Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamy Paritchai Ezhuthukirar!
Appusamy Paritchai Ezhuthukirar!
Appusamy Paritchai Ezhuthukirar!
Ebook151 pages1 hour

Appusamy Paritchai Ezhuthukirar!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580112301829
Appusamy Paritchai Ezhuthukirar!

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Appusamy Paritchai Ezhuthukirar!

Related ebooks

Related categories

Reviews for Appusamy Paritchai Ezhuthukirar!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamy Paritchai Ezhuthukirar! - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமி பரீட்சை எழுதுகிறார்!

    Appusamy Paritchai Ezhuthukirar!

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For other books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அப்புசாமி பரீட்சை

    எழுதுகிறார்!

    (நகைச்சுவை சிறுகதைத் தொகுப்பு)

    பாக்கியம் ராமசாமி

    முன்னுரை

    ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்வதில் ஓர் அனுகூலம் உண்டு. சார், சார், என் கதையைப் பிரசுரியுங்கள் சார், என்று ஓரொரு பத்திரிகை ஆபீசாகப் போய்க் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்தப் பத்திரிகையில் வேலை செய்கிறோமோ, அந்த ஆசிரியரை மட்டும் கெஞ்சினால் போதும்.

    நான் ஒருவகையில் அதிருஷ்டக்காரன். குமுதம் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய எஸ். ஏ. பி. அவர்களை எனது ஆசானாக அடைந்தது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

    தனது இலாகாவினரை அவரே விதம்விதமாகக் கதைகள் எழுதச் சொல்வார்.

    அவர் தந்த பயிற்சியும், கற்றுத் தந்த உத்திகளும் செய்த இலக்கியத் தொந்தரவுகளும் ஏராளம். அதி அற்புதமான ரசிகர்.

    ‘ரா. கி. ர., புனிதன், ஜ. ரா. சு’ என்ற மூவரை மட்டும் தனது ஆசிரிய இலாகாவில் வைத்துக் கொண்டு, ‘இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள பத்திரிகை என்று குமுதத்துக்கு எப்படி அவர் பெருமை சேர்த்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அதற்குக் காரணம் இருந்தது. ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அவர்கள் அந்த மூவரைப்போல் முப்பது மடங்கு ஓரொரு இதழுக்கும் உழைத்துக் கொண்டிருந்தார்.

    தாமும் அதிஅற்புதமாக எழுதிக்கொண்டு தனது சகாக்களையும் எழுத வைத்து, அவர்களோடு தனது ரசனைகளையும் பகிர்ந்துகொண்டு, அவற்றை விதம் விதமான வடிவங்களில் எழுத்துக்களாக்கி மக்களுக்கு வினியோகித்தார். எல்லா வகைச் சுவைகளிலும் என்னை எழுதவைத்தார்.

    நகைச்சுவை உணர்வில் அவர் அரசு.

    அவர் அருளால் உருவாகிய பாத்திரங்களே அப்புசாமி – சீதாப்பாட்டி.

    தமிழகத்தில் முப்பத்தைந்து வருஷங்களாக உலவி வருகிற கதாபாத்திரங்களாக அவை இன்னும் இருந்து வருவதற்குக் காரணம் எனது ஆசான் நகைச்சுவை வள்ளல் திரு. எஸ். ஏ. பி. அவர்கள்தான்.

    ஓரொரு கதையை உருவாக்குவதிலிருந்து அச்சில் வெளிவரும்வரை கூடவே நிழலென வருவார்.

    மற்றக் கதைகளை விட அப்புசாமி கதைகள் உருவாக்குவதில் அவர் பங்கு அதிகம், காட்டிய சிரத்தை அதிகம் என்றே சொல்வேன். அதில் அவரும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு குழந்தையின் கையில் கண்ணாடி ஜக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டுக் கூடவே போகிற அம்மா மாதிரி அவர் எனக்கு அப்புசாமி கதையில் கூடவே வருவார்.

    அப்புசாமியை எப்படியெல்லாம் வறுத்து எடுக்கலாம் என்று இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கண்ணில் நீர் வருகிற மாதிரி சிரிப்போம்.

    சுலபத்தில் திருப்தி அடைந்துவிட மாட்டார். இன்னின்ன மாதிரி எழுதினால் ஒருத்தரை அழவைக்க முடியும். இப்படி எழுதினால் சிரிக்க வைக்க முடியும் என்ற உத்திகளை வெகு நன்றாக அறிந்தவர். மற்றவர்களிடம் இருந்து அதை வெளிக்கொணரப் படாதபாடு படுவார்.

