Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parvai Ondre Podhume!
Parvai Ondre Podhume!
Parvai Ondre Podhume!
Ebook133 pages1 hour

Parvai Ondre Podhume!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580109902329
Parvai Ondre Podhume!

Read more from Kanchana Jeyathilagar

Related to Parvai Ondre Podhume!

Related ebooks

Reviews for Parvai Ondre Podhume!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parvai Ondre Podhume! - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    பார்வை ஒன்றே போதுமே!

    Parvai Ondre Podhume!

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    ***

    பார்வை ஒன்றே போதுமே!

    1

    அம்மியில் நீர் தெளித்து, அதில் வைத்திருந்த தேங்காய் சில்லுகளை நைத்து, பின் இழுத்து அரைக்கலானாள், அஸ்வினி.

    தோள் பட்டைகள் வலியால் விண்டன.

    மாலை இரண்டு மணி நேரம் மாணவிகளின் முன் நின்று உடற்பயிற்சிக்காகத் தூக்கி இறக்கிய கை மூட்டுகள், ‘எங்களை கொஞ்சம் ஒய்வாய் விடேன்' என்று ‘நறநற’த்தன.

    ஆனால் பல்லைக் கடித்தபடி துவையலை அரைத்து வழித்தாள்.

    அவள் ஆசிரியையாகப் பணிபுரியும் பள்ளியில் ஆண்டு விழா. ஏக அமர்க்களமாய் நிகழ்ச்சிகள் தயாராகிக் கொண்டிருந்தன.

    ‘கூட்டு உடற்பயிற்சியை உன் பொறுப்பில் விடுறேன் அஸ்வினி, நீதான் பிசிறில்லாமல் பிள்ளைகளின் அசைவைக் கச்சிதமாய்த் தயார் பண்ணுவே’ என்று இனிக்கப் பேசி நிர்வாகி இவள் முதுகில் மேலும் ஏற்றிய வேலைகளைப் பணிந்து செய்து கொண்டுதான் இருந்தாள். ஆனாலும் உடல், முழுக்க ஒத்துழைக்கவில்லை.

    அதற்காக, 'என்னால் ஆகாது' என்று காலை நீட்டிப் படுக்கவும் முடியாது. அஸ்வினியின் சம்பளத்தில்தான் இரண்டு வயிறுகள் வேளா வேளைக்குப் பசி ஆறின.

    தனக்கென்று வீட்டிலும் உலகிலுமுள்ள ஒரே ஜீவனான சொந்த தம்பி அசோக்கை அவள் வாட விட முடியாது. அதற்காகத்தான் இந்த அம்மி அரைத்தல். மிக்சி பழுதாகிப் பல மாதங்களாகி விட்டன. அதைப் பழுது பார்க்கப் பணமோ நேரமோ இல்லை.

    அதே நேரம் அசோக், 'வெறும் ரசஞ்சோறா… வேணாம் போ’ என்றால் இவளது மனம் வாடும். இரண்டு முட்டை வாங்கினால் இருக்கும் மிளகாய், வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து 'அடை வார்க்கலாம். ஆனால் அந்த மூன்று ரூபாய்க்குக் கணக்குப் பார்க்க வேண்டிய அவல நிலைமை!

    இருந்த தேங்காய், பருப்பு, வற்றலை வைத்து அதை மிச்சம் பிடித்தாகி விட்டது.

    ஆனால், இதெல்லாம் தம்பிக்குப் புரிகிறதா?

    புரிந்த மாதிரி இல்லை, அவனது நடவடிக்கைகள். சதா நண்பர்களுடன் ஊர் சுற்றுதல், வீட்டில் இறுகிய மெளனம், எதிர்காலம் பற்றிய இலக்கோ, எதிர்பார்ப்போ இல்லாமல்…

    அதற்காக ஒரேயடியாய் பொறுப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது.

    அக்கா, நான் என்ஜினீயர் ஆகணும்... என்ன? புதுசுபுதுசா எதுனாச்சும் கண்டுபிடிக்கணும்… அப்பத்தானே பேரும் புகழுமாய் வரும்? எனக்குப் பிறகும்கூட, ‘அசோக்ராஜன் எனும் விஞ்ஞானி மனுக்குலம் மேம்பட இதைக் கண்டுபிடித்தார்ன்னு பாடப் புத்தகத்துல என்னைப் பற்றி...

    எல்லாம் போட்டுடலாம். முதல்ல நீ பள்ளியின் சிறந்த மாணவன்கிற பேரை வாங்கு…

    ஏன்... அதையும் ஒரு வரி போடச் சொல்லிடலாமா?

    ஆசைடா… சுளையாய் மார்க் எடுத்தால்தானே பொறியியல் கல்லூரியில் நுழையலாம்?

    அதிலெல்லாம் நான் ரொம்ப சுறுசுறுப்பு.

    சரி... படிக்க உட்காரு.

    பசிக்குதுக்கா... ஏதாவது சூடாய் வேணும்போல இருக்குது.

    இவள்தான் உடன் பிறந்தவனுக்காய் சமையலறையில் பரபரப்பாள். இவர்களைப் பெற்றவள். தேமே' எனச் சுவரில் சாய்ந்தபடி, எதிர்ச்சுவரில் ஊறும் பல்லியை உற்றுப் பார்த்தபடி இருப்பாள்.

    காலை ஒரு நேரம் மட்டும் அம்மாவின் சமையல்.

