Nil...Kavani...Kadhali...
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5
Related to Nil...Kavani...Kadhali...
Related ebooks
L Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Devathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Thaduthal Kooda Tharuvean Rating: 5 out of 5 stars5/5Everest Thottuvidum Uyaramthaan Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Thoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Vanjanai! Rating: 4 out of 5 stars4/5Arunthathiyum Aaru Thottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru...! Rating: 0 out of 5 stars0 ratingsInba Athirchi Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Iravu Nera Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsIni Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsMathangalil Aval Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsMisty Moon Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Vinadigal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorgam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Nil...Kavani...Kadhali...
0 ratings0 reviews
Book preview
Nil...Kavani...Kadhali... - Rajesh Kumar
http://www.pustaka.co.in
நில்… கவனி… காதலி…
Nil... Kavani... Kadhali...
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
நில்… கவனி… காதலி…
ராஜேஷ் குமார்
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1.
முழுநிலா பத்திரிகை அலுவலகம்.
காலை பதினோரு மணி.
உள் இணைப்பு தொலைபேசி மெல்ல முணுமுணுத்து கூப்பிட, ஒரு சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்த உதவியாசிரியர் பரணி, ரிசீவரை எடுத்து காதுக்குப் பொருத்தினார். பரணி
என்று குரல் கொடுத்ததும் ஆசிரியர் சூரியபிரகாசம் கேட்டார்.
பரணி…! என்னோட அறை வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போக முடியுமா…?
இதோ வர்றேன் சார்…
பரணி, சிறுகதையை மேசையில் வைத்து விட்டு எழுந்தான். முப்பது வயது பரணி, அழகாக இருந்தான். கதாநாயகனுக்குரிய தோற்றம். சினிமாவில் நடிக்க முயன்று சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் - பத்திரிகைத்துறைக்கு வந்தவன்.
அறையைவிட்டு வெளியே வந்த பரணி, அந்த பழைய கட்டிடத்தின் குறுகலான பாதையில் நடந்து - கடைசியிலிருந்த ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தான்.
அறுபது வயதின் ஆரம்பத்தில் இருந்த ஆசிரியர் சூரியபிரகாசம், தாம்பூல வாயோடு சிரித்தார்.
வாங்க… பரணி…
வணக்கம் சார்…
"உட்காருங்க… ஏதாவது முக்கியமான வேலையில் இருந்தீங்களா?
இல்ல சார்… ஒரு சிறுகதையைப் படிச்சுகிட்டிருந்தேன்…
சரி… இந்த கவிதையைப் படிச்சு பாருங்க. வர்ற இதழில் முதல் பக்கத்தில் போட்டால் நல்லா இருக்கும்ன்னு என்னோட மனசுக்குப் படுது. படிச்சு பார்த்துட்டு உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க…
ஆசிரியர் நீட்டிய அந்தக் கவிதையை வாங்கிப் பார்த்தான், பரணி.
‘இன்று மட்டும்' என்கிற தலைப்பில் அழகான கையெழுத்தில் கவிதை வரிகள் ஓடியிருந்தது.
மகுடிப் பாம்புகளாய் மட்டைப் பந்தெனும்
கிரிக்கெட்டுக்கு மயங்கி நின்று..
நடிகனுக்கு அடிமையாகி…
ரசிகர் மன்றம் அமைத்து…
சாதிமத ரதமேறி
சாரதியாய் வீற்றிருந்து…
பாவையரைப் பார்த்து
பல்லிளித்து…
பாதி வாழ்க்கையைத் தொலைத்து
சின்னத்திரை
பார்த்து பார்த்து…
எண்ணத்திரையை
இருட்டாக்கிக்கொண்டு
பண்பலை ஒலிபரப்பு கேட்டு
பழுதான செவிகளோடு
சிகரெட்டின் நிகோடின் புகையிலும்
வேண்டாத 'பான்’ புகையிலை
பாக்கெட்டுகளிலும்
வேதனையை
விலை கொடுத்து வாங்கும்
இந்தியாவின்
இளைய சமுதாயமே!
ஆண்டு முழுவதும் கேட்டு
சீரழிக்கும்
சினிமா பாட்டு இன்றாவது
குறையட்டும்!
'வந்தே மாதரம்' என்னும்
பிராணவாயு வார்த்தை
வாய்க்குள்
வந்து போகட்டும்!
இன்று மட்டும்!!
கவிதையைப் படித்து விட்டு நிமிர்ந்தான், பரணி. முகம் முழுக்க மகிழ்ச்சியைப் பூசினமாதிரி மினுமினுத்தது.
