Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tom Sawyer
Tom Sawyer
Tom Sawyer
Ebook221 pages2 hours

Tom Sawyer

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580103701832
Tom Sawyer

Read more from Sivan

Related to Tom Sawyer

Related ebooks

Reviews for Tom Sawyer

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tom Sawyer - Sivan

    http://www.pustaka.co.in

    டாம்சாயர்

    Tom Sawyer

    Author: Mark Twain

    மார்க் ட்வைன்

    Translated by: Sivan

    சிவன்

    For other books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    ஓர் அறிமுகம்

    உலக இலக்கியத்தில் டாம்சாயரின் சாகசங்கள் ஹக்கிள்பரிஃபின்--என்ற இரண்டு சாகச நாவல்களை வழங்கி அழியாப்புகழ் பெற்றவர் மார்க் ட்வைன். இவரது இயற்பெயர் சாமுவேல் லாங்ஹேன் கிளமென்ஸ் என்பது.

    வட அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸுரி மாகாணத்திலுள்ள ஃபுளோரிடா நகரில் 1835-ம் வருடம் பிறந்தவர் மார்க் ட்வைன். அவரது நான்காவது வயதில் அவரது குடும்பம் ஹானிபால் நகரில் குடியேறியது. 1846-ம் வருடம் அவரது தந்தையார் இறந்துபோனதால் மார்க் ட்வைனின் படிப்பு தடைப்பட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து கற்றுக்கொண்டதைவிட அவர் அதிகமாகக் கற்றுக் கொண்டது யதார்த்தமான அன்றாட வாழ்க்கையிலிருந்து தான். ஆயிரத்து இருநூறு மைல் நீளமுள்ள மிசிசிப்பி நதிதான் அவருடைய பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். ஆற்றின் ஆழமான பகுதியைக் குறிப்பிட அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சொல்லான ‘மார்க் ட்வைன்’ என்பதையே, அந்த நதியில் நான்கு ஆண்டுகள் கப்பல் ஓட்டிப் பணிபுரிந்த கிளமென்ஸ் தனது புனைபெயராகத் தேர்ந்தெடுத்தார்.

    நெவேடா மாகாணத்தில் 1861-ம் ஆண்டு குடிபுகுந்த மார்க் ட்வைன் அங்கு ஒரு பத்திரிகையாளரானார். ஆதனால் எழுத்தாளர்கள் பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. ‘ஜிம்ஸ்மைலியும் குதிக்கும் தவளையும்’ என்கிற முதல் புத்தகத்தின் மூலம் ட்வைன் ஓர் எழுத்தாளராக அறிமுகமானார்.

    ‘இலக்கியத்தின் ஆபிரகாம் லிங்கன்’ என்று புகழப்படும் மார்க் ட்வைனின் ‘டாம்சாயரின் சாகசங்கள்’ 1876-ம் ஆண்டு வெளியானது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 1885-ம் ஆண்டு மற்றொரு நாவலான ‘ஹக்கிள்பரிஃபின்’ வெளியானது. மனித இயல்புகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதில் மார்க் ட்வைன் முதலிடம் பெறுகிறார்.

    கனக்டிகட் நகரில் புகழ், செல்வம் போன்றவற்றுடன் வாழ்ந்த மார்க் ட்வைனின் மனைவி 1904-ம் ஆண்டு இறந்து போனது அவரைப் பெருமளவு பாதித்தது. 1916-ல் வெளியான இவரது ‘புதியவன்’ நாவல் அப்போதைய இவரது மனஉணர்வைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

    ‘தி அட்வென்சர்ஸ் ஆஃப் டாம்சாயர்’ என்கிற இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ட்வைன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: ‘இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எல்லாமே உண்மையில் நடந்தவைதான். ஒருசில சம்பவங்கள் மட்டும் எனது கற்பனை. மற்றும் சில, எனது பள்ளிக்கூடத் தோழர்கள் தொடர்பானவை. எனக்கு நன்கு பழக்கமான சிறு வயது நண்பர்கள் மூன்று பேரின் இயல்புக் கலவைதான் டாம்சாயர். இதில் இடம் பெற்றுள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் அந்தக் காலத்தின் நடைமுறைகள்தான்.

    இந்தப் புத்தகம் சிறுவர்-சிறுமியருக்காக எழுதப்பட்டாலும் பெரியவர்கள் இதை ஒதுக்கி வைக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். இன்றைய பெரியவர்கள், தங்களது குழந்தைப பருவத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோம் என்பதை ஒரு கணம் சுவாரஸ்யத்துடன் நினைத்துப பார்க்கட்டும் என்பதுதான் எனது நோக்கம்.’

