Vetrikku Sila Puthagangal Part 3
By N. Chokkan
4/5
()
About this ebook
Read more from N. Chokkan
Salman Rushdie Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsMossad Rating: 3 out of 5 stars3/5Veerappan: Vazhvum Vathamum Rating: 0 out of 5 stars0 ratingsA. R. Rahman Rating: 5 out of 5 stars5/5Bookmarks Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsNalla Tamizh Ezhuthuvom Rating: 0 out of 5 stars0 ratingsNam(n)bargal Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKathai Sollum Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsMaadevan Malarthogai Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMobile Guide Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Kattam Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsPlus One Rating: 0 out of 5 stars0 ratingsBhoologam Ananthathin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsVetri Ettu Dhikkum! Rating: 0 out of 5 stars0 ratingsMen Kalaikal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vetrikku Sila Puthagangal Part 3
Related ebooks
Indru Muthal Vetri Rating: 0 out of 5 stars0 ratingsYaar Indha Sundaravalli? Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsNambikkai Vetri Perum Rating: 0 out of 5 stars0 ratingsPanakkaararaaga 10 Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsஎன் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Yosikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsInnum Enna Thozha Rating: 1 out of 5 stars1/5Neengal Innum Yen Kodeesvarar Agavillai? Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva? Rating: 0 out of 5 stars0 ratingsEmotional Intelligence – Idliyaga Irungal Rating: 4 out of 5 stars4/5மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5Vetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Uyariya Nokkame Ungalathu Valimai Rating: 0 out of 5 stars0 ratingsThervilum Velvom..! Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Ponnagum Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5Ennangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Prachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsSollathathaiyum Sei Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - January 2024 Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vetrikku Sila Puthagangal Part 3
2 ratings0 reviews
Book preview
Vetrikku Sila Puthagangal Part 3 - N. Chokkan
http://www.pustaka.co.in
வெற்றிக்குச் சில புத்தகங்கள் பாகம் 3
Vetrikku Sila Puthagangal Part 3
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
உள்ளே ...
1. கட்டுகளுக்குள்ளே ...
2. முதுகில் சில குரங்குகள்
3. ஐடியா!
4. வாழ்க்கை ஒரு சர்க்கஸ்
5. விற்பனை செய் மனமே
6. காந்தம்!
7. குரங்கு கையில் பிஸினஸ்
8. குடும்ப சூத்திரங்கள்
9. கடைசிப் பேச்சு
10. நாலு வகைக் குழந்தைகள்
11. சுமோ
12. இந்தியாவின் எதிர்காலம்?
13. (சிந்திக்கப்) பழகலாம் வாங்க!
14. பத்தாயிரம் மணி நேரம்
15. ஸாரி!
16. பிங்க் யானைகளைத் துரத்தியடியுங்கள்
17. இயற்கை சொல்லும் பாடங்கள்
18. ஆறு கட்டளைகள்
19. மேடுகளும் பள்ளங்களும்
20. ஏழு வெற்றிப் பழக்கங்கள்
21. வேல் டன்!
22. பக்கெட்களை நிரப்புவோமா?
23. குழந்தை வாத்தியார்கள்
24. மீன் மார்க்கெட் தத்துவங்கள்
25. ஏழு படிகளில் ஏறலாம்
26. 'எக்ஸ்ட்ரா லார்ஜ்' சிந்தனைகள்!
27. மனம் எனும் பச்சோந்தி
28. 'பச்சக்'
29. எதிர்நீச்சல்
30. ஒபாமாவிடம் படிக்கலாம்!
31. என்ன வரம் வேண்டும்?
32. விலகத் தெரியவேணும்!
வெற்றிக்குச் சில புத்தகங்கள்
பாகம் 3
என். சொக்கன்
சமர்ப்பணம்
நண்பர் ரஞ்சன் அவர்களுக்கு ...
1. கட்டுகளுக்குள்ளே ...
திடீரென்று யாராவது நம் கையைக் காலைக் கட்டி ஒரு ரூமுக்குள் தூக்கிப் போட்டுவிட்டால் என்ன செய்வோம்?