கவிதை அற்புதமா இருக்கு சார். இதை யார் சார் எழுதினது…?
எழுதினவர் பேரு செல்வம். அவர் ஒரு கிராமத்து இளைஞர். நேற்றைக்கு நேரில் வந்து இந்தக் கவிதையைக் கொடுத்துட்டு போனார். என்ன… முதல் பக்கத்துல போடலாமா…?
போட்டுடலாம் சார்…
பரணி சொல்லிக் கொண்டிருக்க, பாதி திறந்துகிடந்த - அறைக் கதவு மெலிதாய்த் தட்டப்பட்டது. ஆசிரியர் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தார்.
உள்ளே வாம்மா, சுரபி. நீ என்னோட அறைக்குள்ளே வர்றதுக்காக கதவைத் தட்ட வேண்டிய அவசியமே இல்லை…
தயக்க நடை போட்ட படி - சுரபி உள்ளே வந்தாள். இருபத்தி மூன்று வயதான சுரபி, துலக்கி துடைத்த குத்துவிளக்காய் தோற்றம் காட்டினாள். 'முழுநிலா’ பத்திரிகையில் சேர்ந்து ஒரு டைப்பிஸ்ட்டாக பணியாற்றிக்கொண்டிருந்த அவள் மேல் ஆசிரியருக்கு தனிப் பாசம்.
'எனக்கு ஒரு பொண்ணு இருந்தா அவளுக்கு உன்னோட வயசுதாம்மா இருக்கும். உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்கிட்டே கேளும்மா… நான் அப்பா ஸ்தானத்திலிருந்து அந்த உதவியைப் பண்ண தயாராயிருக்கேன்' என்று சுரபி வேலைக்கு சேர்ந்தபோதே சொல்லி இருக்கிறார்.
சூரியபிரகாசம் தன் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு சுரபியை ஏறிட்டார்.
என்னம்மா…?
உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்…
பரணி இருக்கட்டுமா… போகட்டுமா...?
இருக்கட்டும் சார்…
மெல்லிய குரலில் சொன்ன சுரபி தன் கையில் வைத்திருந்த ஒரு நீளமான உறையை ஆசிரியரிடம் நீட்டினாள்.
என்னம்மா இது…?
சார்… நான் போன மாசம் ஒரு கம்பெனிக்கு வேலை விஷயமா இண்டர்வியூக்கு போயிருந்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா…?
நல்லாவே ஞாபகம் இருக்கு. தமிழ்நாட்டில் இருக்கிற பத்து பெரிய கம்பெனிகளில் அந்த கம்பெனியும் ஒண்ணு. அதுல உனக்கு வேலை கிடைச்சுட்டா அதிருஷ்ட தேவதை உன் பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாள்னு அர்த்தம்ன்னு சொன்னதும் எனக்கு ஞாபகம் இருக்கு…
நீங்க அப்படி சொன்ன நேரம் ரொம்பவும் நல்ல நேரமாய் இருந்து இருக்கணும் சார்.
நீ என்னம்மா சொல்றே...?
எனக்கு அந்த கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு சார். வேலை நியமன உத்தரவு கூரியர் தபாலில் வந்தது. உடனே வேலையில் சேரச் சொல்லி இருக்காங்க. சம்பளம் இருபதாயிரம் ரூபாய். கம்பெனியிலேயே தங்க இடம் கொடுத்துடுறாங்க... நாள் நல்லா இருக்கிறதால இன்னிக்கே போய் வேலையில் சேரலாம்ன்னு இருக்கேன் சார்.
கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கம்மா...
சார்... நான் இந்த வேலையை விட்டுட்டு போறதால உங்களுக்கு எந்த மனச்சங்கடமும் இல்லையே…?
ஒரு சங்கடமும் கிடையாதும்மா… இந்த டைப்பிஸ்ட் வேலைக்கு யார் வேணும்ன்னாலும் கிடைப்பாங்க. உனக்கு இப்படியொரு நல்ல வேலை கிடைக்குமாம்மா… நீ இன்னிக்கே போய் வேலையில் சேரலாம்.
ரொம்பவும் நன்றி சார்…
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த பரணி, சுரபியைப் பார்த்து புன்னகைத்தான். வாழ்த்துக்கள்…! அது, உண்மையிலேயே மிகப்பெரிய நிறுவனம். அங்கே ஒருத்தருக்கு வேலை கிடைக்கணும்ன்னா அவங்க பூர்வ ஜென்மத்தில் எக்கச்சக்க புண்ணியம் பண்ணி இருக்கணும்.
