Vensangu Pennaval
3/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsMullai Panthal Rating: 5 out of 5 stars5/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsPaartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5
Related to Vensangu Pennaval
Related ebooks
Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsKanne Undhan Nizhalavean Rating: 0 out of 5 stars0 ratingsInbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Minsara Poove... Rating: 1 out of 5 stars1/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Ithanai Naalai Engirunthai? Rating: 5 out of 5 stars5/5Ival Vera Maathiri.. Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Puzhuthiyum Pattu Kuruviyum Rating: 0 out of 5 stars0 ratingsKarumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5En Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Parvai Ondre Podhume! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Veyil Maalai Nee Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vensangu Pennaval
5 ratings0 reviews
Book preview
Vensangu Pennaval - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
வெண்சங்குப் பெண்ணவள்
Vensangu Pennaval
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jeyathilagar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
வெண்சங்குப் பெண்ணவள்
காஞ்சனா ஜெயதிலகர்
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
வழக்கம்போல காலை ஆறரைக்கு விழிப்பு தட்டி விட்டாலும் வர்ஷினிக்கு கட்டிலை விட்டு எழுவது அத்தனை சுலபமாய் இல்லை. அதிலும் முக்கியமாய் சுகமாய் தன்னைச் சுற்றியிருந்த வெல்வெட் ரஸாயை விலக்க மனம் மறுத்தது.
ஆனாலும் ஜன்னலின் வழியே அதிகாலை சூரியனின் ரம்யத்தை, அம்மலைப் பகுதி முழுவதும் பனி ஊடாய் ஒரு மணப்பெண் போல தன்னை அரைகுறையாய் காட்டிக் கொள்ளும் அற்புதத்தைத் தவற விடக் கூடாதென அதற்கு ஆசைக் காட்டி எழுந்து விட்டாள்.
கொடைக்கானலைத் தாண்டிய மேட்டுவயல் எனும் சிற்றுார் அது.
சுற்றுலாப் பயணிகள் இங்கு வர மெனக்கெடுவதில்லை என்பதால், ஊர் அழகு குலையாமல் இருந்தது.
கூட்டமும், அவை விட்டுச் செல்லும் கழிவுகளும் காணாத சுத்தப் பசுமை.
உயர்ந்த யூக்கலிப்டஸ் மரங்களும், சன்ன நீல நிறங்காட்டும் ‘ப்ளூ கம்’ மரங்களும் குளிருக்கு இதமான ஒரு நெடியை காற்றில் கலந்து விட்டிருக்கும். பளிங்கு நீர் ஓடும் ஓடைகளின் ஓயாத சலசலப்பு.
ஆனால் மலைச்சரிவெங்கும் மரங்கள் வரிசைக் கட்டியிராது. விரல்களால் கோதப்பட்ட அமைப்பில், மலைகளை மனிதன் உழுது விவசாயம் செய்திருந்தான். கோஸ், கிழங்கு, பூண்டு வகைகள் இந்த மண்ணிற்கும் குளிருக்கும் செழித்து வளரும்.
படைத்தவரும் படைப்பும் கைகோர்த்தது போலிருந்த அக்காட்சி தினம் பார்த்த பின்னும் சலிக்கவேயில்லை.
ஆர்வம், விதை, உழைப்பு, புத்தி என்று இறைவனின் கொடை அத்தனையையும் மனிதன் பயன்படுத்தியிருந்ததில் இவளுக்கே ஒரு பெருமிதம்.
தன் தோற்றத்தை சீராக்கியவள், கீழிறங்கி தனக்கான தேநீரைத் தயாரித்து, பருகியபடி வாசலுக்கு நடந்தாள்.
இவள் ஆவலாய் கதவைத் திறந்தது போல இளம் வெயிலும் இவளை ஆசையாய் வருடியது.
இவர்களது வீடு மலை முகட்டில்.
வாகான இடத்தில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு சாய்மான பெஞ்சில், இரு கைகளுக்கிடையே சூடான கோப்பையைப் பொதிந்தபடி அமர்ந்தாள்.
