Kaadhal Rattinam
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsUppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsAdhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsPaartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5
Related to Kaadhal Rattinam
Related ebooks
Manakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Vaanathaipola Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsPirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Uyir Theeyin Sothi Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Kallil Vaditha Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsValarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsChennaiyil Oru Mazhainaal! Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Vilagatha Nilai Vendum... Rating: 0 out of 5 stars0 ratingsEnnulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Vaanavil Rating: 4 out of 5 stars4/5Anbu Pookkalile Kuzhaitha Aasai Karangalo! Rating: 3 out of 5 stars3/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsMaya Malarvanam Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Osai Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Sirungaara Naatham Rating: 0 out of 5 stars0 ratingsPerazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Karpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Kuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal Rattinam
0 ratings0 reviews
Book preview
Kaadhal Rattinam - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
காதல் ராட்டினம்
Kaadhal Rattinam
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jeyathilagar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
காதல் ராட்டினம்
காஞ்சனா ஜெயதிலகர்
1
அம்மலைப் பாதையில் பஸ் மேலேற ஏற, சாவித்ரியின் உற்சாகமும் கூடியது. தேனி, கம்பம் எனும் பசுமையில் தோய்ந்த ஊர்களைத் தாண்டி சேதுமலைப் பகுதியை நெருங்கியதுமே அவளுள் அந்த உற்சாகம் ஊற்றெடுத்திருந்தது.
இது அவள் பிறந்து வளர்ந்த ஊர். சரியாய் சொல்ல வேண்டுமெனில் சிற்றுார்.
கடையேழு வள்ளல்களில் ஒருவர் ஆட்சி செய்ததாய் சொல்லப்பட்ட மலைநாடு.
பெரியதும் சின்னதுமான தோப்புகளோடு, ஆரம்பப் பள்ளி, ஊரில் இல்லாமல் இருக்கக் கூடாதென்பதற்காய் ஒரு
கோயில், இருப்பவர்களுக்கு வாங்க கொள்ள இரு கடைகள், சற்று வசதியான சில வீடுகள் என்பதை மீறி மிக அழகான மலை ஊர் அது.
கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்திலிருந்ததால் ஓடி, சாடினால் தவிர வியர்க்காது. இளநீராய் இனிக்கும் நீரும் குளிர் காற்றுமே என்று ஊறி வளர்ந்ததால், அங்குள்ளவர்களுக்கு வனப்பான வாளிப்பு. பழ மரங்கள், ஓடை, தூய காற்று, நீர் என்று அங்கு அவள் வளர்ந்த நாட்கள் அற்புதமானவை. ஆனால் அத்தனைக்கும் ஊடாய் சாவித்ரியை ஒரு உணர்வு ஆட்டி வைத்திருந்தது. அது பொறாமை!
அந்தப் பொறாமைக்குக் காரணம் வித்யாவதி!
இவர்களிருந்த சிற்றுாருக்கு மட்டுமல்ல, சுற்று வட்டாரத்திலேயே பேரழகி அவள். சாவித்ரிக்கு இரண்டு வயது இளையவள் என்றாலும் இரு மடங்கான அழகி!
வடித்த சந்தன சிலை போன்றவளின் நிறமும், திருத்தமும் ஒயிலும் பார்ப்பவர்களை சுருட்டிக் கொள்ளும். அதில் ஊரின் மற்ற பெண்கள் அடிப்பட்டுப் போனார்கள்.
சேதுமலைக்கிருந்த ஒரே டெய்லர்கூட வித்யாவதிக்குத்தான் உடனே, அளவு மாறாமல் தைத்துத் தருவார்-
'அவளுக்கு அரைச்சுப் பூசினாப்பல தச்சிட்டு, எங்களுக்கு லொட லொடன்னு ரவிக்கையத் தந்தா என்ன அர்த்தம் டெய்லரு?’
