
சே! சே! நெருப்பு சார்… ஆனால் பாருங்கோ…
ஆனால் பார்க்காதீங்கோன்னு சொல்லுங்கோ.
ஹி ஹி சரியாச் சொன்னீங்க. அம்பதிலும் ஆசை வரும்னு சிவாஜி கூடப் பாடியிருக்கார்.
புரிஞ்சது! புரிஞ்சது!
என்று அப்புசாமி தலையாட்டினார். உம்ம சம்சாரம் போட்டியிலே கலந்து கொண்டால் அவளைப் பார்த்து எந்தக் கிழவனாவது கொத்திக் கொண்டு போயிடுவானோன்னு பயப்படறீங்க.
நீங்க மகா புத்திசாலி சார். நீங்கதான் போட்டி நடக்காதபடி செய்யணும். இந்த சூட்கேஸிலே ஐம்பதாயிரம் ரூபா இருக்கு எப்படிச் செலவு செய்வீங்களோ… ஏதாவது பண்ணி இந்தப் போட்டியை உங்க மனைவி நடத்தாமல் பண்ணிடணும்.
அப்புசாமி உடனடியாகச் செயலில் இறங்கினார்.
'கலாச்சாரக் காவலர்' என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பலவீனமான பத்திரிகை நிருபர்களை