Vingyaana Vaayilgal - Part 1
By Sivan
()
About this ebook
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Read more from Sivan
Izhantha Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsEzhai Padum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsHomer - Odessey Rating: 1 out of 5 stars1/5Karamazov Sagotharargal Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsHitchcock Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkana Greekka Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratingsKalivarin Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsOoz Nagarin Mayavi Rating: 0 out of 5 stars0 ratingsTom Sawyer Rating: 5 out of 5 stars5/5Casterbridge Nagara Mayor Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadalin Adiyil… Rating: 0 out of 5 stars0 ratingsAthisiya Ulagil Alice Rating: 0 out of 5 stars0 ratingsPrabu Maandi Cristo Rating: 0 out of 5 stars0 ratingsSiddharthan Rating: 0 out of 5 stars0 ratingsEnbathu Naatkalil Ulagai Sutri Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Crusoe Rating: 1 out of 5 stars1/5George Eliot's Atrankaraiyora Aalai Rating: 0 out of 5 stars0 ratingsMobydick Rating: 3 out of 5 stars3/5Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsUlagangalin Porattam Rating: 1 out of 5 stars1/5
Related to Vingyaana Vaayilgal - Part 1
Related ebooks
Arul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsSitha Yogigal Rating: 0 out of 5 stars0 ratingsVerena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsEnbathu Naatkalil Ulagai Sutri Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Gowri Kalyanam Vaibogame Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsSivamayam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsUllangai Ariviyal Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsUppu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsNimira Vaikkum Nellai Rating: 0 out of 5 stars0 ratingsThiruvarur Tyagesan Thirukovil Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsMohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsசுந்தரகாண்டம் Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Mohini Rating: 4 out of 5 stars4/5Naanarintha Aanmeegam Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 3 out of 5 stars3/5Sri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Crusoe Rating: 1 out of 5 stars1/5Kadavulai Kandavargal Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Part-2 Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar Rating: 0 out of 5 stars0 ratingsAthisiya Ulagil Alice Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5S. Ve. Shekher Bathilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsDeva Mohini Rating: 4 out of 5 stars4/5
Reviews for Vingyaana Vaayilgal - Part 1
0 ratings0 reviews
Book preview
Vingyaana Vaayilgal - Part 1 - Sivan
http://www.pustaka.co.in
விஞ்ஞான வாயில்கள்.
Vingyaana Vaayilgal
Author:
சிவன்
Sivan
For other books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பூமியின் தோற்றம்
2. மனித இனத்தோற்றம்
3. காலம் கணித்த கதை
4. காலக்கணிப்பு பற்றிய பிற செய்திகள்
5. புத்தக காலத்திற்கு முன்…
விஞ்ஞான வாயில்கள்.
புத்தகம் பற்றி...
மனித குலம் நாகரிகம் அடைந்தது சரித்திரமாகக் குறிப்பிடப்பட்டாலும். அதன் அடிநாதம் மனிதத் தேவைகளின் பொருட்டு விஞ்ஞான ரீதியாகப் பிறந்த கண்டுபிடிப்புகள்தான். எனவே நமது வரலாற்றைக் குறிப்பிடும் போது படிப்படியான விஞ்ஞான வரலாற்றையும் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாகிறது.
நடந்து முடிந்த சம்பவங்களைக் கண்டறிந்து தேதி வாரியாகத் தொகுப்பது வரலாறு. ஆனால், அந்த வரலாற்றுக்கான ஆதாரங்களை விஞ்ஞான முறையில்தான் உறுதி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக மனித வாழ்வில் பிணைந்துள்ள பல்வேறு பகுதிகளையும் நமது வசதி கருதி, தேர்ந்து படிப்பதற்காகப் பிரித்துக் கொண்டுள்ளோம்.
வரலாற்றின் ஏதோ ஒரு பகுதியில் ஏற்பட்ட இடைவெளியை, அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில், சாத்தியக்கூறுகளைக் கொண்டும், விளைவுகளைக் கொண்டும் நிரப்புகிறோம். எனவேதான் வரலாறுகள் திருத்தப்படுவதும், வலுவூட்டப்படுவதும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகத் தொடர்கிறது.
உலகம் தோன்றியது முதல் கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான மனிதகுல விஞ்ஞான முன்னேற்றத்தை ஒரளவு கோடிட்டுக் காட்டுவதுதான் இந்தப்புத்தகத்தின் நோக்கம். பிரமாண்டமான இதன் பரப்பு கருதி அவற்றை ஏழு சிறுபிரிவுகளாகப் பிரித்துக் கொண்டுள்ளேன். அவற்றில் நான்கு இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சரித்திர விஞ்ஞானம் என்பதை குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் என்னால் முடிந்த அளவு எளிமைப் படுத்தியிருக்கிறேன்.
