Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anuradha Ramananin Sirukathaigal - Collection 3
Anuradha Ramananin Sirukathaigal - Collection 3
Anuradha Ramananin Sirukathaigal - Collection 3
Ebook225 pages2 hours

Anuradha Ramananin Sirukathaigal - Collection 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002021
Anuradha Ramananin Sirukathaigal - Collection 3

Read more from Anuradha Ramanan

Related to Anuradha Ramananin Sirukathaigal - Collection 3

Related ebooks

Reviews for Anuradha Ramananin Sirukathaigal - Collection 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anuradha Ramananin Sirukathaigal - Collection 3 - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    அனுராதா ரமணனின் சிறுகதைகள்

    தொகுதி - 3

    Anuradha Ramananin Sirukathaigal

    Collection – 3

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    31. அக்னி

    32. வேதாவுக்குப் புரியாது!

    33. சலனம்

    34. பலி

    35. சில சீர்திருத்தங்கள்

    36. பருவ வயசும்... பால் மனசும்...

    37. அங்கிள் நல்லாயிருக்கணும் சாமீ…

    38. துறவி

    39. புதுசாய் வந்த அம்மா

    40. வேஷம் போடும் முகங்கள்

    41. சிதறுகாய்

    42. இந்த ரிஷிக்கு சபிக்கத் தெரியாது!

    43. கலையாத கார்மேகம்

    44. கவரிமான் பிறப்புகள்

    45. கொத்தடிமைகள்

    31

    அக்னி

    வ32யிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல...

    காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது. மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

    அப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

    இது என்ன அக்கிரமம்...?

    ‘இவர்கள் இப்படிப் போடும் சோற்றை அவ சீந்துவாளோ, புருஷன் சாப்பிடாம, கை நனைக்காதவடா அவ... அவன் சாப்பிட்டு விட்டுப்போன எச்சில் இலையில்தான் உட்காருவா... இன்னிக்கு என்னைப் பட்டினி போடறேளே... நியாயமா?’

    - ராமநாதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.

    வயசு கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆகிறது அவருக்கு... போதாக்குறைக்கு வியாதிகள் வேறு... பட்டினி கிடக்க முடியுமா...?

    கிழத்துக்கு இருப்பே கொடுக்கலை

    - உள்ளே மூத்த மருமகள் லட்சுமி, அடுத்தவளான சுசீலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

    யார் பட்டினி கிடக்கச் சொன்னது? அப்பவே அவருக்கான கோதுமைச் சாதம் ஆயிடுத்து. தயிரை விட்டுப் பிசைஞ்சு வாயில போட்டுக்க வேண்டியதுதானே? பிடிவாதம்... வடை பாயசத்தோடதான் சாப்பிடுவேன்கற பிடிவாதம். கழுகு மாதிரி மூக்கு வியர்க்க உட்கார்ந்துண்டிருக்கார்... இவர் என்கிட்ட சொல்லிட்டார் - அப்பா அப்படித்தான் குழந்தை மாதிரி அடம் பிடிப்பார். நீ எதையும் கொடுத்துடாதே... அப்புறம் அவஸ்தைப் படறது நாமதான்னு...

    இவர்களின் பேச்சு, ராமநாதனின் காதில் விழாது... பசியினால் காதடைக்கவில்லை. ஏற்கெனவே காது மந்தித்து வெகு காலமாகிறது. சர்க்கரை வியாதி முற்றியதில் கண்ணிரண்டும் சுத்தமாய் அம்பேலாகி விட்டது.

    சதை வற்றி, வெறும் எலும்புக் கூடாய். ஈர்க்குச்சியை ஒடிப்பதுபோல நாலாய் ஒடித்துப் பொட்டலமாய் கட்டி விடலாம்... அப்படி ஒரு தேகம்...

