Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ingu Pengal Virpanaikku Alla!
Ingu Pengal Virpanaikku Alla!
Ingu Pengal Virpanaikku Alla!
Ebook161 pages2 hours

Ingu Pengal Virpanaikku Alla!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202232
Ingu Pengal Virpanaikku Alla!

Read more from Hamsa Dhanagopal

Related to Ingu Pengal Virpanaikku Alla!

Related ebooks

Reviews for Ingu Pengal Virpanaikku Alla!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ingu Pengal Virpanaikku Alla! - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    இங்கு பெண்கள் விற்பனைக்கு அல்ல!

    Ingu Pengal Virpanaikku Alla!

    Author:

    ஹம்ஸா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இங்கு பெண்கள் விற்பனைக்கு அல்ல!

    யாரோ தொட்டு எழுப்பினது போல அவளுக்கு விழிப்பு ஏற் பட்டது. சுற்றுச் சுவர் களெல்லாம் கண்ணாடி பதிக்கப்பட்டு, மேற் கூரையும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறை, மங்கலான நீல விளக்கில் கண்ணாடிகளில் பல வசுந்தராக்கள், அவளை ஒட்டி னாற்போல மார்பு வரை போர்த்தப்பட்ட அவள் கணவன் விநித்.

    சுருண்ட கரிய மார்பு ரோமங்களுக்கிடையே கனத்த பொன் சங்கிலி சுருண்டிருக்க, களையான முகம், மாநிறம். இவனை, இந்த செல்வம் கொழிக்கும் ஆண் மகனை - அடைய அவள் எந்த பிறவியில் என்ன தவம் செய்தாளோ?

    அவன் தூக்கம் கலையா வண்ணம் வேலைப்பாடு மிகுந்த தேக்கு மரக்கட்டிவிலிருந்து தரையில் குதித்தாள். துளி சத்தமில்லை. தரை முழுவதும் கனத்த காஷ்மீர் கம்பளம். ஒவ்வொரு சென்டிமீட்டரும் பல ஆயிரங்களை விழுங்கியிருக்கும் அறை.

    அவனைத் திரும்பிப் பார்த்தாள். விநித் அயர்ந்திருந்தான். இரவு முழுதும் அவளுடன் பகிர்ந்துகொண்ட துடிப்புக்கள் அவனை அயர்த்தியிருந்தன.

    திருமணமாகி இன்று ஐந்தாவது நாள். நினைக்கும்போதே வசுந்தராவின் கன்னத்தில் வெட்கச் செம்மை. குளியலறைக்குப்போய் முகத்தை வெந்நீரில் அலம்பி அங்கிருந்த சாளரக் கண்ணாடிகளை இறக்கி...

    மாளிகைக்கு வெளியே அவள் விழிகள் தாவின. எத்தனை பெரிய மாளிகை. எண்ண முடியாத செல்வம். இத்தனைக்கும் அவள் சொந்தக் காரியா? நினைக்கும்போதே எலும்பிலிருந்து எழுந்தது சிவிர்ப்பு.

    போனவாரம் வரை மாற்றுச் சேலைக்குக் கூட வழியற்று இருந்தவளா அவள்? யாராவது சொன்னால் நம்புவார்களா? பாவம் இவள் சம்பளம் இல்லாமல் அம்மா எத்தனை கஷ்டப்படுகிறாளோ?

    கழுத்தில் ஊஞ்சலாடும் கனத்த தங்கச் சங்கிலிகள் வாஷ் பேஸினில் பட்டு ஒலி எழுப்பி அவளின் இன்றைய செல்வ வளம் சொல்கின்றன.

    கரங்களை அலம்பிக்கொண்டே சாளர இருட்டில் அவள் வழிகள் துழாவின. வானம் கறுத்திருக்க சிதறிக் கிடக்கும் முல்லை மொட்டுக்களாய் நட்சத்திரங்கள்.

    தொலை தூரத்தில் நெருப்பு மேலே மேலே எழுந்து... அதைச் சுற்றி மூன்று ஆண்கள் புரியாத மனிதர்கள். இந்த மாளிகையைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் நிலம் அவள் கணவனுக்குச் சொந்தமானது. சவுக்குத் தோப்பு. அதில் மீன்பிடி படகுகள் கூட உண்டு. அப்படி இருக்க யார் அங்கே... என்ன செய்கிறார்கள் அதுவும் இந்த நடுநிசியில்...

    வேகமாய் மேக்ஸியை கையில் பிடித்தபடி கணவனருகே வந்தாள் வசுந்தரா

    அவன் அருகே கொஞ்சலாய் சாய்ந்து, என்னங்க. என்னங்க. எழுப்பினாள். அவன் விழி திறக்கவில்லை.

    நகம் கடித்து சில விநாடிகள் தயங்கினாள் பெயர் சொல்லி அழைக்கலாம் என நினைக்கையில் இனித்தது. உடலால் மிக மிக நெருங்கின விநித், அவளிடம் ஒரு சில சொற்களைத் தவிர வேறு பேசினவன் அல்ல. அது உறுத்தலாய் இருந்தது.

