Nenjirukkum Varai!!!
By Shrijo
4/5
()
About this ebook
Read more from Shrijo
Azhagiya Vizhigaliley! Rating: 5 out of 5 stars5/5Nenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Pani Vizhum Malarvanam! Rating: 4 out of 5 stars4/5Santhana Thendral Rating: 4 out of 5 stars4/5Manathodu Mazhai Vaasam! Rating: 3 out of 5 stars3/5Aayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Nenjaankoottil Neeye Nirkkirai Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Malare! Rating: 3 out of 5 stars3/5Shrijovin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5
Related to Nenjirukkum Varai!!!
Related ebooks
Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nenjaankoottil Neeye Nirkkirai Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Min Miniyai Naan... Rating: 4 out of 5 stars4/5Nenjam Irandin Sangamam sudha Rating: 1 out of 5 stars1/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Maalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Kaadhalendral Rating: 4 out of 5 stars4/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Unaithean Ena Naan Ninaithean... Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Kolla Vaarayo Rating: 4 out of 5 stars4/5Aayiram Nilavey Vaa! Rating: 4 out of 5 stars4/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5Sakiye Sagiye Rating: 5 out of 5 stars5/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Imaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Ninnai Saranadainthean Part - 2 Rating: 5 out of 5 stars5/5Nesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsVettiveru Vaasam... Rating: 2 out of 5 stars2/5Thoduvaanam Thodum Dhooram Rating: 4 out of 5 stars4/5Ithayame Ithayame Rating: 4 out of 5 stars4/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Manathai Thirakkumo Mounangal Rating: 4 out of 5 stars4/5Putham Puthu Malare! Rating: 3 out of 5 stars3/5Idhayam Meviya Kaadhalinaaley Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nenjirukkum Varai!!!
11 ratings0 reviews
Book preview
Nenjirukkum Varai!!! - Shrijo
https://www.pustaka.co.in
நெஞ்சிருக்கும் வரை!!!
Nenjirukkum Varai!!!
Author:
ஸ்ரீஜோ
Shrijo
For more books
https://www.pustaka.co.in/home/author/shrijo
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
1
சுகமான காலைப் பொழுது. ஆதவன் மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருந்தான். சூரிய வெளிச்சம் அறையில் பரவ, மெல்லக் கண்விழித்தாள் பவித்ரா. கண்களை கஷ்டப்பட்டுச் சுழற்றி அறையின் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த மணியைப் பார்க்கையில், மணி 6 தாண்டிக்கொண்டு இருந்தது.
வேகமாக எழுந்தவள், அருகில் உறங்கிக்கொண்டு இருந்த மகளை போர்வை போர்த்தி பக்கத்தில் தலையணையை அணைப்பாக வைத்துவிட்டு காலை வேலைகளை முடிக்கக் கிளம்பினாள்.
கதவைத் திறந்து, வெளியே இருந்த பாலை எடுத்தவள், பிரிட்ஜில் வைத்துவிட்டு குளிக்கப் போனாள்.
அவள் கிளம்பி, உணவு தயார் செய்து, குழந்தையை எழுப்ப. அது மெல்ல சிணுங்கியது.
மானு. எழுந்துக்கோடா
மாத்தேன்
என் செல்லம்ல
மாத்தேன்
அம்மாக்கு லேட் ஆச்சுல்ல பட்டு
ம்ம்
என்று சிணுங்கிய குழந்தை எழுந்து கொண்டது.
அதை குளிக்கவைத்து, உணவூட்டி, அவளும் சாப்பிட்டு, குழந்தையை கிளப்பி, வெளியே வந்து ஸ்கூட்டியை எடுத்தாள்.
அவள் செல்லம் சமத்தாக ஏறிக்கொண்டது.
இருவரும் வெளியே இருந்த செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்.
பவித்ரா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். மானு என்ற மானசா அவள் செல்ல மகள். பவித்ராவின் பெற்றோர் கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.
மானுவும் பவித்ராவின் பள்ளியில்தான் ப்ரீ.கே.ஜி. படிக்கிறாள்.
இருவரும் பள்ளியை அடைந்தனர்.
மானுவை வகுப்பில் விட்டு, பவித்ரா ஸ்டாப்ஸ் ரூம்க்கு சென்றாள்.
