Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kukgramathu Kuyil
Kukgramathu Kuyil
Kukgramathu Kuyil
Ebook95 pages59 minutes

Kukgramathu Kuyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580114201909
Kukgramathu Kuyil

Read more from Hamsa Dhanagopal

Related to Kukgramathu Kuyil

Related ebooks

Reviews for Kukgramathu Kuyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kukgramathu Kuyil - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    குக்கிராமத்துக் குயில்

    Kukgramathu Kuyil

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    குக்கிராமத்துக் குயில்

    1

    மர பீரோவைத் திறந்தாள் எல்லம்மா. சிறு பெட்டியை வெளியே எடுத்தாள். அதிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தாள். மாட்டல், கல்லிழைத்த அட்டிகை, கனத்த தங்கச் சங்கிலிகள், வளையல்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பத்துப் பவுன் தாலிக்கொடி புலிப்பல் தாலி- பொன்னில.

    உம்... எல்லாம் சேர்த்தாகிவிட்டது. இப்போது மாப்பிள்ளை தேடிவிட்டால் மகள் செண்பகத்தைப் புருஷன் வீடு அனுப்பிவிடலாம். தந்தையில்லாத குறை தெரியாமல் கண் கலங்காமல் இந்தப் புரட்டாசி வந்தால் மகளுக்குப் பத்தொன்பது வயது நிறையும். வரும் தைக்குள் எப்படியும் மேளம் கொட்டியாக வேண்டும்.

    இல்லாவிடில் சுற்றத்தாரிடையே கேவலம். எல்லம்மா, பெருமூச்சுடன் நகைப்பெட்டியை உள்ளே வைக்கிறாள். பீரோவை மூடி, சாவியை இடுப்பு வெள்ளைச் சேலை மடிப்பில் செருகிக் கொண்டாள்.

    வீட்டைத் தாளிட்டு, குனிந்து படிகளில் இறங்கினாள். களத்து மேட்டில் பிணைக்கப் பட்டிருந்த காளைகள், பசுக்கள் இவள் வரவில் உரக்க ‘அம்மா'வை அழைக்கின்றன.

    பசியா தோ வாரேன். வெள்ளைச் சேலை மாராப்பைச் சரிப்படுத்தி, தவிட்டு மூட்டைகள் பக்கம் போனாள். கழுத்து, கை, நெற்றி வெறுமை சொல்லிற்று. வாழ்க்கைச் சுமைகளால் கூந்தலின் இயற்கைக் கருமையைக் கொள்ளையிட இயலவில்லை. உழைத்து உரமேறின தேகம்.

    நாற்பது வயதைக்கூட நெருங்காத எல்லம்மாவிடம் இளமை இன்னமும் சரணடைந்திருந்தது. செயற்கைப் பூச்சுக்களுக்கு இல்லாத கவர்ச்சியும் அழகும் இயற்கைக்கு இருந்தது. வயல் வரப்பில் தடதடயென்கிற ஒலி. அதைத் தொடர்ந்து சுருட்டையம்மா, பெருமூச்சுக்களில் மார்பகம் ஊஞ்சலாட, ஒடி வந்தாள்.

    மாடு, தவிடு கழனி எல்லாம் மறந்து எல்லம்மா திரும்பிச் சிரித்தாள்.

    ஏண்டி ஆயா, இப்படி ஒடியாறே? காவேரியில வெள்ளம் வந்திருச்சா என்ன?

    ஆமாக்கா. வெள்ளம்தான் வந்திருச்சி. ஒன்ணையும் ஒன் குடும்பத்தையும் அடிச்சுட்டுப் போற வெள்ளம்.

    என்ண்டி, என்ன ஆச்சு ஒனக்கு? நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தே? குடி முழுகிட்டாப்பல என்னடி பேச்சு?

    எல்லம்மாக்கா, உன் குடிதான் முழுகிப் போச்சு. வந்து, ஒம் பொண்ணு செம்பகத்துக்கு...