    உலக இலக்கிய வரிசையில் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    சென்னை – 600 078

    தொலைபேசி : 4837681

    தோழமையுடன்

    சிவன்

    டாம்சாயர்

    1

    டாம்!

    பதிலில்லை.

    டாம் சாயர்!

    இப்போதும் பதில் வரவில்லை.

    இவன் எங்கேதான் போனான்?- பாலி சித்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

    அவர் மூக்குக்கண்ணாடியைச் சற்றுக் கீழே இறக்கி, மூக்குத்தண்டின் மீது நிற்க வைத்தார். பிறகு கண்ணாடியின் மேற்புற வழியாக ஒரு மூலை விடாமல் அறை முழவதும் தேடிப் பார்த்தார். அவர் கண்ணாடி வழியாகப் பார்ப்பது எப்போதாவது ஒரு சில நேரங்களில்தான். அவரைப் பொறுத்தவரையில் அந்த மூக்குக்கண்ணாடி ஓர் அலங்காரப் பொருள் மட்டும்தான்.

    அங்கு டாம் இல்லையென்பது தெரிந்தவுடன், சித்தி கவலைப்பட்டார். அறையிலுள்ள பொருள்களுடன் பேசுவதுபோல் அவர் பேசினார்: நீ என்னுடைய கையில் அகப்படாமலா போய் விடுவாய்?

    சித்தி, டாமைத் தேடுவதை நிறுத்தவில்லை. குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தார். கையிலிருந்த துடைப்பத்தைக் கட்டிலுக்குக் கீழே வீசிப் பார்த்தார். துடைப்பம் எதன் மீதோ பட்டது போல் தோன்றியது. உற்றுப் பார்த்தார். கடைசியில் அது ஒரு பூனைக்குட்டி.

    எங்கேயும் காணவில்லையே!

    சித்தி அறையிலிருந்து வெளியே வந்தார். கொல்லைப்புறக் கதவு திறந்து கிடந்தது. வாசற்படியில் நின்றவாறே தோட்டத்துப் பக்கம் பார்த்தார். தக்காளிச் செடிகளின் மத்தியில் ஒருவேளை டாம் ஒளிந்திருக்கிறானோ?"

    இல்லை, தோட்டத்திலும் அவனைக் காணவில்லை.

    மறுபடியும் கூப்பிட்டுப் பார்க்கலாம். தூரத்தில் எங்காவது போயிருந்நதால்கூட கூப்பிடுவது கேட்கட்டும். உரத்த குரலில் பாலி சித்தி நீளமாகக் கூவினார்: டாம்!

    அதே சமயம் தனக்குப் பின்னாலிருந்து ஏதோ சத்தம் கேட்பதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார். டாம் நின்று கொண்டிருந்தான். அவரிடமிருந்து தப்பித்து ஓடுவதற்குத் தயாராக நின்று கொண்டிருப்பது தெரிந்தது. டாம் ஓடுவதற்கு முன்பாக, பாலி சித்தி அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்.

    டாம், உடம்பைச் சிலிர்த்துத் தப்பிக்கப் பார்த்தான்.

    டாம், அப்படியே நில்! இவ்வளவு நேரம் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

    ஒன்றும் செய்யவில்லை, சித்தி.

    ஒன்றும் செய்யவில்லையா?. உன் கையிலும் முகத்திலும் ஒட்டியிருப்பது என்ன?

    தெரியவில்லையே….

    நிஜமாகவே உனக்குத்தெரியாது இல்லையா? ஜாமைத் திருடித் தின்னக் கூடாது என்று நான் எத்தனை தடவை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்? இன்று உன் உடம்புத் தோலை உரித்துவிட்டுத்தான் மறுவேலை. அந்தப் பிரம்பை இப்படி எடுத்துக் கொடு!

    பிரம்பு மேற்புறமாக உயர்ந்தது. சித்தி, கையெட்டி அதைப் பிடிப்பதற்காக ஒரு புறம் லேசாகச் சாய்த்தார். அதனால் கால்தவறி விழப் போனார். அவ்வளவுதான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி டாம் ஓட்டம் பிடித்தான். சித்தி சுதாரித்துப் பார்ப்பதற்குள் அவன் மாயமாக மறைந்துவிட்டான்!

    ‘பயங்கர வால். என்னை ஏமாற்றிவிட்டு ஓடுவதில் கெட்டிக்காரன்! எந்த வேலை சொன்னாலும் செய்யச் சோம்பல். எப்படியோ தொலைந்து போகட்டும் என்று தண்ணீர் தெளித்துவிடவும் மனம் இடம்தரவில்லை. அடித்துத் திருத்துவது என்பதோ நினைத்தே பார்க்க முடியாத காரியம்! இறந்துபோன சகோதரியின் குழந்தை என்கிற பாசம் மனதைக் கட்டிப் போடுகிறது.’

