Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pulariyin Muthangal
Pulariyin Muthangal
Pulariyin Muthangal
Ebook336 pages1 hour

Pulariyin Muthangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Manushya Puthiran (born 1968) is a poet and also a DMK supporter in Tamil Nadu. He was born as S.Abdul Hameed in Tiruchirappalli District district Thuvarankurichi. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as a young writer.

Over the past two decades, several of his poems got published in popular Tamil Magazines like Ananda Vikatan, Kumudam, Kalki and Kalachuvadu. His political and topical columns are regular in Tamil periodicals such as Kungumam, Nakeeran and Tamil popular daily Dinamalar.

He is known for his progressive views on various socio-political issues like capital punishment abolition, caste system annihilation, women liberation etc.

Now he lives in Chennai He is running Uyirmmai publication and Uyirmmai magazine. On Aug 19th 2015, he joined leading political party Dravida Munnetra Kazhagam of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114001946
Pulariyin Muthangal

Read more from Manushya Puthiran

Related authors

Related to Pulariyin Muthangal

Related ebooks

Reviews for Pulariyin Muthangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pulariyin Muthangal - Manushya Puthiran

    http://www.pustaka.co.in

    புலரியின் முத்தங்கள்

    Pulariyin Muthangal

    Author:

    மனுஷ்ய புத்திரன்

    Manushya Puthiran

    For other books

    http://www.pustaka.co.in/home/author/manushya-puthiran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    புலரியின் முத்தங்கள்

    மனுஷ்ய புத்திரன்

    மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 1968இல் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதி வரும் இவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2010,2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தியா டுடே இவரை தமிழகத்தின் 10 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. 2011இல் கனடா வின் தமிழ்த் தோட்ட விருது அதீதத்தின் ருசி தொகுப்பிற்காக வழங்கப்பட்டது. அதே ஆண்டில் ஆனந்த விகடனால் அதீதத்தின் ருசி சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ‘பெரியார் விருது’, 2015இல் முத்தமிழ்ப் பேரவையின் ‘இயல் செல்வம்’ விருது மற்றும் தி.மு.கவின் ‘கலைஞர் விருது’ ஆகியவை வழங்கப்பட்டன.

    தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை மாத இதழ் ஆகியவற்றின் நிறுவனர். ஊடகங்களில் முன்னணி அரசியல் விமர்சகர்களில் ஒருவராகவும் தீவிர அரசியல் செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார்.

    இவரது கவிதைத் தொகுப்புகள்:

    மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993), இடமும் இருப்பும் (1998), நீராலானது (2002), மணலின் கதை (2004), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2006), அதீதத்தின் ருசி (2009), இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் (2010), பசித்த பொழுது (2011), அருந்தப்படாத கோப்பை (2012), சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013), அந்நிய நிலத்தின் பெண் (2014), ஊழியின் தினங்கள் (2016) புலரியின் முத்தங்கள் (2016)

    கட்டுரைத் தொகுப்புகள்:

    காத்திருந்த வேளையில் (2003), எப்போதும் வாழும் கோடை (2003), என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009), டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன (2012), தோன்ற மறுத்த தெய்வம் (2012), எதிர்க்குரல் (2012), இந்தியர்களின் போலி மனசாட்சி (2012), நிழல்கள் நடந்த பாதை (2013), குற்றமும் அரசியலும் (2013), கைவிட்ட கொலைக் கடவுள் (2013), நிழல்களோடு பேசுவோம் (2014)

    e-mail: manushyaputhiran(a)gmail.com

    கோடையின் நிழல்கள்

    கோடையின் கசகசப்புகளும் வியர்வையும் சொற்களில் இறங்கி விடாமல் இந்த முன்னுரையை எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தி மயங்கி நிழல்கள் விழுகின்றன. பறவைகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. எனக்கும் திரும்பிப்போக வேண்டும் போலிருக்கிறது. எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று உத்தேசமாக வாவது தெரிந்தால் திரும்ப முடியுமா இல்லையா என்று யோசிக்க வாவது செய்யலாம். வார்த்தைக்கூட்டங்கள் எறும்புகளைப் போல சாரைசாரையாக எங்கோ மறைவிடம் நோக்கிச் செல்கின்றன. நான் எவ்வளவு தூரம் களைத்துப்போக முடியுமோ அவ்வளவு தூரம் களைத்துப்போய்விட்டேன்.

