Neethana... Nijamthana?
By Rajesh Kumar
4.5/5
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Related categories
Reviews for Neethana... Nijamthana?
5 ratings0 reviews
Book preview
Neethana... Nijamthana? - Rajesh Kumar
http://www.pustaka.co.in
நீதானா... நிஜம்தானா?
Neethana... Nijamthana?
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
நீதானா... நிஜம்தானா?
1
சித்தர் பாடல்களில் அறியப்படாத எத்தனையோ கருத்துகள் இன்னமும் உண்டு. சித்தர்களின் இலக்கிய முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாத மர்மமாகத்தான் இருக்கிறது. சித்தர் பாடல்கள் ஒருபுறம் இருக்க, அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தடயங்களாவது நமக்குச் சரிவர கிடைக்கிறதாவென்றால் அதுவும் கிடையாது. சித்தர்கள் யாரும் ஏடும் எழுத்தாணியும் கொண்டு பாடல்களைப் புனைந்து வைத்து விட்டுச் செல்லவில்லை. இறைவனின் திருக்கருணையால் வெளிவந்த அவர்களின் வாய்மொழி உபதேசங்கள் அவர்களின் சீடர்களால் தொகுக்கப் பெற்றவையே இப்போதுள்ள பாடல்கள்.
விடியற்காலை ஐந்தே முக்கால் மணி.
கோவையின் கிழக்கு வானத்தில் வெளிச்சக் கீறல்கள் தெரிய பனி இன்னமும் விலகாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தது. கே.பி.என். பஸ் மேம்பாலத்தில் இறங்கி காந்திபுரம் திரும்பியதும் பஸ்ஸின் கண்டக்டர் குரல் கொடுத்தார்.
ரயில்வே ஸ்டேஷன் போறவங்க இந்த இடத்துல இறங்கிக்கலாம்.
திருமூர்த்தி சூட்கேஸோடு எழுந்து நின்றான். பக்கத்து இருக்கையில் தூக்கக் கலக்கத்தோடு உட்கார்ந்திருந்த ஸ்ருதி அவனை வியப்போடு பார்த்தாள்.
என்ன திரு… எந்திரிச்சுட்டே…?
இந்த இடத்துல இறங்கிக்கலாம். இங்கே இறங்கி ஆட்டோ பிடிச்சா சுந்தரவதனம் வீட்டுக்கு ஒரு பத்து நிமிஷத்துல போயிடலாம்…
ஹோட்டல்ல ரூம் போட வேண்டாமா?
எல்லாம் அப்புறம்தான்…! மொதல்ல சுந்தரவதனத்தைப் பார்க்கிறேரம். இவ்வளவு காலை நேரத்துல வீட்டுக்குப் போனாத்தான் அவர் இருப்பார். நாம ஹோட்டல்ல ரூம் போட்டு குளிச்சு டிரஸ் பண்ணிட்டுப் போறதுக்குள்ளே அவர் வீட்டை விட்டுக் கிளம்பிடுவார். அப்புறம் அவரைப் பிடிக்க முடியாது.
கண்டக்டர் எரிச்சலாய் குரல் கொடுத்தார்.
என்ன சார் பஸ்ஸை விட்டு இறங்கறதா வேண்டாமான்னு பட்டிமன்றமா நடத்திகிட்டு இருக்கீங்க? இறங்கறதானா… சட்டு புட்டுன்னு இறங்குங்க. இல்லேன்னா அப்படியே உட்கார்ங்க…
இல்ல இறங்கறோம்…
திருமூர்த்தியும் ஸ்ருதியும் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு அரக்க பரக்கக் கீழே இறங்கினார்கள். கோவைக்கே உரித்தான அந்த ஐஸ் காற்று இரண்டு பேர்களின் முகங்களிலும் மோதியது.
என்ன ஒரு க்ளைமேட் பார்த்தியா திரு…!
அதுதான் கோவை. இந்த க்ளைமேட்டுக்காகவும் சிறுவாணித் தண்ணீர்க்காகவுமே இந்த ஊர்ல ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம் போலிருக்கு…!
