Anuradha Ramananin Sirukathaigal Collection - 5
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsAnna Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Nadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Megathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Anuradha Ramananin Sirukathaigal Collection - 5
Related ebooks
Thottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsKathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsSonthamena Nee Irunthal… Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5Naalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsNaal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Vendum Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Saharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsMom From India Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Paruva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Aasai Paravai Koondukkulle Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Amma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsMaaruthalukku Oru Hemalatha Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Aan Manam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Ther Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsYaaradhu? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anuradha Ramananin Sirukathaigal Collection - 5
1 rating0 reviews
Book preview
Anuradha Ramananin Sirukathaigal Collection - 5 - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
அனுராதா ரமணனின் சிறுகதைகள்
தொகுதி - 5
Anuradha Ramananin Sirukathaigal
Collection – 5
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கணவனைக்காத்த கெளரி விரதம்
2. மாலைகள் வாடுவதில்லை
3. இன்னொரு ரேணு
4. அம்மாவைப் போல
5. அம்மா ஏன் அழுகிறாள்?
6. சர்க்கஸ் புலிகள்
7. இணை
8. பூமாவுக்குள் பூகம்பம்
9. மூர்த்தி, தாரா, குழந்தை
10. சந்நிதி மலர்கள்
11. காதல் அனாடமி
12. அந்தரங்கம் புரிவதில்லை...
13. விலை
14. ஜூரம்
1. கணவனைக்காத்த கெளரி விரதம்
பிடிவாதம் நிறைந்த மகளின் கண்களை ஒருமுறை உற்றுப் பார்க்கிறார் அசுவபதி மகாராஜா.
சாவித்திரி, உலகத்தில் உனக்கேற்ற வரனா கிடைக்கவில்லை? இவன் வேண்டாமம்மா... நாரதர் சொல்வதைக் கேட்டால் நெஞ்சம் நடுங்குகிறது...
முனிவர் என்ன சொல்கிறார் அப்பா?
அந்தப் பிள்ளையாண்டானுக்கு அற்ப ஆயுளாம். அடுத்த வருஷம் இதேநாளில் இதே நேரத்தில் அவன் கதை முடிந்து விடுமாம்!
சாவித்திரி தந்தையின் அருகில் நின்ற நாரதனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.
சுவாமி!
என்னம்மா...
எல்லாருமே ஒருநாள் இறக்கப் போகிறவர்தாமே?
நிஜம். இருந்தாலும் சத்தியவானின் முடிவு தெரிந்த விஷயம் குழந்தாய்… எந்தப் பெண்ணாவது தனது செளபாக்கியங்களை இழக்க சம்மதிப்பாளா?
அதேசமயத்தில் மனதால் ஒருவனை வரித்தபின் எந்தப் பெண்ணும் இன்னொருவனை நினைக்கமாட்டாள்...
இவளின் வாதத் திறமை பிரும்ம புத்திரனையே ஒரு கணம் அசத்துகிறது.
ராஜனே, இவளின் தாலி பலத்தாலும், வாதத் திறமையாலும் கூற்றுவனையே ஜெயிப்பாள்... நீ கலங்காமல் இவளது திருமணத்தை நடத்து!
சாவித்திரி, சத்தியவானின் மேல் கொண்ட அன்பு வெறும் கவர்ச்சியின் அடிப்படையில் எழுந்ததல்ல... காதல் மட்டும் இவர்களின் மணவாழ்க்கைக்கு ஆதாரமில்லை.
அவள், கணவனைச் சார்ந்த எல்லா உயிர்க்கும் எல்லா ஜடப் பொருட்களுக்கும்கூட மதிப்பு கொடுத்தாள்...
என்றுமே வாழ்ந்தவர் தாழ்ந்தால், மற்றவர் கைதட்டிச் சிரிப்பார்கள். அதுவும் மாமனார் - மாமியாரின் செல்வாக்கு ஒருபடி இறங்கினாலும், மருமகள்களுக்கு இளக்காரமாகத்தான் போகும்...