என்னுடைய முதல் புத்தகத்துக்காக சென்னை கன்னிமாரா நூல் நிலையத்தில் சில குறிப்புகளைத் தேடும் போது, 1991-ல் இந்தப் புத்தகத்துக்கான யோசனை பளிச்சிட்டது. இது புத்தக வடிவம் பெற98-ம் ஆண்டு ஆகிவிட்டது. சிறுவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டாலும், வாசிப்பை நேசிக்கும் எவருக்கும் பயன்படும் என்பது என் நம்பிக்கை. இந்த நூலை அழகான முறையில் வெளியிடும் கண்ணபிரான் நூலகம், வாங்கி ஆதரிக்கும் வாசகப் பெருமக்கள் ஆகியோருக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
சிவன்
சென்னை - 78.
1. பூமியின் தோற்றம்
நாம் வசிக்கும் பூமி உருண்டை எப்படித் தோன்றியது, எப்பொழுது தோன்றியது என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான நம்பிக்கை நிலவி வந்தது.
ஒரே வெள்ளக் காடாக விளங்கிய இந்த உலகத்தில் இந்திய நாட்டின்காக்கும் கடவுளாக உருவகிக்கப்பட்ட சிவபெருமான், ஒரு நாள் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினார். அது ஒரு முட்டையாக மாறியது. அவர் அதை இரண்டாகப் பிரித்தபோது ஒரு பாதி பூமியாகவும், மற்றொரு பாதி ஆகாயமாகவும் மாறியது.’ - இது இந்து மதப் புராணம் ஒன்று விவரிக்கும் கதை.
'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’ - என்று கிறிஸ்தவ வேதமான பைபிள் கூறுகிறது.
‘அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப் படுத்தும் நாயகனான அல்லாஹூவுக்கே ஆகும்.’ - என்று முகமதியர்களின் வேதநூலான குர்ஆன் கூறுகிறது.
இதேபோல் பூமி பிறந்தவிதம் குறித்தும், இந்தப் பூமி அந்தரத்தில் எவ்வாறு சுழன்றபடியே நிலை பெற்றுள்ளது என்பது குறித்தும் உலகம் முழுக்க ஏராளமான கதைகள் வழங்கப்படுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய ரஷ்யர்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்புதான் உலகம் தோன்றியதாக நம்பியிருந்தனர்.
இவ்வாறு உலகின் பல பாகங்களிலும் உலகத் தோற்றத்தைக் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்த போது, அயர்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் ஆஷர் ‘(James Ashar)’ என்பவர் உலகம் தோன்றிய நேரத்தைத்தான் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். அவரது கணக்கின்படி, கி.மு. நாலாயிரத்து நாலாம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23-ம் தேதியன்று இரவில் பூமி தோன்றியதாகக் கூறினார். அதாவது இன்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'உலகம் பிறந்தது! என்றார்.
இப்படிப்பட்ட கதைகளை நம்மில் யாரும் இப்பொழுது நம்ப மாட்டோம்! இருப்பினும் மனிதன் உண்மையை உணர்ந்துகொள்ள எந்த வகையான வழியுமற்றபோது, பூமியின் தோற்றம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்பொழுது பூமியின் தோற்றம், மாற்றம், வளர்ச்சி போன்ற சரியான விவரங்களை அறிவியல் முறையில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இவை இதுவரை பூமியில் வழங்கிவந்த பூமித் தோற்றம் பற்றிய கதைகளை விட சுவாரஸ்யமும், ஆச்சரியமும் மிக்கவை!
ஆராய்ச்சி
ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியின் தோற்றம் பற்றிய இந்த ஆராய்ச்சி தொடங்கியது. இந்த ஆராய்ச்சியின் துவக்கம் வரையில் உலகத்தை, சூரியன் - சந்திரன் உட்பட மற்ற கிரகங்கள் சுற்றி வருவதாகத்தான் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
1473-ம் வருடம் போலந்து நாட்டில் பிறந்த கோப்பர் நிக்கஸ் என்கிற விஞ்ஞானிதான் சூரியனை பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதைக் கண்டுபிடித்தார்.