அளவாய் உப்பிட்ட பதார்த்தம் போல காலை வெயில் உலகைக் கச்சிதமாய் காட்டியது. இவளில் படர்ந்த வெளிச்சம் வெதுவெதுப்பாய் உள்ளிறங்கியது. ஆனால் சில மணி நேரங்களில் இது தாள முடியாத வெப்பமாகித் தகிக்கும்.
எதுவுமே அளவாய் இருந்தால்தான் அழகும் சுகமும்!
அன்பும்கூட அளவை மீறினால் தொல்லைதானே?
மனது வேதாந்தமாய் அசை போட்டது.
தான் ஆசைப்பட்டவள் ஒதுங்கிப் போனால் அவளை அமிலமூற்றி பொசுக்குவது…
மனசு காமுற்றால் கிடைத்தவளை வெறியாய் அனுபவித்து கசக்கி வீசுவது…
காதலென்று பழகியவள் வேறு ஒருவனை திருமணம் செய்ய நேர்ந்தால் தங்களது கடந்த கால ஞாபகங்களைக் காட்டி புது உறவை பிய்த்து எறிவது… இதையெல்லாம் எப்படி அன்பு என்பது?
வெறுமே சுயநல வெறி…
தான் ஆசைப்பட்டதெல்லாம் தனக்கு மட்டுமே.
தனக்கு வேண்டாதது பிறருக்கும் அவசியமில்லை, என்ற குறுகல் புத்தி!
அப்பா இந்த ரகந்தான்.
வர்ஷினியின் பெற்றோர்களது, பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணந்தான். ஆனால் பெரியவர்கள் சரியாய் ‘பார்க்க’வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!
நிறம், உயரம், படிப்பு, சம்பளம் எல்லாம் விசேஷமாய் இருந்த பாஸ்கரனுக்கு உள்ளம் விசாலமாயில்லை. புத்தியிலும் போக்கிலும் விஸ்தாரமில்லை.
அந்த நெருக்கடியான தாம்பத்தியத்தில் இரு தரப்பு குடும்பத்தாருக்கும் பாஸ்கரன் இடந்தரவில்லை. அந்த முசுட்டுத்தனத்தில் உறவுக்காரர்கள் எல்லாம் கல்லைக் கண்ட காக்கா கூட்டமாகிப் பறந்தாயிற்று. பறவைகள் மறுபடி கூடும். ஆனால் மனிதர்களுக்கு அதற்கான நேரமெல்லாம் எங்கே?
மிடறு மிடறாய் உள்ளிறங்கிய தேநீரின் வெம்மையை ரசித்தாலும், காரமாய், அவளுள் பொங்கிய நினைவுகள் தொடர்ந்தன.
அம்மா, விலாஸினி இறந்த போது வர்ஷினிக்கு பதினொரு வயது. ஒரு தாயின் அண்மை பிள்ளைக்குத் தேவைப்படாத பருவம் எது?
ஆனால் பெண் குழந்தை தகப்பனை விட்டு தாயை அண்டிக் கொள்ளும் அந்த வயதில் அவளுக்குப் பெற்றவளில்லாமல் போனது பெரிய இழப்புத்தான்.
பாஸ்கரனுக்கு சிநேகிதர்கள் என்று யாருமில்லை - ஆளண்டா சுபாவம்.
‘பெரிய பூட்டுக்களைத் திறக்கச் சிறிய சாவி போதும்.
பெரிய பிரச்சனைகளைத் தீர்க்கச் சின்னப் புன்னகை போதும்’ என்பார்களே - அச்சிறு புன்னகை, இதமான ஓரிரு வார்த்தைகள் பஞ்சமானதால் தன் வாழ்வையே ஒரு பிரச்சனைப் பந்தாக்கிக் கொண்டவர்.