சத்தியவானின் தந்தை த்யுமத்சேனன், அரச பீடத்தில் அமர்க்களமாய் ஆட்சி புரிந்தவர். பகையரசனின் படையெடுப்பில் இன்று காட்டை தஞ்சம் புகவேண்டிய நிலைமை. போதாக் குறைக்கு த்யுமத்சேனருக்கும், அவர் மனைவிக்கும் கண்பார்வை வேறு சுத்தமாய் கிடையாது. இவர்களுக்குப் பார்வையாய் விளங்கியவர்கள் மகனும் - மருமகளும்தான்.
சாவித்திரி இவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டே கணவனின் ஆயுசுக்காக கெளரிபூஜையையும் மேற்கொள்ள...
சாவித்திரி, இது என்ன பூஜை?
- சத்தியவான் அப்பாவித்தனமாய் அவளை வினவ –
இது சுயநல பூஜை! நான் பேராசைக்காரி. தினம் தினமும் அம்பிகையை வாதுக்கு இழுக்கிறேன்...
பலனை வேண்டி செய்யப்படும் பூஜைகளில் மனசை செலுத்தாதே சாவித்திரி. பேராசை பெருநஷ்டத்தில் போய் முடியும். நமக்கென்று உள்ளதுதான் நிலைக்கும்.
அதையும்தான் பார்க்கலாமே...
அவள் எதிர்பார்த்த அந்த நேரமும் வந்துவிட்டதே...
மாமுனிவர் கூறிய அந்நாளில் விறகு வெட்டி வர - வழக்கம் போலக் கிளம்பிய சத்தியவானிடம், தானும் உடன் வருவேன் என அடம்பிடிக்க... அவன் திகைப்புடன் அவளைப் பார்க்கிறான்.
நீ எதற்கு சாவித்திரீ…
எனக்கு உங்களுடன் காட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது...
சம்மதிப்பதைத் தவிர வேறென்ன செய்வான் அவன்? இன்றளவும் அவள் ஆசைப்பட்டு எதையுமே கேட்டதில்லையே…
உனக்கு எந்தப் பொருள்மீது ஆசை சாவித்திரி, சொல்லேன்…
இப்படி அவன் ஒருநாள் கேட்டதற்கு, தண்ணீர் தடாகத்தின் அருகில் அமர்ந்திருந்த சாவித்திரி, தடாகத்தில் விழுந்த கணவனின் பிம்பத்தை ஒற்றை விரலால் சுட்டிக்காட்டிய வளாயிற்றே... அப்பேர்ப்பட்டவள் காட்டை சுற்றிப்பார்க்க ஆசை என்றால்...? புருவத்தை உயர்த்தி, சின்னச் சிரிப்பொன்றால் தன் சம்மதத்தை அளிக்கிறான் அவன்.
நடுப்பகலில் விறகு வெட்டிக் கொண்டிருந்த கணவன் திடீரென்று மல்லாந்து தன் மடிமீது விழுந்தபோது, துடித்துப் போய்விட்டாள் சாவித்திரி. கண்ணீர் பெருகத் தலையை நிமிர்த்தியவளின் எதிரே பாசக் கயிற்றுடன் தருமராஜன்.
மடிமீதிருந்த கணவனின் உடலை பயபக்தியுடன் இறக்கி வைத்த சாவித்திரி, யமதர்மனை விழுந்து நமஸ்கரிக்கிறாள். வணக்கத்தை அங்கீகரித்த சாயாதேவி மைந்தன், வழக்கம்போல ஆசீர்வதித்து விட்டார் :
தீர்க்க சுமங்கலியாய் இரு பெண்ணே!
ஆகா… எப்பேர்ப்பட்ட வார்த்தை! அதுவும் யார் வாயால்?
அந்த வார்த்தையைப் புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டவள், சத்யவானின் உயிரை எடுத்துக் கொண்டு போகும் யமதர்மனை பின்தொடருகிறாள். அதற்கு முன் தன் கணவரின் தேகத்தை பசும் புற்களாலும், மரக்கிளைகளாலும் மூடி வைக்கவும் மறக்கவில்லை அவள்.
ஏ பெண்ணே, இன்னமும் ஏன் என்னைப் பின் தொடருகிறாய்? நான் போகிற பாதை உன்னை அச்சுறுத்தும். போதும். இதோடு நின்றுவிடு...
கணவனுடன் வரும்போது ஒரு பெண் எதற்குப் பயப்பட வேண்டும், சுவாமி!