    அறுபது வயசு வரையில் ராமநாதன், கஞ்சி போட்ட சட்டை போல எத்தனை விறைப்பாக இருந்தார்... அப்பொழுது மாத்திரம் இந்தச் சர்க்கரை வியாதியெல்லாம் இல்லையா...? இருந்ததே... ஆனால், அப்பொழுது மனைவி மங்களமும் இருந்தாள். இவருக்குச் சர்க்கரை கூடாது என்றான பின், தானும் இவர் சாப்பிடும் உணவையே சாப்பிட்டுக் கொண்டு...

    அவள் இருந்தவரையில் அவருக்குச் சிரமம் தெரியவில்லை. அதே சமயத்தில் நாக்கை அடக்கியாளும் தெம்பும் இருந்தது.

    சும்மா சொல்லக்கூடாது...

    அந்தக் காலத்து ராமநாதன் மகா ஆசாரசீலராக இருந்தார். அதேபோல சரியான சாப்பாட்டு ராமனாகவும் இருந்தார்.

    வீட்டில் கணபதி ஹோமமும், சத்யநாராயண பூஜையும் அமர்க்களப்படும். ஒரு நாளைப்போல சாப்பிடப் பகல் ஒரு மணிக்கு மேலாகும்... பத்துப் பதினைந்து பேரோடு நுனி வாழையிலை போட்டு பாயசம் வடையுடன் சாப்பாடு...

    ஓடி ஓடிச் செய்வாள் மங்களம். எல்லாவற்றையுமே ஒண்டியாய், தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.

    இப்படி ரசித்துச் சாப்பிடும் ராமநாதன், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை நாட்களில் பூரண உபவாசமும் இருந்திருக்கிறார். இவர் விரதமிருக்கும் தினங்களில், இவரெதிரில் எத்தனைதான் ருசியான பண்டத்தை வைத்தாலும் ஏறிட்டுப் பார்க்கமாட்டார்... அத்தனை வைராக்கியம்.

    அப்படியெல்லாம் இருந்த மனுஷன் - இன்று அதிரசத்துக்கும் வடைக்கும் குழந்தைபோல அடம் பிடிக்கலாமோ...

    ராமநாதன் உள்ளிருந்து வரும் வாசனையை நாசி நிறைய நிரப்பிக் கொள்கிறார். நாவில் நீர் ஊறுகிறது.

    எத்தனை வேதம் படித்து என்ன... உபநிஷத்தைக் கரைத்துக் குடித்து என்ன... நாக்குச் சபலத்துக்கு முன் எல்லாமே தூள் தூளாகிறதே...!

    ராமநாதன் தூக்கம் பிடிக்காமல் எழுந்து உட்காருகிறார்.

    பேசாமல் கோதுமைச் சோற்றை வாங்கித் தின்றுவிட்டு ‘சிவனே’யென்று படுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது.

    அதே சமயத்தில் பிடிவாதத்தைவிட மனசு வரவில்லை.

    இன்று நேற்றில்லை… என்றுமே அவர் வீம்புக்காரர்தான். மங்களம் இருந்தபோது கொஞ்சமாகவா திண்டாடியிருக்கிறாள்?

    நினைத்தபோது சிநேகிதர்களைச் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து சமைத்துப் போடச் சொல்லுவார்.

    அடியே... நாளைக்கு வருஷப் பிறப்பாச்சே போளி உண்டோல்லியோ...

    உம்... பண்ணிட்டா போச்சு...

    அப்ப, என் சிநேகிதன் சுப்புணியையும் பத்மனாபனையும் நம்ம வீட்டுல சாப்பிட வரச் சொல்லட்டா...?

    சொல்லுங்களேன்...

    மங்களம் மறுத்துப் பேசமாட்டாள். இத்தனைக்கும் ராமநாதனுக்கு ஒன்றும் பணம் கொட்டிக் கிடக்கவில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வேலைதான். ஆனால், இவர் சாப்பிடும்போதும், சிநேகிதர்களுக்குப் பரிந்து பரிந்து உபசரிக்கும் போதும் இவரை ஸ்கூல் வாத்தியார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.

