Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek In Tokyo
Vivek In Tokyo
Vivek In Tokyo
Ebook127 pages1 hour

Vivek In Tokyo

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583970
Vivek In Tokyo

Read more from Rajesh Kumar

Related to Vivek In Tokyo

Related ebooks

Reviews for Vivek In Tokyo

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek In Tokyo - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    விவேக் இன் டோக்கியா!

    Vivek In Tokyo!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    விவேக் இன் டோக்கியா!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    விஷ்ணுவின் பஞ்ச் டயலாக்

    எதற்கும்

    துணிவு இல்லாதவன்

    எதையும்

    எதிர்பார்க்கக் கூடாது.

    விமானம் டெல்லியை நோக்கி இருட்டான வானத்தில் ரீங்காரித்தபடி பறந்து கொண்டிருக்க, ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்த விஷ்ணு தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த விவேக்கின் தோள்பட்டையைத் தன் வலது கையின் ஆட்காட்டி விரலால் சுரண்டினான்.

    பாஸ்!

    கண்களை மூடி ஒரு குட்டித் தூக்கத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்த விவேக் அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, சொல்லு… என்றான்.

    எப்படி பாஸ்…?

    எது…?

    இந்த ஏர்ஹோஸ்டஸ்கள் மட்டும் புன்னகையை உதட்டுல ஒட்ட வெச்சுட்டே இருக்காங்க. ஒரு விநாடி கூட அது மிஸ் ஆகிறதே இல்லை… எப்படி பாஸ்…?

    அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையே என்ன தெரியுமா?

    எது பாஸ்...?

    புன்னகையைக் கீழே விழாமே பார்த்துக்கிற வேலை….

    அது மட்டும் அவங்க ஸ்பெஷாலிடி இல்லை, பாஸ்...

    அப்புறம்…?

    வேற ஒண்ணும் இருக்கு…

    டேய்…

    "நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் நான் தப்பா பேச மாட்டேன் பாஸ். ஏன்னா இது புரட்டாசி மாசம்… நோ நான்-வெஜ். எந்தப் பெண் அழகாய் இருந்தாலும் சரி, அவளைக் கலைக் கண்ணோடு தான் பார்க்கிறேன்.

    நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா… இந்த ஏர்ஹோஸ்டஸ் மட்டும் எப்படி இவ்வளவு நேர்த்தியாய், ஜாக்கிரதையாய் ஒரு இஞ்ச் இடுப்புக் கூட வெளியே தெரியாமே சேலை கட்டுறாங்க… இந்தக் கலையை எல்லாப் பெண்களும் கத்துக்கணும் பாஸ்… காலம் கெட்டுக்கிடக்குது.

    உன்னோட நிஜமான கவலை இதுதானா...?

    என்ன பாஸ், இப்படிக் கேட்டுட்டீங்க...? நீங்க என்னை நம்பலைன்னு தெரியுது… பரவாயில்லை பாஸ். எங்கே போய் விடும் காலம்… அது ஒரு நாள் உங்களுக்கும் உண்மையை உணர வைக்கும்...

    விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஸ்பீக்கரில் விமானப் பணிப்பெண்ணின் அறிவிப்புக் குரல் சாக்லேட் க்ரீமாய்க் காதுக்குள் பாய்ந்தது.

    வீ ஆர் நியரிங் டெல்லி… வேர் யுவர் ஸீட் பெல்ட்ஸ்.

    என்ன பாஸ் அதுக்குள்ள டெல்லி வந்தாச்சா?

    நாம சென்னையிலிருந்து புறப்பட்டு மூணு மணி நேரமாச்சு…

    ஏதோ பாரீஸ் கார்னர்ல பஸ் ஏறி சென்ட்ரல்ல இறங்கின மாதிரி இருக்கு பாஸ்.

    விமானம் உயரம் இழந்து மெதுவாய் இறங்க… கீழே நள்ளிரவு டெல்லி ஒரு பிரம்மாண்டமான நகைக் கடையாய் மாறி ஜொலித்தது. விவேக்கும் விஷ்ணுவும் ஸீட் பெல்ட்களை அணிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

    பாஸ்.

    ம்.

    நாளைக்குக் காலையில் எத்தனை மணிக்கு நாம சி.பி.ஐ. டைரக்டரைப் பார்க்கப் போறோம்…?

    பத்து மணிக்கு

    சென்னை 'பாம் ப்ளாஸ்ட்’ ஹிஸ்டரி ஃபைலைக் கொடுத்துட்டு ஒரு இன்ட்ராக்ஷன்ல கலந்துட்டு நாம மறுபடியும் சென்னை கிளம்ப வேண்டியதுதானே?

    ஆமா...! நாளைக்குச் சாயந்தரம் ஆறு மணிக்கு நமக்கு ஃப்ளைட்… ஒன்பது மணிக்கெல்லாம் சென்னையில் இருப்போம்.

