Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naga Keeralgal
Naga Keeralgal
Naga Keeralgal
Ebook115 pages1 hour

Naga Keeralgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202251
Naga Keeralgal

Read more from Hamsa Dhanagopal

Related to Naga Keeralgal

Related ebooks

Reviews for Naga Keeralgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naga Keeralgal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    நகக் கீறல்கள்

    Naga Keeralgal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    புத்தம் புதிய தன் கைனடிக் ஹோண்டாவை ‘நோ பார்க்கிங்' போர்ட் பக்கத்தில் நிறுத்தி, அதன் கரமாய் நீண்ட கண்ணாடியில் முகம் பார்த்துக் கிராப்பைச் சீவிக் கொள்கிறான் கமலக்கண்ணன் என் . எஸ். ஸி. போஸ் சாலையும் கோவிந்தப்பன் தெருவும் இணைகிற மிகத் துரித சுவாசமிடும் நகரின் இதயப் பகுதி.

    மற்றவர்கள் செய்யாத காரியம் தான் செய்வதாய் மனதிற்குள் எக்களிப்பு சடுகுடு ஆடுகையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் இவன் தோள்பட்டையில் கரம் பதிக்கிறார். இவன் ஆண்மையும் ஆறடி உயரமும் வெளிநாட்டு சபாரி சூட்டும் எங்கோ மறைய, கதி கலங்கிப் போகிறான்.

    என்னா மேன், பார்க்கப் படிச்சவனா இருக்க? இங்கே போய் வண்டிய நிறுத்தி கிராப்பா சீவறே கிராப்பு. சரி சரி, உன் பெயர், அட்ரஸ் சொல்லு….

    அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்க, கலங்கிப் போயிருந்த கமலக்கண்ணனின் முகத்தில் உற்சாகக் கீற்று அழுத்தமாய் ஊன்றப்படுகிறது.

    பால்நிற பாலிதீன் பை புடைக்கப் பொருட்களும் தோள்பையும் சுமந்து, கவர்ச்சிகரமான முகத்தில் வியர்வைத் துளிகள் ஒவியம் தீட்ட, காற்றில் ஆவேசப்படும் கூந்தல் கற்றையை அடக்கியவளாய் நடந்துவரும் மீன்விழியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறான் கமலக்கண்ணன்.

    "ஸார்… ஸாரி ஸார். வீட் ல ஷா ப்பிங் போயிருந்தாங்க. நான் அப்பவே சொன்னேன். ஸார், ‘இங்கே வண்டி நிறுத்தக் கூடாது. டிராஃபிக் இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதிடுவாரு’ன்னு… அவங்க… அவதான் ஸார் எம் பேச்சை கேட்கலை இல்லேன்னா கொலைப் பட்டினி போடுவா ஸார், நைட்ல…’’

    அவனை நோக்கியபடி சாலையில் கூட்ட நெரிசலில் நடந்துகொண்டிருந்த மீன்விழிக்கு முன்பின் தெரியாத வாலிபன் தன்னைச் சுட்டிக்காட்டி இன்ஸ்பெக்டரிடம் பேசுவது எதற்காக என்று புரியவில்லை.

    ஒ… அப்படியா , மேடம், உங்க வீட்டுக்காரரை இங்கேயெல்லாம் வண்டியை நிறுத்தக் கட்டாயப்படுத்தாதீங்க. ஒ. கே. நீங்க போங்க மேடம், ஸார் இனி இப்படிச் செய்யாதீங்க.

    இன்ஸ்பெக்டர் அவளைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசிவிட்டு, தெருவோரம் முளைத்திருந்த பழக் கடைகளைக் ‘கவனிக்கப்’ போய் விடுகிறார்.

    கமலக்கண்ணன் சொன்னதும் அதற்கு இன்ஸ்பெக்டர் சொன்னதும் மீன்விழி காதுகளில் விழுந்து அவள் கோபத்தை விசிறிவிட, "ஏய் மிஸ்டர் , நீ செய்த தப்புக்கு…. என்னை…என்னைப் போய். உன்னை… உன்னை... உன் பணக்கார புத்தியைக் காட்டிட்டியே… ’’

    அவளுக்குக் கோபத்தில் சொற்கள் தொண்டைக்குள் சிக்கிச் சிறைப்படுகின்றன.