    பாவம், மங்களம் அரிசியும் வெல்லமும் நெய்யும் அவள் எப்படித்தான் அலுக்காமல் வாங்கிப் போட்டுச் சமாளித்தாளோ...!

    ஒரு தடவை ரசம் சரியாய் அமையவில்லையென்று நாலு பேர் முன்னிலையில் மானத்தை வாங்கி விட்டாரே...

    என்ன... வழக்கமான டேஸ்ட் இல்லையே... ரசத்தை ஈயச் சொம்புலதானே வச்சே?

    தலை குனிந்து நின்றாள் மங்களம்.

    என்னவென்று சொல்லுவாள்... 'ஈயச் சொம்பை விற்றுத்தான் அன்றைய சமையலையே செய்தேன்' என்று எப்படிச் சொல்லுவாள்...?

    அன்றைக்கு அவள் வாங்கிய வசவு கொஞ்ச நஞ்சமில்லையே...

    இன்று அதெல்லாம் நினைப்புக்கு வந்து, ஒளியேயில்லாத கண்களில் கசிவை உண்டு பண்ண...

    ராமநாதன் மறுபடியும் சுருண்டு படுக்கிறார்.

    உள்ளே –

    மணக்க மணக்கத் திரட்டுப்பால் கிளறுவது.

    அம்மாடீ…! என்ன வாசனை...!

    'சனியன், உடம்புல எல்லா அங்கங்களும் பழுதுபட்டுப் போயாச்சு... இந்த மூக்குக்கு ஏதாவது ஒரு கேடு வராதோ... வயசாக ஆக, இது மாத்திரம் ஏன் இப்படித் தீர்க்கமா வேலை செய்யறது...’ - ராமநாதன் அலுத்துக் கொள்கிறார்.

    வாசனைகளை ருசி பார்த்தே இந்த பத்துப் பதினைந்து வருஷ வாழ்க்கையைத் தள்ளியாயிற்று அவர்.

    அடுப்புல என்ன முருங்கைக்கா சாம்பாரா...? உப்பு போடல போல இருக்கே... வாசனை சொல்றதே…

    - இப்படிச் சொல்வார் ஒரு நாள்.

    ‘ரசத்துல கொத்துமல்லியைக் கிள்ளிப் போட்டு ரொம்ப நேரம் கொதிக்க விடக்கூடாது. பொங்கி வர்றச்சேயே பார்த்து இறக்கிடணும். இல்லைன்னா வாயில வைக்க வழங்காது…’

    - இப்படிச் சில நாள் தனக்குள் முனகிக் கொள்வார்.

    எது எப்படியிருந்தா இவருக்கென்ன... இவர் சாப்பிடறது கோதுமைச் சாதம், தயிர் ஒரு கப் கீரை... மத்தவா எப்படிச் சாப்பிட்டா என்ன இப்போ...

    - ஒரொரு சமயங்களில் நாட்டுப்பெண்கள் இவர் காதுபட இரைந்து சொல்வதும் உண்டு.

    லோகத்துல எதுக்காகப் பொறந்தோம்... எதுக்காக மாடா உழைக்கறோம்… எல்லாம் இந்தச் சோத்துக்காகத்தானே. அதை வக்கணையா சாப்பிடணும். சமைக்கற பண்டத்தை வீணாக்காம சாப்பிடணும். நாம சாப்பிடறது மட்டுமில்லாம மத்தவாளுக்கும் வயிறு நிரம்ப சாப்பாடு போடணும். உபநிஷத் சொல்றது... சாப்பாட்டை இகழக்கூடாது. அது விரதம். எதை நாம சாப்பிடறோமோ அது அன்னம்; சாப்பிடற நாம அன்னாதம்... இதையெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது...

    கிழவர் சடக்கெனத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு தமக்குள் ஆழ்ந்து போவார்...