சிறிது நேரம் யாரையேனும் உதவிக்கு அழைத்துக் கத்துவோம். அந்தக் கூக்குரலுக்கு பதில் எதுவும் கிடைக்காவிட்டால், அப்போதைக்கு மனத்தில் தோன்றுகிற ஒரு கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்வோம். அதுவும் பலிக்காதபோது, நமக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்று விதியை நொந்துகொண்டு உதவியை எதிர்பார்த்துப் பரிதாபமாகக் காத்திருப்போம்.
இந்த மூன்று வழிகளும், எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இவற்றைத்தவிர, மேற்படி பிரச்னையிலிருந்து விடுபட வேறு ஏதேனும் வழிகள் உண்டா?
அமெரிக்காவில் ஹாரி ஹெளடினி (Harry Houdini) என்று ஒருவர் இருந்தார். சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், உலகம்முழுவதையும் ஒரு கலக்குக் கலக்கியவர். நம்முடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா காலத்தில், அவருடைய பெயரைக் கேள்விப்படாதவர்களே கிடையாது.
ஹெளடினியின் விசேஷத் திறமை கட்டுகளில் இருந்து விடுபடுவது!
சாதாரணத் தாம்புக் கயிறில் தொடங்கி, இரும்புச் சங்கிலிகள், கை விலங்குகள் என்று எவையும் ஹெளடினிக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது. எப்படியாவது அவற்றைக் கழற்றி எறிந்துவிட்டு வெளியேறிவிடுவார்.
அதுமட்டுமில்லை. அவரை ஓர் அறைக்குள் அடைத்துவைத்து, சுற்றிலும் எத்தனை பிரமாதமான காவல் போட்டாலும் பிரச்னையில்லை. அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத் தூவி, யாரும் அறியாதபடி தப்பித்து வெளியே வந்துவிடுவார்.
ஆரம்ப காலத்தில், தொழில்முறை மந்திரக் கலைஞராக மேடைகளில் 'வித்தை' காட்டிக்கொண்டிருந்தவர் ஹெளடினி. அதன்பிறகுதான், எப்படிப்பட்ட கட்டுகளில் இருந்தும் விடுபடுகிற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, அவருடைய நிகழ்ச்சிகளின் வண்ணமே மாறிவிட்டது. மேடையில் ஹெளடினி நின்றுகொண்டிருப்பார். அவரை இறுக்கமான கயிறு அல்லது சங்கிலியால் அசையக்கூட முடியாதபடி கட்டுவார்கள், அதற்குமேல் பல பூட்டுகளைப் போட்டுப் பத்திரப்படுத்துவார்கள்.
இவையெல்லாம், அடுத்த சில நிமிடங்களுக்குதான். மந்திரம் போட்டதுபோல், அத்தனை கட்டுகளில் இருந்தும் ஹெளடினி விடுபட்டு வெளியே வந்துவிடுவார்.
ஹெளடினியின் இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பிளந்த வாய் மூடாமல் பார்த்து ரசித்தன. விதவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள், புதுவகைப் பூட்டுகள் என்று என்னென்னவோ முயன்று பார்த்தார்கள், எதனாலும் ஹெளடினியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் அடுத்த கட்டமாக, இன்னொரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார் ஹெளடினி. தண்ணீர் நிரம்பிய பால் கேன் ஒன்றுக்குள், அவரைப் போட்டு அடைப்பார்கள். அதிலிருந்து ஹெளடினி தப்பித்து வெளியே வரவேண்டும்.
மிகச் சிரமமான காரியம் இது. தண்ணீருக்குள் மூச்சை அடக்கியபடி வேலை செய்யவேண்டும். இல்லாவிட்டால், அப்படியே மூழ்கி இறந்துபோகவேண்டியதுதான்.
