Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penvazhipaadu
Penvazhipaadu
Penvazhipaadu
Ebook122 pages50 minutes

Penvazhipaadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

PUTHIYAMAADHAVI is the pen name of Mallika, who began to write in 2000. She has a Post Graduate Degree from Madurai University and has also done Certificate Courses in Feminism and social Service. She lives in Mumbai. She is the Fourth Generation of Mumbai Tamil Community. Her house has become the Central place for Tamil Literarty activities in Mumbai.

Pudhiyamaadhavi worked in HSBC for 22 years and took VRS in 2004 to concentrate on her writing, reading and other social activities. She is a prolific writer and has published 15 books so far, which includes six collection of poems, four short stories collections and five non-fixtion. Her poems ans stories have received appreciation and recognition. In 2006, she won the SHIRPI AWARD for her poetry collection "NIZHALKALAI THEDI" . Her short story collection "PEN VAZHIPADU" got writer JAYANTHAN AWARD. EZHUTHTHU trust selected her collection of poems "MOUNATHTHIN PILIRAL" and publised in 2015.

Puthiyamaadhavi's stories and poems have been translated into Malayalam and German Language. She has translated collection of poems of other Indian languages into Tamil and published with title "KATHAVUKAL THIRAKKUM VANAM".

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580117301997
Penvazhipaadu

Read more from Puthiyamaadhavi

Related to Penvazhipaadu

Related ebooks

Reviews for Penvazhipaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penvazhipaadu - Puthiyamaadhavi

    http://www.pustaka.co.in

    பெண்வழிபாடு

    Penvazhipaatu

    Author:

    புதியமாதவி

    Puthiyamaadhavi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/puthiyamaadhavi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பெண்வழிபாடு

    (கதைகள்)

    புதியமாதவி C

    நன்றி

    யுகமாயினி

    வடக்கு வாசல்

    மணல்வீடு

    செளந்தரசுகன்

    கல்வெட்டுப் பேசுகிறது

    ஊடறு - இணைய இதழ்

    பெண்ணியம் - இணைய இதழ்

    திண்ணை - இணைய இதழ்

    கீற்று - இணைய இதழ்

    மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்

    சிந்தனையாளர் சங்கமம், மும்பை.

    இருவாட்சி பதிப்பகம் உதயகண்ணன்

    சித்தன்

    அன்பாதவன் சு. கதிரவன் (நூல் வடிவமைப்பு)

    வாசுகி (அட்டைப்ட ஓவியம்) மற்றும்

    புஸ்தகா பத்மநாபன்.

    கதைகள்

    1. பெண்வழிபாடு

    2. எஸ்தரும் கருப்பண்னசாமியும்

    3. அவளும் அம்மா வேடமும்

    4. பாட்டி என்ன சொல்லிவிட்டாள்?

    5. அம்மாவின் காதலன்(ர்)

    6. பரிக்ஷித்

    7. தசரதபுரம்

    8. மரகதம் பாட்டி யு.எஸ். விசிட்

    10. லேட்டஸ்ட் புராணக்கதை

    11. டிரைவருக்கு சலாம்

    12. மகளிர் தினம்

    ஷோகய்லா அப்துல்லலிக்கு

    பெண்வழிபாடு

    சில நினைவுகள்..

    அன்பு ஷோகய்லா.

    உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எனக்கு உங்களைத் தெரியும். 83களில் உங்களைப் பற்றி அதிகம் பேசி இருக்கிறேன், நினைத்திருக்கிறேன். 1983ல் நான் செம்பூரில் பன்னாட்டு வங்கியில் பணிபுரிந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டம். 1980 , மும்பை, செம்பூர் பகுதியில் ஜூலை மாதத்தில் உங்கள் 17 வயதில், உங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அது. அதன்பின் காலங்கள் உருண்டோடியது. இந்திய தலைநகர் டில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வின் எதிரொலியாக 2013 ஜனவரியில் நியுயார்க் டைம்ஸில் மீண்டும் உங்களைப் பற்றி வாசிக்க முடிந்தது. ஷோகய்லா. நினைவிருக்கிறதா..? 1983ல் ஜூன் ஜூலை மாத மனுஷி இதழில் உங்களுக்கு நேர்ந்தக் கொடுமையைப் பற்றி நீங்கள் எழுதியிருந்த வரிகள்.