    சுருக்கமாச் சொல்லு, எம்மவ சம்பகம் கோவிலுக்குப் போயிருக்கா. அவளுக்கு என்னாச்சு சொல்லுடி?

    கல்யாண மேடை ஏறிட்டா நம் செம்பகம்.

    "இன்னாடி சொல்றே!' '

    பெரிய பண்ணையார் மவன் பழனிச்சாமிக்கும் சம்பகத்துக்கும் கண்ணாலம் நடக்கப் போவுது.

    என்னது! அந்தப் பைத்தியக்காரப் பயலுக்கும் சம்பகத்துக்குமா! நெசமா... நெசமாடி.

    சுருட்டையம்மாவைப் பிடித்து உலுக்கினாள் எல்லம்மா.

    ஆமா. ஆமா... சுருக்கா ஒடு. உன்னால முடிஞ்சா கண்ணாலத்தை நிறுத்திரு. இல்லன்னா குடும்பம் கெட்டுரும்.

    வூட்டப் பார்த்துக்கோடி.

    எல்லம்மா, மார்பில் அடித்தபடி வயல் வரப்புக்களில் புகுந்து ஒடிக் கொண்டிருக்கிறாள். கால் இடறிச் சேற்றில் விழுந்தும் எழுந்தும்.

    அண்ணமார்சாமி, எம் ராசாத்தியக் காப்பாத்து. அந்தப் பைத்தியத்துக்குக் கட்டி வச்சிராதே.

    அது காவிரிக் கரையில் ஒதுங்கி நிற்கும் கிராமம். நாகரிகமோ, கல்வி அறிவோ அதிகம் எட்டிப் பார்க்காத குக்கிராமம்.

    காலையில் மாரியம்மன் கோவிலுக்குத்தானே போனாள். அதற்குள் எப்படி...

    கிராமத்தின் பெரும்பகுதி நிலம் பெரிய பண்ணை என்று காலம் காலமாய் அழைக்கப்படுகிற பெரியசாமிக்குச் சொந்தம். ஆனால் அவர் நிலம் நடுவே வகிடு எடுத்தது போல இவர்கள் நிலம் இருபது ஏக்கரா பரவி இருந்தது. ஒருபுறம் இருந்து மறுபுறம் போக இவர்கள் நிலத்து வழியிலோ அன்றி சுற்றிக்கொண்டோதான் அவர்கள் போக வேண்டியிருந்தது. அவருக்கு மூன்று மனைவிகள். இப்போது மூவரும் உயிருடன் இல்லை.

    அவர் முதல் மனைவியின் ஒரே மகன்தான் பழனிச்சாமி. பார்க்க ஆள் அழகாக, வாட்டசாட்டமாக இருப்பான். பட்டணத்தில் டாக்டருக்குப் படித்துக்கொண்டிருந்தான்.

    யார் செய்த வினையோ. கிராமத்திற்கு டாக்டராக வரவேண்டியவன் பைத்தியமாக வந்திருந்தான். சில நேரம் பிடிக்கு அடங்காமல் ரகளை செய்பவன், பல நேரம் கவனம் எங்கோ தொலைய, அவர்கள் வீட்டுப் பெரிய திண்ணையில் அமர்ந்திருப்பான்.

    அந்த ரெண்டுங்கெட்டானுக்கா இந்தப் பச்சைக்கிளி!

    இவளின் ஒவ்வொரு இதயத்துடிப்பும் ‘செண்பகம், செண்பகம்,’ என்றல்லவா துடிக்கிறது.

    இரவு தூக்கத்தின்போதும் இந்தத் தாயின் அருகாமை இல்லாவிட்டால் மகளுக்கு உறக்கம் வராதே. அவளா இப்படி தன்னைத் தவிக்க விட்டுவிட்டு...

    Enjoying the preview?
    Page 1 of 1