தொல்லை தராதேயம்மா... உன் கணவனின் உயிரைத் தவிர, வேறு எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன்.
சாவித்திரி, ஒரு கணம் யோசிக்கிறாள். அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கேட்கிற வரங்களைக் கேட்டுவிட வேண்டும்...
என் மாமனார் - மாமியாருக்கு இரண்டு கண்களும் தெரிய வேண்டும். போன ராஜ்ஜியம் திரும்பக் கிடைக்க வேண்டும்!
சரி. தந்தேன்!
எமதருமர் வேகமாய் நடக்கத் தொடங்க, சாவித்திரி விடாமல் பின் தொடருகிறாள்.
இதோ பார்... வீண் பிடிவாதம் வேண்டாம் என்னுடன் நடந்து அநியாயமாய் களைத்துப் போகாதே...
"கணவருடன் நடந்தால் எந்த பெண்ணுக்கும் களைப்புத் தெரியாது ஐயா! என் கணவர் உங்களுடன் வரும்போது, நான் அவரைப் பின் தொடர்வதே முறை. எனது திருமணத்தின்போது காலம் முழுக்க இவரைப் பின்தொடர்ந்து, இவருக்குப் பணிவிடை செய்வதாய் விரதம் பூண்டிருக்கிறேன்...
உன்னால் அது முடியாது. கணவரின் உயிரைத்தவிர வேறு ஏதாவது வரம் கேள். தருகிறேன்...
என் தந்தை அசுவபதி ராஜனுக்கு பிள்ளை இல்லை. அவருக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வரம் தாருங்கள்...
சரி. தந்தேன்!
இதற்கு மேலும் அங்கு நிற்பது ஆபத்து என்பது போல, கூற்றுவன் விரைய... சாவித்திரி விழுந்தடித்துக் கொண்டு, அவரைப் பின்தொடருகிறாள்.
எத்தனை தூரம் என்னைப் பின் தொடர்வாய்? போய் உன் கணவனின் ஈமக்ரியைகளைச் செய். உன் மாமனார், மாமியாரைத் தேற்று... திரும்பிப்போ... அயர்ந்து போய்விட்டாய் பார்...
அசதியா... நீங்கள் எங்கு போனாலும் ஒடி வருவேன்...
கடைசியாய் வேறொரு வரம் கேள், தருகிறேன்!
பிள்ளையில்லாதவர்கள் ‘புத்’ என்கிற நரகத்திற்குப் போவார்களாம். ஆதலால் எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்…
தந்தேன்... தந்தேன்… என்னை விடு!
யமன் ஒட, சாவித்திரி இரு கைகளையும் நீட்டி, அவனது வழியைக் குறுக்கே மறித்துக் கொண்டு நிற்கிறாள்.
தர்மராஜனே... உமது வாக்கு பொய்க்காது என்பார்கள். நூறு பிள்ளைகள் பெற என்னால் எப்படி சாத்தியம்? பதிவிரதையானவள் கணவனில்லாமல் பிள்ளை பெறத் துணிவாளா? அதுவும் தவிர, தீர்க்க சுமங்கலியாய் இரு என்றீர்களே... கணவன் இல்லாமல் தீர்க்க சுமங்கலியாக வாழ்வது எப்படி?
திகைக்கிறார் எமதருமர்... தன் வாக்காலேயே தான் மடக்கப்பட்ட விதத்தை எண்ணிப் பிரமித்து நிற்கிறார்.
கொடுத்த வாக்கை மீறுவது தரும தேவனான தனக்கு அழகோ…
தாயே… உன் கணவனின் உயிரைத் தந்தேன்!
- அவர் சொல்லி முடிக்கும்முன் பாய்ந்தோடி திரும்பி வருகிறாள் சாவித்திரி.
தூங்கி எழுபவன்போல எழுந்து உட்கார்ந்த சத்தியவானை சுற்றி வந்து வணங்குகிறாள்.
சற்றுமுன் எனக்கு தலைசுற்றியது கண்ணே... இங்கே கருப்பாய் சூலத்துடன், பாசத்துடன் ஒருவர் நின்றாரே... நீ பார்த்தாயா...
நான் என்ன கண்டேன். இருட்டி விட்டது. வீட்டுக்குப் போகலாம் வாருங்கள்...
அவள்...