    வாழ்வதற்காகப் போராடினேன், ஜெயித்துவிட்டேன். என்று. தலைவணங்குகிறேன். ஷோகய்லா உங்களுக்கு.

    தொடர்புக்கு: sohaila@sohailaink@com

    முன்னீடு - (சித்தன் பிரசாத்)

    மிதந்து அலையும் கற்பிதத் துகள்களிலே எரிந்து கொண்டேயிருக்கும் காலத்தின் சில நாக்குகள் சத்தியத்தைத் துழாவித் தேடி மடிகின்றன. கற்பிதமும் கற்பனையும் ஒன்றல்ல. மாறுபட்டனவுமல்ல. கற்பனையை இட்டுக் கட்டுதல்' என்று அர்த்தப்படுத்திக் கொள்வது ஆபாசமானது. புதியதின், கண்டுபிடிப்பின், படைப்பின் நாற்றங்காலே கற்பனையும், கனவும். கும்பகர்ண உறக்கத்திலிருந்து சட்டென விழித்தெழும் சத்தியத்தின் பெருமூச்சில் கற்பனைகள் சில கலைந்து கேள்விக்குள்ளாகும் என்பதும் யதார்த்தமே. டார்வின் கோட்பாடு புதியதாக உள்நுழைந்து சத்தியவேதமென நம்பியிருந்த பழையன பல கேள்விக்குள்ளானது வரலாறு. அதனால் கலக்கத்திற் குள்ளான அக்காலப் பெரும்பான்மை மாந்தரைப் பிரதிநிதி படுத்தும் வகையில், கவிஞர்கள் மாத்யூ அர்னால்ட், தாமஸ் கிரே போன்றோரை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களது படைப்புகளில் புலம்ப வைத்தது என்பது இலக்கிய ஆவணம். அதனாலேயே பிரதி என்பது முற்றுபெற்ற நூல் அல்ல என்றாகிறது. அதிலிருந்து பிறக்கும் கேள்விகள், மாற்றம் காணும் உலகைச் சுட்டி அம்மாற்றங்களிலிருந்து உண்மையை, அறிவை விளக்குவதோடு நின்றுவிடுவன அல்ல. மிக நல்ல பிரதிகள் அதைக் கடந்து, யதார்த்த உலகையும் சுட்டுகின்றன. இரண்டு அல்லது மேற்பட்ட உலகங்கள் ஒன்றையொன்று நேர் கொள்கிற போது அல்லது அவைகளுக்கான கற்பித எல்லையைத் தாண்டும் போது நேர்கிற விளைவுகளையும் உள்ளுரையாக அல்லது வெளிப் படையாகச் சொல்லிச் செல்கின்றன.

