Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karkandu Aayutham!
Karkandu Aayutham!
Karkandu Aayutham!
Ebook114 pages52 minutes

Karkandu Aayutham!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100402287
Karkandu Aayutham!

Read more from Rajesh Kumar

Related to Karkandu Aayutham!

Related ebooks

Related categories

Reviews for Karkandu Aayutham!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karkandu Aayutham! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கற்கண்டு ஆயுதம்!

    Karkandu Aayutham!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நமக்குப் புரியாத விஷயங்கள் – 1

    பூமியில் உயிரினங்கள் இருப்பது போல் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள வேறு ஏதாவது கிரகத்தில் உயிரினம் உள்ளதா இல்லையா என்பதுதான் இன்றைக்குப் புவியியல் விஞ்ஞானிகளுக்கு இடையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை உலகத்தில் உள்ள வல்லரசு நாடுகள் பல கோடி டாலர்கள் செலவு செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பல விஞ்ஞானிகள் இதற்காகவே தங்களுடைய ஆயுளின் 75 சதவீத நாட்களைச் செலவழித்துள்ளார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்ன, இது எப்படி உருவாயிற்று என்கின்ற கேள்விகளுக்குப் புவியியல் வல்லுநர்கள் யூகத்தின் அடிப்படையில்தான் தங்களுடைய பதில்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தீர்க்கமான உண்மை இல்லை என்பதே நிஜமான நிதர்சனம். சில வருடங்களுக்கு முன்பு பன்னாட்டு விஞ்ஞானிகள் பலரும் இணைந்து இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் கண்டு பிடிப்பதற்காக ‘கடவுளின் துகள்’ என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.

    அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் நமோ நாராயணன் தன்னுடைய பைக்கை ஈ.சி.ஆர். ரோட்டின் வளைவில் இருந்த ஒரு சவுக்குமரத் தோப்புக்குப் பக்கத்தில் மறைவாய் நிறுத்திவிட்டு அந்த அந்திவேளையில் பார்வைக்குக் கிடைத்த ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார். யூனிஃபார்மைத் தவிர்த்துவிட்டு கறுப்பு நிற பேண்ட்டிலும் வெள்ளை சர்ட்டிலும் தெரிந்தார்.

    ஐம்பதடி தூரம் நடந்திருப்பார்.

    சிவப்பு லுங்கி கட்டிய ஒரு நபர் பரட்டைத் தலையோடு எதிர்பட்டு பவ்யமாய் கும்பிடு போட்டு ஒதுங்கி நின்று ஆச்சர்யமான குரலில் கேட்டான்.

    அய்யா! நீங்க இந்த நேரத்துக்கு… இங்கே?

    நமோ நாராயணன் நிற்காமல் நடந்து கொண்டே பேசினார். சிக்கந்தரைப் பார்க்க வந்தேன்... ரொம்பவும் முக்கியமான விஷயம். சிக்கந்தர் கூட வேற யாராவது இருக்காங்களா?

    யாரும் இல்லீங்கய்யா... சும்மா உட்கார்ந்து டி.வி.யில் படம் பார்த்துக்கிட்டு இருந்தாரு!

    சரி…! நான் பேசிட்டு ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன்.

    அய்யா! ஏதாவது பிரச்சினையா?

    எப்பவும் வர்ற பிரச்சினைதான்... இந்தத் தடவை கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை வேணும்… சொல்லிக் கொண்டே நமோ நாராயணன் ஒரு சவுக்கு மரத்தின் தாழ்ந்த கிளைக்குக் கீழே குனிந்து நடந்தார்.

    சற்றுத் தூரத்தில்... பங்களாவின் வெள்ளை உடம்பு தெரிந்தது. போர்டிகோவில் ஒரு டவேராவும் இன்னோவாவும் பக்கம் பக்கமாய் நின்றன. மாடியில் டியூப் லைட் வெளிச்சம். வேகமாய் வீசும் கடல் காற்று. வாசற்படி அருகே கண்மூடிப் படுத்து இருந்த டாபர்மேன் நாய் நமோ நாராயணனின் வருகையை மோப்பம் பிடித்துக் கொண்டு விருட்டென்று எழுந்தது. குரைக்கலாமா என்று ஒரு நொடி யோசித்து விட்டு - இவர் அடிக்கடி வருகிற நபர்தானே என்ற எண்ணத்தில் - விசுவாசமாய் வாலை ஆட்டியது.