சூரியபிரகாசம், பரணியைப் பார்த்து சிரித்தார்.
"சுரபிக்கு இந்த வேலை கிடைக்க பூர்வஜென்ம புண்ணியம் காரணமில்லை. இந்த ஜென்மத்திலேயே ஏகப்பட்ட புண்ணியம் கிடைச்சிருக்கு. உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ… சுரபிக்கு அப்பா கிடையாது. இதய நோயாளியான அம்மா மட்டும்தான். சுரபிக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. மூணு பேருமே கல்லூரியில் படிக்கிறாங்க.
வீட்டுக்கு மூத்த பெண்ணாய் சுரபி பிறந்த ஒரே காரணத்துக்காக எல்லா குடும்ப சுமையும் அவ தலைமேல். நான் கொடுத்துகிட்டிருந்த மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் அவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வாகம் பண்ணிய சுரபிக்கு 'பாரத ரத்னா’ விருதே தரலாம்."
சுரபி, கைகூப்பிக்கொண்டு எழுந்தாள். நான் கிளம்புறேன், சார். இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கே உட்கார்ந்திட்டிருந்தா இன்னும் பெரிய பொறுப்பையே தூக்கி என்கிட்டே கொடுத்துடுவீங்க..
அதுல தப்பே கிடையாதும்மா… உன்னை மாதிரியான ஒரு சாமானியப் பொண்ணு பெரிய பதவியில் போய் உட்கார்ந்தால்தான் சிறப்பாக நிர்வாகம் பண்ண முடியும்.
நான் வர்றேன் சார்...
சுரபி, ஆசிரியரின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு வெளியேற, பரணி பின்தொடர்ந்து வந்தான்.
பெரிய இடத்துக்கு வேலைக்குப் போறீங்க… என்னையெல்லாம் மறந்துடாதீங்க... சுரபி…
உங்களையெல்லாம் மறக்க முடியுமா என்ன?
ஒரு ரெண்டு நிமிசம் என் அறை வரைக்கும் வந்துட்டு போக முடியுமா… நான் கொஞ்சம் பேசணும்…
என்ன பேசணும்… ?
பிளீஸ்… வாங்க…
பரணி சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடக்க, சுரபி தயக்கமாய் பின்தொடர்ந்தாள்.
இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
உட்காருங்க சுரபி…
தன்னுடைய நாற்காலியில் சாய்ந்து கொண்டே எதிரேயிருந்த நாற்காலியைக் காட்டினான், பரணி. சுரபி குழப்ப முகத்தோடு உட்கார்ந்தாள்.
என்ன விஷயம்… பரணி ?
பரணி ஒன்றும் பேசாமல் தன் மேசையைத் திறந்து ஒரு உறையை எடுத்து நீட்டினான். அவள், அதை வாங்கிக்கொள்ளாமல் கேட்டாள்.
என்னது?
சுரபி…! நான் உங்களுக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதி வைச்சு கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது. இதை உங்களுக்குத் தரணும்ன்னு ஒவ்வொரு நாளும் நினைப்பேன். ஆனா தைரியம் வராது… இன்னிக்கு நீங்க இந்த ஆபீசை விட்டுப் போறீங்க… இனியும் இந்தக் கடிதத்தை உங்ககிட்டே கொடுக்காமல் இருந்தா அது சரியில்லை… பிளிஸ்… வாங்கிக்கங்க…
இது என்ன கடிதம்… ?
வாங்கி படிச்சுத்தான் பாருங்களேன்…
சுரபி, அதை வாங்கி, பார்க்காமல் கையில் வைத்துக்கொண்டு கேட்டாள். இது காதல் கடிதம்னு நினைக்கிறேன். என்னோட யூகம் சரியா…?
எ...எ…எப்ப கண்டுபிடிச்சீங்க…?
உங்க கண்ணில்தான் காதல் மொழி தெரியுதே…?
சுரபி… உங்களை முதல்முறையாய் பார்த்த நாளிலிருந்தே என் மனசுக்குள்ளே இந்த காதல் போராட்டம். அதை வெளிப்படுத்த எத்தனையோ தடவை முயற்சி பண்ணினேன். ஆனா… என்னால முடியலை…
இந்த கடிதத்துக்கான பதில் உங்களுக்கு எப்ப வேணும்?