சவால் பிரியரான ஹெளடினி, இதையும் பிரமாதமாகச் சமாளித்தார். பார்வையாளர்கள் மூச்சு விட மறந்து பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில், எப்படியோ அந்தப் பால் கேனிலிருந்தும் பிழைத்து எழுந்துவிடுவார் அவர்.
ஆபத்து அதிகமுள்ள இந்த 'த்ரில்' தந்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்னொரு மிகக் கடினமான சவாலை ஏற்றுக்கொண்டார் ஹெளடினி. இதற்கு அவர் வைத்த செல்லப் பெயர் USD & UpSide Down.
இந்த நிகழ்ச்சியின்போது, ஹெளடினியின் உடல்முழுவதும் சங்கிலிகளால் பிணைக்கப்படும். தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள், அவரைத் தலைகீழாக அப்படியே இறக்குவார்கள்.
இப்போது ஹெளடினியால் நான்கு திசைகளிலும் முன்னே, பின்னே நகரமுடியாது. தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருப்பதால், மூச்சு விடுவது இன்னும் சிரமம்.
ஆனால், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையால்கூட, ஹெளடினியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்தக் கொலைகாரப் பெட்டியில் இருந்தும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் விடுபட்டு வெளியே வந்துவிடுவார் அவர் அதுவும் ஒரு முறை, இரு முறை அல்ல, பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இந்தத் தந்திரத்தைச் செய்து காட்டிக்கொண்டிருந்தார்.
ஹாரி ஹெளடினியின் மந்திர தந்திரங்கள் எல்லாம் நிஜமா, அல்லது ஏமாற்று வேலைகளா என்கிற சர்ச்சை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ஹெளடினியிடமிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு பயனடையமுடியும் என்று சொல்கிறது ஒரு சுவாரஸ்யமான புத்தகம். (The Houdini Solution ஆசிரியர்: Ernie Schenck வெளியீடு: McGraw&Hill)
ஹெளடினியை நாம் வெறும் பொழுதுபோக்குக் கலைஞராகமட்டும் பார்க்கவேண்டியதில்லை என்கிறது இந்தப் புத்தகம். தனிப்பட்டமுறையிலும், அலுவலகம் / நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளின்போதும் அவருடைய சில நுணுக்கங்கள், அணுகுமுறைகளைப் புரிந்துகொண்டு பின்பற்றினால், மிகப் பெரிய வெற்றிகளைக் குவிக்கமுடியும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
நிஜ வாழ்க்கையில், நம்மை யாரும் கையைக் காலைக் கட்டிக் கடலினுள் தூக்கிப் போடப்போவது இல்லை. ஆனால், கிட்டத்தட்ட இதேமாதிரியான வேறு சில பிரச்னைகளை நாம் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக, நம்முடைய தொழிற்சாலைக்குத் தொடர்ந்து ஆர்டர்களை வழங்கி ஆதரித்துக்கொண்டிருந்த ஒரு பெரிய வாடிக்கையாளர், திடீரென்று ஏனோ நம்மீது கோபித்துக்கொள்கிறார். அவருடைய ஆதரவு இல்லாமல், நம் நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்கவேண்டிய சூழ்நிலை.
ஒரு பால் கேனில் அல்லது கண்ணாடிப் பெட்டியில் அடைத்து வைக்கப்படும் ஹெளடினிக்கு, உயிர் பிழைக்கவேண்டிய கட்டாயம். இங்கேயும் அதேபோல், நமக்கு நம்முடைய நிறுவனத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டாயம்.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஹெளடினி என்ன செய்கிறார்?
முதலாவதாக, தன்னைப் பிணைத்திருக்கும் கயிறுகள், விலங்குகள், கட்டுகள், பூட்டுகள், சுற்றிச் சூழ்ந்து தன்னை மூழ்கடிக்கப் பார்க்கும் தண்ணீர் என்று அனைத்தையும், அவர் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். 'ஐயோ, என்னை இப்படிக் கட்டிவைத்துவிட்டார்களே, மூழ்கடிக்கிறார்களே' என்று புலம்புவதில்லை, பதற்றத்தில் நேரத்தை வீணடிப்பதில்லை.
