‘Gopu’win Chinna Chinna Kathaigal
()
About this ebook
திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.
2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.
02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.
2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.
இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.
சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.
Read more from V. Gopalakrishnan
‘Gopu’win Sirapana Kathaigal Collection 4 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win kuttiyondu Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Nadaka Aakkam Rating: 0 out of 5 stars0 ratings'Gopu'win Palli Vazhkai Anupavangal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 1 Rating: 0 out of 5 stars0 ratings'Gopu'win Pokishangal Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 5 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 3 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to ‘Gopu’win Chinna Chinna Kathaigal
Related ebooks
Pulan Visaranai? Rating: 0 out of 5 stars0 ratingsBombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Poo Vizhi Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsManitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi-7 Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Ennai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKavalai Neram Kaalai 10 Mani Rating: 5 out of 5 stars5/5Gnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsSila Mugangalin Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthir Pootha Nandhavanam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thaanda Kolai Rating: 0 out of 5 stars0 ratingsManthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Thodarum Rating: 5 out of 5 stars5/5Thinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Vaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsRendu Idly, Oru Vadai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Karuppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Sakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 0 out of 5 stars0 ratingsKathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5'Jolly' Kathaigal..! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for ‘Gopu’win Chinna Chinna Kathaigal
0 ratings0 reviews
Book preview
‘Gopu’win Chinna Chinna Kathaigal - V. Gopalakrishnan
http://www.pustaka.co.in
'கோபு' வின் சின்னச் சின்னக் கதைகள்
‘Gopu’vin Chinna Chinna Kathaigal
Author:
வை. கோபாலகிருஷ்ணன்
V. Gopalakrishnan
For more books
http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பிரமோஷன்
2. டிஸ்மிஸ்
3. கார் கடத்தல்
4. பகற்கொள்ளை
5. முனியம்மா
6. I.Q. TABLETS [ஐக்கூ டேப்லட்ஸ்]
7. கொஞ்ச நாள் பொறு தலைவா ! ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா !!
8. சொந்தம்
9. நம்பிக்கை
10. புத்திசாலியான மனைவி
11. பவழம்
12. அன்னமிட்ட கைகள்
13. காலம் மாறிப்போச்சு
14. இனி துயரம் இல்லை
15. காணாமல் போன கைக் கடியாரம்
16. பலி ஆடுகள்
17. I LOVE YOUR DARLING !
18. கனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்
19. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...... இந்த நாடே இருக்குது தம்பி......
20. சிரிக்கலாம் வாங்க! (உலக்கை அடி)
1. பிரமோஷன்
பஞ்சாமிக்கு காது அவ்வளவாகக் கேட்காது. அதனால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் சென்ற ஆண்டு கிடைக்க வேண்டிய பிரமோஷன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டாவது கிடைக்குமா என்பது இன்று அலுவலகம் போய் வந்தால் எப்படியும் தெரிந்துவிடும்.
இந்த வருஷம் எப்படியும் கட்டாயம் கிடைத்து விடும்
என்று மேனேஜரின் மனைவி சென்ற வெள்ளிக்கிழமை, கோயிலில் பார்த்தபோது சொன்னது சற்றே ஆறுதல் அளிப்பதாக இருந்தது, பஞ்சாமியின் மனைவி அபிராமிக்கு.
தன் கணவர் வரவை பால்கனியிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அபிராமி. சூடான சேமியா பாயஸம் ஏலம் முந்திரி மணத்துடன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.
பஞ்சாமி வழக்கத்திற்கு மாறாக மிகவும் அவசரம் அவசரமாக ஓடி வருவதிலிருந்தே அபிராமிக்கு விஷயம் புரிந்து விட்டது. மகிழ்ச்சியுடன் பாயஸத்தைக் கிளறப்போனாள்.
வேகமாக உள்ளே வந்த பஞ்சாமி வழக்கம்போல் பாத் ரூமுக்குச் சென்றார். கை, கால், முகம் கழுவிவிட்டு வரட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தாள் அபிராமி. பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவரிடம் பிரமோஷன் ஆச்சா?