நீங்க எப்ப கொடுத்தாலும் சரிதான்!
இப்பவே தரட்டுமா…?
இப்பவேவா…?
பரணி திகைத்துக்கொண்டிருக்கும் போதே சுரபி அந்த உறையில் இருந்த கடிதத்தை எடுத்து சின்னச் சின்ன துணுக்காய்க் கிழித்து பக்கத்தில் இருந்த குப்பைக் கூடைக்குள் போட்டாள். கோபமாய் எழுந்தாள்.
சு…ர…பி…
பரணி! இதுவரைக்கும் நான் எந்த ஒரு ஆளையும் கைநீட்டி அடிச்சது இல்லை. மேற்கொண்டு நீங்க ஏதாவது பேசி என்னை அடிக்கும்படியா பண்ணிடாதீங்க… கிடைச்ச வேலையை ஒழுங்கா செய்து, வாழ்க்கையில் முன்னுக்கு வர்ற வழியைப் பாருங்க…
சுட்டு விரலைக் காட்டி எச்சரித்துவிட்டு கோபமாய் வெளியேறினாள், சுரபி.
அண்ணாசாலையின் இதயப் பிரதேசத்தில் ஏழு மாடிகளோடு ஆர்ப்பட்டமாய் நின்றிருந்தது அந்த நிறுவனம்.
நேரம் - பகல் மூன்று மணி.
சுரபி, பிரமிப்பில் உறைந்துபோய் ஐந்து நட்சத்திர ஓட்டலின் அந்தஸ்தோடு இருந்த அந்த கம்பெனியின் வரவேற்பறையை நெருங்கினாள். உள்ளே கணினி முன்பாய் உட்கார்ந்திருந்த பெண், உதட்டுச்சாயம் மினுமினுக்க நிமிர்ந்தாள்.
யார் வேணும்?
எம்.டி.யைப் பார்க்கணும்.
என்ன விஷயமாய்… ?
இங்கு வேலைக்கு சேர எனக்கு உத்தரவு வந்திருக்கு…?
நீங்கதான் சுரபியா?
ஆமாம்…
உங்களுக்காகத்தான் எம்.டி. காத்திருக்கிறார். போய்ப் பாருங்க…
எந்த அறை… ?
முதல் மாடியில் முதல் அறை எம்.டி.யின் தனி அறை. கதவைத் தட்டி அனுமதி கிடைத்ததும் உள்ளே போங்க…
சுரபி, தலையாட்டிவிட்டு பக்கத்தில் இருந்த மாடிப்படிகளை நோக்கிப் போனாள். பளபளக்கும் படிகளில் பிரமிப்பாய் நடைபோட்டு முதல்மாடிக்கு வந்து அந்த அறைக்கு முன்பாய் வந்து நின்றாள்.
கண்ணாடி போல் வாளிப்பாய் செய்யப்பட்டிருந்த தேக்குமரக்கதவு சாத்தப்பட்டிருக்க, கதவில் ‘தீனதயாளன்' என்ற பெயர், வெண்கல எழுத்துக்களில் மின்னியது.
கதவை மெல்லத் தட்டினாள்.
உள்ளேயிருந்து எந்தவித சத்தமும் வராமல் போகவே ஒரு நிமிட நேரம் பொறுமையாய்க் காத்திருந்துவிட்டு மறுபடியும் சற்று பலமாக தட்டினாள்.
டொக்… டொக்…
உள்ளேயிருந்து குரல் வந்தது. வரலாம்…
"சுரபி, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள். பெரிய அறை. ஏ.சி. காற்றில், அறை ஊட்டியாய் மாறி இருக்க, கால்களுக்கு கீழே சிவப்புநிற விரிப்பு, பெரிய சதுரமாய் பரவியிருந்தது. கண்ணாடி போட்ட மேசைக்குப் பின்னால் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து மேசையின் மேல் தலைவைத்து படுத்திருந்த அந்த இளைஞன் பார்வைக்குக் கிடைத்தான்.
சுரபி எதிரில் போய் நின்றாள். அவன் தலை நிமிராமல் போகவே குரல் கொடுத்தாள்.
சார்…
அவனிடமிருந்து பதில் வரவில்லை. சுரபி தயக்கமாய் நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
ஒரு கம்பெனியின் எம்.டி. பகல் நேரத்தில் இப்படியா தூங்குவது?
மறுபடியும் குரல் கொடுக்கலாமா என்று யோசித்த விநாடி, சுரபியின் பார்வை மேசையின்