Mulvelikku Pinnal
()
About this ebook
பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.
பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
Read more from Pon Kulendiren
Siruvarin Sindhanaikku Rating: 0 out of 5 stars0 ratingsAruvi Rating: 0 out of 5 stars0 ratingsThalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsYazhpanathan Rating: 0 out of 5 stars0 ratingsKudumbam Oru Kathambam Rating: 0 out of 5 stars0 ratings20 Vaniga Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsUrimai Meeral Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsJannal Rating: 0 out of 5 stars0 ratingsVaazhu Vaazhavidu Rating: 0 out of 5 stars0 ratingsVisithira Uravu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mulvelikku Pinnal
Related ebooks
Kudiyarasu Thalaivar K.R.Narayanan Rating: 0 out of 5 stars0 ratingsItaly Puratchi Veerar Mazzini Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Rating: 0 out of 5 stars0 ratingsIlluminati Rating: 0 out of 5 stars0 ratingsMuthuramalinga Thevar Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsElimaiyin Yenthal! Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsJawaharlal Nehru Manavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsNairsan Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda China Rating: 0 out of 5 stars0 ratingsCommunisathirkku Pin Russia Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsOru Koorvaalin Nizhalil Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsVelu Natchiyar Rating: 0 out of 5 stars0 ratingsIlangaiyil Thuglak Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Naatkalum Nenjil Alaigalum Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Ranigal Rating: 0 out of 5 stars0 ratingsThe Sadness of Geography (Tamil Edition): My Life as a Tamil Exile Rating: 0 out of 5 stars0 ratingsEngengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsNIl Sol Kol Rating: 5 out of 5 stars5/5Indiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsVellai Maligai Rating: 0 out of 5 stars0 ratingsMusolini Rating: 0 out of 5 stars0 ratingsVadakku Veethi Rating: 5 out of 5 stars5/5Endru Thaniyum Intha Suthanthira Thaagam? Rating: 0 out of 5 stars0 ratingsDoris Lessing Rating: 0 out of 5 stars0 ratingsEzhuchiyuttum Ulaga Thinangal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mulvelikku Pinnal
0 ratings0 reviews
Book preview
Mulvelikku Pinnal - Pon Kulendiren
http://www.pustaka.co.in
முள்வேலிக்குப் பின்னால்
Mulvelikku Pinnal
Author:
பொன் குலேந்திரன்
Pon Kulendiren
For more books
http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
பொருளடக்கம்
சமர்ப்பணம்
இக்குறு நாவலைப் பற்றி
1. பத்திரிகையாளன் வருகை
2. முள்வேலி முகாம்
3. பொன்னம்மாவும் அன்னம்மாவும்
4. மஞ்சுளா
5. டாக்டர் இராஜதுரை
6. நேர்ஸ் சாந்தி
7. இராமசாமி
8. மார்க்கண்டு
9. விடுதலை
***
சமர்ப்பணம்
இந்நூல் ஈழப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், போர் அகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்காக உலகில் குரல் எழுப்பிய இயக்கங்களுக்கும்; என் சமர்ப்பணம். இது வரலாற்று பதிவாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
பொன் குலேந்திரன் - மிசிசாகா - கனடா
ஆசிரியர்
01 பெப்ரவரி 2017
***
இக்குறு நாவலைப் பற்றி
இக்குறுநாவல் உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. ஒரு பாவமும் அறியாத ஈழத் தமிழர்கள்.; அகதிகள் முகாமில் பட்ட அவலங்களை இக்கதை ஓரளவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. பலர விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் பல குடும்பங்கள் திரும்பவும்; தாம் வாழந்த வாழ்வுக்கு திரும்பவில்லை. பரமபரையாக வெகு காலம் வாழ்ந்த அவர்களது காணியும், வீடும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. சில காணிகளில் சிங்களவர்கள் குடியேறி விட்டனர். புத்த விகாரைகள் தொன்றிவிட்டன. அகதிகளுக்கு அவர்களது சொந்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தாலும் நடைமுறையில் அது மெதுவாகவே செயல்படுத்துப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி இராணுவம் ஆக்கிரமித்த சில காணிகளில் இருந்து வெளியேறவில்லை, அதற்கு ஈடாக காணி இழந்தவர்களுக்கு, அவரகள் வெகு காலம் வாழந்த உரை விட்டு வெகு தூரத்தில் உள்ள ஊரில் காணி வழங்கப்படது.
ஒரு யுத்தத்தின் முடிவு, தோழ்வியை தழுவியவர்கள், அடிமைகளாக நடத்தப்பட்டதை வரலாற்றில் காணலாம். ஈழத் தமிழ் அகதிகள் அதற்கு விதிவிலக்கல்ல
இந்நூல் அவ்வகதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கு என் சமர்ப்பணம்
***
1. பத்திரிகையாளன் வருகை
ஜோன் வைட் (John White), டொராண்டோ, கனடாவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்றின் பத்திரிகையாளன். பல நாடுகளின் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை அலசி ஆராய்ந்து எழுதி விருதுகளையும், பாராட்டுக்களைப் பெற்றவர். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இரான், இராக் சீரியா போன்ற நாடுகளுக்குச் சென்று ஆபத்தான நிலையிலும் முக்கியமானவர்களை நேர்கண்டு, அவர்களின் கருத்துக்களை பக்கச் சார்பற்ற வகையில் எழுதியவர். சிறிலங்காவினது இனக்கலவரங்கள் காரணமாக கனடாவிற்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சமிருக்கும். கனடாவுக்கு சிறீலங்காவின் இனப்பிரச்சினையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மீது ஜோனுக்கு அக்கரை அதிகம்.
மனித உரிமை மீறல்களுக்குப் பிரசித்தம் பெற்ற நாடு சிறீலங்கா. ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், அரசினால் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு அருகேயுள்ள செட்டிக்குள்ப் பகுதிக்கு அகதிகளாக முள்வேலிகள் சூழ்ந்த திறந்த வெளி சிறைக்குள் அரசினால் முகாம்களில் வைக்கப்பட்டார்கள். அதைப்பற்றி ஆராய்ந்து அவ்வேலிக்குப் பின்னால் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியவும், பல அகதிகளை நேரில் கண்டு அவர்களின் உண்மை நிலையை அறிந்து எழுதும் நோக்கத்தோடு ஜோன் சிறீலங்காவுக்கு டொராண்டோவிலிருந்து லண்டன் சென்று, அதன் பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு சிறீலங்கன் எயர்லைனில் பயணமானார்.
இதற்கு முன்னரும் 1983 ஆம் நடந்த இனக்கலவரவத்தைப் பற்றி அறிந்து எழுதிய அனுபவம்; ஜோனுக்குண்டு. அதன் பின்னர் ஐபிகேஏப் (IPKF) என்ற இந்திய அமைதிப்படை 1987 முதல் 1990 வரை வடமாகாணத்தில். இருந்த காலகட்டத்தில் தோன்றிய பிரச்சனைகளைப் பற்றியும், அதன்பிறகு 1993 நொவெம்பரில் விடுதலைப் புலிகளின் பூனகரி தாக்குதலைப் பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பற்றியும், எழுதியவர் ஜோன். விடுதலைப் புலிகள் எவ்வாறு ஈழத்தமிழர்களின் முழு ஆதரவைப்பெற்று அவர்களின் உரிமைகளுக்காகப் போராடிவருகிறார்கள் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
1948 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு சுதந்திரம் கிடைக்க