'வித்யா பொண்ணுக்குத்தான் ரவிக்கைக்கேத்த உடம்பு, சோளக் கொல்லப் பொம்மைகளுக்கு உத்தேசமாதாணே சட்டைய மாட்ட முடியும்?" என்று இவர்களது ஆங்காரக் கேள்வியை அலட்சியப் படுத்துவார் தையல்காரர்.
பூக்காரி கூட நெருங்கத் தொடுத்த சரத்தை வித்யாவதிக்குத்தான் கொண்டு போய் தருவாள்.
பள்ளிக்குப் போகும் பஸ்ஸில் அவளுக்குத் தனி இடம். அங்கு அரங்கேறும் நாடகம், நாட்டியங்களில் அந்த வசீகரிக்கு பிரதான வேடங்கள்.
மொத்தத்தில் வாழ்வே வித்யாவதியை விசேஷமாய் கொண்டாடியதில் உள்ளூரின் பல பெண்களுக்கு உள்ளூர கசப்புதான்!
ஊரின் பெரும்பகுதியை பல வருடங்களுக்கு முன்பே அரசாங்கம் ஒரு சொற்ப விலை தந்து எடுத்துக் கொண்டாலும், பெரிய சேதுபதியின் குடும்பம், சொச்ச இடத்தை வைத்துக் கொண்டு கெளரவமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.
அவரது பேரனுக்கு அக்குடும்பம் வித்யாவதியைப் பெண் கேட்டு முடித்தபோது ஊரே அப்பெண்ணின் அதிர்ஷ்டத்தையும் பார்த்து பெருமையாய் பொறுமியது.
‘தோட்ட சூபர்வைஸர் மவளாய் இருந்தப்பவே அவ இந்த ஊருக்கு ராணி… இனி நிஜமாலுமே மகாராணிதான் போ...’ என்று!
வித்யாவதிக்கு பதினெட்டு வயசு பூர்த்தியாவதற்காய் பரிசம் போட்டு விட்டு எட்டு மாதங்கள் காத்திருந்தார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில்தான் ஒரு சாதாரண வரனுக்கு சாவித்ரி வாழ்க்கைப்பட்டது. இவளது திருமணத்திற்கு, டிஷ்யூ புடவையும் நீளப் பின்னலில் தங்கக் குஞ்சலமுமாட தங்கச்சிலை போல வந்திருந்த வித்யாவதியின் மேல்தான் அத்தனை பேரின் கண்களும்.
சாவித்ரியை கட்டிக் கொடுத்ததும், இனியும் இச்சிறு ஊரில் இருப்பது வீண் என்ற முடிவிற்கு வந்த அவளது பெற்றோர், அவளது அண்ணனோடு சேலம் போய்விட, பிறகு இந்த அழகான ஊருக்கு வர சாவித்ரிக்கு சந்தர்ப்பமில்லை.
ஆனாலும் அவ்வப்போது வித்யாவதி பற்றி விசாரித்து அறிந்ததில், பிறகு சிநேகிதியின் வாழ்வு தான் ரொம்பப் பொறாமைப்படுமளவில் தொடரவில்லை என்பது சாவித்ரிக்குப் புரிந்தது.
வித்யாவதியின் புருஷனுக்கு உடன் பிறந்தது ஐந்தும் பெண்கள். கெளரவம் கெடக் கூடாதென ஆடம்பரமாய் நடத்திய ஐந்து திருமணங்களோடு, தொடர்ந்த பண்டிகை, வளைகாப்பு, பிள்ளை பேறில் குடும்பம் தடுமாறியது. பண்ணை ஆட்கள் கூலியை உயர்த்திக் கேட்க, அதோடு பொய்த்த மழை அல்லது பெருமழை, பூச்சி தாக்கு என்று மேலும் விழுந்த அடிகளைத் தாங்க முடியாமல் விழுந்தே விட்டது. ஆனால் கஜானா காலி என்பதை ஊரார் உணர்ந்தது பெரியவர்கள் இறந்த பிறகுதான்.
