Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Urugum Satham
Uyir Urugum Satham
Uyir Urugum Satham
Ebook108 pages1 hour

Uyir Urugum Satham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. He also had written excellent stories in social theme. These short stories collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402151
Uyir Urugum Satham

Read more from Rajesh Kumar

Related to Uyir Urugum Satham

Related ebooks

Related categories

Reviews for Uyir Urugum Satham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Uyir Urugum Satham - Rajesh Kumar

http://www.pustaka.co.in

உயிர் உருகும் சத்தம்

Uyir Urugum Satham

Author:

ராஜேஷ் குமார்

Rajesh Kumar

For more books

http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

உயிர் உருகும் சத்தம்

1

திண்டல் ரயில் நிலையத்தில் அந்தப் பாசஞ்சர் ரயில் நின்றபோது நடுப்பகல் 12 மணி. ஏப்ரலின் முதல்வார வெய்யில் அமிலத்தின் உக்கிரத்தோடு இருந்தது. காற்று காணாமல் போயிருந்தது.

இருபத்தேழு வயது ரூபனும் இருபத்தி மூன்று வயது வானதியும் ரயிலின் மையத்தில் இருந்த கம்பார்ட் மெண்ட் ஒன்றிலிருந்து இறங்கிக் கொண்டார்கள். சூட்கேஸ்களை கீழே வைத்துவிட்டு பிரயாணக் - களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும்போதே இந்த ஸ்டேஷனில் இவ்வளவு நேரம் நின்றதே பெரிய விஷயம் என்று சொல்கிற மாதிரி ரயில் பிளாட்பாரத்தை விட்டு நகர்ந்தது. வானதி சுற்றிலும் பார்த்துவிட்டு கூப்பிட்டாள்.

ரூபன்!

ம்.

நம்ம எடிட்டர் சொன்னது போல் இது ரொம்பவும் சின்ன கிராமம்தான் போலிருக்கு.

பார்த்தாலே தெரியுதே…!

செம்மண் கெட்டித்துப் போயிருந்த பிளாட்பாரத்தில் சூட்கேஸ்களோடு மெல்ல நடை போட்டார்கள். முகத்தில் அனல் அடித்தது.

என்ன வெய்யில்…! ஏதோ சஹாரா பாலைவனத்தில் நடக்கிற மாதிரி இருக்கு.

ரயிலை அனுப்பி விட்டு இடது கக்கத்தில் பச்சைக் கொடியையும் வலது கக்கத்தில் சிவப்புக் கொடியையும் அதக்கிக் கொண்டு எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட் கலெக்டராக மாறினார்.

டிக்கெட் ப்ளிஸ்…!

அவருடைய கையில் டிக்கட்டுகளை திணித்து விட்டு ரூபனும் வானதியும் மறுபடியும் நடக்க ஆரம்பித்த போது ரூபனின் செல்போன் நோக்கியா டோனில் கூப்பிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். வானதி கேட்டாள்.

என்ன… உன்னோட பிரண்ட் நேச்சுரோபதி டாக்டர் தயாபரனா?

அவனேதான்…! என்று புன்முறுவலித்த ரூபன் தன் செல்போனை காதுக்கு ஒற்றினான்.

ஹலோ தயா, இப்பத்தான் ரயிலை விட்டு இறங்கினோம்.

வெல்கம் டு திண்டல்! நான் ஸ்டேஷனுக்கு வெளியே வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

பெரிய சென்ட்ரல் ஸ்டேஷன்…! வெயிட் பண்ணிட்டிருக்கானாம்…

என்னோட கிராமத்துக்கு இதுதான் சென்ட்ரல் ஸ்டேஷன். சரி பயணம் எப்படியிருந்தது…?

நோ ப்ராப்ளம்…! வானதியும் கூட இருந்ததால ஜாலியா பேசிட்டே வந்துட்டேன். ம்… உன்னை நான் பார்த்துட்டேன். ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு வேப்ப மரத்துக்குக் கீழே சாயம் போன மாருதி 800 கார் நிக்குது. அதுதானே!

அடப்பாவி…! அது சாயம் போன கார் இல்லடா. அதனோட ஒரிஜினல் கலரே அப்படித்தான்!

இப்படியொரு கலரை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை.

என்ன கிண்டலா… வா… பேசிக்கிறேன்!

"ஸாரிடா!’ ரூபன் சிரித்துக் கொண்டே தன் செல் போனை அணைத்தான். வானதி கேட்டாள்.

என்ன சொல்றார் உன்னோட ஃப்ரண்ட்?

அவனோட காரை கமண்ட் பண்ணிட்டேன். கோபம்!

ரூபன்! நீயும் தயாபரனும் ஒரே காலேஜில் படிச்ச தாய் சொன்னே…! நீ ஜர்னலிஸ்ட் ஆயிட்டே. அவர் மட்டும் எப்படி நேச்சுரோபதி டாக்டராய் மாறினார்?

நேச்சுரோபதி முறையில் மருத்துவம் பார்க்கிறது அவங்க பரம்பரைத் தொழில். கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் இவங்க வைத்தியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துட்டு வருது. தயாபரனோட தாத்தா ராமரத்னம். அப்பா கோபால்சாமி ரெண்டு பேரோட மறைவுக்குப் பின்னாடி தயாபரன் தனக்கு வந்த் பேங்க் வேலையை வேண்டாம்ன்னு பரம்பரைத் தொழிலை பண்ணிட்டு வர்றான்.

இருவரும் அந்தப் பழமையான ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். வேப்பமர நிழலில் காரோடு நின்றிருந்த தயாபரன் ஒரு புன்னகையோடு இரண்டு பேர்களையும் நெருங்கினான்.

வார்ம் வெல்கம் ஃபார் போத் ஆஃப் யூ… சொன்ன வனின் வயிற்றில் ரூபன் குத்தினான்.

என்னடா…! நேச்சுரோபதி டாக்டரான நீயே தொப்பை போட்டு இருக்கே...? எக்சர்சைஸ் பண்றதே இல்ல போலிருக்கு…

தயாபரன் சிரித்தான். டேய்… ரூபன்…! இந்தத் தொப்பை எங்க குடும்பத்து ஜின் காரணமாய் வர்ற தொப்பை. இந்தியா முழுவதும் பாதயாத்திரை போய்ட்டு வந்தாலும் சரி இந்தத் தொப்பை கரையாது. இதனால எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!

கட்டிக்கப் போகிற பொண்ணுக்கு பிரச்னையாய் இருக்குமே!

மூவரும் சிரித்து காரில் ஏறினார்கள். தயாபரன் காரை நகர்த்தினான். இரண்டு பக்கமும் வயல்கள் சூழ்ந்திருக்க, நடுவில் கோணல் மாணலாய் வளைந்து போன செம் மண் ரோட்டில் கார் மிதமான வேகத்தில் பயணித்தது. தொலை தூரத்தில் தென்னை மரங்கள் கூட்டம் கூட்ட மாய் மாநாடு போட்டிருந்தன.

வானதி கேட்டாள். "மிஸ்டர் தயா! இந்த ஊர்ல தட்சிணாமூர்த்தி கோயில் ரொம்பவும் விசேஷம்ன்னு சொன்னாங்க. அந்தக் கோயில் எங்கே இருக்கு…?

"பக்கத்துலதான் இருக்கு சிஸ்டர்! இந்த ஊர்ல நாலைஞ்சு நாள் தங்கி இருக்கப் போறீங்க… நான் எல்லாக் கோயில்களுக்கும் கூட்டிட்டுப் போகப் போறேன்.

Enjoying the preview?
Page 1 of 1