    இருபதாம் நூற்றாண்டு கண்ட அறிவியல் மாற்றங்கள் அதுவரையில் இருந்த உலகை சட்டென அடியோடு புரட்டிப் போட்டன. மனித வாழ்வு பெரும் மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. கிராமம் அல்லது நகரம், அதன் எல்லைப்புறப் பிரதேசங்கள், அதனுள் அவன் தேவைகளை நிரவல் செய்து திருப்தி கண்ட அவனது தொழில் சார்ந்த வாழ்க்கை இல்லாது போயிற்று. பணி, வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பன தனித்தனியாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று இணைந்து அவனது மகிழ்ச்சிக்கும் சக்திக்கும் காரணிகளாக இருந்தவை அழிந்து போயின. இல்லம், பணியிடம், வெளியுலகம், பொழுதுபோக்கு, பகிர்தல், உறவு, பண்பாடு அனைத்துமே இயற்கையோடியைந்ததாக, பயனை மட்டுமே எதிர்பார்க்காத ஒன்றாக, சுயசார்பு உலகமாக இருந்தது. அடிப்படை உணர்வுகளான பசி, காமம், பாதுகாப்பு தன்னிறைவுடன் இருந்தது. கொண்டாட்டம் அம்மனிதனது இன்றியமையாத ஒரு வாழ்வியல் கூறாகவே இருந்தது. ஒவியம், சிற்பம், கூத்து, இசை என அனைத்துக் கலை களிலும் இந்தத் தன்னிறைவு தளும்பி வழிந்து நிரம்பி யிருந்தது. சங்ககாலக் கவிதைகளில் இக்கொண்டாட்டத்தைக் காணலாம். அவை வெகு இயல்பாக உடற்காமத்தையும் அதன் மன எழுச்சிகளையும் உட்கொண்டிருந்தன. இன்றைக்கு பொருளற்ற விவாதங்களுக்கும் தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடமாகியிருக்கும் இம்மன உணர்வுகளை ஆண்டாளும் வெள்ளிவீதியாரும் வெளிப்படையாக காட்டிச் சென்றுள்ளனர். சென்ற நூற்றாண்டு வரை பேரின்பம் என்று சுட்டப்பட்ட பாலுறவு இன்று அகப்பிரச் சனையாக மாறியிருக்கிறது. உலகம் தொழில்மயமாவதற்கு முன்பு வரை, மனிதனுக்குப் பொழுது போக்கு என்ற ஒன்று தனியான ஒர் அம்சமாக இருந்ததில்லை. பாட்டும், கூத்தும், இசையும் அவனது வாழ்க்கையின் எல்லாத் தடங்களிலும் நிரம்பிக் கிடந்தன. பிறப்புக்கும் இசைத்தான்; இறப்புக்கும் இசைத்தான். அவன் வாழ்க்கை வெறுமையை உணர்ந்த தில்லை. அதை நிரப்ப அவன் ஒடித் திரிந்ததுமில்லை. இலக்கின்றி ஒடித் திரிதலில், பணம், அதிகாரம், தன்வயமாக்கல் முக்கியத்துவம் பெற்று மனிதனின் இயற்கையோடியைந்த வாழ்க்கையும், அதன் தன்னிறைவுக் கொண்டாட்டங்களும் பின்தங்கி விட்டன.

    உலகமயமாதல் குறித்து உரையாடிக் கொண்டிருக்கும் இன்று சகலவிதமான தகவல் தொடர்பும் கையடக்கமான கருவிகளுக்குள் வந்து விட்டது. இந்த அதிவேக வளர்ச்சியில் மீட்டெடுக்கவே இயலாத இழப்புக்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவன் வெறுமையால் நிரப்பப்பட்டு, அதிலிருந்து மீள வழியின்றிக் கிடக்கிறான். வீட்டின் உள்ளேயே வந்து அமர்ந்து கொண்டு நாள் முழுவதும் சலனப்படுத்திக் கொண்டேயிருக்கும் காட்சி ஊடகங்களாலும் அந்த வெறுமையை போக்க இயலவில்லை என்பதுதான் சோகமான உண்மை. தன்னிறைவு என்பதின்றி ஆனதும், அவனது தேடல் அர்த்தமற்றதாகி, இன்னும் இன்னும் என பலவற்றையும் துரத்தி ஒடும் வாழ்க்கையாகிப் போனது. லா. ச. ரா வார்த்தைகளில் கண்டதே காகஷி, கொண்டதே கோலம் கேளிக்கை, மது, திரைப்படம் என்னபிற ஒருபுறம் என்றால், ஆன்மிகமற்ற மதச் சடங்குகளும், சாமியார்களும், யோகா குருமார்களும் என மறுபுறம் மனிதனின் இந்த வெறுமையை கூறு போட்டுக் கொண்டு வியாபாரமாக்கி விட்டனர். போதையிலும், யதார்த்த நிகழ்காலத்திலிருந்து தப்பிக்கும் யத்தனங்களிலும், தன்னுள் கிடைக்காத நிம்மதியை, மனிதன் புறத்தே தேடி எங்கே எங்கே என்றலையும் மிருகமாகிப் போனான்.

    சமூகத் தளத்தில் ஒருவருக்கொருவர் உறவு நிலை குறித்தான தெளிவின்மையால் குடும்பம் என்கிற ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன அமைப்பு முறை சிதைந்து போய்விடும் என்கிற அச்சமும், ஐயமும் உடன் சேர்ந்து கொள்கின்றன. நேர்மையற்ற, நேசமில்லாத உறவும் தோள்கொடுக்கும் மனமற்ற, தோழமையில்லா நட்பும் இயல்பானக் காமமில்லாப் புணர்வும் மன வெறுமைக்குத் துணையாகி பிடரியைப்பிடித்து இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1