ஒன்றுமேயறியாத பேதையாய், கணவனைப் பின்தொடருகிறாள்... வீட்டிற்குப் போனபிறகு, விழிதிறந்த, இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்ற தன் தாய் தந்தையரைப் பார்த்தபிறகுதான் அவனுக்குத் தன் பின்னால் வரும் தெய்வத்தைப் பற்றி தெரியப் போகிறது...!
இன்று உன்னுடைய கெளரி விரதத்தை நடத்தவில்லையா சாவித்திரி...
காட்டில், நீங்கள் களைத்துக் கண்மூடிப் படுத்திருந்தபோதே முடித்து விட்டேனே...
அப்படியா... நைவேத்தியத்திற்கு என்ன செய்தாய்...
உருக்காத வெண்ணெயும், தங்களுக்காகக் கொண்டு வந்திருந்த ஒரேயொரு அடையும்தான் அம்மனுக்கு நைவேத்தியம்...
குனிந்த தலைநிமிராமல் சாவித்திரி சொல்கிறாள். விழியிரண்டிலும் முத்துப்போல - ஆனந்தக் கண்ணீர்...
- இதயம் பேசுகிறது, 1986.
2. மாலைகள் வாடுவதில்லை
ஷர்ட் கொஞ்சம் தொள தொளவென இருக்கிறது. யாதவ், ரசம் போன நிலைக் கண்ணாடியில் - மறுபடி மறுபடி தன்னைப் பார்த்துக் கொள்கிறான்.
பரவாயில்லை. இன்னும் அந்த கவர்ச்சியும், எடுப்பான தோற்றமும் மிச்சமிருக்கிறது.
உடம்புதான் இளைத்துவிட்டது. சட்டையில் ஏற்பட்ட தொய்வு - அவன் மனசைப் பிரதிபலிப்பது போல.
ஆ... எப்படியிருந்தான் ஒரு காலத்தில்...
இப்படியா, ஒரு பாடாவதி ஹோட்டலில், மூட்டைப் பூச்சிகள் மண்டிக்கிடக்கும் ரூமில் இருப்பான் அவன்.
ரொம்ப வருடங்களுக்கு முன்கூட இல்லை. சரியாய் ஐந்து வருடங்களுக்கு முன்னால்கூட, அவன் பெயர் கொடிகட்டிப் பறந்ததே!
சினிமா உலகம் இருக்கிறதே. இதற்கு அநியாயத்துக்கு ஞாபக மறதி திரையில் முகத்தைக் காட்டிக் கொண்டே இருந்தால் தான் நினைவில் வைத்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீ யார் என்று திருப்பிக் கேட்கும். வாசற்பக்கம் விரலைச் சுட்டிக்காட்டும். நாயை அவிழ்த்துவிட்டு ஏவும்... ‘தினம் பொழுது விடிஞ்சா, உங்களை மாதிரி வர்ற ‘-‘ப் பசங்களுக்குப் பதில் சொல்றதே எங்க பொழப்பாப் போச்சு’ இப்படி அலுத்துக் கொள்ளும்.
சுத்த விவஸ்தை கெட்ட உலகம்!
தனிமையில், ஹோட்டல் அறையின் மோட்டு வளையை வெறித்தபடி எத்தனையோ நாட்கள் முணுமுணுத்திருக்கிறான் யாதவ்,
அவனுக்கு இப்பொழுதெல்லாம் மனிதர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.
அவர்கள் அடையாளம் கண்டு ஏதாவது பேசினாலும் பிடிக்கவில்லை. கண்டுகொள்ளாமல் போனாலும் எரிச்சலாக வருகிறது.
இருந்தாலும், அப்படி ஒரேயடியாக இந்த உலகத்தை ஒதுக்கிவிட முடியவில்லையே!
அவனுக்கு பணம் தர வேண்டிய படக் கம்பெனிகள் எத்தனையோ இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து ஒரு சுற்று சுற்றி வந்தால்தான் - லாட்ஜ் வாடகைக்கும், சாப்பாட்டு கூப்பன் வாங்கவும் பணம் தேறுகிறது.
அடர்ந்த தலைமுடியை சீவியபடியே கண்ணாடியில் பார்க்கிறான் அவன்.
ஒரு காலத்தில்