அவளைப் பார்த்த நித்யா, ஹாய் பவி
ஹாய் நித்தி
இன்னிக்கு லேட் போல?
ம்ம். அப்பாவும், அம்மாவும் இல்ல. சோ லேட்
சரி வா. பிரேயர் ஹால் போகலாம்
இருவரும் பிரேயர் ஹாலை நோக்கிக் கிளம்பினர்.
நித்யா, பவித்ராவின் பள்ளி, கல்லூரி, பணித்தோழி. நெருங்கிய தோழிகள் கூட.
பிரேயர் முடிந்து அனைவரும் கலைய, பவித்ரா அவள் வகுப்பிற்குள் நுழைந்தாள். பவித்ரா மேல்நிலை வகுப்புகளுக்கு கணித ஆசிரியை. அவள் இங்கு சேர்ந்து 1 வருடம் ஆகிறது. இதுவரை அவள் பாடத்தில் அனைவரும் 80% மதிப்பெண்களுக்கு கீழ் குறைந்ததில்லை. அவள் அனைவருக்கும் பிடித்த ஆசிரியை கூட.
அன்றைய நாள் முடிந்து இருவரும் வீடு திரும்ப, பவித்ராவின் பெற்றோர் வந்து இருந்தனர்.
தாத்தா
என்று குழந்தை உள்ளே ஓடியது.
மானு. வா வா வா
என்று அவர் தூக்கிக் கொண்டார்.
எப்பப்பா வந்தீங்க?
மதியம் டா
அம்மா எங்கப்பா?
உள்ள இருக்கறா?
மானுக்கு தாத்தா டிரெஸ் மாத்தி விடுவேனாம்
என்று அவர் சொல்ல,
ம்ம். சேரி தாத்தா
என்று அவள் வர கைகளில் இருந்து இறங்கி, அவருடன் உள்ளே ஓடினாள்.
சுந்தரம் ஒரு ரிட்டையர்ட் பிரின்சிபால். அவர் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். 2 வருடங்களுக்கு முன் ரிட்டையர் ஆக இப்போது டியூசன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
லலிதா, அன்றும் இன்றும் என்றும் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவி.
அம்மா
என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே சென்றாள் பவித்ரா.
வாம்மா. போய் கை கால் முகம் அலம்பிட்டு வா. உனக்கு டீ தரேன்
என்றவர் டிபன் வேலையில் இறங்கினார்.
மாலை ஆறாக, சுந்தரமும், பவித்ராவும் டியூசன் எடுக்க மேலே சென்றனர்.
மாணவர்கள் கூட ஒவ்வொருவாக வர ஆரம்பித்து இருந்தனர்.
மாடியில் ஒரு ஹால் கட்டி, இதற்காகவே உருவாக்கி இருந்தார் சுந்தரம்.
பவித்ராவைப் பொறுத்தவரை நிறைவான வாழ்க்கை. அவளும் மகிழ்ச்சியுடனே இருந்தாள். அவள் உலகம் பெற்றோர் மற்றும் மானசாவுடன் முடிந்தது.
அவளைப் பார்த்து புன்னகைத்த கடவுள், அந்த உலகத்தில் இணைய மற்றுமொரு ஜீவனை அனுப்ப சித்தம் கொண்டார்.
###
2
வழக்கம் போல் வண்டியை எடுத்துக்கொண்டு மகளுடன் பள்ளிக்கு புறப்பட்டாள். மகளை வகுப்பில் விட்டுவிட்டு அவள் ஸ்டாப் ரூமிற்கு செல்ல, ரம்யா வந்தாள்.
என்ன பவி மேடம், இன்னிக்கும் லேட் போல
ஆமாம் ரம்யா மேம். டிராபிக்
என்று சொல்லிக்கொண்டே அவள் இடத்தில அமர்ந்து அவள் வேலையைப் பார்க்க, ரம்யா நித்யாவிடம் வந்தாள். நித்யா இன்னிக்கு நம்ம ஈஸ்வர் சார் வர்றாராம். நீ பார்த்ததில்லைல
ம்ம்.
ரொம்ப ஹேண்ட்சம் கை. அவருக்காக நான் 1 இயரா வெயிட் பண்றேன். இன்னிக்கு வந்தா உடனே பிரபோஸ் பண்ண போறேன்
ஹோ.