    உங்களுக்கு இந்த முன்னுரையை எழுத இன்னும் ஒரு மணி நேரமே அவகாசம் இருக்கிறது என்கிறாள் செல்வி. இது என்னை இனம்புரியாத பதட்டத்திற்கு ஆளாக்குகிறது. எதைஎதையோ நினைத்து சஞ்சலமடைகிறேன். ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு எது சாத்தியப்படுமோ அதுதான் இந்த முன்னுரை. வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் நான் இப்படித்தான் நின்றுகொண்டிருக்கிறேன். எனக்குத் தரப்பட்ட நேரத்திற்குமேல் என்னால் எதிலும் நீடித்திருக்க முடியாது. ஒரு காதலுக்கு, ஒரு சாகசத்திற்கு, ஒரு சூதாட்டத்திற்கு யாரிடமோ என்னை நானே நிரூபித்துக்கொள்வதற்கு எனக்குத் தரப்பட்ட நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் எப்போதும் கிடைத்ததே இல்லை. எனக்கான மணி அடிப்பதற்குள், எனக்கான கதவு சாத்தப்படுவதற்குள் நான் அவற்றிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்குப் பழக்கப்பட்டு விட்டேன். நான் யாருடைய கண்களையும் இப்போதெல்லாம் சந்திப்பதே இல்லை. மாறாக, ஒவ்வொருவருடனும் இருக்கும்போது நான் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய பிரச்சினை அல்ல. நமது காலம் இப்படித்தான் இருக்கிறது. எல்லா இடத்திலும் நீங்கள் கண்ணாடியில் விழும் பிம்பங்கள் மட்டுமே. இந்தக் கவிதைகளும் அப்படித்தான். நான் கவித்துவத்திற்காக எனக்கு அனுமதிக்கப்பட்ட குறுகிய கணங்களை அடைந்து பிறகு சுவடின்றி வெளியேறியதன் அடையாளங்களே இக்கவிதைகள்.

    சென்ற ஆண்டின் கோடையில் துவங்கி பெருமழைக்காலத்தில் எழுதி முடிக்கப்பட்டவை இக்கவிதைகள், பெருமழைக்காலத்தின் கொடுங்கனவுகள் ‘ஊழியின் தினங்கள்’ என்ற ஒரு தனித்தொகுப்பாகப் பிரிந்து சென்றன. அதற்குப் பிறகும் இவ்வளவு கவிதைகள் எஞ்சி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் வெளிவரும் எனது கவிதைத் தொகுப்பிற்கு பதில் ஆறுமாதங்கள் கழித்து இந்தக் கடும் கோடையில் வெளிவருகிறது. இது நான் எனது ஒரு புத்தகத்தை வெளியிடுகிற பருவமே அல்ல. நான் என் ஒவ்வொரு புத்தகத்தோடும் குளிர்கால இரவுகளின் நினைவுகளால் பிணைக்கப்பட்டவன். அந்தக் குளிரில் என் சொற்களை ஆழமாகப் புதைத்துவிட விரும்புகிறவன். ஆனால் இப்போது நான் வெப்பத்தில் நீந்தி நீந்தி இந்தச் சொற்களிடம் வருகிறேன். இந்தக் கோடையின் இவ்வளவு வெளிச்சத்தில் என்னை நானே இவ்வளவு நிர்வாணமாகப் பார்த்துக்கொள்வதற்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது.

