Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaikuttaikkul Vaanam
Kaikuttaikkul Vaanam
Kaikuttaikkul Vaanam
Ebook83 pages31 minutes

Kaikuttaikkul Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. He also had written excellent stories in social theme. These short stories collection is published in many popular magazines.
LanguageUnknown
Release dateJul 29, 2017
ISBN6580100402226
Kaikuttaikkul Vaanam

Reviews for Kaikuttaikkul Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaikuttaikkul Vaanam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கைக்குட்டைக்குள் வானம்

    Kaikuttaikkul Vaanam

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    கைக்குட்டைக்குள் வானம்

    1

    விநாயகர் காயத்ரி ஸ்லோகத்தோடு பூஜை அறையிலிருந்து வெளிப்பட்டாள் தீப்தி.

    வக்ரதுண்டாய வித்மஹே சூர்பகர்ணாய தீமஹி – தந்தோ நந்தி ப்ரசோதயாத்...

    ஜன்னலுக்கு வெளியே கிழக்கு திசை. கொஞ்சம் கொஞ்சமாய் விடிந்து காரட் நிறத்திலிருந்து சந்தன நிறத்துக்கு போய்க் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு வேப்பமரத்தில் பறவைகளின் இரைச்சல் உச்சத்தில் இருந்தது.

    தலைக்குக் குளித்து கூந்தலின் நுனியில் துண்டைச் சுற்றியிருந்த தீப்திக்கு 23 வயது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 'ஏ டு இசட் சொல்யூஷன்ஸ்' என்னும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ராமராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஐந்து இலக்க எண்களில் சம்பளம்.

    தீப்தி அப்பா ராகவனின் அறையைக் கடக்கும் போது அவர் போர்வைக்குள்ளிருந்து குரல் கொடுத்தார்.

    அம்மா... தீப்தி...!

    என்னப்பா...?

    மணி எவ்வளவும்மா...?

    சரியா ஆறு...! நீங்க எழுந்திரிக்கிற நேரம்தான்.

    காப்பி ரெடியா...?

    அம்மா போட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க எந்திரிச்சு முகம் கழுவி ஹாலுக்கு வர்றதுக்குள்ளே காப்பி உங்களுக்காக டீபாய் மேல உட்கார்ந்து வெயிட் பண்ணிட்டிருக்கும்.

    ராகவன் போர்வையிலிருந்து தன்னை உருவிக்கொண்டிருக்க, தீப்தி சமையலறைக்குள் நுழைந்தாள். அம்மா தேவகி காபி கலந்து மணக்க மணக்க டம்ளர்களில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

    தீப்தி...! அப்பா எந்திரிச்சுட்டாரா?

    ம்... இப்பத்தான் காப்பி ரெடியான்னு கேட்டார்.

    உன்னோட அண்ணன்...?

    தெரியலை...

    அந்தத் தூங்கு மூஞ்சி இன்னும் தூங்கிட்டுத்தான் இருப்பான். போய் எழுப்பி காப்பியைக் குடு...

    தீப்தி காப்பி ட்ரேயை எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைய அப்பா 'தினகரன்' நாளிதழை விரித்துக் கொண்டிருந்தார்.

    என்னம்மா...! இன்னிக்கு சீக்கிரத்துல குளியல்?

    எங்க கம்பெனியில் இன்னிக்கு ரெண்டு புது கம்ப்யூட்டர்ஸ் வருதுப்பா. அட்வான்ஸ்ட் டைப். ஃப்ரம் ஜெர்மனி! எட்டு மணிக்கு நான் கம்பெனியில் இருக்கணும்.

    தீப்தி சொல்லிக் கொண்டே காப்பி ட்ரேயோடு பக்கவாட்டில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

    அண்ணன் பரணி போர்வையைக் கட்டிலுக்கு கீழே நழுவவிட்டு விட்டு – லுங்கியையே இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பரட்டைத்தலை மேலும் சிலும்பியிருந்தது. 25 வயது பரணிக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. ஸ்கூல் ஃபைனலோடு படிப்பை முடித்துக் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஒர்க்ஷாப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு.

    அ...ண்...ணா...!

    ................

    அண்ண்ண்...ணா...!

    பரணிக்குத் தூக்கம் கலைந்தது. கண்களை விழிக்காமலே ம்... என்றான்.

    எந்திரி...!

    என்ன... காப்பியா? பரணி குரல் கரகரக்க கேட்டான்.

    ஆமா...

    வெச்சுட்டுப் போ...!

    ஆறிடும்...

    ஆறினா... பரவாயில்லை... வெச்சுட்டுப் போ...

    தீப்தி காப்பி டம்ளரை வைத்துவிட்டு மறுபடியும் ஹாலுக்கு வந்தபோது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

    யாருன்னு பாரம்மா தீப்தி...!

    தீப்தி ட்ரேயை டீபாயின் மேல் வைத்துவிட்டு வாசல் கதவை நோக்கிப் போனாள். தாழ்ப்பாளை விலக்கி கதவைத் திறக்க...

    வெளியே அப்பாவின் நண்பர் கண்ணபிரான். தலையில் பனிக்காக மஃப்ளர்.

    வாங்க மாமா...!

    வர்றேன்... வர்றேன்...! எப்படியிருக்கேம்மா தீப்தி?

    நல்லாயிருக்கேன் மாமா.

    அப்பா என்ன பண்றார்?

    இப்பதான் எந்திரிச்சு உட்கார்ந்து பேப்பரைப் பிரிக்கிறார்.

    ராகவன் உரிமையாய் குரல் கொடுத்துக் கூப்பிட்டார். "வாடா... டேய்!

    Enjoying the preview?
    Page 1 of 1