என்ன ஹோ? ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்ல
சாரி பா. எனக்கு இந்த லவ்வே பிடிக்காது
பவி மேடம், இன்னும் கொஞ்ச நாள்ல நான் இந்த ஸ்கூல்க்கே ஓனர் ஆகப்போறேன்
ஹோ
என்ன மேடம். நீங்களும் இப்படியே சொல்லறிங்க?
அங்கு வந்த ரேகா, நீ வேற ரம்யா. அவங்களே ஹஸ்பன்ட் இல்லாம இருக்காங்க. கொஞ்சம் பொறாமையா இருக்கும்ல
ஏய்
என நித்யா எழுந்தேவிட்டாள்.
அவளை தடுத்த பவித்ரா, விடு நித்தி. சண்டை வேண்டாம்
பாருடா. அவங்களுக்கே உறைக்குது. உனக்கு என்ன நித்யா?
என்று ரம்யா கேட்க,
ஒரு டீச்சர் எப்படி இருக்கணுமோ அப்படி இரு. ஈஸ்வர் சார் வரட்டும், உனக்கு இருக்கு, அவளோட ஹஸ்பன்ட் அவ கூட இல்லைன்னு உனக்கு தெரியுமா?
என்று நித்யா கூறிக்கொண்டே சண்டையிட ஆயத்தமாக, பவி அவளை பிரேயர் ஹாலுக்கு இழுத்துச் சென்றாள்.
ஏண்டி அவ தான் சொல்றா அப்படின்னா, நீயும் இப்படி இருக்கற
பார்த்துக்கலாம் விடு
என்று அவள் வகுப்பு மாணவர்களின் பின் சென்று நின்றாள்.
பிரேயர் முடிந்து, அனைவரும் அவரவர் வகுப்பிற்கு செல்ல, பவியும் புறப்பட, நித்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. அவளுக்கு இரண்டாவது பீரியட் தான் வகுப்பு என்பதால், அவளது செல்லை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
மானுவின் வகுப்பிற்கு சென்ற ரம்யா, காலையில் நடந்த சண்டையை நினைத்து கடுப்பில் இருந்தாள்.
அன்று பார்த்து மானசா தாகமெடுக்க, ரம்யாவிடம் கேட்காமல் தண்ணீர் குடித்தாள். அதைக் கண்ட ரம்யா, காலையில் பவித்ராவின் செய்கையையும், நித்யாவின் செய்கையையும் நினைவில் கொண்டு மானசாவின் மீது அவள் கோபத்தை திருப்பினாள்.
அடுத்த நிமிடம், ஹே மானசா
என்ற அவள் கத்தலுக்கு பயந்த மானசா,
எஸ் மிஸ்
என்றாள்.
என்ன பண்ற? தண்ணி வேணும்னா கேட்டு தான குடிக்கணும்
மிஸ்
என்று அவள் பயத்தில் திணற,
பர்ஸ்ட் எந்திரி
எழுந்து நின்ற குழந்தையை, இங்க வா
என்றாள்.
அருகில் வந்த குழந்தையின் கன்னத்தைக் கிள்ள, அம்மா
என்று அழ ஆரம்பித்தது.
அதே நேரம் வகுப்பின் முன் நிழலாட நிமிர்ந்த ரம்யா ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். பின்னே அவள் எண்ணத்தின் நாயகன் அவள் முன்னே நின்று கொண்டு இருந்தால் அவளுக்கு சந்தோசமாக தானே இருக்கும்.
ஈஸ்வர் வந்ததும் என்ன பார்க்க வந்து இருக்கார்
என்று அவள் உள்ளுக்குள் மகிழ,
தன்னை கிள்ளிய மிஸ், புன்னகைப்பதை பார்த்த மானசா மெல்ல மிஸ்ஸின் பார்வையைப் பின்பற்றி பின்னே திரும்ப, ஈஸ்வரைப் பார்த்ததும்
அப்பா என்று சொல்லிக்கொண்டே அழுதவாறு மானசா அவனிடம் ஓடினாள்.
பயத்தில் நடுங்கிக்கொண்டு தந்தையின் கால்களைக் கட்டிக்கொண்டு இருந்த மானுவை அள்ளியெடுத்து, ஆறுதலாக அணைத்தான் ஈஸ்வர்.
