Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaazhndhu Kaatta Vendum!
Vaazhndhu Kaatta Vendum!
Vaazhndhu Kaatta Vendum!
Ebook92 pages43 minutes

Vaazhndhu Kaatta Vendum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

LanguageUnknown
Release dateJul 29, 2017
ISBN6580100402224
Vaazhndhu Kaatta Vendum!

Reviews for Vaazhndhu Kaatta Vendum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaazhndhu Kaatta Vendum! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வாழ்ந்து காட்ட வேண்டும்!

    Vaazhndhu Kaatta Vendum!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அந்தக் காம்ப்ளக்ஸின் இரண்டாவது தளத்தில் கமர்ஷியல் ஆடம்பரங்கள் எதுவுமில்லாமல் இருந்தது அந்த அலுவலகம்.

    'ஆனந்தியம்மாள் ட்ரஸ்ட் ஆலோசனை நிலையம்.’

    சபாரி அணிந்திருந்த தேவராஜ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபருக்கே உரிய மிடுக்கோடு அந்த ஆபீசிற்குள் நுழைய - அங்கிருந்த சொற்ப அலுவலர்களும் பரபரப்புடன் மரியாதை காட்டி அவரை வரவேற்றார்கள்.

    பத்தடிக்கு இருபதடி அளவில் இருந்த ஆபீஸ் ஹாலின் மையத்தில் நின்றவர் - சுற்றி இருந்த அலுவலர்களைப் பொதுவாய்ப் பார்த்துப் பேசத் துவங்கினார்.

    "ஃப்ரெண்ட்ஸ்... நான் பல தொழில் துறைகள்ல காலடி வெச்சு நிறைய தொழிற்சாலைகள் நடத்திட்டு வர்றேன். அவையெல்லாம் லாபத்தைக் கணக்குப் போட்டு நடத்தறேன்... ஆனா இந்த ஆனந்தியம்மாள் ட்ரஸ்ட் கவுன்சிலிங் சென்ட்டரை மட்டும் எந்தக் கணக்கும் பார்க்காம பொதுநல நோக்கோட நடத்தறேன்...

    உங்க எல்லாரையும் பொது மக்கள் பணியில் ஈடுபடுத்தியிருக்கேன்... அதனாலதான் உங்களை எல்லாம் என் கிட்டே சம்பளம் வாங்கற ஊழியர்களா நினைக்காம ஃப்ரெண்ட்ஸ்ன்னு கூப்பிடறேன்...

    எவ்வளவு லாபம் வந்தது... எவ்வளவு நஷ்டமாச்சுங்கற பதைபதைப்போட மத்த ஆபீஸ்களுக்கெல்லாம் தினமும் பத்து நிமிஷமாவது போய் உட்காருவேன்... ஃபாலோ அப் பண்ணுவேன்... ஆனா இங்கே வருஷத்துக்கு ஒரு தடவை தான் வர்றேன். இது தர்ம ஸ்தாபனம்தானே... தர்மத்துக்கு நடக்கட்டும்ங்கற எண்ணத்தினால் அல்ல...

    இந்த ஸ்தாபனத்தை எந்தக் குறைவுமில்லாம பொறுப்பா நடத்திட்டு வர்ற அஞ்சலி இங்கிருக்கிறப்போ, என்னோட அட்டென்ஷன் தேவைப்படறதே இல்லை... அஞ்சலி முன்னால வா..."

    மொடமொடப்பான காட்டன் ஸாரியிலிருந்து அஞ்சலி தயக்கமாய் முன்னால் வந்து நிற்க... தேவராஜ் தொடர்ந்து பேசினார்.

    "இன்னியோட இந்த சென்ட்டர் ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு... அஞ்சலி இல்லைன்னா இப்படி ஒரு ஆலோசனை மையத்தை நான் தொடங்கி இருக்கவே மாட்டேன்... பொருளாதார ரீதியா நான் உதவிகள் செய்தாலும்... இந்த மையத்துக்கு உயிர் கொடுத்து நடத்திட்டு வர்றது அஞ்சலிதான்...

    அஞ்சலியை இந்த ஆறாவது வருஷத்தின் துவக்க நாளில் நாமெல்லாம் பாராட்டி அஞ்சலியின் சேவைப் பணிகளுக்குத் தொடர்ந்து கை கொடுப்போம்..."

    அங்கே குழுமியிருந்த அலுவலக ஊழியர்கள் கை தட்டி அஞ்சலிக்குத் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

    தேவராஜ் திரும்பித் தனது கார் டிரைவரைப் பார்க்க - அவர் புரிந்து கொண்டு பெரிய பூ மாலையை எடுத்து வந்தார்.

    தேவராஜ் அதைப் பெற்றுக் கொண்டு அலுவலகச் சுவரில் மாட்டியிருந்த ஆனந்தியம்மாளின் உருவப்படத்துக்கு அந்த மாலையை அணிவித்தார்.

    கண்களை மூடி - கையைக் கூப்பி - சில விநாடிகள் அந்தப் படத்தை வணங்கி விட்டு மீண்டும் கார் டிரைவரைப் பார்க்க அவர் சில்வர் தட்டில் பரப்பி வைத்த மிட்டாய்களை அங்கிருந்தவர்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்தார்.

    தேவராஜின் பார்வை அஞ்சலியிடம் திரும்பியது.

    அஞ்சலி...

    என்ன ஸார்...

    என்னோட கேபினுக்கு வாம்மா...

    வர்றேன் ஸார்...

    அவர் முன்னே செல்ல அஞ்சலி அவரைப் பின் தொடர்ந்தாள்.

    அவர் எப்போதாவது வந்தால் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்தக் கேபினின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்.

    சுழல் நாற்காலியில் அமர்ந்த பின்- எதிர் சேரை அவளுக்குக் காட்டினார்.

    ப்ளீஸ் சிட் டவுன்...

    அந்த இருக்கையில் தன்னை அமர்த்திக் கொண்ட அஞ்சலி மெதுவாய்ச் சொன்னாள்.

    ஸ்டாஃப் மெம்பர்ஸ் முன்னால என்னை நீங்க அவ்வளவு, தூரம் புகழ்ந்திருக்கக் கூடாது ஸார்...

    அவர் நிமிர்ந்தார்.

    ஏன் அப்படிச் சொல்றே...? அந்தப் பாராட்டுக்கான எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கு...

    ஸ்டாஃப் மெம்பர்ஸ் உதவியோடதானே நான் சர்வீஸ் பண்றேன்... என்னை மட்டும் தனியாப் பாராட்டினா அவங்க மனசுக்குள்ளே லேசா வருத்தம் ஏற்படலாம்... நாம வேலை செய்றோம்... பேர் அவர்களுக்குப் போகிறதுன்னு வேலையில சலிப்பு கூட ஏற்படலாம்...

    தேவராஜ் அவளுக்குப் புன்னகை ஒன்றைக் கொடுத்து விட்டுச்

    Enjoying the preview?
    Page 1 of 1