    நான் இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தை திரும்பிப் பார்க்கத்தான் வேண்டுமா என்ன? எல்லாவற்றிலும் இருக்கும் ஈரமற்ற தன்மையை அறிந்துகொண்ட தினத்தின் கவிதைகள் இவை. மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு என்னை நானே ஆயத்தப்படுத்திக்கொண்ட நாட்கள் அவை. நீங்கள் எப்போதாவது ஒரு நாள் காலையில் அறிவுறுத்தப்படுவீர்கள் இனி உங்களை நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று. முதலில் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். உங்கள் பதிலுக்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை. நீங்கள் அதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா என்று யாரும் உங்களைக் கேட்கப் போவதில்லை. ஆனால் நாம் அதற்காக யாரையேனும் குற்றம் காணமுடியுமா? நீங்கள் உங்கள் பங்கிற்கு எதையேனும் ஒரு அச்சை முறியச் செய்திருப்பீர்கள். உங்கள் தன்னிரக்கத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருப்பீர்கள். அது முழு உண்மை அல்ல என்று உங்களுக்கு தெரியும் உங்களுக்கு எது நடக்காது என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தீர்களோ அதை நீங்கள் நேருக்கு நேர் சந்திக்கும்போது ஒரு சிறு குழந்தை போல தடுமாறி விடுகிறீர்கள். பிறகு நீங்கள் உங்கள் உலகத்தை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அப்போது தான் தெரியும், நீங்கள் இந்த உலகத்தில் உங்களுக்குத் தேவையான எதையும் கற்றுக்கொள்ளவே இல்லை என்று. உதாரணமாக, ஒரு முட்டையை பதமாக எவ்வளவு நேரம் வேக வைக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாமலே போகும். தனித்து வாழ்பவர்களின் உலகமொன்றிற்குள் நீங்கள் திடீரென நுழைவது ஒர் ஆழ்துளை கிணற்றிற்குள் கால்தவறி விழுந்துவிடுவது போலாகும். பிறகு நீங்கள் உங்கள் குரலையே வேறு யாருடைய குரல்போலவோ கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். அந்தக் குரலை கேட்டுக்கேட்டு சீக்கிரமே உங்களுக்கு அலுத்துவிடும் பிறகு உங்கள் மெளனத்தைக் கேட்கத் துவங்குவீர்கள். உங்களுக்கு நிறைய நேரம் எஞ்சிவிடும். ஆனால் உங்களுக்கு நேரமே இல்லாததுபோல பதட்டமடைவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத ஏதோ ஒரு சம்பவம் நடக்கும் என்று எப்போதும் பதட்டத்திலும் அச்சத்திலும் இருப்பீர்கள். ஆனால் இந்த வாழ்க்கையின் பெரிய துரதிர்ஷ்டமே உங்களுக்கு எதுவுமே நடக்காது என்பதுதான். நீங்கள் பாழடைந்த ஒரு பழங்காலக் கோயிலில் கிடக்கும் உடைந்த சிற்பம் என்பதை அறிந்துகொள்ளும் நாளில் மனமுடைந்து போவீர்கள். நான் தனித்து வாழும் மனிதர்களின் உடைந்த மனோரதங்களை எழுதத்தொடங்கினேன். தனித்திருக்கும் வீடு என்ற கவிதைத் தொடர் அப்போது உருவானதுதான்.

    ஆனால் அந்தத் தொடரின் ஒவ்வொரு கவிதையையும் எழுதி முடிக்கும்போது மணிக்கட்டை ஒரு துருப்பிடித்த பிளேடால் வெட்டிக் கொள்வது போலிருந்தது. எனக்கு எனது சொந்த ரத்தத்தைப் பார்க்க மிகவும் அச்சமாக இருந்தது. நான் அந்த பிளேடைக் கைவிட்டு என் இச்சையின் சொற்களுக்கு, காமத்தின் சொற்களுக்குத் திரும்பினேன். என் சொற்களை மனித உடலின் வாசனையால் நிரப்பத் தொடங்கினேன். இந்த வாசனை நாம் தனியாக இல்லை என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. நமது சாம்பலின் மேல் அது ஒரு சிறிய மழைப்பொழிவை உண்டாக்குகிறது. நான் எதுவாக இருந்தேனோ அதுவாக இல்லை என்பதை என்னை நானே நம்ப வைத்தேன். காதலின் நூறு சம்பவங்கள் என்ற ஒரு நீள் கவிதையை எழுதினேன். எனது இருபது வயதில் நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை அது. என் சிநேகிதி ஒருத்தி ஒரு முறை கேட்டாள், நமக்கு வயதாக வயதாக வாழ்க்கையின் ஆசிர்வாதங்கள் குறைந்து கொண்டே வருகின்றனவா? என்று. நான் திடுக்கிட்டு நின்றுவிட்டேன். நான் மறுக்க விரும்பினேன். அது என் தன்னம்பிக்கையைக் குலைப்ப தாக இருந்தது. ஒருவேளை அது அப்படித்தான் இருக்கவும் கூடும். நம் இளமை நமக்குக் காட்டுகிற சலுகைகள் எதுவும் வயது செல்லச் செல்ல நமக்குக் கிடைப்பதே இல்லை. நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நாம் அதிக விலை செலுத்த வேண்டியிருக்கிறது. நிராகரிப்பின் அவமானங்களை மறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நமது பிற்காலங்களில் கடவுள் நம்மிடம் அலட்சியமாக இருந்து விடுகிறார். முதுமையில் முற்றாக கைவிட்டு விடுகிறார். ஆனால் சொற்களின் வழியே நம் இளமைக்கு ஒரு ரகசியப்பாதை இருக்கிறது. நான் என் தண்டனைக் காலங்களிலிருந்து இப்படித்தான் என்னை விடுவித்துக்கொண்டேன். பிறகு ‘தண்டனைக்காலத்தின் முதல் தினங்கள்’ என்ற தலைப்பில் சில கவிதைகளையும் எழுதினேன்.