அப்ப… திருநெல்வேலிக்குப் போனா அந்த ஊர் அல்வாவுக்காக ஒரு பொண்ணையும், சேலத்துக்குப் போனா அந்த ஊர் மாம்பழத்துக்காக ஒரு பொண்ணையும், பழனிக்குப் போனா பஞ்சாமிர்தத்துக்காக ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்குவே போல் இருக்கே?
கொடுத்தா பண்ணிக்க வேண்டியதுதான்…!
அப்படின்னா… உன்னைக் கூடிய சீக்கிரம் ஜெயிலுக்குப் பேர் போன வேலூர்ல பார்க்கலாம்னு சொல்லு...
- சிரித்துக் கொண்டே சொன்ன ஸ்ருதியை திருமூர்த்தி பொய்க் கோபத்தோடு முறைத்த விநாடி - அவனுடைய இடுப்பு பெல்ட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் ரிங் டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று டிஸ்ப்ளேயில் பார்த்து விட்டு மலர்ந்தான்.
குட் மார்னிங் சார்!
என்ன… கோவை போய் சேர்ந்துட்டீங்களா?
சேர்ந்துட்டோம் சார்… இப்பதான் பஸ்ஸை விட்டு இறங்கினோம்.
இப்பவே சுந்தரவதனத்தைப் பார்த்துருங்க…!
அவரைப் பார்க்கத்தான் கிளம்பிட்டிருக்கோம் சார்...!
திரு…!
சொல்லுங்க சார்!
சுந்தரவதனத்தைப் பார்க்கிறது முக்கியம் இல்லை. பேசப் போற விஷயம் நமக்குச் சாதகமாய் இருக்கணும்…!
இருக்கும் சார்!
தட்ஸ் குட்! உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த தன்னம்பிக்கைதான்… மறுபடியும் நீ எனக்குப் போன் பண்ணும்போது அது ஒரு வெற்றிச் செய்தியை சொல்லப் போகிற போனின் அழைப்பாய்த்தான் இருக்கணும்.
சர்ட்டன்லி சார்…!
- திருமூர்த்தி செல்போனை அணைத்துச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ள. ஸ்ருதி கேட்டாள்.
போன்ல யார் திரு…?
நம்ம புரபசர்தான்…
என்ன சொல்றார்?
சுந்தரவதனத்தைப் பார்த்துப் பேசறது முக்கியம் இல்லை. பேசப் போற விஷயம் நமக்குச் சாதகமாய் இருக்கணும்’ன்னு சொல்கிறார்.
உனக்கு நம்பிக்கை இருக்கா திரு.?
டன் டன்னாய்…
எனக்குப் பத்து கிராம் கூட நம்பிக்கையில்லை திரு…!
ஏன் அப்படிச் சொல்றே?
மொதல்ல சுந்தரவதனம் நம்ம ரெண்டு பேரையும் பார்த்துப் பேச ஒத்துக்குவாரான்னே சந்தேகமாய் இருக்கு…
இதோ பார் ஸ்ருதி! சென்னையிலிருந்து ஐநூறு கிலோ மீட்டர் டிராவல் பண்ணி இங்கே வந்திருக்கோம். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு அப்ரோச் பண்ணினா வெற்றி கிடைக்கும்.
ம்… பார்க்கலாம். அதோ… ஒரு ஆட்டோ காலியாய் வருது. நிறுத்து…!
திரு கை காட்ட ஆட்டோ நின்றது.
டிரைவரின் தலை பீடிப் புகையோடு நீண்டது.
எங்க சார் போகணும்?
ரேஸ் கோர்ஸ் ரோட்டு.
ரேஸ் கோர்ஸ் ரோட்ல எங்கே சார்… ஸ்பாட்டை கரெக்டா சொல்லுங்க. அப்பத்தானே ரேட் ஃபிக்ஸ் பண்ண முடியும்!
அப்துல் ரஹ்மான் ரவுண்டானா…!
இப்படி மொட்டையா சொன்னா எப்படி சார்? ரவுண்டானாவில் எந்த இடம்?
மனித உரிமைக் கமிஷன் சேர்மன் சுந்தரவதனத்தோட பங்களாவைத் தெரியுமா?
தெரியும்…