அதுவரை பெருந்தீனி, சுகவாழ்வு என்றிருந்த வித்யாவதியின் கணவனுக்கு புது தரித்திர நிலையை ஏற்க முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் அவர் போக, வித்யாவதி விதவையானாள்.
'பாவம் ரெண்டு பெண் குழந்தைகளோட எப்படித்தான் சமாளிக்கப் போறாளோ?’ - என்று சேதி இவளை எட்ட, சாவித்ரிக்குமே வருத்தம்தான்.
ஊருக்குள் நுழைந்து பஸ் நிற்க, இறுகின தன் முட்டுகளை சிரமப்படுத்தி படியிறங்கி, ஊர் மண்ணில் கால் பதித்தாள் சாவித்ரி.
இங்கிருந்து போகையில் ஒடிசலாய் இருந்த தேகமும், மருட்சியான மனசும் இப்போது இல்லை. முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தல்லவா வந்திருக்கிறாள்? சந்தோஷந்தான் என்றாலும் கூடவே சிறு சலிப்பும்…
தன்னை இங்கு அனுப்பிய ஜமுனாம்மாள், ஒரு காரில் ஏற்றி அனுப்பியிருக்கக் கூடாதா? 'ரெண்டு பஸ் மாத்தி மாத்தி சேதுமலை போய் சேருறது லேசில்லை. உங்க கார் இருந்தால் போனோமா பார்த்தமான்னு சட்டுனு வந்திருவேனுங்க' - என்று கேட்டுப்பார்த்தும்,
"இல்ல சாவித்ரி. நீ இன்ன விஷயமாய், நம்ப வீட்டு சார்பாய் வந்திருக்கேன்றது அதில் அம்பலமாயிடுமே? சும்மா நீயா போனது போல போய் நோட்டமிட்டுட்டு, ஏதேச்சையாய் சொல்றது போல உன் சிநேகிதியிடம் நம்ப விஷயத்தையும் வித்யாவதியின் காதில் போட்டுட்டு வந்துடறதுதான் சரி. யாரோ வந்து அந்த வித்யாவதி பெண்களைப் பற்றி என்னிடம் சொல்ல, அந்த நிமிஷம் நீ எங்க வீட்டுக்குள்ளே நுழைவானேன்? எல்லாம் ஈசன் செயல் –
‘சேதுமலை வித்யாவதியா? எனக்கு நல்லாத் தெரியுமே - என் பால்ய சிநேகிதி அவ’ன்னு நீ விஸ்தரிக்க, எனக்கு அது சுப சகுனமாய் பட்டது. நான் எதிர்பார்த்தபடி பேர்போன குடும்பம், இப்போ வசதியோ தகப்பனோ இல்லைன்னாலும் பெண்களுக்கு அழகும் படிப்பும் இருக்கு... முக்கியமாய் பெரிய இடத்து மாப்பிள்ளையாய் தேடிக்கிட்டு இருக்காங்களாம் கடவுளே... எல்லாம் நல்லபடியா கைகூடி வரட்டும்ப்பா...' என்று கைகூப்பிய ஜமுனாம்மாள் இவள் கையில் ‘செலவுக் காசு’ கூட தராமல் அனுப்பி விட்டார்.
போகட்டும் - தான் வளர்ந்த ஊரை, வாடிப் போயிருக்கும் சிறு வயசு சிநேகிதி வித்யாவதியைப் பார்த்து விட்டுத்தான் வருவது - என்று கிளம்பி விட்டாள் இவளும். இத்தனை ஆண்டுகளில், வித்யாவதியை இவள் மறக்க முடிந்ததில்லை. அழகான எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பால்ய சிநேகிதி பொறியாய் மனதுள் வந்து போவாள்! அவளை அமங்கலக் கோலத்தில் பார்க்க… ஏன் நினைக்கவே கூசியதுதான்.
மனதைத் திடபடுத்திக் கொண்டு, முன்பு ஜட்காக்கள்