    அதன் பிறகு, ‘நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவளில்லை' என்ற ரீதியில் சுவரில் சாய்ந்து விடுவாள்.

    அஸ்வினியும் அசோக்கும் குழந்தைகளாய் இருந்தபோது இதே அம்மா சரவெடியாய்ப் பொழிந்தவள்.

    வாயை மூடுடி... ஓயாமப் பேச்சு? இந்தக் கத்தல் தாளாமத் தானே நான் நிம்மதியைத் தேடி வெளியே ஒடுறேன்… சனியன். என்று அப்பாவும் சளைக்காமல் கத்துவார்.

    பெற்றவர்களின் அலறலில் பிள்ளைகள் அஞ்சிச் சுருண்டிருப்பார்கள்.

    அம்மா அப்படி உரக்கக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பா வேறு ஒருத்தியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு போய் விட்டாரா, அல்லது தன் கணவருக்கு வேறு ஒருத்தியுடன் தொடர்பு உண்டு என்ற சந்தேகத்தினால் அம்மா அப்படிக் குதர்க்கமாய்க் குதறினாளா என்பது இன்றும் புதிர்தான்.

    எவளைப் பார்க்க இப்படி ஒடுறே...?

    அந்தச் சிங்காரிக்கு அத்தனை காசையும் அள்ளி விட்டுட்டு எங்களைக் கஞ்சியோடு அம்போன்னு விட்டுட்டே இல்ல...?

    இப்படியெல்லாம் ஆங்காரமாய்க் கேட்ட அம்மாவின் வாய், அப்பா வேறு ஒருத்தியோடு போன பிறகு இறுகி விட்டது.

    கோடாக இறுகிய உதடுகளும் வெறித்த பார்வையுமாய் ஒடுங்கிப் போனாள்.

    அப்போது அஸ்வினி, கல்லூரி மாணவி. அவமானத்தில் சுருண்டாலும், குடும்ப பாரத்தைத் தாங்க வேண்டிய பொறுப்பு தன் தோள்களுக்கும் உண்டு என்பது புரிந்து சமாளித்தாள்.

    அருகிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் மாலை மூன்று மணி நேர வேலை கிடைத்தது.

    வரும் நோயாளிகளின் பெயர் சீட்டுகளைத் தேடி எடுப்பது, ரத்த அழுத்தம் சோதிக்கையில் கைகளில் ரப்பர் பையைச் சுற்றி விடுவது, மருத்துவ உபகரணங்களைச் சரியாக எடுத்து வைப்பது, அச்சிறு ஒற்றை அறையைப் பெருக்கித் துடைப்பது, குடிநீர் பிடித்து வைப்பது என்ற வேலைகளுக்குச் சில நூறுகள் கிடைத்தன. உபரியாய் அம்மாவிற்குத் தேவைப்பட்ட மருந்துகளும் கிடைத்தது பெரிய உதவி.

    மருத்துவர் கிளாடிசிடம் அஸ்வினி ஒரு நாள் தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

    டாக்டரம்மா... எங்கம்மா ஏன் இப்படி இருக்காங்க?

    அதிர்ச்சிதான். உங்கப்பாவை அதிகமாய் நேசிச்சவங்க, எங்கே அவரை இழந்திடுவோமோங்கிற பயத்தில் முன்னே கத்தினாங்க. இப்ப அவரை உயிரோடு இழந்த துக்கம். தவிர அவங்க குணமே அதீதமானதுன்னு நீ சொல்வதிலிருந்து புரியுது. முன்னே அதிகம் வெடிச்சாங்க. இப்ப மிக இறுகிட்டாங்க. தவிர மாதவிலக்கு நிற்கும் வேளை... இப்ப உடம்பின் சுரப்பிகள் மாறும், குறையும். பதற்றமும், படபடப்பும் எல்லாப் பெண்களுக்கும் இந்தப் பருவத்தில் வர்றதுதான்.

    அம்மா நேற்று ரோட்டிலே இறங்கி ஓடிட்டாங்க.

    இந்த மாத்திரை தரலாம் - மனச்சோர்வு குறையும். கீரை, பழம் எல்லாம் கொடும்மா... பண வசதி எப்படி?

    கனிவோடு விசாரித்தார், மருத்துவர்.

    அப்பா நிறைய கடன் வாங்கி இருக்காரும்மா. ஆனா வீடு அம்மா பேர்ல இருக்குது. வீட்டை வித்துக் கடனை அடைக்கணும்னு யோசிச்சிருக்கோம். எஞ்சின பணத்தை வங்கியிலே போட்டு நான் சம்பாதிக்கும் வரை சமாளிக்கணும். இதுவரை அம்மாவின் நகைகளை விற்றுதான்…

    மருத்துவர், அவளுக்குச் சம்பளத்தைக் கூட்டித் தந்தார். அதோடு அவரின் மகளின் சில உடைகளையும் தந்தது பெரிய உதவி.

    ஆனால், தாங்கள் வளர்ந்த வீட்டை விற்று எஞ்சிய சொற்ப தொகையோடு வாடகை வீட்டில் குடியேறியபோது அஸ்வினியின் மனம் துடித்தது. வாழ்க்கை இருண்டு சூனியமாய் அச்சுறுத்தியது.

    ஆனால், விரைவில் அச்சம் விலகி, ‘சமாளித்து விடலாம்' என்ற நம்பிக்கை துளிர்த்தது. கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியை

    Enjoying the preview?
    Page 1 of 1