வெனிஸ் நாட்டைச் சேர்ந்த கலிலியோ கலீலி என்கிற நிபுனர் 1609-ம் வருடம் தொலைநோக்கிக் கண்ணாடி ஒன்றைக் கண்டுபிடித்து, கோப்பர் நிக்கஸ் கூறியது உண்மைதான் என்பதை நிரூபித்தார்! இந்தக் கண்டுபிடிப்புகளால் மேற்குறிப்பிட்ட இரண்டு விஞ்ஞான வல்லுநர்களையும் ‘சரியான பைத்தியங்கள்' என்று கூடப் பழிக்கத் தொடங்கினர். காலங்காலமாய்த் தொடர்ந்து வரும் நம்பிக்கைகளை, சட்டென்று மனித மனம் ஒதுக்க முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம் எனலாம்!
எப்பொழுதும் ஹீலியம் வாயுவால் எரிந்தபடியே பிரபஞ்சத்தின் ஒரு பகுதிக்கு வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தந்துகொண்டிருக்கும் சூரியனும், சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் மற்ற கிரகங்களும் ஒரே சமயத்தில் தோன்றியவை என்பதுதான்வான இயல் நிபுணர்களின் கருத்து. கோப்பர் நிக்கஸ், கலீலியோ போன்றவர்களைத் தொடர்ந்து ‘உலகம்' பற்றிய ஆராய்ச்சி தீவிரமடையத் தொடங்கியது. இன்று நம்மால் தெரிந்து கொள்ள முடிந்த கிரகங்கள் எல்லாம், இன்றுள்ள நிலையை எவ்வாறு அடைந்தன என்பதில் பல விஞ்ஞானிகள், மாறுபட்ட பல கருத்துகளை முன் வைக்கின்றனர்.
ஐந்நூறு கோடி வருடங்களுக்கு முன்பு விண்வெளியில் வெண்மையான, வெப்பமுள்ள வாயு மண்டலம் மட்டுமே இருந்தது. அதாவது பனிப்படலம் மாதிரியான வெப்ப வாயுப்படலம். அந்த ஒளிப்பிழம்பு, புயல் காற்றைப் போல் சூறா வளியாகச் சுற்றிக் கொண்டிருந்தது. நாளடைவில் இந்தப் பிழம்புகள் ஒன்றாக அணிதிரண்டன. பின்பு அதிலிருந்து ஒவ்வொரு மூலகங்களும் தனித்தனி உருண்டைகளாகப் பிரிந்தன. இப்படிப் பிரிந்த பின் உறைந்து உருவானவைதான் இன்றைய கிரகங்கள் என்பவை. வாயுப்படலத்தின் பக்கப் பரப்புகள் ஒவ்வொன்றும் கிரகங்களாக மாறிய போது, அதன் நடுவிலிருந்த பகுதி ‘சூரியனாக’ மாறியது என்பது சில விஞ்ஞானிகளின் கருத்து.
இது தவிர, வேறு ஒரு கருத்தும் நிலவுகிறது 'வாயுப் பொருளாக அல்லாமல் ஏற்கெனவே உறைந்த நிலையில் திடப்பொருளாகவே ஒரு பெரிய கிரகம் இருந்திருக்க வேண்டும். வேறு ஏதோ ஒரு நட்சத்திரம் அந்த மாபெரும் கிரகத்தின் மீது மோதி இடித்ததனால், அது பல துண்டுகளாகச் சிதறியிருக்கலாம். அப்படிச் சிதறிய துண்டுகள்தான் இன்றைய கிரகங்கள்’ என்றும் அவர்கள் கூறுகின்றனர். அந்தத் திடப் பொருளின் மையப்பகுதி சூரியன் என்றும் தங்களது கருத்துகளை முன் வைக்கின்றனர். 1749-ம் வருடம் பபன் என்கிற விஞ்ஞானிதான் இந்தக் கருத்தை முதன் முதலாக வெளியிட்டார்.
அவர் கூறியுள்ள மற்ற விவரங்கள் ஒரு வேளை சரியானதாக இருக்கலாம். ஆனால், ஒரு பெரிய கிரகத்தை வேறு நட்சத்திரம் எதுவும் மோதியிருக்க முடியாது; அதற்குப் பதிலாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம், இந்தக் கிரகத்தைக் கடந்து போனபோது, ஏற்பட்ட சலனங்கள்தான் ஏனைய கிரகங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்
என்கிறார் டி.சி. சேம்ப்ர் லெயின் என்கிற மற்றொரு