மாறாக, தன்னுடைய சிந்தனை, நேரம், உழைப்பு என அனைத்தையும், அந்தக் கட்டுகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதன்மீது திருப்புகிறார் ஹெளடினி. இருக்கிற சொற்ப நேரத்தில், அத்தனை தடைகள், தடங்கல்களுக்கு மத்தியில் பிரச்னையைச் சமாளித்து விடுபடவேண்டுமானால், அதற்கு இதுதான் ஒரே வழி.
நாமும் இதுபோல், நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்னைகள், கோளாறுகள், தவறுகள், குறைபாடுகள் போன்றவற்றை நினைத்துப் புலம்பவேண்டியதில்லை. இதுமாதிரியான பிரச்னைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும், குறை இல்லாத வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறது?
ஆகவே, முதலில் நாம் நம்முடைய பிரச்னையை, அதன் பின்விளைவுகளை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்தவேண்டும். அதற்கு பதிலாக, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லித்தருகிறது இந்த ஹெளடினி புத்தகம்.
ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் அதோடு மல்லுக்கட்டுவதைவிட, அதனை மனமார ஏற்றுக்கொண்டுவிட்டால், புத்தி தெளிவாகிவிடும். அதன்பிறகு, அந்தப் பிரச்னையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசிப்பதும் எளிது, அதற்கான தீர்வும் சுலபத்தில் தட்டுப்படும்.
நாம் அதிபுத்திசாலிகளாக இருக்கலாம், சிறந்த முதலாளி, அல்லது மேலாளராகப் பெயர் வாங்கியிருக்கலாம், நம்முடைய குடும்பத்தினர் நம்மைப் பாராட்டிக் கொண்டாடலாம். ஆனால் இவை அனைத்தும், ஒரு பதற்றமான சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்து மாறிவிடக்கூடும்.
பெரும்பாலானோருக்கு, இதுபோன்ற நிலைமையில் கோர்வையாகச் சிந்திக்கக்கூட முடியாது. அந்த நேரத்தில்தான், ஹெளடினி நம் உதவிக்கு வருகிறார்.
இதன்மூலம், சாதாரண நேரங்களில் நம் கண்ணுக்கு, புத்திக்குத் தென்படாத கோணங்களைக்கூட, இப்போது தெளிவாகச் சிந்திக்கமுடிகிறது. வழக்கத்திலிருந்து மாறுபட்ட, புதுமையான (Creative) தீர்வுகள் கிடைக்கின்றன. சரித்திரத்திலிருந்து ஏராளமான சுவாரஸ்ய உதாரணங்களுடன் இதற்கான வழிமுறைகளை விளக்கிச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
'ஹெளடினி தீர்வு' (Houdini Solution) என்று வர்ணிக்கப்படும் இந்தச் செயல்முறை மிகச் சுலபமானது, நேரடியானது கட்டுகளுக்குள் சிக்கியிருக்கும்போது, அந்தப் பிரச்னையை நினைத்து சக்தியை வீணாக்காதீர்கள், அதற்கான தீர்வைமட்டும் தீவிரமாக யோசியுங்கள், போதும்!