மானுவின் செயலில் ரம்யா அதிர்ந்து நிற்க,
கம் டூ மை கேபின்
என்று சொல்லிவிட்டு அவன் வேகவேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றான்.
மாற்று ஆளை ஏற்பாடு செய்துவிட்டு, வேகவேகமாக ஈஸ்வரின் அறைக்கு சென்றாள்.
மே ஐ கமின் சார்
எஸ்
உள்ளே நுழைய, குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான்.
ரகு எனக்கு நாளைக்கு தீம் பார்க் கிளோஸ் ஆகணும். பேபிக்கு நாளைக்கு அங்க போகணுமாம். நீ நான் சொன்னத செய்
என்று அவன் பிஏ ரகுவிற்கு கட்டளை பிறப்பித்துக்கொண்டு இருந்தான்.
தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு மானு சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அது ரம்யாவைப் பார்த்த பார்வையில் பயம் இன்றி, ஒரு கர்வம் தெரிந்தது. உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுமே அப்படித்தான். தந்தையின் அருகில் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பர்.
செல்லை அணைத்தவன், லிசன். உங்கள டிஸ்மிஸ் பண்ணிட்டேன். நீங்க போகலாம்
சார்?
குழந்தைங்ககிட்ட இப்படி பிஹெவ் பண்ற மிஸ் இந்த ஸ்கூல்க்கு தேவை இல்லை.
சார்?
கெட் லாஸ்ட்
என்றவன் இன்டெர்காமில் பிரின்சியை அழைத்து, மேடம், மிஸ். ரம்யாவ டிஸ்மிஸ் பண்ணிட்டேன். பார்மாலிட்டீஸ் முடிச்சுடுங்க
என்றவன் செல்லில், நித்யா. அப்படியே பவிய கூட்டிட்டு வா
என்று செல்லை அணைத்தான்.
அவள் அங்கேயே நிற்பதைப் பார்த்த ஈஸ்வர், உங்கள வெளிய போக சொன்னதா நியாபகம்
என்க அவள் நகர்ந்தாள்.
அங்கோ, நித்யா பவியின் வகுப்பின் முன் நின்று, பவி
என்க,
என்ன நித்தி?
நம்மல ஈஸ்வர் சார் கூப்பிடறார்
சரி வரேன்
என்றவள், ஸ்டூடெண்ட்ஸ் இந்த சம் காப்பி பண்ணிட்டு, நெக்ஸ்ட் சம் லைன் பை லைனா வொர்க் அவுட் பண்ணுங்க
என்றவள் வெளியேறினாள்.
எதுக்குடி?
போனாதான் தெரியும்
சரி நீ இரு. நான் முதல்ல போறேன்
என்று அவன் அறை வாசலில் சொன்ன நித்யா,
அவன் அறைக் கதவைத் தட்டி, மே ஐ கமின்?
என்று கேட்டாள்.
எஸ்
அங்கிருந்த ஈஸ்வரைப் பார்த்து புன்னகை புரிந்த நித்யா,
அண்ணா எப்படி இருக்கீங்க?
நல்லா இருக்கேன் மா. தேங்க்ஸ் மா. நீ கால் பண்ணது நல்லதா போச்சு
என்னன்னா சொல்றிங்க?
நான் போறப்ப ரம்யா, மானு குட்டிய கிள்ளிகிட்டு இருந்தாங்க. ரீசன் மார்னிங் இன்சிடென்ட், அவங்க முகத்தை வைச்சே அனலைஸ் பண்ணிட்டேன்
அச்சோ.
அவள டிஸ்மிஸ் பண்ணிட்டேன். நீ என்ன பண்ணு மானுவ கூட்டிட்டு போ. நான் நம்ம பவிய கவனிக்கிறேன்
சரிண்ணா. பவிக்கு ரம்யா பண்ண வேலை தெரிஞ்சுது சாமி ஆடிடுவா, மறந்தும் அவகிட்ட சொல்லிடாதிங்க, அதே மாதிரி உங்களை இங்க பார்த்தா அவ்ளோதான், ஆல் தி பெஸ்ட் அண்ணா
என்றவள் மானுவை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.
அவள் கையில் மானுவைப் பார்த்த பவி, மானு
என்க,
ஏய். சார் கூப்பிட்டார். நீ போய் பாரு. பாப்பாவ நான் பார்த்துகிறேன்
என்று வேகமாக நகர்ந்தாள். பின்னே அவனையும், மானு அங்கிருந்த காரணத்தையும் தெரிவித்தால், அவள் அங்கு இருக்கவே மாட்டாளே.