என்று கேட்டாள்.
முகம் முழுவதும் சிரிப்புடன், ஒருவித பூரிப்புடன் தலையை ஆட்டினார் பஞ்சாமி.
சூடான பாயஸத்தை ஆற்றியபடி நீட்டினாள், தன் அன்புக்கணவர் பஞ்சாமிக்கு.
என்ன விசேஷம்; எதற்குப் பாயஸமெல்லாம்
என்று கேட்டார், பஞ்சாமி.
பிரமோஷன் ஆச்சா? என்று கேட்டதற்கு பலமாகத் தலையை ஆட்டினீர்களே! அதற்குத்தான்
என்றாள் அபிராமி சற்று உரத்த குரலில்.
...........
.......................
.................................
............................................
............................................................
.......................................................................
......................................................................................
இரண்டு நாட்களாகவே மலச்சிக்கலுடன் அவதிப்படுகிறேனே! 'மோஷன் ஆச்சா' என்று கேட்டாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்
என்றார் மிகவும் அப்பாவியாக, இந்த முறையும் பிரமோஷன் கிடைக்காத பஞ்சாமி.
இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது.
***
2. டிஸ்மிஸ்
மிகவும் கறார் பேர்வழியான அந்த அலுவலக மேனேஜர், ஊழியர்கள் பகுதிக்கு திடீர் விஜயம் செய்தார்.
அவர் வருவதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அரட்டை அடித்துக்கொண்டும், வீண் வம்பு பேசிக்கொண்டும், வீணாகப் பொழுதைக் கழிப்பதைப் பார்த்ததும், கோபம் வந்து கத்தலானார்.
அனைவர் டேபிள் மீதும் பல்வேறு செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எனக் குவிந்திருந்தன.
ஒவ்வொருவராகத் தன் அறைக்கு வரவழைத்து, இன்று காலை முதல் உறுப்படியாக என்ன வேலைகள் பார்த்தாய்? எவ்வளவு கதைகள் படித்தாய்? எவ்வளவு ஜோக்குகள் படித்தாய்? என்னென்ன செய்திகள் படித்தாய்? எதைஎதைப்பற்றி யாரிடம் என்னென்ன பேசினாய்? அதைப்பற்றிய உண்மை விபரங்களை மறைக்காமல் கூறவும் என மிரட்டலானார்.
பொய் சொன்னால் அவருக்கு சுத்தமாகப்பிடிக்காது. குறுக்கு விசாரணை செய்து உண்மையை எப்படியும் கண்டு பிடித்து விடுவார் என்பது அங்கு வேலை பார்க்கும் அனைவருமே அறிந்த விஷயம்.
அவரவர்கள் தாங்கள் செய்து முடித்த அலுவலகப்பணிகளை பயந்து கொண்டே விபரமாக எடுத்துக்கூறினர்.
எல்லாவற்றையும் உடனுக்குடன் மேனேஜர் குறிப்பெடுத்துக்கொண்டார்.
விசாரணை முடிவில், மிகவும் சாத்வீகமானவனும், பயந்த சுபாவம் உள்ளவனும், நல்ல பையனும், புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தவனுமான ரவிகுமார் மட்டும் எந்தக்கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ, செய்திகளோ படிக்கவில்லை என்றும், யாரிடமும் எந்த அரட்டைப்பேச்சுகளும் பேசவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.
..........
..........
..........
..........
..........
நீ நம் அலுவலகத்துக்குப் பொருத்தமான ஊழியர் அல்ல
என்று கூறி ரவிக்குமாருக்கு மட்டும் வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார் மேனேஜர்.
.............
.............
.............
.............
.............
.............
.............
வேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.
***
3. கார் கடத்தல்
என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அந்த ஜன சந்தடி மிக்க பஜாரில் என்னுடைய தக்காளி நிற மாருதி கார்,