    மருமகள்களின் கையால் விதவிதமாய் சமைத்துப் போட்டுச் சாப்பிடும் பாக்கியம் அவருக்கு இருந்ததேயில்லை. தன் மங்களத்தை விடவும் இவர்கள் உயர்த்தியாய் சமைப்பார்கள் என்று அவர் நினைக்கவும் இல்லை. அதுதான் சமையலின் மணமே சொல்கிறதே... போதாதா?

    அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு இந்த நாக்கு இன்று, இப்படி விவஸ்தை கெட்டு அலைய வேண்டாம்.

    என்ன செய்ய... எல்லா உயிர்க்கும் அன்னம்தான் ஆதாரம். அன்னத்தாலே பிறந்த ஜீவராசிகள், அன்னத்தாலேயே உயிர் வாழ்ந்து, கடைசியிலே அன்னத்தாலேயே நாசமாகி, மண்ணோடு மண்ணாய் போறதுகள், செத்துக் கிடக்கற நாக்குக்கு ஏதாவது கிடைச்சா போதும் போல இருக்கே...

    இன்று எப்படியும் வகைதொகையாய்ச் சாப்பிட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல கொலைப் பட்டினி கிடக்கிறார் கிழவர்.

    நல்லவேளை, மங்களம் போய்ச் சேர்ந்தாள். அவள் இப்படிக் கெளரவமாய் போனதினால்தானே -இன்றைக்கு அவள் பெயரைச் சொல்லி வீட்டில் பாயசமும் பட்சணமும் அமர்க்களப் படுகிறது. இதுவே அவள் உயிரோடு இருந்து, மருமகள்களிடம், 'எனக்கு மொறு மொறுன்னு வடை பண்ணித்தா' என்று கேட்டால் இவர்கள் செய்திருப்பார்களோ.

    செத்தவளுக்கு வருஷத்தில் ஒரு நாளாவது சோறு போடா விட்டால், எங்கே ஆவியாய் வந்து, குடும்பத்தை நடுங்க வைக்கப் போகிறாளோ என்கிற பயம்... அந்த பயம்தான் இப்படிச் சமையலறையில் அதிரசத்தையும், வடையையும் வேர்க்க விறுவிறுக்கச் செய்து கொண்டிருக்கிறது; அந்த பயம்தான், 'மாமியாருக்குக் கறிவேப்பிலை துவையல் பிடிக்கும்' என்று மங்கு மங்கென்று அம்மியைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது; அந்த பயம்தான் பிள்ளைகளை ஆபீசுக்கு லீவு போட வைத்து, ஈரவேட்டியும் காய்ந்த வயிறுமாய், மந்திரங்களை உச்சரிக்க வைக்கிறது; அந்த பயம்தான் தங்களைவிட செல்வாக்கில் பல படிகள் கீழேயுள்ள புரோகிதரைப் பவ்யமாய் வணங்கி அவர் சொன்னபடியெல்லாம் ஆட வைக்கிறது.

    ‘நான் செத்தால், என் திதியின் போதாவது இவனுங் எனக்குப் பிடிச்ச அயிட்டங்களைச் செய்வானுங்களோ…’

    ‘போறது... சர்க்கரை வியாதியில் செத்தவனுக்குப் பாயஸம், பட்சணம் வச்சு திவசம் பண்ணக்கூடாதுன்னோ, பிளட் பிரஷர்லே செத்தவனுக்கு உப்பே சேர்க்காம சமைச்சுப் போடணும்னோ யாரும் எழுதி வச்சுட்டுப் போகலை…’

    'ஆத்மாக்களிலேயும் இது மாதிரி டயபடீஸ் ஆத்மான்னும், கொலஸ்டிரால் ஆத்மான்னும் இல்லாமப் போச்சே... எல்லா எழவும் இந்த தேகத்துக்குத்தானே தவிர, ஆத்மாவுக்கு இல்லே போல இருக்கு…’