    பாலி சித்தி பழையதையெல்லாம் நினைத்தவாறே அப்படியே நின்று விட்டார்.

    டாம் வீட்டிற்குத் திரும்பி வந்தது வெகுநேரத்திற்குப் பிறகுதான். அதுவரையில் தெருப்பிள்ளைகளுடன் சேர்ந்து ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தான். வந்த உடனே காய வைத்திருந்த விறகை வீட்டிற்குள் கொண்டு போய்ப் போட வேண்டும் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால், நல்லவேளையாகத் தம்பி ஸிட் அந்த வேலையைச் செய்திருந்தான்.

    டாம் சாப்பிட உட்கார்ந்தான். சித்தி அப்படி இப்படி சென்றபோதெல்லாம் அவ்வப்போது திருட்டுத்தனமாகச் சர்க்கரையை வாரிவாரித் தின்றான்.

    பாலி சித்தி டாமை கவனமாக உற்றுப் பார்த்தார். பிறகு கேட்டார்: இன்றைக்குப் பள்ளிக்கூடம் போனபோது நல்ல வெயில்! இல்லையா டாம்?

    ஆமாம் சித்தி! –டாம் பதிலளித்தான்.

    தாங்க முடியாத வெயில்…அப்படித்தானே?

    உண்மைதான் சித்தி!

    இந்த வெயிலில் தண்ணீரில் குதித்து நீச்சலடிக்க வேண்டுமென்று உனக்குத் தோன்றியது இல்லையா?

    டாமின் முகத்தில் சந்தேகம் படியத் தொடங்கியது. அவன் சித்தியையே உற்றுப் பார்த்தான்.

    நான் குளிக்கவில்லை சித்தி. வெயில் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டேன். என்தலையைப் பாருங்கள் சித்தி!

    பாலி சித்திக்குச் சிரிப்பு வந்தும் சிரிக்கவில்லை.

    மாலைநேரத்தில் டாம் வீட்டிலிருந்து வெளியே வந்தான். வெளியே பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. உதட்டைக் குவித்து விசிலடித்தபடியே நடந்தான் டாம்.

    அவனுக்கு எதிர்த்திசையில் ஒரு பையன் மிகவும் கர்வத்துடன் மிடுக்காக நடந்து வந்தான்.

    டாமின் வயதுதான் இருக்கும். அவன் அணிந்திருந்த தொப்பி, கோட்டு, டை போன்றவை டாமுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

    டாம் சட்டென்று நின்றான். அந்தப் பையனும் நின்றான். டாம் நடந்துபோது அவனும் நடந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் உற்றுப்பார்க்கத் தொடங்கினர்.

    உன்னை அடித்துக் கொன்று விடுவேன் ஜாக்கிரதை! –டாம் அந்தப் பையனிடம் கூறினான்.

    எங்கே கொல் பார்க்கலாம்! –பையன் வீம்பு பிடித்தான்.

    ஒரே அடிதான்…

    சும்மா அடிப்பியோ?

    பார்க்கிறியா?

    பார்க்கலாம்!

    சற்று நேரம் மௌனம் நிலவியது.

    உன் பெயர் என்ன? –டாம் கேட்டான்.

    நீ யார், அதைக் கேட்க?

    இருவருக்கும் இடையில் வாக்குவாதம் உயர்நதது. சவால்கள் புறப்பட்டன. சட்டென்று பாய்ந்த டாம், அந்தப் பையனினன் கையிலிருந்த நாணயத்தைத் தட்டி விட்டான். நாணயம் கீழே விழுந்து உருண்டது. அதை எடுப்பதற்காக இரண்டுபேரும் பூனைகளைப் போலப் பாய்ந்து, நிலத்தில் விழுந்து உருண்டு புரண்டனர். ஒரு கட்டத்தில் டாம் அந்தப் பையனைக் கீழே தள்ளிவிட்டு அவன் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, தனது சட்டையின் கைப்பகுதியை மேற்புறமாக உயர்த்தினான். குடைசியில் ஒரு விதமாக இந்தச் சண்டை முடிவடைந்தது.

    இந்த சாகசத்தை முடித்துக் கொண்டு டாம் வீட்டிற்கு வந்தபோது இருட்டி வெகு நேரமாகி விட்டிருந்தது. கிழிந்த சட்டை மற்றும், மண்ணில் புரண்ட உடம்புடன் அவன் வந்தபோது சித்தி வாசலிலேயே நின்றிருந்தார். அவனது கோலத்தைப் பார்த்தவுடன், தான் மறுநாள் அவனுக்குக் கொடுக்க நினைத்த தண்டனை நியாயமானதுதான் என்பது சந்தேகத்திற்கு இடம் இன்றி அவருக்குப் புலப்பட்டது.