    நகைச்சுவை என்பது வெறும் gas அல்ல. முதலில் ஒரு கதை இருந்தே தீரவேண்டும். அப்புறம் கொண்டு வாருங்கள் அதில் அப்புசாமியை என்று கூறுவார். நகைச்சுவை என்ற பெயரால் கதை அம்சம் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் வெகு கவனமாக இருந்தார்.

    வெகு நாட்கள் வரை அப்புசாமி கதைகளை சிறுகதைகளாகவே அனுமதித்தார். சிறுகதை என்றால் கைக்கு அடக்கம். ஒரு நல்ல சம்பவமும் twistம் கொடுத்தாலே வாசகர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்.

    ஆனால், நாவல் என்பது, அதுவும் நகைச்சுவை நாவல் என்பது, நம்மை எங்கோ கொண்டுபோய்த் திசை தெரியாது அழுத்திவிடக்கூடும். ஆகவே நகைச்சுவை நாவல் எழுதுவது மிகவும் கஷ்டமான வேலை என்பதால் அப்புசாமி நாவலாக உருவாகாமலே இருந்தார். படிப்படியாக நாவலாகவும் உருவானார்.

    இந்த வகையில் அப்புசாமி சிறுகதைகள், நாவல்கள் அனைத்தையும் புத்தக வடிவில் வெளியிட்டிருக்கும் பூம்புகார் பதிப்பகம் தமிழகத்தில் பதிப்புத் துறையில் தனக்கென ஒரு தடம் போட்டு, புடம் போட்ட தங்கமாய் விளங்கிவருகிறது. அவர்கள் இதனை வெளியிட்டிருப்பதற்காக எனது மனமார்ந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    - பாக்கியம் ராமசாமி

    பொருளடக்கம்

    1. அப்புசாமி ஆன் ஐஸ்

    2. அப்புசாமி பரீட்சை எழுதுகிறார்

    3. ஆ! ஐயோ தாத்தா, போயிட்டீங்களா?

    4. செலவுக்கு 144

    5. சீதே நான் காணோம்!

    6. ஆபரேஷன் அப்புசாமி

    7. ‘லோ கட்’ டுண்டோம் பொறுத்திருப்போம்!

    8. சிலையெடுத்தான் சிந்தனையாளருக்கு

    1

    அப்புசாமி ஆன் ஐஸ்

    ஆஹ்! ஊஹ்! அஹ்

    ஆஹ்! ஊஹ்! அஹ்!

    என்ன சத்தம்? அப்புசாமி ஒரு தரம் நெளிந்தார். அவரது ஏழரை மணிக் காலைத் தூக்கம் மாமூலாக ஐந்து மணிக்குத்தான் கலைக்கப்படும்.

    விடியற்காலை எழுந்துவிடும் சீதாப்பாட்டி, பல் தேய்க்க வாஷ்பேஸினுக்குச் செல்லும்போது, வயா அப்புசாமி அறையாக மெனக்கெட்டுச் சென்று, அவரது ஒடிந்த கட்டில்மேல் சுழலும் நலிந்த மின்விசிறியை ஆஃப் செய்துவிட்டுச் செல்வது வழக்கம், அப்போது அப்புசாமிக்கு உள்ளும் புறமும் ஓர் உஷ்ணம் திகுதிகுவென்று எழும்.

    அடி சீதே, தடி சீதே, உன்னுடைய அறையில் விடிய விடிய ஏஸி கூலர். அதிலெல்லாம் மின்சார பில் ஏறவில்லையோ? என் அறையில் ஒப்புக்குச் சுழலும் ஒண்ணே அரைக்காலடி ஃபேனை நிறுத்திவிட்டுச் செல்கிறாயே அக்கிரமக்காரி.

    அவரது நீண்டநாளைய சுதந்தரதாகம் ராகம் போடத் தொடங்கும்,

    சொந்த நாட்டில் பரர்க் கடிமை செய்தே

    துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம்

    எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்

    ஏற்குமோ - தெய்வம் – பார்க்குமோ –

    என்று வெள்ளைக்கார விஞ்ச் துரையைப் பார்த்துத் தேசபக்தர் சிதம்பரனார் பாடியதுபோல், வீரகோஷம் போட்டுத் துள்ளி எழத்தான் நினைப்பார்.