    ராமநாதனின் வயிற்றில் தீ, ஜுவாலையாய்க் கொழுந்து விட்டு எரிவது போல…

    ‘பெரிய இலை போட்டுண்டு சாப்பிடணும். சோத்தைக் கண்டதும் அல்பம் மாதிரி பறக்கக் கூடாது. இது என்ன மாசம். சித்திரையா... முக்கனியும் கிடைக்குமே... இலையிலே மூணு பழமும் போட்டிருப்பான். அதெல்லாம் பெரியவன் இந்த மாதிரி சமயங்கள்லே நிறக்க செஞ்சு பேரைத் தட்டிண்டு போயிடுவான்…’

    ‘அது சரி... திங்கணும் திங்கணும்னு பறக்கறியே... பல் எங்கே இருக்கு…? மொத்தம் நாலு பல் இருந்தா அதிசயம். அதுவும் நீ, பலாச்சுளைய மெல்லறப்ப சேர்ந்து வயத்துக்குள்ளே போயிடும்...’

    ‘ஆ... பலாச்சுளைன்ன உடனே நினைப்புக்கு வர்றது... வீட்டுல தேன் இருக்கோ... பலாச்சுளைக்கும் தேனுக்கும்தான் ஏர்வை...’

    இந்த நினைப்பு வந்தவுடன், உடனே எழுந்து போய் ஹாலில் பரிமாறப்பட்டிருந்த இலைகளில் பலாச்சுளைக்குத் தோய்த்துக் கொள்ள தேன் பரிமாறியிருக்கிறதா என்று பார்த்து விட்டு வரவேண்டும் போல வேகம்...

    எங்கே எழுந்திருப்பது. இங்கேதான் பாதத்தைத் தரையில் ஊன்றியிருக்கிறோமா, இல்லையா என்பதுகூடத் தெரிய வில்லையே...

    அடேய்... எவன்டா அடேய்...

    இங்கிருந்தபடியே குரல் கொடுக்கிறார்.

    என்ன?

    நாலு பிள்ளைகளில் எவனோ ஒருவன் மகா எரிச்சலுடன் எட்டிப் பார்க்கிறான்.

    பலாச்சுளைக்குத் தொட்டுக்க தேன் விட்டிருக்கியா...?

    எல்லாம் விட்டிருக்கு நீ சித்த சும்மாயிரு... - அவன் கடுப்பு அவனுக்கு.

    விடிகாலையிலிருந்து பகல் இரண்டு மணி வரையில் அவன் எத்தனை விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறான்...!

    நாலு கப் காபி... இரண்டு பாக்கெட் சிகரெட் பத்து மணி சாப்பாடு... இன்னும் எத்தனையெத்தனை... இந்த மனிதருக்குத் தேன் இல்லையென்றுதான் கவலை.

    மகனின் காய்ப்பு வருத்தத்தை உண்டு பண்ணினாலும், வீட்டில் தேன் இருக்கிறது என்பதே பரம சந்தோஷமாய்... ராமநாதன் மீண்டும் குருட்டுக் கண்களுக்குள் திருட்டுக் கனவுகளைக் காணத் துவங்குகிறார்...

    ‘இந்தப் பிள்ளைகள் - அம்மா கையாலே அத்தனை ருசியா சாப்பிட்டும், எப்படித்தான் இப்படி ரசனையில்லாமப் போனதுகளோ? எல்லாம் பெண்டாட்டிகள் செஞ்சு போடற அரை வேக்காட்டைத் தின்னு தின்னு நாக்கு மழுங்கிப் போயிருக்கும்…’

    'உஸ்… சும்மாயிரு. இன்னிக்கு அவனுங்க பெண்டாட்டிகள் சமைச்சிருக்கிற சமையலுக்குத்தான் நீ நாக்கை நொட்டை விட்டுண்டு காத்துண்டிருக்கே…'

    ‘ஆமா... அவா எனக்குப் போடமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா, என்ன பண்றது...?’

    ‘இன்னிக்கு ஒரு நாள் போட்டுடுங்கோ... தின்னுட்டு, சத்தியமா உங்க பிராணனை எடுக்க மாட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1