அவன் அறைக் கதவைத் தட்டி பெர்மிசன் கேட்டு உள்ளே செல்ல, அவன் முதுகு காட்டி அமர்ந்து இருந்தான்.
குட் மார்னிங் சார்
குட் மார்னிங் பவி
என்று அவன் திரும்ப, அவனைப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.
அவள் உதடுகள் சிவா
என அழுந்த உச்சரிக்க,
அவன் மெல்ல எழுந்து நின்றான்.
###
3
அவனைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். சிவா
என அவளது உதடுகள் அழுந்த உச்சரித்தது.
பரவால்லியே. என் பேர நல்லா நியாபகம் வைச்சு இருக்க?
அவள் கோபமாக திரும்பினாள்.
நில்லு. எங்க போற?
இது உங்க ஸ்கூல் அப்படின்னு தெரிஞ்சு இருந்தா நான் இங்க வொர்க் பண்ணியே இருக்க மாட்டேன். ச்சே
என்று அவள் வெளியேறப் போக,
சோ உனக்கு என் மேலதான் அக்கறை இல்லைன்னு நினைச்சேன். பட் உன் ஸ்டூடெண்ட்ஸ் மேலகூட அக்கறை இல்லை. இல்லையா?
என்ன ஒளர்றீங்க?
பின்ன. நீ போய்ட்டா பசங்க பாவம் இல்லையா? புது ஸ்டாப் போடற வரை கஷ்டம், அத சொன்னேன். எனக்குகூட என் மனைவி வேலை செய்யறது பிடிக்கல. சோ நீ போயி உடனே ரெசிக்னேசன் லெட்டெர் கொண்டு வா
லிசன், நான் இந்த ஸ்கூல் இல்லாட்டிகூட இன்னொரு ஸ்கூல்ல வொர்க் பண்ணிப்பேன். உங்களுக்கு நான் நோடீஸ் பீரியட் தரேன். நீங்களே ஸ்டாப் அரேஞ் பண்ணிக்கோங்க
என்றவள் வெளியேறியேவிட்டாள்.
கோபத்தில் கண் மண் தெரியாமல் நடந்து வந்தவள், நேராக ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவ போக,
இந்த பவித்ரா ஈஸ்வர் சார் வைப்ன்னு இன்னிக்குதான் தெரியுது. எவ்ளோ கமுக்கமா இருந்து இருக்கா பாரேன்
என்று ரேகா சொல்ல,
காலைல அவளுங்க என்ன கடுப்படிச்சுட்டு போறப்பவே நான் சந்தேகபட்டு இருக்கணும். என்ன போட்டு குடுத்துட்டு இப்ப என் வேலையே போச்சு ரேகா
என்ற ரம்யா சொன்னாள்.
ஏய். நீ மானுவ கிள்ளுனதுதான் பிரச்சனை. பவித்ரா இல்ல. அவ அழுத அழுகைல நீ மாட்டிக்கிட்ட
இந்த உரையாடலை கேட்ட பவித்ரா, என்ன மானுவ கிள்ளுனாளா?
என்று கோபமடைந்து,
உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்ண கிள்ளி இருப்ப?
என்று கத்த,
அதில் அதிர்ந்து இருவரும் திரும்பி பார்த்தனர்.
இல்ல பவித்ரா மேடம், அது…
என் மேல கோபம் இருந்தா நீ என்கிட்ட காட்டனும். நீ மானுவ கிள்ளி இருக்க. அவ தப்பு பண்ணி இருக்க மாட்டா. எனக்கு தெரியும்.
இல்ல மேடம்
என்று அவள் ஆரம்பிக்க, அதே நேரம் மற்ற ஸ்டாப்ஸ் சிலர் வர, பவித்ரா அங்கிருந்து நகர்ந்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில், பவித்ரா யார்ரென்று அனைவருக்கும் தெரிந்தது.
அனைவரும் அவளைப் பார்த்த பார்வையில், தற்போது பயம் கலந்த மரியாதை கூடி இருந்தது.
அன்று மாலை சிறப்பு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது ஈஸ்வரால்.