    மறுநாள் சனிக்கிழமை. பொழுது விடிந்தது. அழகான விடியல் வேளை. எங்கும் இயற்கையின் உற்சாகம் ததும்பி வழிந்தது.

    ஒருகையில் சுண்ணாம்பு நிறைந்த பக்கெட்டை எடுத்துக்கொண்டு மறுகையில் நீண்ட கழியின் முனையில் கட்டிய பிரஷ்ஷுடன் நடந்து வந்தான் டாம். வீட்டின் காம்பௌண்டுச் சுவரை ஒட்டி நின்றான். முப்பது அடி நீளமுள்ள பெரிய சுவர்! சுவரைப் பார்த்தபோதே அவனுடைய உற்சாகமெல்லாம் வடிந்துபோனது. மனம் தளர்ந்தான். ஒரு பெருமூச்சுடன் பிரஷுஷைச் சுண்ணாம்பில் நனைத்துச் சுவரில் வெள்ளையடிக்கத் தொங்கினான். கொஞ்சநேரம் வெள்ளையடித்தவுடன், இன்னும் வெள்ளை அடிக்க வேண்டிய பகுதிதான் அவனது சிந்தனையில் நிறைந்து நின்றது. அலுப்புத் தோன்றியது. அங்கிருந்த மரப்பெட்டியின் மீது சற்று நேரம் ஓய்வாக உட்கார்ந்தான்.

    அந்த நேரம் பார்த்து ஜிம் கையில் ஒரு பக்கெட்டுடன் துள்ளி விளையாடியபடி வந்தான். குழாயில் தண்ணீர் பிடிக்கப் போகிறான்.

    தெருக் குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வருவது என்றாலே டாமுக்குப் பிடிக்காது. ஆனால், இப்போது அவன் மனநிலை அப்படி இல்லை. அங்கு வேறு பல குழந்தைகளும் பெண்களும் இருப்பார்கள். வரிசையில் காத்து நிற்பதும், விளையாட்டும், கூச்சலும் ஒரே மகிழ்ச்சி மயமாகத் தெரிந்தது.

    டாம், ஜிம்மை அழைத்தான்: நீ கொஞ்ச நேரம் வெள்ளையடித்துக் கொண்டிரு. நான் போய்த் தண்ணீர் பிடித்து வருகிறேன்.

    அதற்கு ஜிம் ஒப்புக்கொள்ளவில்லை. பாலி சித்தி செய்யச் சொல்லியிருக்கிற வேலை அது. அவர் சொன்னபடி செய்யாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

    பாலி சித்திக்கு நீ பயப்பட வேண்டியதில்லை என்பது போல் டாம், ஜிம்மிடம் கூறினாள். சித்தி சொல்வதை எல்லாம் நீ பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

    இல்லாவிட்டால் அடிப்பார்கள்! –ஜிம் பதிலளித்தான்.

    அடிப்பார்களா? சித்தி இதுவரையில் யாரையுமே அடித்தது இல்லை. மிஞ்சிப் போனால் திட்டுவார்கள். திட்டினால் அடி மாதிரி நம் உடம்பு வலிக்கவா போகிறது? நான் சொல்கிறபடி நீ நடந்து கொண்டால் நான் உனக்கு ஒரு கோலிக்குண்டு தருகிறேன்!

    ஜிம்மின் மனம் இளகியது.

    அது மட்டுமா, என்னுடைய காலில் இருக்கும் காயத்தையும் காட்டட்டுமா உனக்கு? டாம் கேட்டான்.

    ஜிம், டாமின் வார்த்தையில் முழவதுமாக மயங்கி விட்டான். பக்கெட்டைக் கீழே வைத்துவிட்டு, டாமிடமிருந்து கோலிக்குண்டைக் கை நீட்டி வாங்கினான். டாம் தன் கால்கட்டை அவிழ்ப்பதை ஜிம் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    சட்டென்று காட்சி மாறியது. ஜிம் பக்கெட்டை எடுத்துக் கொண்டு குழாயை நோக்கி ஓடினான். டாம் அவசர அவசரமாகப் பிரஷ் எடுத்து வெள்ளையடிப்பதில் மூழ்கினான். பாலி சித்தியின் உருவம் தூரத்தில் தென்பட்டதுதான் காரணம். சித்தி தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்.

    டாமினால் தொடர்ந்து அதிக நேரம் வெள்ளையடிக்க முடியவில்லை. அன்றைய விடுமுறையைக் கழிக்க அவன் போட்டு வைத்திருந்த திட்டங்களை நினைத்தபோது வருத்தம் அதிகரித்தது. இன்னும் சற்று நேரத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1