தங்கை விலாஸினி இறந்ததும், இவர் வீட்டில் வந்து தங்கிய மூத்தவள் விபாசினிக்கு மூச்சடைத்துப் போனது. இயல்பான பேச்சோ அன்பான செயல்களோ அற்ற அச்சூழலில் தன் தங்கை பாவம்... குமைந்து கிடந்தாளே என்ற ஆற்றாமையோடு, தங்கையின் மகளை அங்கேதான் விட்டுப் போய் விடக் கூடாதென்ற ஆத்திரம் வேறு.
வர்ஷினிக்கு ஒரு மாற்றம் வேணும். ரெண்டு மாசம் விடுமுறையை… வந்து சில வாரமேனும் எங்களோட வந்து தங்கட்டுமே குழந்தை...?
என்றவள் கேட்டதிற்கு பதிலெல்லாம் வரவில்லை.
முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டார்.
அப்போது மட்டுமல்ல, தொடர்ந்த வருஷங்களிலும் வர்ஷினியால் பெரியம்மாவின் வீட்டிற்குப் போக முடியவில்லை.
தாய் விலாஸினிக்கு தன் அற்ப ஆயுளைப் பற்றி யூகம் இருந்தது போலும்... மகளை வீட்டுக் காரியங்களில் பழக்கியிருந்தாள். வீட்டின் சுத்தமும் சமையலும் வர்ஷினிக்குப் பரிச்சயம் என்பதால் சமாளித்தாள்.
உடல் நாளெல்லாம் சுறுசுறுப்பாய் இயங்க, உள்ளமும் சோர்வடையாமல் சமாளித்தது. ஆனால் சினேகமும் சீராட்டலும் இல்லாத வீடு, வளரும் ஒரு சின்னப் பெண்ணிற்குச் சிறைதானே?
பள்ளிக் கூடத்திலும் ஒதுங்கித்தான் நிற்பாள் வர்ஷினி. மற்ற சிறுமிகளின் கூந்தல் வழுவழுவென பின்னப்பட்டிருக்க, இவளது பறவைக் கூட்டைப் போலக் கிடக்கும் - சில நாட்கள் அதிக எண்ணையுடன் மற்ற நாட்கள் வறண்ட வறவறப்பில்!
உடைகள் கூட இறுகி வெளிறிய பின், இவளாய் கேட்ட பின்பே மாற்று வரும்.
ஆனால் இவள் மனம் மிக நொந்தது தாயைப் பற்றிய பேச்சே இல்லாததில்தான். அவ்வப்போது அம்மாவை நினைவு கூர்ந்து பேச முடிந்திருந்தால் அதுவே இவர்களிடையே பாலமாய் அமைந்திருக்கும்.
ஆமை தன் ஓட்டுக்குள் ஒடுங்கினது போல வாழ்ந்த அப்பா தன் சுகக்குறைவையும் மறைத்து விட்டார். சில மாதங்களாய் பண விஷயங்களைத் தன்னிடம் அப்பா சொல்ல, அந்தப் பகிர்தலில் இவளுக்கு வந்ததெல்லாம் பயம்தான்.
எதுவோ சரியில்லை. இருந்த ஒரே உறவும் பிரியப் போகிறது என்று பதட்டமானாள்.
அந்நிலையில் அவள் போக இருந்த ஒரே இடம் தன் பெரியம்மா வீடுதான்.
ஒவ்வொரு விடுமுறையிலும் பெரியம்மா அப்பாவையுமே தங்கள் வீட்டிற்கு அழைப்பதுண்டு.
'நாலு நாளேனும் வந்து தங்கிட்டுப் போங்களேன் பாஸ்கர். பிள்ளைங்க, சேர்ந்து பேசி விளையாடலாம். உங்களுக்கும் ஒரு மாற்றமாய் இருக்கும்...’ என்று பரிவுடன் அழைப்பாள்.
'பிறகு பார்க்கலாம்’ என்று பேச்சைத் துண்டிப்பவர், வர்ஷினியிடம் சிடுசிடுப்பார்.
‘நீயே வரலைன்னுட வேண்டியதுதானே? மலைக்காட்டு உச்சியில் போய் இருந்திட்டு