    சார்லி! எப்படியிருக்கே...? நாயின் கழுத்தைத் தடவி குசலம் விசாரித்துக் கொண்டே படியேறி உள்ளே போனார் நமோ நாராயணன்.

    சோபாவில் புதைந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த சிக்கந்தர் திரும்பிப் பார்க்காமலேயே வாங்க ஏ.சி. சார் என்றான்.

    பரட்டைத் தலை அதற்குள் தகவல் கொடுத்து இருக்கிறான்.

    நமோ நாராயணன் சிரித்துக் கொண்டே அவன் எதிரில் போய் நின்றார்.

    என்ன சிக்கந்தர்…! பொழுது போகலையா? டி.வி. பார்த்துக்கிட்டு இருக்கே..?

    உண்மையிலேயே பொழுது போகலை ஏ.சி. சார். ஏதாவது அஸைன்மெண்ட் கிடைச்சாத்தானே எனக்கு வேலை...? சொல்லிவிட்டுச் சிரித்த சிக்கந்தர்க்கு முப்பத்தைந்து வயது. ஒரு காட்டெருமைக்கு இணையான உடம்பு. நீள்வட்ட முகத்தில் சிறிய கண்கள். தாடியும் மீசையும் ட்ரிம் செய்யப்பட்டு பாதி முகம் ரோமமாய் தெரிந்தது. கழுத்தில் சுண்டு விரல் பருமனுக்கு ஒரு தங்கச் சங்கிலி பளபளப்பாய் புரண்டது.

    நமோ நாராயணன் அவனுக்கு எதிராய் இருந்த நாற்காலிக்குப் போய் சாய்ந்தார். சிக்கந்தர் டி.வி.யை அணைத்து விட்டு நிமிர்ந்தான்.

    பொதுவா இந்த மாதிரியான நேரத்துல நீங்க என்னைப் பார்க்க வரமாட்டீங்க... இன்னிக்கு வந்து இருக்கீங்க... என்ன விஷயம் ஏ.சி. சார்?

    ஏ.சி. பெருமூச்சு விட்டார். சின்ன விஷயம் தான்! இருந்தாலும் கொஞ்சம் சீரியஸ்!

    சிக்கந்தர் லேசாய் முகம் மாறினான். என்ன சார் சொல்றீங்க?

    வர்ற வாரத்துல ரெண்டு நாள் நம்ம பிரதமரும், ஜனாதிபதியும் சென்னைக்கு வர்றாங்க. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கறாங்க... அவங்க எல்லா நிகழ்ச்சிகளையும் முடிச்சிட்டு மறுபடியும் டெல்லி திரும்பற வரை லா அண்ட் ஆர்டர் பொறுப்பை கமிஷனர் என்கிட்டே ஒப்படைச்சிருக்கார். எந்தவிதமான ஒரு சின்ன அசம்பாவிதமும் நிகழக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்கார்

    இது வழக்கமாய் நடக்கிற ஒண்ணுதானே?

    வழக்கமாய் நடக்கிறதுதான்! பிரசிடெண்ட்டும் ப்ரைம் மினிஸ்டரும் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் லா அண்ட் ஆர்டர் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட போலீஸ் ஆபீஸர்கிட்டே ஒப்படைப்பாங்க. அந்த ஆபீஸர் உடனடியாய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான சமூக விரோதிகளைக் கைது பண்ணி சிறையில் அடைப்பாங்க. பிரசிடெண்ட்டும், ப்ரைம் மினிஸ்டரும் டெல்லிக்குத் திரும்பிப் போனதும் கைது பண்ணின எல்லோரையும் விடுதலை பண்ணிடு வாங்க.

    சிக்கந்தர் சிரித்தான்.

    இப்பவும் நீங்க அதைத்தானே பண்ணப் போறீங்க ஏ.சி. சார்?

    Enjoying the preview?
    Page 1 of 1