ஹாலில் அனைவரும் கூடி இருக்க, பவித்ரா செல்ல மறுத்துவிட்டாள். அவள் கூடவே, நித்யாவும் இருக்க, கூட்டம் ஆரம்பமானது.
சோ. உங்க எல்லாருக்கும் மிசர்ஸ் பவித்ரா யாருன்னு தெரிஞ்சு இருக்கும். இங்க சில தவறுகள் நடப்பதாக எனக்கு சில கம்ப்ளைன்ட் வந்துச்சு. அத சரி பண்ண, யார அனுப்பலாம் அப்படின்னு யோசிச்சேன், எனக்கு நம்பிக்கையான ஆளாவும் அவங்க இருக்கணும். அதே சமயம், நான் மேரேஜ் பண்ணிகிட்ட விஷயம் சிலருக்கு மட்டும்தான் தெரியும்.
சோ நான் பவித்ராவ அனுப்பினேன்.
இப்ப எனக்கு சில விஷயங்கள் கிளியர் ஆய்டுச்சு. நானே இன்னிக்கு சில விஷயங்கள சொல்ல முடிவு பண்ணி இருந்தேன். பட். அதுக்குள்ள உங்களுக்கு ரீச் ஆய்டுச்சு
சோ, இனி இந்த பள்ளி நிர்வாகத்தை என் மனைவி பவித்ரா எடுத்து நடத்துவாங்க. இனி அவங்கதான் கரஸ்பாண்டெண்ட்.
என் மனைவிக்கு இந்த பீல்ட்தான் பிடிச்சு இருக்கு. சோ எல்லாரும் அவங்களுக்கு உங்க சப்போர்ட்ட குடுங்க
என்றவன், செல்லில் நித்யாவிற்கு மெசேஜ் அனுப்பினான்.
அடுத்த 5 வது நிமிடம், பவித்ராவுடன் நித்யா உள்ளே வர, அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க, இது என்ன புது தொல்லை
என பவித்ரா மனதிற்குள் எண்ணினாள். அதே நேரம் அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்கார்வதா? இல்லை அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்வதா என்ற குழப்பமும் சேர்ந்து உருவானது. அவனருகில் சென்று அமர அவளுக்கு சற்றும் விருப்பம் இல்லை. அதை அவள் முகமே காட்டியது.
அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர்ந்த ஈஸ்வர், பவி, இங்க வா
என்றான்.
பல்லைக் கடித்துக்கொண்டு அவனருகே செல்ல, நித்யா அவளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தாள்.
சோ. இந்த பள்ளியின் புதிய கரஸ்பாண்டெண்ட்டை வருக வருக என வரவேற்கிறேன்
என்று சொல்லி அவளுக்கு ஒரு ரோஜா பூங்கொத்தை பரிசளித்தான்.
அனைவரும் கைத்தட்ட, சூழ்நிலை காரணமாக அவள் புன்னகைத்து ஏற்றுக்கொண்டாள்.
சோ. பவித்ராவின் அறிக்கை படி, சில மாற்றங்கள் பள்ளியில் நாளை முதல் ஏற்படுத்தப்படுகிறது
என்று சொன்னவன் பொதுவான விசயங்களை மட்டும் பேசிக் கூட்டத்தை முடித்தான்.
கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப, நித்யா ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள். கங்கிராட்ஸ்
என்றாள்.
அவளை ஒரு முறை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பவித்ரா.
மாலை பள்ளி முடிந்து, வீட்டிற்கு கிளம்ப, மானு ஏறி ஸ்கூட்டியில் நின்றது. அதே நேரம், ஈஸ்வர் அங்கு வந்து, பேபி, டிரைவ் போலாமா?
என்று கேட்க, வேகமாக கீழே இறங்கி, அம்மா பாய்
என்று சொல்லிவிட்டு அவன் கைகளில் ஏறிக்கொண்டது.
இருவரும் செல்ல, ஏய் பாக்
என்று பவித்ரா கத்தினாள்.
இருவரும் கண்டுகொள்ளாமல் போய்க் காரில் ஏறினர். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா இந்த உலகமே கண்ணனுக்கு தெரியாது
என்று சொல்லிக்கொண்டே வண்டியை எடுக்க, அவளைச் சுற்றி இருந்த அனைவரும் அவர்களைப்