    "விநித்... விநித்... எழுந்திருங்களேன்.

    அவள் அவசர உலுக்கல் அவனை விழிக்க வைத்தது.

    சிடுசிடுப்பாய் பார்த்தான்.

    தூங்கறப்ப என்னடி இது.

    அவள் முகம் சுண்டிற்று. மனமும்...

    அங்கே... அங்கே... நம்ம தோட்டத்தில் யாரோ எதையோ எரிக்கறாங்க பாத்ரூம்ல ஸ்மெல் கூட வருது. தாங்கலை விநித், எனக்கு... எனக்குப் பயமா இருக்கு.

    சொல்லும்போதே அவள் பூமேனி நடுங்கற்று. பயம் கண்ணில் தெரிந்தது. விநித் கொட்டாவியுடன் திரும்பப்படுத்துப் போர்த்திக் கொண்டான். உன் வேலை பாரு வேற விஷயத்தில் நீ தலையிடாதே.

    விநித் அது வந்து...

    டூ வாட் ஐ சே...

    தாய் பாராட்டுவாள் என குறும்பு செய்த குழந்தை அவளிடம் அடி வாங்கியது போல அவள் சுருண்டுப் போனாள். அவன் மார்பில் இருந்த, தன் வலக்கரத்தை அவள் எடுக்கும்போது அவன் பிடித்துக் கொண்டான்.

    உடும்பின் பிடி இப்படி இறுகுமோ. அன்றி மலைப் பாம்பிடம் சிக்கினால் இப்படி...சிந்திக்கக்கூட அவளால் முடியவில்லை. வேண்டாம் விநித். எனக்குப் பிடிக்கல. கொஞ்சம் முன்னாடி... வேண்டாம் விடுங்க பிளீஸ்...

    அதை முடிவு செய்யறது நான். நீயில்ல...

    அவள் கன்னத்தில் விழுந்த அறையில் பார்வை மங்கிற்று. அவள் மென்மையான இதயத்தில் முள்ளொன்று சதக்கென இறங்கிற்று.

    போ... உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாமே போய்ப்படு. நான் அனுமதிச்சாத்தான் நீ யார்கிட்டயும் பேசணும். இல்ல நீ ஊமையாத்தான் இருக்கணும்.

    விநித்.

    ஆமாம் அப்படித்தான். உங்க குடும்பத்துக்கு மாசா மாசம் பணம் போய்ச் சேரும். வேறு ஏதாவது செய்தியானா...

    இதயத்தில் குத்தின முள்முனை ஒடிந்து அங்கேயே தங்கிற்று. அவன் பிடியிலிருந்து விலகிவிட்டாள். தவறு. தள்ளிவிட்டாள்.

    அவள் அவனுக்குத் துணையா, அடிமையா?

    நான்கு நாட்கள் மகாராணி போல மலர்ந்திருந்தவள் தன் இரண்டு தங்கைகளையும் இங்கே கொண்டு வந்து சீராட்ட நினைத்தவள் இப் போது தனக்காகவே துக்கப்பட ஆரம்பித்தாள்.

    முதன் முறையாய் தன் பேரழகின் மீது கோபம் வந்தது. வெறுப்புத் தட்டிற்று.

    இந்த அழகால்தானே இவளை மணந்தான். இந்த அழகு இல்லையென்றால் இவன் யாரோ இவள் யாரோ.

    ஃபோம் மெத்தையில் புதைந்து அவன் தூங்கும்வரை தூங்குவதாய் பாசாங்கு செய்தாள். மெல்லிய அவன் குறட்டை ஒலி அவளுக்குத் தைரியம் கொடுத்தது.

    எழுந்தாள். அந்த ஏஸி குளிரிலும் அவளுக்கு வியர்வை பெருகிற்று. ஒசையில்லாமல் அறையை திறந்தாள். பால்கனிக்குப் போனாள். இருளில் அந்த ‘உட் பேலஸ்’ என்கிற மாளிகை அரக்கர் மாளிகையாய் எழுந்து நிற்க, அதன் தோட்டம், பெரிய இரும்பு கேட், பெரிய மதில் சுவர் சவுக்குத் தோப்பு, மரஞ்செடி கொடிகள் எல்லாம் மெளனம் அனுஷ்டிக்க.

    காற்றுக்கு யாரோ கால் விலங்கிட்டதுபோல ஒரு அமானுஷ்யம். கரைமோதும் கடலலைகள் மட்டுமே தூரத்திலிருந்து மெல்லிய ஒலி எழுப்ப...

    அந்த நெருப்புத் தழல் தரையிலிருந்து பெரிதாக எழுந்து எரிய... அதைச் சுற்றி மூன்று ஆண்கள்... சின்ன பொம்மைகளாய்... காற்றில் ஏதோ புலப்படாத வாடை.

    வசுந்தராவிற்கு வாந்தி வருவது போலிருந்தது. மூக்கைப் பொத்திக்கொள்ளச் சொல்லிற்று. பிடிவாதமாய் பால்கனியில் நின்றாள்.

    நெருப்புத் தழல் மெல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1