    ஸாரி… ஸார் மேடம். இது என்னோட வண்டி இல்லை. எங்க மெகானிக் ஷாப் வண்டி. நானும் உங்க மாதிரி ஏழைதான். இன்ஸ்பெக்டர் நாலுபேர் முன்னாடி மேலே கை வைச்சுட்டார். நான் என்ன செய்யட்டும்? அதுக்குப் பதிலா தனியா உங்க கையாலே நாலு அறை அறைஞ்சாக் கூடச் சந்தோஷமா வாங்கிக்கிறேன். பாருங்க, ப்ளிஸ். ப்ளிஸ்! சத்தம் போட்டுப் பேசாதீங்க. இன்ஸ்பெக்டர் ஒரு குற்றத்துக்குப் பதிலா இரண்டு குற்றத்திற்குப் பிடிச்சுப்பார். ஏழை, ஏழைக்கு உதவலைன்னா எப்படிங்க…

    உன்னையெல்லாம் அப்படித்தான் செய்யணும், அவள் விழிகளின் அக்னிக்கு உயிரிருந்தால் அவன் சாம்பலாகியிருப்பது நிஜம்.

    அவள் கூட்டத்தில் இடித்துக்கொண்டு மேலே நடக்கப் பார்க்கிறாள். அவன் தன் வண்டியைத் தள்ளியபடி அவளோடு நடக்கப் பார்க்கிறான்.

    நீங்க எங்கே போகணும்னு சொன்னா நான் ,அழைச்சுட்டு…

    சீ… உன் வழியை பார்த்துட்டுப் போ. சைக்கிள் ரிக்ஷா… சைக்கில் ரிக்ஷா…

    அடுத்த விநாடி அவள் ரோஸ் நிறச் சேலை சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து அவனுக்கு டாட்டா கட்டுகிறது.

    இவன் பயத்துடன் திருமபி இன் ஸ்பெக்டரைப் பார்க்கிறான். அவருக்கு எத்தனையோ வேலைகள்.

    நிம்மதியுடன் தன் கைனடிக் ஹோண்டாவுடன் நீரில் தவறி விழுந்தவன் போல நெரிசலில் மெல்ல நீந்துகிறான். பல பல்லவன்கள் இவனை ஒதுக்கிவிட்டுப் பறக்கிறார்கள்.

    அந்தச் சைக்கிள் ரிக்ஷாவைக் கடக்கையில் திரும்பிப் பார்த்து...

    மாநிறம். ஒடிசலான மேனி. எல்லாமே அளவோடு… அம்மாடி! கண்களா அவை! இரண்டு டால்பின் மீன்களாய்… சுழலும் விந்தை நிறம் மட்டோ. இவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் மீண்டும் ரெளத்திரம் சிம்மாசனமிடுகிறது.

    அவளைக் கடந்தே விடுகிறான்.

    அவள் நுங்கம்பாக்கம் பல்லவனுக்காக காத்திருக்கையில் நிம்மதியாய் மூச்சு விடுகிறாள். அவனைக் காணவில்லை. வெறுமையாய் பாரிஸ் வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த போதும் ‘எத்தனை மன தைரியம் இருந்தால் அப்படிச் சொல்லியிருப்பான். அந்த இன்ஸ்பெக்டரை அழைத்து அவனைச் சிக்கவைத்திருக்க வேண்டுமோ வீட்டிற்குப் போய் அப்பாவிடம் இவைகளைக் கொடுக்க வேண்டும் என்கிற அவசரத்தில் அந்த வாலிபனை விட்டது தவறோ, உம்…’

    கண்டக்டர் இவள் வாங்காத டிக்கெட்டிற்காக சலித்துக் கொண்டதும் விழித்துக் கொள்கிறாள் மீன்விழி.

    "வாம்மா மீனா, எதுக்கும்மா இத்தனை நேரம். மணி ஏழா குது பார், விளக்கு வச்சதும் வாசலுக்கும் உள்ளுக்குமா அலைஞ்சிட்டிருக்கேன். உங்கப்பா காலைலே போனவர் இன்னும் காணலை. மத்தியானம் சாப்பிட வரதாச் சொன்னவர் வரலை. கையில பணம் கூட இல்லையே அவர்கிட்ட…

    "மீன்விழி வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கையற்கண்ணி தன் மனச் சுமைகளைக் கொட்டுகிறாள். மகளின் கைகளிலிருந்த சுமைகளை வாங்கிக் கொள்கிறாள்.

    ஏதும்மா மீனு இதெல்லாம்? என் கிட்ட சொல்லாம கொள்ளாம என்னம்மா இது வேஷ்டி, ஷர்ட் துணி, சேலை எல்லாம் எடுத்து வந்திருக்க. இதுக்கெல்லாம் ஏதும்மா பணம்?

    மஞ்சள் முகத்தில் குங்குமம் பளீரிடும் அந்தம்மாள் முகத்தில் கவலையின் ரேகைகள் கை கோத்துக் கொள்கின்றன. பெண்ணிற்கு ஏது இத்தனைப் பணம்… எங்காவது கடன் கிடன்… இவளுக்கு யார் கடன் கொடுப்பார்கள்.

    தாயின் கைப்பிடித்து இருநூறு ரூபாயை வைத்து அவள் பாதம் தொட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1