    ஆனால், ‘எழுந்து மறுபடி விசிறியைப் போடுவதற்காக தூக்கத்தில் மேலும் சில அவுன்ஸ்களை இழப்பது தேவலாமா, அல்லது விசிறி இல்லாமல் தொடர்ந்து தூங்குவது மேலா? என்று இலாப நஷ்டக் கணக்குகளைப் பார்த்து, ஒரு தடங்கலுக்கு வருந்துகிறதுக்குள் இன்னொரு தடங்கலுக்கு வருந்துகிறோம் வேண்டாமென்று, விசிறி இல்லாமலே பெருந்தன்மையாகத் தூக்கத்தைத் தொடர்வார்.

    அந்தத் தடங்கல்பட்ட தூக்கத்துக்கும் இன்று தொந்தரவாக ‘ஆஹ்! ஊஹ்! அஹ்’ சத்தம்.

    அப்புசாமி எரிச்சலுடன், ஆனால் கூடுமானவரை தூக்கத்தை உதிர்த்துக் கொள்ளாமல், கண்ணாடிச் சாமான்காரன் கூடையை மெதுவே இறக்கி வைப்பதுபோல, பங்க்குக் கடைக்காரன் பழுத்த பழக் குலையில் மீதியெல்லாம் விழாமல் குறிப்பிட்டதை மட்டும் பறிப்பது போல், சர்வ ஜாக்கிரதையாக ஏற்கனவே உள்ள தூக்கம் பாதிக்கப்படாமல், மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். மொட்டைமாடியிருந்துதான் சத்தம் இறங்குகிறது என்பது அவரது செவிப்புலனுக்குத் தெரிந்ததும், மெதுவாகத் தூக்கத்தைப் பூராவும் கலைத்துக் கொள்ளாமல், ஜாக்கிரதையாக மாடி ஏறிப் பார்த்தார். அவர் கண்ட காட்சி அவரது தூக்கத்தைப் பறக்கச் செய்தது.

    மொட்டை மாடியில் மூன்று அணிகளில் கிழவிப் பட்டாளம். அனைத்துக் கிழவிகளும் கராத்தே உடையில், ஒரு தாட்டியான கராத்தே மாஸ்டருடன் சீதாப்பாட்டி சுவாரசியமாக ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருக்க, கராத்தே உடையிலிருந்த கிழவிகள் ‘ஆஹ்! ஊஹ்! அஹ்!’ என்று தாங்கள் நெடுங்காலமாகச் சேர்த்து வைத்திருந்த மூச்சுகளை அங்கே கொண்டுவந்து இறைத்துக்கொண்டிருந்தனர்.

    ‘அடக் கண்ராவியே; நண்டுங்க கொழுத்தால் வளையில் இருக்காது. கிழவிங்க கொழுத்தால் வீட்டில் இருக்க மாட்டாங்க போலிருக்கு பொழுது போகலையானால் எண்ணெய்த் தூக்கை எடுத்துக்கிட்டு பாம் எண்ணெய் க்யூவில் போய் நிற்கிறது! இதுகளுக்குக் கராத்தே வகுப்பா. அதுவும் இந்த வீட்டு மாடியில்... அவர் ரத்தம் கொதித்தது.

    அப்புசாமி வந்ததையோ அவர் முறைப்பையோ அங்கத்தினர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. சீதாப்பாட்டியும் அவ்வாறே. கிழவிகளைப் பார்க்கப் பார்க்க அப்புசாமிக்குத் தாளவில்லை.

    எவன் வீட்டிலே வந்து, எத்தனை மணிக்கு, எத்தனை கிழவிகள் எத்தனை சத்தம் போடுவது! நாட்டிலே கேள்வி முறை இல்லையா?

    உறுமல்கள், வெறுமல்கள், மாமூலான எரிமலைகள், வகுப்புக் கலவரங்கள் - அகாரணமாக அத்து மீறல்கள், அத்துமீறலான அகாரணங்கள்.

    டேய் அப்பு!

    அவருக்குள்ளிருந்து அவசரமாக எச்சரித்தார் ஓர் அப்புசாமி.

    ‘சொல்றேன் கேள்டா, அட உன்னைத்தான்! கிழ போல்ட்டாட்டம் பேசாம மசமசவென்னு இருந்துடாதே. இது உன் வீட்டுக் கிழவிக்கும் பிற வீட்டுக் கிழவிகளுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட விவகாரம்னு ஜகா வாங்கிடாதே. அகாரணமாக அத்துமீறல் நடந்திருக்கிறது. நல்லாக் கொதிடா...’

    அப்புசாமி ஜிவுஜிவுத்தார்.

    இது ஒரு நாளுடன் முடிகிற சமாசாரம் அல்ல. இந்தக் கத்தல் விழா உன் தூக்கத்தை ஒழிக்கும் கால்கோள் விழா.

    சீதே!

    Enjoying the preview?
    Page 1 of 1