இப்படி இன்னும் என்னவெல்லாம் சொல்கிறார் ஹெளடினி? ஒரு சாம்பிளுக்கு புத்தகத்திலிருந்து சில துளிகள்:
மிகப் பெரிய வெற்றியாளர்களின் ஒரு முக்கியமான ரகசியம், அவர்கள் தடைகளைப் பார்த்து பயந்து ஓடுவதில்லை. அவற்றை ஏற்று அரவணைத்துக்கொண்டு முன்னேறுகிறார்கள்
புதுமையாகச் சிந்திக்கவேண்டும் என்றாலே, பலர் பயப்படுகிறார்கள். காரணம், புதிதாக ஒன்றைச் செய்வது என்றால், பழையது ஒன்றைக் கைவிட்டாகவேண்டும். இது யாருக்கும் பிடிப்பதில்லை
'இது இப்படிதான்' என்று பழைய சிந்தனைகள், முன்முடிவுகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், நம்மால் எப்போதும் புதிதாகச் சிந்திக்கவேமுடியாது
'சின்ன விஷயம்' என்று எந்த யோசனையையும் நிராகரிக்காதீர்கள். காலப்போக்கில், 'பெரிய' யோசனைகளைவிட, இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள்தான், உங்களுக்கு அதிக அளவு லாபத்தைக் கொண்டுவரும்
எல்லாம் இப்படியே, இதேபோல் காலாகாலத்துக்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்று நினைப்பதுதான், உலகின் மிகப் பெரிய அசட்டுத்தனம், முன்னேற்றத்தின் எதிரி. அதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை
'கெடு (Deadline) வைத்துக்கொண்டு என்னால் எதுவும் செய்யமுடியாது' என்று சொல்லாதீர்கள், கடுமையான நேர நெருக்கடிக்கு நடுவிலும் நல்ல யோசனைகள், தீர்வுகள் வரமுடியும், வரவேண்டும்
2. முதுகில் சில குரங்குகள்
மிஸ்டர் கோயிஞ்சாமி, தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடுகிறார். அலாரம் அடித்தாலும் அடிக்காவிட்டாலும், அந்த நேரத்தில் அவருக்கு விழிப்பு வந்துவிடும், வந்தாகவேண்டும். வேறு வழியே இல்லை.
பல் தேய்த்துவிட்டு, அவரே ஒரு சுமாரான காபி போட்டுக் குடிப்பார். அந்த கசப்புச் சுவை நாக்கில் தங்கியிருக்கும்போதே, அலுவலக ஃபைல்களை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். அடுத்த சில மணி நேரங்களுக்கு, அவருக்கு நிமிர்ந்து பார்க்கக்கூட நேரம் இருக்காது.
ஒன்பது மணிக்குக் குளித்து, காலை உணவை விழுங்கிவிட்டு, வேலை முடிந்த, முடியாத ஃபைல்களைத் தூக்கிக்கொண்டு அலுவலகத்துக்கு ஓடுவார். அங்கே இன்னும் வேலைகள் அவருக்காகக் காத்திருக்கும்.
நாள்முழுவதும் இப்படி நேற்றைய, இன்றைய, நாளைய வேலைகளோடு போராடியபிறகு, சாயந்திரமாகிவிடும். மிச்சமிருக்கும் ஃபைல்களைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டுவார். அதன்பிறகு, ராத்திரி பதினொரு மணிவரை அலுவலக வேலைகளைக் கவனித்தால்தான் அவருக்குத் தூக்கமே வரும்.
இந்தக் கதை ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, தினம் தினம், வாராவாரம், வருடாவருடம். மிஸ்டர். கோயிஞ்சாமி பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை தொடரும். இதிலிருந்து அவருக்கு விடுதலையே கிடையாது.
கோயிஞ்சாமி இதை நினைத்துப் புலம்பாத நாள் இல்லை. மேனேஜர், முதலாளி என்று எல்லா மட்டங்களிலும் பேசிப் பார்த்துவிட்டார். யார் என்ன சொன்னாலும், செய்தாலும், கடைசியில் அலுவலகத்தில் மிச்சமிருக்கும் வேலைகள் எல்லாம், அவர் தலையில்தான் வந்து விழுகின்றன.
ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அதே அலுவலகத்தில், பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருக்கும் கந்தசாமிக்கோ, முனுசாமிக்கோ இத்தனை வேலைப் பளு இல்லை. அவர்கள் பத்தரை மணிக்குச் சாவகாசமாக வருகிறார்கள், தினமும் ஏழெட்டு காபி ப்ரேக், டீ ப்ரேக், சிகரெட் ப்ரேக், வெத்தலைப் பாக்கு ப்ரேக்