    விமானம் ரன்வேயில் தன்னுடைய டயர்களை ‘கிறீச்’ சென்று பதித்து இரைச்சலோடு ஓடியது. இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு நின்றது.

    பயணிகளோடு பயணிகளாய் இருவரும் இறங்கி கண்டெய்னர் பெல்ட்டில் வலம் வந்த தங்களுடைய லக்கேஜ்களைப் பொறுக்கிக் கொண்டு, பட்டப் பகல் போன்ற வெளிச்சமான லெளன்ஞ்சில் நடை போட்டார்கள்.

    விஷ்ணு கேட்டான். எந்த ஹோட்டல்ல பாஸ், ரூம் போட்டு இருக்காங்க...?

    ரீகல் ஸ்கொயர்ல தி டான் இன்டர்நேஷனல்ஸ்.’ 7 ஸ்டார் கிரேடு. உனக்கு 303. எனக்கு 304. ரூம்ஸ் ரெடியாய் இருக்கும்.

    லெளன்ஞ்சைக் கடந்து வெளியே வந்த போது கறுப்பு நிற ஷெர்வாணி அணிந்த ஒரு உயரமான நபர் விவேக்கை எதிர் கொண்டார்.

    மிஸ்டர் விவேக்?

    எஸ்...

    ஐயாம்… கைலாஷ் சர்மா… பி.ஏ. டு சி.பி.ஐ. டைரக்டர்…!

    ப்ளீஸ்ட் டூ மீட் யூ…

    இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

    கைலாஷ் சர்மா ஒரு புன்னகையோடு, உங்களை வரவேற்றுக் கூட்டிப் போகவே நான் ஏர்போர்ட்டுக்கு வந்தேன். நாம் போகலாமா… வெளியே கார் காத்திருக்கிறது… என்றார்.

    விவேக் தன் இரண்டு புருவங்களுக்கு நடுவில் சின்னதாய் ஒரு வியப்புக்குறியை உற்பத்தி செய்தான்.

    நீங்கள் என்னை வரவேற்க வருவீர்கள் என்று சி.பி.ஐ. டைரக்டர் என்னிடம் சொல்லவில்லையே...?

    ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் சி.பி.ஐ. டைரக்டர் என்னைத் தொடர்பு கொண்டு, விமான நிலையத்துக்குச் சென்று உங்களை வரவேற்று அழைத்து வரச் சொன்னார். இதோ என்னுடைய அடையாள அட்டை

    விவேக் வாங்கிப் பார்த்து விட்டு தலையசைத்தான்.

    இட்ஸ்… ஓ.கே… லெட் அஸ் கோ...!

    மூவரும் நடந்தார்கள். டெல்லி வெளியே மைனஸ் டிகிரி குளிரில் இருந்தது.

    பாஸ்! ஸ்வெட்டர் எடுத்துட்டு வந்திருக்கணும். எப்படியோ மறந்துட்டோம்.

    விவேக்கின் செல்போன் உயிர் பிடித்து ரிங் டோனை வெளியிட, எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

    ரூபலா.

    செல்போனைக் காதுக்குக் கொடுத்தான்.

    ரூபி…!

    என்ன… டெல்லி போய்ச் சேர்ந்தாச்சா...?

    இப்பதான் ஃப்ளைட்டை விட்டு இறங்கிக் கார் பார்க்கிங்கை நோக்கிப் போயிட்டிருக்கோம்.

    ஃப்ளைட்ல சாப்பிட்டீங்களா?

    ம்… நைட் டின்னர் ஃப்ரீ ரொட்டி, தால், க்ரில் சிக்கன், ஃப்ரூட்ஸ் வித் ஐஸ்க்ரீம்.

    நாளைக்கு வேலை முடிஞ்சுடுமா...?

    கண்டிப்பாய்…! பாம் ப்ளாஸ்ட் ஃபைலை ஒப்படைச்சுட்டு உயர் அதிகாரிகள் கூட்டத்துல ஒரு மணி நேரம் இன்ட்ராக்ஷன். அவ்வளவுதான். நேரம் இருந்தா ஹர்த்தாஸ்ரம் டெம்பிள் போயிட்டு சென்னைக்குப் பறந்து வர வேண்டியது தான். நாளை கழிச்சு மறுநாள் உனக்குப் பிறந்த நாள் காலையில் கண் விழிக்கும் போது உனக்கு ஹேப்பி பர்த்டே சொல்லக் கூடிய முதல் நபர் நானாகத் தான் இருக்கணும்

    அந்த ஞாபகம் உங்க மனசுக்குள்ளே இருந்தா சரி…

    விவேக்கிற்கு முன்னால் கார்களுக்கு நடுவில் நடந்து கொண்டிருந்த கைலாஷ் சர்மா ஒரு ‘ஹோண்டா ரிச்’ கார் அருகே நின்றார்.

    காரின் சென்ட்ரலைஸ்ட் லாக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1