Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellai Enbathu Idhayathirku Illai
Ellai Enbathu Idhayathirku Illai
Ellai Enbathu Idhayathirku Illai
Ebook117 pages14 minutes

Ellai Enbathu Idhayathirku Illai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையெழுத்திப் பிரதியில் எழுதத் தொடங்கிய இவர், பூங்குயில் இதழைப் படிக்கும் காலத்திலேயே ஆசிரியராகப் பணியேற்றுள்ளார். கவியரசி, ஜுனியர் சிட்டிசன், கவியருவி, கவித்தென்றல், மங்கையர் செம்மல் போன்ற 24 விருதுகளுக்கு சொந்தக்காரர். எண்ணற்ற துறைகளில் புலமை பெற்ற இவர், சுமார் 30 நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகள், பொது மேடைகளில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116601989
Ellai Enbathu Idhayathirku Illai

Read more from S. Swathi

Related to Ellai Enbathu Idhayathirku Illai

Related ebooks

Reviews for Ellai Enbathu Idhayathirku Illai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellai Enbathu Idhayathirku Illai - S. Swathi

    http://www.pustaka.co.in

    எல்லை என்பது இதயத்திற்கு இல்லை

    Ellai Enbathu Idhayathirku Illai

    Author

    எஸ். சுவாதி

    S. Swathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/s-swathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எல்லை என்பது இதயத்திற்கு இல்லை

    எஸ்.சுவாதி
    காணிக்கை

    எனக்குள் இருந்த

    என்னை

    எனக்குக் காட்டியது போல்,

    உலகுக்கும்

    ஞான ஒளி பூசும்

    இராஜயோக

    சகோதர, சகோதரிகளுக்கு…..

    அன்பு மகளின் வாழ்த்துக்கள்……

    உங்களின் இந்தப் புத்தகம் ஒரு நாளில் 10,00,000 பிரதிகள் விற்பனையாக வேண்டும். மேலும் ‘அமைதி’ என்ற நூலிற்காக நோபல் பரிசு பெற வேண்டும்.

    இப்படிக்கு,

    அன்பு மகள் செ. ராகசூர்யா

    இதய வாழ்த்து

    மீ.செல்வக்குமார்
    நிர்வாக இயக்குநர்

    சக்தி குரூப் நிறுவனங்கள்

    புதுக்கோட்டை

    அதிகாலை

    சிற்றினங்கள்

    சிறகு விரித்துப்

    பறக்கத் தொடங்குகின்றன…

    கண் திறந்து

    விடுகிறது

    கணினி…

    பொழுதுயாவும்

    கணினியின்

    கலையும்

    கட்டங்களுக்குள்

    காசைத்தேடி…

    காகங்கள்

    மரங்கள்

    திரும்பும்

    மாலையிலும்

    மனம்

    போராட்டங்களில்

    இருந்து

    விடபடுவதாயில்லை

    வாழ்க்கை…

    எதனைத்

    தேடுகிறோம்…

    எல்லாவற்றையும்

    தொலைத்துவிட்டு…?

    விரியும்

    காலைக்கு

    கட்டியம் கூறும்

    விடிவெள்ளி

    ரசித்து

    எத்தனை நாட்கள்

    ஆகிறது…?

    பன்னீர் பூக்கள்

    பாதம் பதிய

    மார்கழி விடியலில்

    நடந்துபோன நாட்கள்

    ஏன்

    மீண்டும் வரவேயில்லை…?

    இத்தனை நாள் தேடலில்

    எத்தனை பெற்றோம்?

    ஒன்றுமில்லை

    அனுபவங்களைத் தவிர...

    கவிதைகளை

    ரசிப்பதை விட

    படைப்பது கடினம்…

    அது

    ஒற்றை உயிரில்

    உயிராகும் பிரசவம்…

    அந்த வலி

    பிரர்

    ரசிக்கும்போது

    மறைகிறது…

    சிலர் சிலாகிக்கும்போது

    சிலிர்த்தெழுகிறது…

    வாசிக்க மட்டுமே

    தெரிந்த

    எனக்கு

    வாழ்க்கைப்பட்ட

    நீ…..!

    யோசிக்கவும்

    தெரிந்திருக்கிறாய்!

    பூஜிக்க வேண்டியவள்

    நீ

    (ம்… வேறென்னத்த சொல்ல… ?)

    எழுது

    எழுது

    அழுது அழுது

    வீங்கிப் போன

    என்னைப் போன்றவர்களுக்கு

    அது

    கொஞ்சம்

    ஆறுதலாய் இருக்கட்டும்…

    அத்தோடு

    சுவாதி

    உன் கவிதைகள்

    இந்த சமூகத்துக்கும்

    கொஞ்சம்

    மாறுதலாய் இருக்கட்டும்

    - என்றும்

    உன்

    செல்வா

    என்னுரை

    கவிதைகள் என்பதே மனதின் பதிவுகள்தான். தனக்கு நேர்ந்தது எல்லாவற்றையும் சோகமாகவோ, சுகமாகவோ சொல்லி

    விடுபவர்கள்தான் கவிஞர்கள். அப்படித்தான் எனக்குள் நிகழ்ந்த ரசாயன மாற்றங்கள், கலவைகள்,அழுகைகள் எல்லாவற்றையும் இதில் பதிவு செய்துள்ளேன். உங்களையும் பாதித்தால் என் வெற்றி. சோதித்தால்….?

    அன்றாடம் நான் சுமக்கும் வேலைகள், பேருந்துப் பயணம், நட்புரையாடல் என்று எல்லாவற்றையும் மீறி இந்த எழுத்துதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று முழுமையாக நம்புகிறேன். அது அப்படியே தொடரட்டும் என்பதே எனது வேண்டுதலும், கோரிக்கையும்.

    இருபது நூல் எழுதிய பின்னும் சிலரைப் போல் நீ பிரபலமாகவில்லை என இடித்துரைக்கிறாள் ஒரு தோழி. நான் எங்கே தவறுகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் எங்கேயோ தவறுகிறேன் என்பது மட்டும்தான் புரிகிறது. விரைவில் அவள் ஆசைப்பட்டபடி நடக்கும் என்ற உத்தரவாதத்தை அவளுக்குத் தருகிறேன்.

    எல்லோரையும் போலவே நான் சபிக்கப்பட்டவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் மாறி

    Enjoying the preview?
    Page 1 of 1