    நான் எனது அந்தரங்கமான உணர்ச்சிகளாலும் குழப்பங்களாலும் உருவாக்கிய மனச்சித்திரங்கள் மட்டுமல்ல இத்தொகுப்பு. மாறாக, எனது சொந்த ஆசாபாசங்களினால் நான் எந்தளவிற்கு பாதிக்கப் பட்டேனோ அதைவிடக் கடுமையாக சமூக அரசியல் சூழலில் மேலெழுந்து வந்த பதட்டங்கள் என்னை பாதித்தன. இந்தியாவை அடிப்படைவாதத்தின் காரிருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது என்ற சகுனங்கள் நிம்மதியிழக்க வைத்தன. நாடு மிகப்பெரிய கலாச்சார வன்முறைகளையும் அரசியல் வன்முறைகளையும் எதிர்கொண்டது. இந்தியாவின் அறிவார்ந்த சமூகம் ஒரு பேரெழுச்சியை அடைந்த தருணம் அது. எழுத்தாளர்களும் கலைஞர்களும் பண்பாட்டு வன்முறைக்கு எதிராக தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். யாரும் தாங்கள் விரும்புகிற ஒரு இந்தியாவைக் கட்டமைக்க முடியாது. பேரரசர்களும் அன்னிய படையெடுப்பாளர்களும் தோல்வியடைந்த புள்ளி அது. இந்தியாவின் இந்தப் பன்முகத்தன்மைக்கான எதிர்க் குரலைப் பல கவிதைகளில் பதிவு செய்தேன். "மனதைப் புண்படுத்தும் கவிதை’, ‘மாமிசத்தின் கதை’, ‘கிருமி’ போன்ற கவிதைகள் இந்தத் தளத்தில் நின்று எழுதப்பட்டவை.

    நான் இக்கவிதைகளை எழுதுகிற தருணத்தில் அடைந்த தருணங்களின் தனிமை உணர்ச்சியைவிட கடுமையான தனிமை உணர்ச்சியையே இப்போதும் அடைகிறேன். என் குழந்தைகளின் தீபங்கள் போல சுடரும் முகங்களின் வெளிச்சம் எனது பயங்களைக் கொஞ்சம் குறைக்கின்றன.

    எனது சொற்களிலான உலகத்தின் குழப்பங்கள் அருகிலிருக்கும் எவரையும் பொறுமையிழக்கச் செய்பவை. கசந்து விலகச் செய்பவை. இருந்தும் இந்தக் காலங்களில் என்னையும் என் சொற்களையும் பாதுகாத்த செல்விக்கு என் அன்பு.

    மனுஷ்ய புத்திரன்

    26.0.5.2016

    manushyaputhiran@gmail.com

    பொருளடக்கம்

    சத்தியமான அன்பு

    வாதைகளின் பசித்த நடை

    நிலை

    என் கனத்த உடல்

    பேரிக்காய்கள்

    இந்த மனம்

    பறவை எச்சம்

    அழிவுப் பாதை

    நான்கு பிரச்சினைகள்

    சிவந்த மாம்பழங்கள்

    நீ உள்ளே வரும்போது

    வீடு திரும்புதல்-1

    வீடு திரும்புதல்-2

    கரைய முடியாத கணங்களில்

    உதவிக்குக் காத்திருப்பவர்கள்

    புத்தகத் திருடன்

    மறதி

    கடந்து செல்லும் கணம்

    திருப்பிக் கொடுக்க முடியாத அன்பு

    வாழுதலின் நிமித்தம்

    பிரிவுத் துயர்

    நூறு ரூபாய் வீழ்ச்சி

    தூங்கும்போது எழுப்பாதே

    நான் என்ன செய்ய வேண்டும்?

    நிழலற்ற காதல்

    பழக்காதே

    முறிக்கும் கலை

    நாளை

    துக்கம் கேட்பது

    எப்போது காட்டுவேன்

    ஆசானைக் கொல்வது

    ரோஜா என்பது

    மனதைப் புண்படுத்தும் கவிதை

    அத்துவானத்தில் ஒரு நடை

    பாதி காபி

    எப்போது முடியும் இரண்டாம் ஆட்டம்?

    நினைவு-1

    நினைவு-2

    நினைவு-3

    ஆசுவாசம்

    அன்னியமாதல்

    தூரம்

    குற்ற அறிக்கை

    பிறழ்வு

    எனது சந்தர்ப்பங்கள்

    கண்ணீரைப்

    Enjoying the preview?
    Page 1 of 1